Poo Parikka Nee Pogathey!
()
About this ebook
தைரியமான அழகான பெண்மணி வைஷ்ணவி. பத்திரிக்கை நிபுணரான இவள் வேலையை இழக்க, அதிர்ஷ்டவசமாக காஷ்மீரில் உள்ள அரண்மனையில் வேலை கிடைத்தது. இதில் மனோஜ் என்பவன் யார்? அரண்மனையின் ராஜா ரன்வீரா? சஜ்சயா? அரண்மனையில் வைஷ்ணவிக்கு என்ன வேலை கொடுத்தார்கள்? இருவரிடமும் காதல் மலர்ந்ததா? இறுதியில் உண்மை தெரிய வைஷ்ணவியின் நிலை என்ன? வைஷ்ணவி என்ற பூவை யார் பறித்தது? என்பதை அருகிலிருந்து வாசிப்போம்.
Read more from Lakshmi Sudha
Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Puthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsSaaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Unakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Paniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5
Related to Poo Parikka Nee Pogathey!
Related ebooks
Kannaley Pesi Pesi... Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesuthey... Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsAnthi Mazhai Saaral Rating: 0 out of 5 stars0 ratingsPesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsKaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Nee Pogum Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Thanjam Eppothadi Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsEn Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsVaanmathiye Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Mazhaiyiley Naan Rating: 0 out of 5 stars0 ratingsUrugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Nila Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Ponnai Virumbum Bhoomiyile Rating: 0 out of 5 stars0 ratingsVaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsEnnamo Yetho… Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Moongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kavithai Nee Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Poo Parikka Nee Pogathey!
0 ratings0 reviews
Book preview
Poo Parikka Nee Pogathey! - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
பூப்பறிக்க நீ போகாதே!
Poo Parikka Nee Pogathey!
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
வாங்க பேசலாம்
வணக்கம்.
லாக்டவுன் முடிந்து எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையையும் புதிதாக மாற்றி எழுதி விட்டது இந்த வைரஸ்.
உயிருடன் இருப்பதுதான் பெரிய விஷயம். மற்றது எல்லாம் இரண்டாம் பட்சம் என்று ஒரு புதிய விதியை உலக அளவில் எழுதிய பெருமை இந்த வைரஸை சாரும்.
இனி வரும் நாட்கள் எல்லாம் நன்றாக இருக்கட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று மனமார வாழ்த்தி இந்த நாவலை உங்களிடம் சேர்க்கிறேன்.
காஷ்மீரை பின்னணியாகக் கொண்ட இந்த நாவல் உங்கள் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
விமர்சனங்களுக்கு -
lakshmisudha2010@gmail.com
lakshmisudha2010@yahoo.com
அன்புடன்
லட்சுமி சுதா
1
இந்தப் பூக்கள்
பூமியின்
ஆடையாக
மாறுகின்றன
வண்ண வண்ணப் பூக்கள்
வானவில் போல்
பூமியில் கண்களை மூடி
அமைதியை
ரசித்துக் கொண்டு
இருந்த நேரம்...
அழகிய பூவாக
நீ நடந்து
செல்கிறாய்.
ஜன்னல் வழியாக மாமரத்தைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.
எந்தக் கவலையுமின்றித் துரத்தி ஓடி விளையாடிக் கொண்டு இருந்த அணில்களைப் பார்த்துச் சற்றுப் பொறாமைப்பட்டாள்.
இந்த அணில்கள் உலகம் எப்படி இருக்கும்? காலையில் எழுந்திருக்க வேண்டாம். என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டாம். ஸ்கூல், ஆபீஸ் என்று எங்கேயும் அரக்கப்பரக்கப் போக வேண்டாம். எக்ஸாம், மீட்டிங் என எந்த டென்ஷனும் இல்லை. இனிமையான வாழ்க்கைதான்.
மாங்காயைக் கடித்தபடி தன்னை உற்றுப் பார்த்த அணிலைப் பார்த்துச் சினேகமாகச் சிரித்தாள் வைஷ்ணவி.
ஏய், என்னடி பகலிலேயே இப்படி ஒரு கனவா? நான் என்ன காட்டுக்கத்தல் கத்துகிறேன். அது உனக்குக் கேக்கலையா?
என ஷ்யாமளா அவள் தோளைக் குலுக்கினாள்.
சாரிடி, கவனிக்கலை...
என்று அசடு வழிந்தாள்.
என்ன ஆச்சு, எப்பவும் எட்டு மணிக்குத்தான் ஆபீஸ் முடிஞ்சு வருவ. இன்னிக்கு எப்படி எனக்கு முன்னாடியே வந்துட்டே? வாட் எ மெடிக்கல் மிராக்கிள்...
என்று நாடகப் பாணியில் வசனம் பேசினாள் ஷ்யாமளா.
அட போடி, வேலை போச்சு...
என்றாள் வைஷ்ணவி.
ஓ மை காட்! மறுபடியுமா?
பாரு, நீ கூட என்னைக் குத்திக்காட்டுற.
இல்லடி, இந்த ஆறு மாசத்துல ஆறு வேலை நீ மாறி விட்டாய். அதனாலதான் என்னை அறியாமல் வார்த்தை வந்திடுச்சு. மத்தப்படி எந்த உள்நோக்கமும் கிடையாது. சரி, இந்த வேலை நல்லாத்தான் போச்சு, இப்ப என்ன ஆச்சு?
நான் இந்தத் தடவை சீனியர் சிட்டிசன் பங்கேற்ற ஒரு மாரத்தான் போட்டியைக் கவர் செய்ய வேண்டும் என்று என் எடிட்டர் சொன்னார்.
ஆமாம், நீ போன வாரம் சொன்னியே... எனக்கு ஞாபகம் இருக்கு.
‘எஸ்... மாரத்தான் காலை ஐந்தரை மணிக்குத் தான் தொடங்கும், நான் கெத்தா 5 மணிக்கே பீச் ரோட்டில் தயாராக இருந்தேன்."
வாவ்! என்ன ஒரு கடமை உணர்வு. அப்புறம் வேறு என்ன?
நிறைய சீனியர் சிட்டிசன் இருந்தனர். அவர்கள் எல்லோருமே அந்தப் போட்டியில் பங்கேற்கத் துடிப்புடன், ஆர்வத்துடன் காத்து இருந்தார்கள். நான் சும்மா புகைப்படங்கள் நிறைய எடுத்துத் தள்ளினேன்.
நல்ல விஷயம்தானே இது?
ஆமாம், நல்ல விஷயம்தான். அதுக்கப்புறம் நடந்ததை கேளு.
சொல்லுடி, சொல்லு.
நான் ஒரு வயதான தம்பதியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு இந்த மாதிரிப் போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாம். அவர்களுக்கு ஒரே மகன், வெளிநாட்டில் வேலை. அதுமட்டுமில்லை, ஒரு சீனப் பெண்ணை விரும்பித் திருமணமும் செய்து கொண்டானாம்.
இது வேறவா? முன்னெல்லாம் வேறு ஜாதியில் பெண் எடுப்பது பெரிய விஷயமாக இருந்தது, இப்பொழுது வேறு தேசத்துப் பெண்ணை எடுக்கும் அளவிற்கு நாம் முன்னேறி விட்டோம்.
ஆமாம் ஷாமிலி, அது அவரவர் விருப்பம். ஆனால், திடீரெனப் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்தப் பெரியவர் மயங்கி விழுந்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
ஓ மை காட்! அப்புறம் என்ன ஆச்சு?
வேறு என்ன? பெரியவரையும் அவர் மனைவியையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நல்லகாலம் மாரடைப்பு ஏதுமில்லை. சந்தோஷம் அதிகமானதால் ஏற்பட்ட மயக்கம் என்று மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் எனக்கு மூச்சு வந்தது. அதுமட்டுமில்லை, நான் கவர் செய்ய வேண்டிய ப்ரோக்ராம் பற்றி அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
ஆனால், அதற்குள் போட்டி தொடங்கியிருக்கும் தானே.
ஆமாம், தொடங்கி முடியும் கட்டத்தில் இருந்தது. கைபேசியை எடுத்து எடிட்டரிடம் சொல்லலாம் என்று பார்த்தேன். அப்பொழுதுதான் கைபேசியில் 10 மிஸ்டு கால் இருந்ததைக் கவனித்தேன்.
என்னது, பத்து மிஸ்டு கால்ஸா...?
எல்லாமே என் எடிட்டரிடம் இருந்து வந்திருந்தது.
ஓ! சரி... ஆனால், அவர் எதுக்கு உன்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார்.
அந்த மாரத்தான் போட்டி நடந்த இடம் அருகில் ஒரு கல்லூரியின் சுவர் உடைந்து விழுந்து விட்டது. அந்த இடம் ரொம்பப் பதற்றம் ஆகிவிட்டது போல. அதனால் அந்த மாரத்தான் போட்டிக்குப் பதிலாக என்னை அந்தக் குட்டிச் சுவரைக் கவர் செய்ய வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் என்னை அவர் கைபேசியில் அழைத்திருந்தார்.
ஆனால் நீதான் மருத்துவமனையில் பிஸியாக இருந்தியே.
எஸ்... விஷயம் தெரிந்தவுடன் என் எடிட்டருக்கு என் மேல் ரொம்பக் கோபம். உடனே டிஸ்மிஸ், தட்ஸால். வேலை போச்சு, போயே போச்சு, போயிந்தே. இட் இஸ் கான்...
என்றாள் வைஷ்ணவி.
நீ நல்லதுதானே செய்திருக்கிறாய். பாவம், வயதான ஒருவர் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடுமென மயங்கி விழுந்தா பார்த்து விட்டுச் சும்மாப் போக முடியுமா என்ன? நீ செய்தது சரிதான். அந்த எடிட்டர் ரொம்ப சுயநலவாதி போல.
ஆமாம், அவருடைய வேலையை நான் முடிக்கவில்லை. அதனால் அவருக்கு என் மேல் கோபம். இது எல்லாம் அரசியலில் சகஜம்...
என்றாள் அவள்.
உன்னால் எப்படி எல்லா விஷயத்தையும் இப்படிப் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள முடிகிறது?
வேறு என்ன செய்வது? வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் எனக்குச் சின்ன வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பெற்றோரை நான் சின்ன வயதிலேயே இழந்து விட்டேன். அதனால் தான் எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. சின்ன வயது முதல் நிறையக் கசப்பான அனுபவங்கள் ஷாமிலி. அதனால் என்ன நடந்து விடப் போகிறது. இதற்கு மேல் என்ற எண்ணம் மனத்தில் பதிந்து விட்டது போல.
அடக் கடவுளே! உனக்கு வைஷ்ணமாயி என்று பெயர் வைத்து விடலாம் போல இருக்கு. உன் கதை ரொம்பச் சோகம் என்று எனக்குத் தெரியும். இனிமேல் அதைப் பற்றி நான் எதுவும் கேட்கப் போவதில்லை. ஆனால், நீ மறுபடியும் வேற வேலை தேட வேண்டுமே... அதுதான் என் கவலை.
என்ன செய்வது? இந்தப் பரந்த உலகில் எனக்கென்று வேலை ஏதும் இருந்தால் நிச்சயமாகக் கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நல்லது. எனக்கு உன்னிடம் பிடித்ததே இந்த செல்ஃப் கான்ஃபிடன்ஸ்தான். உனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும், மனம் தளராதே.
ஷாமிலி, உன்னுடைய வாக்குப் பலிக்கட்டும். அப்படியே நடக்கட்டும். சரி, இப்ப சாப்பிடலாமா? அதற்கு முன் சூடாக ஒரு டீ குடிக்கலாமா? சூடா இஞ்சி, ஏலக்காய் பொடி செய்து ஒரு டீ போதும். அதுதான் இப்ப எனக்கு உடனடியாக வேணும்.
சரி, சரி, வெயிட் பண்ணு. நான் தயார் செய்கிறேன்.
ஏதேனும் உதவி வேண்டுமா?
ஆமாம், ஏதோ கல்யாண வீட்டுக்கு ஆயிரக்கணக்கான பேருக்குச் சமையல் செய்யப் போகிறேன். அதுக்கு ஒரு அசிஸ்டண்ட் வேற. ரெண்டு பேருக்கு டீ போடப் போகிறேன், தட்சால். அதனால ரொம்ப சீன் எல்லாம் போடாதே. அஞ்சு நிமிஷத்துல உன் கையில் சூடான சுவையான டீ இருக்கும், அதுக்கு நான் கேரண்டி...
என்றாள் ஷாமிலி.
அட... இப்ப நீதான் சீன் போடுற...
என்றாள் வைஷ்ணவி.
நாளை என்ன நடக்கப் போகிறது என்பது சஸ்பென்ஸ். வாழ்க்கைக்குப் பொருந்தும் வைஷ்ணவியின் வாழ்க்கை விதிவிலக்கா என்ன?
2
வானத்துக்கும்
பூமிக்கும்
இடையே
உள்ள இடைவெளி
ஏன்?
இரவுக்கும்
பகலுக்கும் உள்ள இடைவெளி
ஏன்?
விடை தெரியாத
கேள்விகள்
என்னுள்!
உனக்கும்
எனக்கும்
உள்ள
இடைவெளி
ஏன்?
நிலவுக்கும்
கதிரவனுக்கும்
உள்ள
இடைவெளி ஏன்?
என்ன வைஷ்ணவி... இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற?
என்றாள் ஷாமிலி கோபத்துடன்.
ஷாமிலி, உனக்கு என்மேல் அக்கறை அதிகம், அதனால்தான் இந்த மாதிரி கோபப்படுற அப்படின்னு எனக்குத் தெரியும்.
"நீ இங்கே இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஜஸ்ட் லைக் தட் காஷ்மீருக்குப் போவது எனக்குத் துளி கூடப் பிடிக்கவில்லை. பயங்கரக் குளிர், தீவிரவாதிகளின் தாக்குதல். நான் உன்னுடைய நிலைமையில் இருந்தால் இங்கேயே ஏதேனும் வேலை தேடிக் கொள்வேன்.