Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Vaasaliley...
Anbin Vaasaliley...
Anbin Vaasaliley...
Ebook184 pages1 hour

Anbin Vaasaliley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

I am basically from Chennai, a Fine Arts graduate from Stella Maris College. Worked in various positions and settled to be a freelance web and print media designer.

Always had a great passion for Thamizh language and music. As an avid reader of all genres of Thamizh writers, it was a natural instinct to get into writing in 2012.

I have written 28 novels, multiple short stories and poetry. I maintain blogs in English and Thamizh.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123702867
Anbin Vaasaliley...

Read more from Sudha Sadasivam

Related to Anbin Vaasaliley...

Related ebooks

Reviews for Anbin Vaasaliley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Vaasaliley... - Sudha Sadasivam

    http://www.pustaka.co.in

    அன்பின் வாசலிலே...

    Anbin Vaasaliley…

    Author:

    சுதா சதாசிவம்

    Sudha Sadasivam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sudha-sadasivam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் நான்கு

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    அத்தியாயம் எட்டு

    அத்தியாயம் ஒன்பது

    அத்தியாயம் பத்து

    அத்தியாயம் பதினொன்று

    அத்தியாயம் பன்னிரண்டு

    அத்தியாயம் பதிமூன்று

    அத்தியாயம் பதினான்கு

    அத்தியாயம் பதினைந்து

    அத்தியாயம் பதினாறு

    அத்தியாயம் பதினேழு

    அத்தியாயம் பதினெட்டு

    அத்தியாயம் பத்தொன்பது

    அத்தியாயம் இருபது

    அத்தியாயம் இருபத்தி ஒன்று

    அத்தியாயம் இருபத்தி இரண்டு

    அத்தியாயம் இருபத்தி மூன்று

    அத்தியாயம் இருபத்தி நான்கு

    அத்தியாயம் இருபத்தி ஐந்து

    அத்தியாயம் இருபத்தி ஆறு

    அத்தியாயம் இருபத்தி ஏழு

    அத்தியாயம் இருபத்தி எட்டு

    அத்தியாயம் இருபத்தி ஒன்பது

    அத்தியாயம் ஒன்று

    வந்தனா எழுந்திரு மா என்று அம்மாவின் குரல் கேட்டது. கூடவே தாயின் தேன் போன்ற குரலில் சுப்ரபாதம் முணுமுணுப்பும் கேட்டது. அதுதான் தினசரி வந்தனாவின் காலை நேர திருப்பள்ளி எழுச்சி. அதைக்கேட்டபடி புன்னகையுடன் எழுந்து தன் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தாள்.

    வாய் இன்னமும் முணுமுணுத்துக்கொண்டிருக்க வந்தனாவிற்கென காபியை கலந்தார் தாய் மங்களம்.

    காபியின் மணம் மூக்கை எட்ட அதை அன்போடு ஆற்றி அவளிடம் நீட்டும்போது அதன் சத்தம் காதுகளை நிறைக்க நுரை ததும்பும் காபியின் தோற்றம் கண்ணை நிறைக்க அப்போதே பாதி காபியை சுவைத்ததுபோல உணர்ந்தாள் வந்தனா. அம்மாவை கட்டிக்கொண்டு இடதுகையால் காபியை வாங்கி ரசித்து சொட்டு சொட்டாக உறுஞ்சினாள்.

    உன் காபிக்கும் சமையலின் கை மணத்துக்கும் ஈடே இல்லைமா என்றாள். எப்போதும் போல சிரித்தபடி அவர் தன் பூஜையைத் தொடர்ந்தார்.

    உச்சிவகிட்டிலும் நெற்றியிலும் கும்குமம் விளங்க சற்றே நரைத்த தலையும் அழகிய நீண்ட கண்களும் மங்களத்திற்கு ஒரு தெய்வீக அழகைக் கொடுத்தது.

    அவரது அந்த முக அழகை அப்படியே கொண்டிருந்தாள் வந்தனா. அவரைப்போன்ற சிவந்த நிறம் இல்லாமல் சற்றே மாநிறமாக இருந்தாள். உயரத்தில் தன் தந்தையைக் கொண்டிருந்தாள். ஒடிசலாக, சிற்றிடையுடன் அழகான தோற்றப் பொலிவும் கொண்டு காண்பவரை மீண்டும் திரும்பிக் காண வைக்கும் அதீத அழகு அவளுடையது. ஆனால் அதை ஒரு பொருட்டாக அவள் எப்போதுமே கருதியதில்லை.

    அடர்த்தியான முடியை தோளுக்கு கீழிருந்து லேயர்சில் கத்தரித்து கீழே இடுப்பில் முடித்திருந்தாள். அது இயற்கையான நெளிவுடன் இடுப்பைத் தொட்டு லேசாக வளைந்து சுருண்டிருந்தது. அது அவள் முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.

    நெற்றியில் சின்ன வட்டப்பொட்டு.... கண்களில் ஒற்றை கீத்து கண்மை.... லேசான பவுடர் பூச்சு... வேலைக்குச் செல்லும்போது லேசாக உதட்டு சாயம் ஒற்றி எடுப்பாள். அதுவும் மிதமான நிறங்களே உபயோகிப்பாள். இயற்கையாகவே சிவந்த உதடுகளுக்கு அதுவும் கூட தேவை இல்லைதான். ஆயினும் அவள் பணி செய்வது பெரிய ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் அல்லவா.

    அம்மாவிற்கு காய் நறுக்கி, தேங்காய் துருவி கொடுத்துவிட்டு அரைமணி யோகா செய்து முடித்து வியர்வை ஆற நாளிதழுடன் அமர்ந்தாள். அதில் முக்கிய செய்திகளை புரட்டிவிட்டு, எழுந்து தன் டாபில் அன்றைய இமெயில் பார்த்துவிட்டு எழுந்து குளிக்கச் சென்றாள். குளித்து சந்தன வர்ணக் காஞ்சிக் காட்டன் புடவை உடுத்தி ஏற்ற ரவிக்கையுடன் லேசான ஒப்பனையில் தலை வாரி கொஞ்சமாக இருபக்கமும் முடிகற்றைகள் எடுத்து உச்சியில் கிளிப் போட்டு இறுக்கினாள்.

    தன் கைபையுடன் டைனிங் டேபிளுக்கு வந்து காலை உணவை தன் பெற்றோருடன் உண்டுவிட்டு கூடவே அம்மா சமைத்துத் தயாராக வைத்திருந்த மதிய உணவை தனக்கும் தந்தைக்குமாக டப்பாவில் அடைத்து பாக் செய்து தனதை எடுத்துக்கொண்டாள்.

    வரட்டுமா மா, பை டாட் என்று கூறி தன் கைநெடிக்கில் பறந்துவிட்டாள்.

    வந்தனா ‘ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட்’ மற்றும் ‘எம் பி ஏ’ முடித்திருந்தாள். ஒரு உயர்தர ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் ‘மேனேஜர் - கெஸ்ட் ரிலேஷன்ஸ்’ என்ற பணியில் இருந்தாள். அந்த ஹோட்டலுக்கு வந்து தங்கும் உயர்தர மனிதர்களை பிரத்யேகமாக கவனித்து அங்கு அவர்களின் அன்றாடத் தேவைகள் சரியாகச் செய்யப்பட்டனவா என்று கண்காணித்துக்கொள்வது அவள் பொறுப்பு. எந்த முக்கிய விருந்தினர் வந்தபோதும் வருபவர்களுக்கேற்ப அவர்கள் தேவைகள் ரசனைகள் ருசிகள் அறிந்து அவர்களுக்கு வேண்டுவன செய்து தர வேண்டும்.

    பல பன்னாட்டு கம்பனிகளும் தூதரக ஆபிசர்களும் அயல்நாட்டு விருந்தினர்களும் சரளமாக வந்து தங்கும் ஹோட்டல் அது என்பதால், அவளுக்கு நித்தமும் அங்கே வேலை நெக்கு வாங்கும். அது அவள் விரும்பி ஏற்றிருந்த படிப்பும் வேலையும் கூட.

    ***

    அத்தியாயம் இரண்டு

    அவசரமாகப் போய் கொண்டிருக்க, அங்கே சர்ரென்று வந்த ஒரு மேனாட்டு கார் ஒரு வயதான அம்மாளை இடித்து கீழே தள்ளிவிட்டு பறந்துவிட்டதைக் கண்டு கொதித்துப் போனாள். தன் வண்டியை ஓரமாக ஒரு கடை வாசலில் வைத்து பூட்டிவிட்டு அந்த பெண்மணியிடம் ஓடினாள். கூட்டம் சேர்ந்துவிட்டது, ஆனால் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அவரது தலையில் காயம் பட்டு ரத்தம் கசியத் துடங்கி இருந்தது. சட்டென்று தன் கைக்குட்டையை வைத்து அதை அடக்கினாள்.

    யாராச்சும் ஏதானும் வண்டிய நிறுத்துங்க, மருத்துவமனைக்கு கொண்டு போகணும்.... தலையில அடிபட்டிருக்கு என்று கூட்டத்தைப் பார்த்து கூற, ஓரிருவர் தவிர மற்றவர் அவளை ஏதோ ஜந்துவை பார்ப்பதுபோல பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டனர். அப்போது அங்கே வந்துகொண்டிருந்த மற்றொரு காரை கைகாட்டி நிறுத்தினாள் வழியில் மறைத்து நின்றபடி. அவன் வேறு வழி இல்லாமல் வண்டியை நிருத்தவேண்டியதாகியது.

    என்ன இது, இப்படியா குறுக்கே மறிப்பது... எதுக்கு நிறுத்தினீங்க? என்று எரிந்து விழுந்தான் அந்த காருக்குடையவன்.

    சாரி சார், இந்த அம்மாவை ஒரு வண்டி இடித்துவிட்டு போயிடுச்சு... அவசரமா மருத்துவமனைக்குக் கொண்டு போகணும்..... ப்ளீஸ் சார், கொஞ்சம் உங்க காரில் கூட்டிப் போக முடியுமா? என்று கெஞ்சினாள்.

    நோ நோ ப்ளீடிங் ஆகுது... என் வண்டி எல்லாம் பாழாயிடும்.... அது மட்டும் இல்லாம நீங்க யாரோ என்னமோ.... பிறகு ஏதானும் வம்பு தும்புன்னு என்னால அலைய முடியாது என்றான் கறாராக.

    ‘சி, நீ இவ்வளவுதானா’ என்பது போல அற்ப புழுவாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீங்க எல்லாம் படிச்சவங்கதானே, அவசரத்துக்கு உயிருக்கு உதவணும்னு தோணலையா.... இதுதான் உங்களோட பண்பா.... நாளைக்கு உங்களுக்கே கூட இப்படி ஆகலாம், அப்போ வேற யாரவது இதப் போல உதவ மறுத்தா உங்க நிலை என்னாகும்னு யோசீங்க.... இதுவே இங்கே விழுந்து கிடப்பது உங்க தாயா இருந்தாலும் இப்படித்தான் சொல்வீங்களோ என்று அதிராமல் கத்தாமல் ஆனால் கடிந்த குரலில் கூறிவிட்டு அடுத்து வந்த ஆட்டோவை தட்டிக் கூப்பிட்டாள்.

    டிரைவரும் அவளுமாக அந்த அம்மமாளைத் தூக்க, இருங்க இதுல ஏற்றுங்க.... சீக்கிரமா போய்டலாம் என்றான் இறங்கி அவசரமாக பின் கதவை திறந்து பிடித்துக்கொண்டு.

    அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடி டிரைவருக்கு நன்றி கூறி வண்டியில் ஏற்றினாள். அவன் கையில் ஒரு இருபது ரூபாய் நோட்டை கொடுக்க வேண்டாம்மா சின்ன உதவி, பாவம் இந்த அம்மா, நீங்க சீக்கிரம் போங்க என்று மறுத்துவிட்டு சென்றுவிட்டான் அவன்.

    ‘ச்சே அவனிக்கிருக்கும் பண்பு கூட எனக்கில்லையா, சரியாகத்தான் சொன்னாள் இந்தப் பெண்.... யாரோ என்னமோ..... ஆனால் கோபப்படாமல் அதிர்ந்து கத்தி கூச்சல் போடாமல் அமைதியான ஆனால் திண்ணமான குரலில் பேசினாளே.... இவள் என் தாயை எனக்கு இன்று மீண்டும் நினவு படுத்திவிட்டாள்.... அம்மா இப்படித்தானே கண்டிப்பார்.....

    கத்தல் கூச்சல் இல்லாமல் உனக்கு நான் ஒண்ணும் சொல்ல வேண்டாம்..... நீ சின்னப் பையன் இல்லை கண்ணா... உனக்கே எல்லாம் தெரியும்.... ஆனாலும் இது சரி இல்லை என்பாள்.

    இதை எல்லாம் நினைத்தபடி வண்டியை எவ்வளவு வேகமாக ஓட்ட முடியுமோ ஓட்டிச் சென்றான். பின் நோக்கு கண்ணாடியிலிருந்து அவளைக் கண்டான். அமைதியான ஆனால் அழகான கட்டி இழுக்கும் அழகு..... ‘ஹப்பா அந்தக் கண்கள்..... இன்னும் பல நாட்கள் என்னால் மறக்க முடியாத கண்கள்’ என்று எண்ணினான். அதற்குள் மருத்துவமனை வந்திருக்க அவனே இறங்கி கை கொடுத்து அந்த அம்மாளை வந்தனாவின் உதவியோடு இறக்கினான். அதற்குள் ஸ்ட்ரெட்சர் வந்திருக்க அதில் படுக்க வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

    வந்தனா அப்போதுதான் அவன் உடையிலும் கார் சீட்டிலும் ஆங்காங்கு சில ரக்தத் துளிகள் கரை ஆகி இருந்ததை கவனித்தாள்.

    மன்னிச்சுக்குங்க கரை ஆயிடுச்சு என்றாள்

    அதுனால ஒண்ணும் இல்லை..... இது தோய்ச்சா போயிடும், கார் வாஷுக்குப் போனா சரி ஆயிடும்.... நீங்க உங்க அம்மாவை கவனீங்க என்றான்.

    இது என் அம்மா இல்லை..... தெருவில வந்துகிட்டிருந்தாங்க என்றாள். அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. ‘யாருக்கோ உதவ இத்தனை கஷ்டங்கள் பட்டாளா..... என்னையும் வருத்துவிட்டாளே’ என்று சிரித்துக்கொண்டான். அங்கே இருந்த முக்கிய டாக்டரிடம் கவனித்துக்கொள்ளக் கோறி வெளியே வந்து ஒரு தலை அசைப்புடன் கிளம்பி விட்டான்.

    ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார் என்றாள்.

    யு ஆர் வெல்கம் என்றபடி சென்றுவிட்டான்.

    வந்தனா தன் மொபைலில் இருந்து ஹோட்டலுக்கு அழைத்து விவரம் கூறிவிட்டு சற்று தாமதம் ஆகும் என்று வேண்டினாள்.

    சரி சீக்கிரமா வா வந்தனா, ‘சுப்ரஜா ஐ டி சொலுஷன்ஸ்’ கெஸ்ட் பத்தி பேச அவங்க எம் டி வராரு பன்னிரண்டு மணிக்கு என்றார் ஜி எம். ஷ்யூர் சார் வந்துடுவேன் என்றாள்.

    பின் அந்த அம்மாளின் பர்சை தேடியதில் முகவரியும் போன் நம்பரும் இருக்கக் கண்டு போன் செய்தாள். அவளின் கணவர் எடுத்தார். வயதானவராயிற்றே என்று மெல்ல மெல்ல நிதானமாக விஷயத்தைக் கூறினாள். அதற்கே அவர் பதறி போய்

    எங்கேமா, எந்த ஹாஸ்பிடல்?

    Enjoying the preview?
    Page 1 of 1