Puthu Vasantham Thedi Varum
()
About this ebook
காதலித்து கைப்பிடித்த காதலன் மறைவு அவன் நினைவாக வாழும் கதாநாயகி. தன் பத்து வயது மகளுடன் புதுவாழ்க்கை தேடி பயணிக்கிறாள்.
அவள் எடுத்த முடிவு சரியாக அமைந்ததா? வாழ்க்கையில் வசந்தத்தை சந்தித்தாளா? என்பதை காதலும், பாசமும் கலந்து படைத்திருக்கிறேன்.
படிக்கும் வாசகர்கள் கதைநாயகியின் நிலை கண்டு நிச்சயம் மனம் நெகிழ்வார்கள். படித்து ரசியுங்கள்.
பரிமளா ராஜேந்திரன்
Read more from Parimala Rajendran
Verena Nee Irunthai! Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendravan Nee Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Nee Thaanadi..! Rating: 3 out of 5 stars3/5Thaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsEn Pon Vaanam Nee Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsRaagam Thedum Pallavi Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsKaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsTyagathin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsPenn Ondru Kandean Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsAnbaal Vellalaam! Rating: 0 out of 5 stars0 ratingsThendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Pookkum! Rating: 0 out of 5 stars0 ratingsManame Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsAzhagaai Poothathey... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puthu Vasantham Thedi Varum
Related ebooks
Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Kaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsThen Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Ennulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Oru Devathai Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsAndha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Megamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Pala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsEn Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsEzhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsRadhai Manadhil...! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Vanthathey Puthiya Paravai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Puthu Vasantham Thedi Varum
0 ratings0 reviews
Book preview
Puthu Vasantham Thedi Varum - Parimala Rajendran
https://www.pustaka.co.in
புது வசந்தம் தேடி வரும்
Puthu Vasantham Thedi Varum
Author:
பரிமளா ராஜேந்திரன்
Parimala Rajendran
For more books
https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
கார் சென்னையை நோக்கி பயணித்தது.
பின்சீட்டில் ஐந்து வயது மகன் நிதினுடனும், மாமியார் கற்பகத்துடனும் உட்கார்ந்திருந்தாள் சுபத்ரா.
கண்கள் கடந்து செல்லும் மரங்களையும், கட்டடங்களையும் பார்த்தபடி வர, அதுவுமே மனதில் பதியவில்லை.
துணிந்து எடுத்த முடிவு. எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்?
கண் இமை ஓரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது. சுபத்ராவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவள், மெல்ல அவள் கையை ஆதரவாகப் பற்றினாள்.
‘பயப்படாதே... உனக்கு நான் துணையிருப்பேன்...’ கற்பகத்தின் தொடுதல் சொல்லியது.
பாட்டி, எப்ப நாம் ஊருக்குப் போவோம்...?
இன்னும் கொஞ்ச நேரம்தான் கண்ணா... நீ பாட்டியின் மடியில் படுத்துக்க. ஊர் வந்துடும்...
சரி பாட்டி. அப்ப நீ எனக்கு தட்டிக் கொடு. நான் தூங்கறேன்...
நிதினும் கற்பகமும் சாப்பிடாமல் வருகிறார்கள் என்பது அப்போதுதான் உரைக்க, நினைவுகளை ஒதுக்கியவள், டிரைவர், ஏதாவது நல்ல ஓட்டல் வந்தா நிறுத்துங்க. சாப்பிட்டுப் போகலாம்...
என்றாள்.
சரி, மேடம்...
சுபத்ரா... சாமான் ஏத்திட்டு வர்ற லாரி எப்ப கிளம்புது?
ராத்திரிதான் அத்தை... விடியற்காலையில் வந்துடும்...
தினேஷ் தம்பிக்கு போன் பண்ணிட்டியா...?
ம்... ஈவினிங் வந்துடுவோம்னு சொல்லிட்டேன். அவர் வீட்டுக்குப் போயிட்டு கொஞ்ச நேரத்தில் நாம் குடியிருக்கப்போற வீட்டுக்குப் போயிடுவாராம்... ஒன்றும் பிரச்சனையில்லை...
சாப்பிட இறங்கினார்கள்.
டிரைவர் தம்பி... நீங்களும் வாங்க சாப்பிடலாம்...
கற்பகம் அழைத்தாள்.
இல்லம்மா. நீங்க போய் சாப்பிடுங்க. வீட்டில் கட்டிக் கொடுத்தாங்க. நான் காரிலேயே சாப்பிடுகிறேன்...
நிதின் கை பிடித்து கற்பகம், சுபத்ராவுடன் ஹோட்டலுக்கு நுழைந்தாள்.
அந்தத் தம்பி ரொம்ப நல்ல மாதிரியா இருக்கு. பொறுப்பான டிராவல்ஸ்ல வண்டி புக் பண்ணியிருக்கே சுபா. அந்தத் தம்பிக்கு ஏதாவது பணம் தரணும்...
கொடுத்துடலாம் அத்தை... நீங்க பார்த்து வாங்க.
சொல்லும் சுபத்ராவை அன்போடு பார்த்தாள்.
எவ்வளவு பிரியமும், பாசமுமாக இருக்கிறாள். புருஷனுடன் சேர்ந்து வாழ முடியாமல், இப்படி இளம் வயதிலேயே அவள் உயிரைப் பறித்துக் கொண்டானே... மனம் பரிதாகப்பட்டது.
அம்சமான குணம். கருணை தெரியும் கண்கள். பேச்சில் எப்போதும் நிதானம் இருக்கும். அடுத்தவர் மனம் புண்படக்கூடாது என நினைப்பவள். கல்லூரியில் லெக்சரராக வேலை பார்க்கும் சுபா, மாணவிகளுடன் நட்போடு பழகுவாள். கோயமுத்தூரை விட்டுக் கிளம்பும்போது, அவளிடம் படித்த மாணவிகள் கண்ணீர்விட்டே அழுதுவிட்டனர்.
மேடம்... நீங்க இந்த காலேஜிலேயே இருந்திருக்கலாம். உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் மேடம்...
என்னம்மா பண்றது? எனக்கும் உங்களையெல்லாம் விட்டுப்போக மனசு வரலை. இருந்தாலும் இதைவிட பெரிய காலேஜில் சம்பளமும் அதிகமாக கிடைக்கும்போது நாளைக்கு என் மகனோட எதிர்காலத்தை நினைச்சுதான் கிளம்பறேன்...
***
கார் தினேஷ் வீட்டின் முன் நின்றது.
வா சுபா... வாங்கம்மா. ஹாய் நிதின்கண்ணா, எப்படியிருக்கே...?
நிதினைத் தூக்கியபடி தினேஷ் போக, முகம் மலர வந்தாள் ப்ரியா.
என்னம்மா டிராவல் எப்படி இருந்துச்சு?
டிரைவர் நல்ல மாதிரி. நல்லபடியா அழைச்சுட்டு வந்துட்டாரு...
சாப்பிட்டுவிட்டு கை கழுவிய சுபா, தினேஷ், அந்த வீட்டுக்குப் போகலாமா?
என்றாள்.
காலையில போகலாமே. சாவி என்கிட்டேதான் இருக்கு. ஒன்னும் பிரச்சனையில்லை.
இல்லை தினேஷ்... போயிடறோம். காலையில் சாமான்கள் வந்துடும். நீங்க செய்யற உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்.
எதுக்கு பெரிய வார்த்தை சொல்லிக்கிட்டு. உங்களுக்கு செய்ய கடமைப்பட்டவன் நான். சரி, ஓ.கே. வாங்க போகலாம்...
ஓரமாக இருந்த காரை கேட்டருகில் நிறுத்தினான்.
போயிட்டு வர்றோம் ப்ரியா. நாளை பால் காய்ச்சப் போறோம். புதுக்குடித்தனம் இந்த ஊரில் ஆரம்பமாகப் போகுது. கட்டாயம் வந்துடு...
வரேண்மா…
சுபாவின் கையைப் பிடித்தவள், உனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இரு சுபா...
தெரியும். என் மனசில் இருக்கிற ஆசை மட்டுமில்லை. அவரோட விருப்பமும் நிறைவேறும். ஜாக்கிரதையா இருப்பேன்.
சுபாவின் கண்கள் கலங்கியது.
சுபா, என்ன இது...? புது வீடு குடித்தனம் போகப்போற நேரத்தில்... கண்கள் கலங்கக் கூடாது. வா, போகலாம்.
சற்று அதட்டலாகவே சொன்னாள் கற்பகம்.
***
தினேஷ் உரிமையோடு கதவைத் திறந்து உள்ளேபோக, சற்று தயங்கியபடி கற்பகமும், சுபத்ராவும் நிதினுடன் வெளியே நிற்கிறார்கள்.
அங்கிள், மாடியில் குடிவரப் போறவங்க வந்தாச்சு. மாடிக்கு அழைச்சுட்டுப் போகவா...?
துண்டை தோளில் போட்டபடி வெளியே வந்த சிவராமன், சாவிதான் உன்கிட்டே இருக்கே, அழைச்சுட்டுப் போ தினேஷ்...
இருந்தாலும் உங்க வீட்டு மாடியில் குடித்தனம் வரப்போறாங்க. உங்ககிட்டே அறிமுகப்படுத்தாமல் அழைச்சுட்டுப் போகக்கூடாது இல்லையா...?
எங்கே அவங்க...? என்ன தினேஷ் இது. வாசலில் நிக்க வச்சுக்கிட்டு. உள்ளே அழைச்சுட்டு வரக்கூடாது?
வேகமாக உள்ளே வர, கற்பகத்தையும், அவள் போல்நிற்கும் சுபத்ராவையும், நிதினையும் பார்த்தவர், இவங்க, ஸாரி... அங்கிள்... அறிமுகப்படுத்தலை. இது சுபத்ரா... காலேஜில் லெக்சரர். இது அவங்க மகன் நிதின். இது அவங்க மாமியார்.
சொன்னவன், குரல் தாழ்ந்து, அவங்க ஹஸ்பெண்ட் இறந்துட்டாங்க. நான்தான் சொன்னேனே...
ஆமாம். மறந்துட்டேன்... வாங்க... வாங்க... நிதின்... தாத்தாகிட்டே வா பார்ப்போம்...
புடவையில் ஒளிந்துகொண்டு நின்றவள், போ நிதின். ஆசையா கூப்பிடறாரு பாரு. வணக்கம்பா. இவன் கொஞ்சம் கூச்ச சுபாவம். பழகினால் வருவான்
என்றாள்.
இருக்கட்டும்மா. வெளியிலேயே நின்று பேசறீங்க. உள்ளே வாங்க.
முதலில் எங்க போர்ஷன் போய்ப் பார்க்கிறோம். இனி இங்கேதானே இருக்கப்போறோம். உங்களை மாதிரி அருகில் இருப்பவங்களைதான் உறவாக நினைச்சுப் பழகுவோம். அப்புறம் உங்க மனைவி...?
கற்பகம் கேட்டாள்.
அவ கோயிலுக்குப் போயிருக்காம்மா. சாமியோடு சண்டைபோட... அவளுடைய எத்தனையோ கோரிக்கைகள் நிறைவேறாமல் போச்சு. மனசு கஷ்டப்பறப்ப... போய் அவக்கிட்டேயே நியாயம் கேட்கிறேன்னு கிளம்பிடுவா... நீங்க ஒருநாள் அவக்கிட்டே பேசினாலே அவ குணம் புரிஞ்சுடும்... மனசில் எதையும் மறைக்கத் தெரியாது. படபடன்னு பேசிடுவா. அதையெல்லாம் நீங்க பெரிசா எடுத்துக்கக்கூடாது...
சிரிப்போடு தினேஷ் பார்க்க, "இவக்கிட்டே கோபிச்சுக்கிட்டு வீட்டை