Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Pon Vaanam Nee
En Pon Vaanam Nee
En Pon Vaanam Nee
Ebook108 pages43 minutes

En Pon Vaanam Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாவல் தான் என் பொன்வானம் நீ. மனைவி என்பவள் தன்னில் சரிபாதி என்ற உணர்வு ஒவ்வொரு கணவருக்கும் இருக்க வேண்டும். பிரிவது எளியது. உள்ளன்போடு சேர்ந்து வாழ்வதில் தான் வாழ்க்கையின் வெற்றியே இருக்கிறது.

உறவுகளின் சிக்கல்கள் எப்படி தீர்க்கப்படுகிறது. அவர்களின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன... கதையின் நாயகனும், நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை கற்பனை நயத்துடன், காதல் கதையாக குடும்ப பின்னனியுடன் எழுதி உள்ளேன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580137806144
En Pon Vaanam Nee

Read more from Parimala Rajendran

Related to En Pon Vaanam Nee

Related ebooks

Reviews for En Pon Vaanam Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Pon Vaanam Nee - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    என் பொன்வானம் நீ

    En Pon Vaanam Nee

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    அந்தத் தெருவில் இருந்த வீடுகளில், உள்ளடங்கிய நிலையில் கட்டப்பட்டிருந்த வீடு பிரமாண்டமாக காட்சியளித்தது.

    வெளியே பூத்து குலுங்கும் வண்ண வண்ண பூச்செடிகள்... கண்களுக்கு குளிர்ச்சியை தந்தன.

    பச்சை நிறப் பட்டு கம்பளம் விரித்தாற்போல சீராக வெட்டப்பட்ட லான்... சுற்றிலும் மார்பிள் பதிக்கப்பட்ட நடைபாதை... போர்டிகோவில் தொட்டியில் தலைகீழாக தொங்கும் கொடிகள்... அந்த வீட்டில் இருப்பவர்களின் ரசனையை சொல்லியது.

    மில் அதிபர் ரகுபதி என்றாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது, அள்ளிக் கொடுத்து வள்ளல் என பெயர் வாங்கியவர். சமூக சேவையில் நாட்டம்... ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி என பல நல்ல காரியங்கள் செய்து வந்தார்.

    அவர் மனம் போல நடக்கும் இரக்க சுபாவமுள்ள அவர் மனைவி தேவகி. கணவனுக்கு இணையாக ஏழைகளுக்கு கொடுப்பதில் சந்தோஷமடைந்தாள்.

    அவர்களின் ஒரே ஆசை புதல்வன் சிவா என்கிற சிவகுமார். புதிதாக திருமணமானவன். தங்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கே அவன்தான் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

    நந்தினி டிரஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தாள். எதிரில் இருந்த கண்ணாடி அவள் பேரழகிதான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    பாத்ரூமிலிருந்து தலையை துவட்டியபடி வந்த சிவா, போதுமே உன் அழகை ரசித்தது... ப்ளீஸ் நந்தினி என் வாட்ரோபை திறந்து அந்த ப்ளாக் சூட்டை எடுத்துத் தாயேன். இன்னைக்கு பாரின் கஸ்டமர் வர்றாங்க. மில்லுக்கு சீக்கிரம் போகணும்.

    உட்கார்ந்தபடியே அவனை திரும்பிப் பார்த்தாள் நந்தினி.

    ஏன்... உங்க வாட்ரோப் இங்கிருந்து நாலு கி.மீ. தூரத்திலா இருக்கு. நீங்களே வந்து எடுத்துக்குங்க.

    ஒரு பெண்டாட்டி இந்த ஹெல்ப்கூட செய்யக் கூடாதா?

    இது ஹெல்ப் இல்லை சோம்பேறித்தனம். தனக்கு வேண்டியதை அவங்கவங்க தான் செய்துக்கணும். எல்லாத்துக்கும் அடுத்தவங்களை எதிர்பார்க்கக் கூடாது.

    போதுமே. காலையில் உன் பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாதே. தெரியாம சொல்லிட்டேன். நானே பார்த்துக்கிறேன்.

    சிரித்தபடி சிவா சொன்னாலும், மனதில் எரிச்சல் வரவே செய்தது.

    எது சொன்னாலும், ஏட்டிக்கு போட்டியாகத்தான் பேசுகிறாள். இதுதான் அவள் குணமா? அவனுக்கு புரியவில்லை.

    நந்தினி பெரிய கோடீஸ்வரர் சரவணனின் ஒரே செல்ல மகள். திருச்சியில் சினிமா தியேட்டர், காம்ப்ளக்ஸ் என்று எக்கச்சக்க சொத்து. தாயில்லாமல் வளர்ந்த நந்தினி, அப்பாவின் பராமரிப்பில் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாள்.

    சிவா... சாயந்திரம் சீக்கிரம் வர்றீங்களா? பிக்சர் ஏதாவது போகலாம்.

    முடியாது நந்தினி. இன்னைக்கு வேலை அதிகம் இருக்கும். இன்னொரு நாள் போகலாம்.

    தெரியும், இதைத்தான் சொல்லுவீங்கன்னு... என்னைக்கு நான் கேட்டு உடனே ஓ.கே.ன்னு சொல்லியிருக்கீங்க.

    ஏன், போனவாரம் போகலையா?

    கல்யாணமான லைப் ஸ்மூத்தா போகும்னு நினைச்சேன். உங்களோடு தினமும் போராட்டமாகத்தான் இருக்கு. புது பெண்டாட்டியோடு லைப்பை என்ஜாய் பண்ணவே தெரியலையே.

    ஹலோ... கல்யாணமாகி ஆறு மாசமாச்சு... நாம் இதுவரை எவ்வளவோ இடம் போயிருக்கோம். மறந்துட்டு பேசறியே. இப்ப என்ன, இன்னைக்கு உனக்கு சினிமா போகணும்... அவ்வளவுதானே. ஓ.கே. வரேன்.

    தேவையில்லை... நான் இவ்வளவு தூரம் சொன்ன பிறகு நீங்க வரவேண்டாம். எனக்கு வெளியே போற மூடே போயிடுச்சு.

    வேகமாக எழுந்து ரூமை விட்டு வெளியேற,

    மனதில் சிவாவுக்கு ஆயாசம் ஏற்பட்டது. இவளுடன் என் வாழ்க்கை எப்படி செல்லப் போகிறது தெரியவில்லையே. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தர்க்கம், கோபம். இவளை எப்படி மாற்றுவது?

    யோசனையுடன் மில்லுக்கு கிளம்ப தயாரானான் சிவா.

    ***

    நந்தினி, நந்தினி... இங்கே கொஞ்சம் வந்துட்டு போம்மா.

    கீழே தேவகி அழைப்பது, மாடி அறையில் இருக்கும் நந்தினியின் காதில் நன்றாகவே விழுந்தது.

    இருந்தாலும் காதில் விழாதது போல இருந்தாள்.

    கல்யாணமாகி ஆறு மாதமாகிவிட்டது. இன்னும் இந்த வீட்டில் உள்ளவர்களுடன் அவளால் சகஜமாக பழக முடியவில்லை.

    தேவகியும், ரகுபதியும் அளவுக்கு மீறி அவளிடம் அன்பு காட்டுவது கூட அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

    எப்போதும் அருகில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டு, பழைய கதைகளை பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

    வீட்டினுள் அடைந்து கிடக்கவும் எரிச்சல் வந்தது. எவ்வளவு நேரம்தான் டி.வி. பார்ப்பது... பாட்டு கேட்பது.

    திருச்சியில் இருக்கும் போது வீட்டிலேயே இருக்க மாட்டாள். பிரெண்ட் வீடு, ஷாப்பிங் என்று வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பாள்.

    இங்கு வந்தபிறகு அந்த சுதந்திரமே பறிபோனது

    Enjoying the preview?
    Page 1 of 1