Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannadi Kanavugal
Kannadi Kanavugal
Kannadi Kanavugal
Ebook94 pages19 minutes

Kannadi Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேர்மையாக வாழ்வது தான் வெற்றி தரும். பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. அதனால் கதாநாயகன் சந்திக்கும் இழப்புகள்...

கண்ணாடி கனவுகள் கதையின் கருவாக அமைந்துள்ளது. குடும்பபாக்காக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் வாசகர் உள்ளத்தில் நிச்சயம் இடம் பெறும்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580137807199
Kannadi Kanavugal

Read more from Parimala Rajendran

Related to Kannadi Kanavugal

Related ebooks

Reviews for Kannadi Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannadi Kanavugal - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    கண்ணாடி கனவுகள்

    Kannadi Kanavugal

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    அந்த மேன்ஷனில் ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய சோம்பேறித்தனம் எங்கும் நிறைந்திருந்தது.

    லுங்கியில் சட்டை கூட அணியாமல், காரிடாரில் நின்று நாலைந்து பேர் பேசிக்கொண்டிருக்க, மான்சனுக்கு எதிரில் இருந்த டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    நாயர் நாலு டீ மாடிக்கு அனுப்புங்க. மாடியிலிருந்தே ஒருவன் குரல் கொடுக்க...

    யாரு கணக்கில் எழுதிக்க?

    கீழே வந்ததும் பைசல் பண்ணிடறேன்.

    ஒய் திஸ் கொலவெறி, கொலவெறிடீ செல்போன் ரிங்டோன் ஒலிக்க,

    என்ன மச்சி காலையிலேயே கூப்பிட்டே, அப்படியா வந்திடறேன் சப்தமாக ஒருவன் பேச, தூக்கத்திலிருந்து கண் விழித்தான் மருது. ஞாயிற்றுக்கிழமைக் கூட நிம்மதியா தூங்கவிட மாட்டார்கள். அருகிலிருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தான். மணி ஒன்பதாகி விட்டதா?"

    சோம்பல் முறித்து எழுந்து உட்கார்ந்தவனுக்கு நேற்று ரத்தினம் அவனிடம் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.

    மருது, பணமிருந்தா ஒரு ஐநூறு ரூபா கைமாத்தா கொடுப்பா. பொண்ணு ஊரிலிருந்து வந்திருக்கு. நல்ல சோறு ஆக்கிப் போட்டு கையில் ஏதாவது கொடுத்தனுப்பணும். மாசக் கடைசி பணமில்லை.

    அப்படியா, இப்ப எங்ககிட்டேயும் பணம் இல்லையே. ஒண்ணு செய்ங்க. நாளைக்கு ஞாயித்துக்கிழமை சாயந்தரமா மேன்ஷன் பக்கம் வாங்கதரேன்.

    எழுந்து பெட்டியை திறந்தான். அதில் துணிகளுக்கு இடையில் இருந்த ரூபாய் நோட்டை எடுத்து எண்ணிப் பார்த்தான்.

    முந்நூற்றி இருபது ரூபாய்தான் இருந்தது. யோசித்தவன், குளியலறையில் புகுந்து பத்து நிமிஷத்தில் குளித்து முடித்து வெளியே வந்து, பேண்ட் சட்டைக்குள் மாறி ரூம் கதவை பூட்டிக்கொண்டு வெளியேறினான்.

    அண்ணாநகரில் எக்ஸிபிஷன் நடப்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமிருந்தது.

    நகருங்க, உள்ளே தள்ளி நில்லுங்க. படியிலே நிற்காதீங்க. படியில் நின்னா, நொடியில் மரணம் கண்டக்டர் சொல்ல,

    வாயிலிருந்து காலையில் நல்ல வார்த்தையா வருதா பாரு. என்ன ஜென்மமோ.

    பெரியவர் முணுமுணுக்க, ஐயா, சொல்றது காதில் விழலையா. தள்ளி நில்லுங்க.

    அருகில் இருந்தவரிடம் சொல்லிய மருது, பேண்ட், சட்டை போட்டு கண்களில் கூலிங்க்ளாஸ் அணிந்தபடி ஸ்டைலாக நின்றவனை நெருங்கி நின்றான்.

    அடுத்த பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்க, தள்ளுங்க இறங்க வழி விடுங்க.

    கூட்டத்தை விலக்கிக்கொண்டு இறங்கியவன், வேகமாக எதிர்த் திசையில் ஓட்டமும், நடையுமாக சென்றான்.

    சிறிது தூரம் சென்ற பின், ஒரு மரத்தடியில் நின்று பனியனுள் கைவிட்டு பளபளக்கும் அந்த பர்சை எடுத்து திறந்தான். ஐநூறு ரூபாய் தாள் இரண்டும், நூறு ரூபாய் ஒன்றும் இருக்க, அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

    2

    இந்தாங்க வச்சுக்குங்க.

    தம்பி இதில் எழுநூறு ரூபா இருக்கு. எனக்கு ஐநூறு போதும்பா.

    இருக்கட்டும். அந்த இருநூறில் என் சார்பா உங்க மகளுக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடுங்க. ஐநூறு திருப்பி தந்தால் போதும்.

    உனக்கு ரொம்ப நல்ல மனசு மருது. உன் துபாய் ப்ரெண்ட் உன்கிட்டே பணம் அனுப்பி வட்டிக்கு விடச் சொல்றான். நீ எங்களை மாதிரி ஏழைகளுக்கு வட்டியில்லாம கொடுக்கற. ரொம்ப சந்தோஷம், வரேன்பா.

    மருதுவும், ரத்தினத்துடன் லாரி ஆபீசில் கூலியாகதான் வேலை செய்கிறான். அவனிடம் அதிக பண புழக்கம் இருப்பதை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்பட துபாய் ப்ரெண்ட் அனுப்புவதாக சொல்லியிருந்தான்.

    ***

    இரண்டு வருஷத்துக்கு முன் கையில் பத்து பைசா இல்லாத மருதுவை நினைத்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1