Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalikku Kalyanam
Kaadhalikku Kalyanam
Kaadhalikku Kalyanam
Ebook219 pages1 hour

Kaadhalikku Kalyanam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100905494
Kaadhalikku Kalyanam

Read more from Pattukottai Prabakar

Related to Kaadhalikku Kalyanam

Related ebooks

Related categories

Reviews for Kaadhalikku Kalyanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalikku Kalyanam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    காதலிக்குக் கல்யாணம்

    Kaadhalikku Kalyanam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    காலை ஐந்து மணிக்கு அலாரம் ஒலிக்கத் தொடங்கியதும், விழிப்பு ஏற்பட்டாலும் கண்களைத் திறக்காமல் ஒரு கையால் துழாவி கெடிகாரத்தை எடுத்து அதன் சத்தத்தை நிறுத்தினான் சந்திரன்.

    தலையணைக்கடியில் கைவிட்டு டைரி எடுத்து, அதன் முதல் பக்கத்தைப் புரட்டி தன் முகத்திற்கு நேராகப் பிடித்துக் கொண்ட பிறகு தான் கண்களைத் திறந்தான்.

    குட்மார்னிங் பவித்ரா என்றான் வண்ணப் புகைப்படத்தைப் பார்த்து. டைரியை அருகில் கொண்டு வந்து ஒரு 'இச்' கொடுத்துவிட்டு, தள்ளிப் பிடித்து அவளை ரசித்தான்.

    ஏண்டா, காலைல பல்லுகூட விளக்காம முத்தம் கொடுத்தாகணுமா? என்றான் அரை டவுசருடன் உட்கார்ந்து, எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நடராஜன்.

    எந்திரிச்சிட்டியா? காபி குடிக்கிறதுக்குதான் பல்லு விளக்கினா நல்லது. முத்தத்துக்குப் பரவால்லை. என் ஆளு. நான் காலைல முத்தம் கொடுப்பேன். நடு இராத்திரி முத்தம் கொடுப்பேன். உனக்கு என்னடா குத்துது?

    போர்வையை மடித்துப் போட்டு படுக்கையைச் சுருட்டி ஓரமாக வைத்து விட்டு, இன்னைக்கு என்ன டிபன் செய்யப் போறே நடராஜ்? என்றான் சந்திரன், பற்பசையை பிதுக்கியபடி.

    பிரதர், நேத்து ஞாயிற்றுக்கிழமையோட ஒரு வாரம் முடிஞ்சி போச்சு. இன்னைக்குத் திங்கள். இன்னையிலேர்ந்து ஒரு வாரத்துக்கு நீ சமைக்கணும். நீ கேட்ட கேள்வியை இப்ப நான் கேக்கணும். சொல்லு, இன்னைக்கு என்ன டிபன் செய்யப் போறே சந்திரா? என்ற நடராஜ், நின்ற இடத்திலேயே ஓடுவது போல குதித்தான்.

    போச்சுடா என்ற சந்திரன், அந்த அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் சென்று பதினைந்து நிமிடங்களில் இடுப்பில் ஈரத்துண்டோடு வெளியே வந்தான்.

    குளிச்சிட்டியா, என்ன? நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் புரட்டிக் கொண்டிருந்த நடராஜ் கேட்டான்.

    ஆமாம்.

    என்னடா இது ஆச்சரியமா இருக்கு? ஏழு மணிக்கு முன்னாடி எழுப்பினா அலறுவே! இன்னைக்கு அஞ்சரை மணிக்கே குளிச்சி தயாராகறே! வெளியில் போறியா?

    ஆமாம். பேண்ட் அணிந்தான் சந்திரன்.

    எங்கே?

    கோலம் பார்க்கணும். சட்டை அணிந்தான்.

    கோலமா என்னடா சொல்றே, புரியலையே...

    உனக்குப் புரியாது. தலைசீவத் தொடங்கினான்.

    கலர் பார்க்கறதுன்னாப் புரியும். இதென்ன கோலம் பார்க்கறது?

    இதெல்லாம் புரியணுமின்னா நீ லவ் பண்ணணும் மச்சான். பவுடர் போட்டுக் கொண்டான்.

    இதைப் புரிஞ்சுக்கிறதுக்காக லவ் பண்ண முடியாதுப்பா... சும்மா சொல்லுடா... அலட்டறியே...

    சந்திரன் பூட்சு அணிந்து முடித்து, தன் மொபெட் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு நடராஜிடம் வந்தான்.

    அதாவது பவித்ரா ஒரு வாரமா தன் வீட்ல இல்லை. அம்பத்தூர்ல இருக்கிற அவளோட பெரியப்பா வீட்டுக்குப் போயிருக்கா. அவள் இன்னைக்கு அம்பத்தூர்லேர்ந்து மைலாப்பூருக்குத் திரும்பிடுவேன்னு சொன்னா. அதான் வந்துட்டாளான்னு தெரிஞ்சுக்கணும்.

    சரி, நீ என்னமோ கோலம் பார்க்கணும்னு சொன்னே!

    ஆமாம். பவித்ரா வீட்ல இருந்தா தினம் வாசல்ல அவள் தான் கோலம் போடுவா. அவள் இல்லாதப்பா அவங்கம்மா போடுவாங்க. அவங்கம்மா போடற கோலம் பார்க்க சகிக்காது. பால்வாடி குழந்தை எழுதிப் பழகற மாதிரி ஒரே கிறுக்கலா இருக்கும். எங்காளு கோலம் போட்டா அரை மணி நேரம் நின்னு பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

    கோலத்தையா, அவளையா?

    உதை வாங்குவே படவா! வாசல்ல கோலத்தைப் பார்த்துட்டே அவள் அம்பத்தூர்லேர்ந்து வந்தாச்சா இல்லையான்னு தெரிஞ்சுக்குவேன். டேய் கண்ணா என்று நடராஜின் தாடையைப் பிடித்தான் சந்திரன்.

    என்ன கொஞ்சல் பலமா இருக்கு?

    இன்னைக்கு ஒரு நாள் நீயே சமைச்சிடுவியாம். நாளையிலேர்ந்து ஒரு வாரம் நான் சமைப்பேனாம். என் செல்லப் பையன் இல்ல நீ?

    வழியாதே! சமைச்சிடறேன். பொழைச்சிப் போ!

    நல்ல பையன்! என்று கன்னத்தில் ஒரு தட்டு தட்டி விட்டு அந்த வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கினான், சந்திரன்.

    இருட்டைத் துரத்தும் பணியில் வெளிச்சம் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. குழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்கள். நூறு பிளாஸ்டிக் குடங்கள் காத்திருந்தன. ரோட்டோரத்திலேயே கழற்றிய டவுசரைக் கைகளில் பிடித்துக் கொண்டு பொடியர்கள் அமர்ந்திருந்தார்கள். ஒரு கோழி தன் குடும்பத்தோடு கடந்து சென்றது. பக்கத்து வீட்டு மாமா வெள்ளை பனியன், வெள்ளை டவுசருடன் நாயைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எதிர் டீக்கடை பெஞ்சில் ஒரு தினத்தந்தி தாளை நான்கு பேர் படித்துக் கொண்டிருந்தார்கள் கார்ப்பரேசனின் தெரு விளக்குகள் இன்னும் அணைக்கப் படவில்லை.

    காலைக் குளிர்த் தென்றல் முகத்தில் மென்மையாக வருட, சந்திரன் தன் மொபெட்டை நிதானமாகச் செலுத்தினான்.

    நந்தனம் சிக்னலில் அண்ணாசாலையைக் கடந்து கோட்டூர்புரம் வழியாக அடையாறு வந்தான். இந்திரா நகர் குடிநீர்த் தொட்டி அருகில் இடது புறம் திரும்பி அந்தத் தெருவுக்குள் வண்டி நுழையும் போதே அவன் படபடப்பு அதிகமானது.

    இதோ இன்னும் பதினைந்து வீடுகள் தள்ளி அவள் வீடு. தனி வீடு. கொஞ்சம் பழைய வீடு. வாசலருகில் ஒரு கொய்யா மரம். பிறகு செம்பருத்திச் செடியும், நந்தியா வட்டைச் செடியும்.

    வண்டியின் வேகத்தை வெகுவாகக் குறைத்தான் சந்திரன். பவித்ராவின் வீட்டிற்கு முதல் வீட்டை நெருங்கும் போதே பளிச்சென்று பெரிய கோலம் தெரிந்து விட்டது.

    பத்துப் பத்தாக பத்து வரிசைகள் புள்ளி வைத்து வரையப்பட்ட பெரிய கோலம். தெருவிலேயே அந்தக் கோலந்தான் பெரிய கோலமாக இருந்தது. அவனுக்கு மட்டும் பவித்ரா அம்பத்தூரில் இருந்து வந்துவிட்ட செய்தி சொன்னது.

    வண்டி அந்த வீட்டைக் கடந்து சென்றது. தெரு முனையில் இருந்த ஒரு டீக்கடையில் நிறுத்தி காபி சொல்லி விட்டு பெஞ்சில் அமர்ந்து கொண்டான் சந்திரன்.

    திங்கட்கிழமை அம்பத்தூரிலிருந்து வந்துவிடுவேன். வந்ததும் பத்தரை மணிக்கு அவன் வேலை பார்க்கிற 'திவ்யா பல்பொருள் அங்காடி’க்கு போன் செய்வதாகச் சொல்லியிருந்தாள்.

    மாம்பலத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்து விட்டு வீட்டில் பவித்ரா இருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட பிறகு அவள் முகத்தை ஒரு தடவையாவது பார்க்காமல் போவதா?

    ஏதாவது யோசனை செய்யலாமா?

    சந்திரனின் மனம் பரபரத்தது.

    பவித்ராவின் வீட்டில் அவளைத் தவிர மூன்றே பேர். அப்பா, அம்மா, ஆறாவது படிக்கும் தம்பி. மூவருமே சந்திரனை இதுவரை பார்த்ததில்லை. பவித்ராவின் காதல் விபரம் யாருக்கும் தெரியாது. இந்த நேரத்திற்கு தம்பி உறங்கிக் கொண்டிருப்பான். தினம் காலையில் ஆறு மணிக்கு அப்பாதான் சென்று காய்கறியும், மளிகை சாமானும் வாங்கி வருவார் என்று பவித்ரா சொல்லியிருக்கிறாள்.

    இப்போது மணி அவன் கெடிகாரத்தில் ஆறு இருபது ஆகியிருந்தது. ஆகையால் அப்பா வெளியே போயிருக்கலாம். இப்போது சென்று கதவைத் தட்டினால் ஒன்று பவித்ரா திறப்பாள். அல்லது அவளின் அம்மா திறப்பார்கள்.

    பவித்ரா திறந்தால்? காலை வணக்கம் சொல்லி அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டு, சொன்னபடி மறக்காம போன் செய் என்று மட்டும் சொல்லிவிட்டு உடனே போய்விடலாம்.

    அம்மா திறந்தால்?

    அந்த வீட்டு எண் 14. ஆனால் அம்மாவிடம் இது தானே கதவு நம்பர் பதினேழு? என்று கேட்கலாம். இல்லை என்று சொல்லப் போகிறார்கள். புறப்பட்டுவிடப் போகிறேன். அவ்வளவுதானே! அப்பாவே திறந்தால் கூட கேள்வியைக் கேட்க முடியும்.

    சந்திரனுக்கு அந்தக் குறும்பை செய்துவிடுவது என்கிற உந்துதல் அதிகமாக ஏற்பட, குடித்து முடித்த காபி தம்ளரை வைத்துவிட்டு தன் வண்டியைப் பூட்டி, இரண்டு பாக்கெட்டுகளிலும் கைகளை நுழைத்துக்கொண்டு நிதானமாக நடந்தான். நெருங்கினான்.

    என்ன தான் சமாளிப்பதற்கு பதில் தயாராக மனதில் இருந்தாலும், ஒரு சின்ன பதட்டம் ஏற்பட்டது.

    பவித்ராவின் வீட்டு வாசலுக்கு வந்து, கோலத்தை மிதித்துவிடாமல் கால் வைத்து கதவை அடைந்தான்.

    ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகு அழைப்பு மணியை அழுத்திவிட்டு உதடுகளை ஈரம் செய்து கொண்டு காத்திருந்தான்.

    கதவு திறக்கப்பட்டது. திறந்த பவித்ரா அவனைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியில் தன் நெஞ்சைத் தொட்டுக் கொண்டு அவசரமாக ஒருதரம் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

    என்னங்க இது, வீட்டுக்கு வந்துட்டிங்க. கொல்லைப் பக்கம் அப்பா இருக்காரு பதறின பவித்ரா பாவாடை, தாவணியில் இருந்தாள். இரட்டைப் பின்னல் போட்டிருந்தாள் கழுத்தில் லேசான வியர்வை காலை இளம்வெயிலில் மின்னியது. அவள் குளித்துவிட்டாள். ஆனால் முகத்திற்கு இன்னும் அலங்காரம் செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்தது.

    நீ ஊர்லேர்ந்து வந்துட்டியான்னு தெரிஞ்சுக்கறதுக்காக வந்தேன். கோலத்தைப் பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன். இருந்தாலும் உன்னைப் பார்த்து ஒரு சின்ன அதிர்ச்சி கொடுக்கணும் மாதிரி இருந்தது.

    சீக்கிரம் போய்டுங்க சந்திரன். நான் தான் போன்ல பேசறேன்னு சொன்னேனே... தவிப்புடன் ஒருமுறை உள் பக்கம் பார்த்துக் கொண்டாள்.

    பதறாதே பவித்ரா!

    அது சரி! மணி அடிச்சது யாருன்னு கேட்டால் என்ன சொல்றது?

    பொய் சொல்றதா சிரமம்? தப்பான முகவரி தேடி வந்துட்டாங்கன்னு சொல்லு. புது கம்பெனியாம், சோப்பு வேணுமான்னு கேட்டாங்கன்னு சொல்லு.

    அய்யோ நகருங்க சீக்கிரம். நான் என்னவோ சொல்லி சமாளிச்சுக்கிறேன். நீங்க முதல்ல போங்க சந்திரன்.

    அவளின் பதட்டத்தை ரசித்தபடி சந்திரன் புறப்பட யத்தனித்தபோது, யாரும்மா? என்ன வேணுமாம்? என்று கேட்டபடி அவளுக்குப் பின்னால் வந்து நின்ற அவள் அப்பா பாதி திறந்திருந்த கதவை முழுக்கத் திறந்து பிடித்து அவனைப் பார்த்தார்.

    இது பதினேழாம் நம்பர் வீடுன்னு நினைச்சி வந்து பெல் அடிச்சிட்டேன். இது பதினாலாம் நம்பர் வீடுன்னு அம்மா சொன்னாங்க. மன்னிச்சிடுங்க. நான் தொந்தரவு பண்ணிட்டேன் என்று அவன் நடக்கத் தொடங்க...

    நில்லுங்க சார். நீங்க சரியான விலாசத்துக்குத்தான் வந்தீங்கன்னு எனக்குத் தெரியும், மிஸ்டர் சந்திரன் என்று அவள் அப்பா சொன்னதும் இருவரும் வெல வெலத்துப் போனார்கள்.

    *****

    2

    பவித்ராவின் அப்பா தன் பெயரைச் சரியாகச் சொல்லி அழைத்ததும் மிரட்சியுடன் திரும்பிப் பார்த்தான், சந்திரன். இதை அவன் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை என்பதால், அதிர்ச்சி பெரிய அளவில் இருந்தது. உடனடியாக வாய் உலர்ந்து போய், வியர்க்கத் தொடங்கி விட்டது.

    என்ன அப்படிப் பார்க்கறீங்க சார்? உங்க பேர் தானே சந்திரன்? என்ற அவர் கை இல்லாத பனியனும், லுங்கியும் அணிந்திருந்தார். மீசையிலும், தலையிலும் கலந்திருந்த நரைத்த முடிகளை அவர் உருவத்திற்கு கம்பீரம் சேர்த்திருந்தன.

    ஆ... ஆமாம் என்றான் சந்திரன் தயக்கத்துடன்.

    அதிர்ச்சி விலகாமல் அகன்ற விழிகளுடன் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தாவணியின் முனையைச் சுருட்டிக் கசக்கிக் கொண்டிருந்தவளை முறைப்புடன் பார்த்து, நீ முதல்ல உள்ளே போ என்று அவர் அதட்டலாகச் சொன்னதும், பவித்ரா உடனே உள்ளே சென்று விட்டாள்.

    சந்திரனுக்குத்தான் அப்படியே மாயமாய் மறைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

    சந்திரன், உள்ளே வாங்க. கொஞ்சம் பேசணும்.

    கட்டளையிடப்பட்ட இயந்திர மனிதனைப் போல சந்திரன் தன் பூட்சை கழற்றிவிட்டு வீட்டுக்குள் தயங்கி அவரைத் தொடர்ந்தான்.

    வயர் பின்னிய சோபா செட்டை அவனுக்குக் காட்ட, அமர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1