Ippadikku Indhu...
()
About this ebook
Read more from Pattukottai Prabakar
September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ippadikku Indhu...
Related ebooks
Poo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Poo Pookkum Osai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsThinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Anjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Jarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Ithu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Andha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsUyir Mattum Unmai Rating: 5 out of 5 stars5/5Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsDecember Punnagai Rating: 5 out of 5 stars5/5Thuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Naalaya Aagayam Rating: 5 out of 5 stars5/5Thoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Meendum Arambikkalam Rating: 5 out of 5 stars5/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Puthir Thottam Rating: 5 out of 5 stars5/5Oru Koppai Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Puthir Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Ippadikku Indhu...
0 ratings0 reviews
Book preview
Ippadikku Indhu... - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
இப்படிக்கு இந்து…
Ippadikku Indhu…
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
கொஞ்சம் மனம் விட்டு...
அன்றைக்கு மழை பிரபா. நான் உன் ‘இப்படிக்கு, இந்து’ படித்துக் கொண்டிருந்த பொழுதுதான் நிறைய மழை பெய்திருக்க வேணும். படிச்சு முடிச்சுட்டு, ஜன்னல் பக்கம் வந்து நின்னேன். வெளில அங்கங்கே தேங்கிக் கிடந்த தண்ணீர். சிவப்பா ஓடின நீர் ஒழுக்குகள். பொதக் பொதக்குன்னு போற பையன்கள். ஆனா இப்போ மழையோட உக்கிரம் தணிஞ்சு போய் ‘கொச கொச’ன்னு தூறல் மட்டும் - நிகழ்ச்சிகள் முடிஞ்சதும் நன்றியுரை போல.
உன் நாவல் படிச்சிட்டு இருந்ததிலே இத்தனையும் அப்போ தெரியலை. நேரமும், சூழலும் தெரியலை. அப்படி ஒரு திறமை, உனக்கு இருக்கு. படிக்கும் போது, வாசகன் பக்கத்திலேயே சமயங்கள்ல இருந்து பேசிட்டு, கையைப் புடிச்சு நிகழ்ச்சிகளுக்கு நேரா கூட்டிக் கிட்டுப் போறே. அது மட்டுமில்லை, ஒரு விஷயத்தை நீ சொல்ல வர்ற விதம் அழகா இருக்கு, ‘பிக்சரைஸ்’ பண்றதுன்னு சொல்லலாமா இதை? இதிலே ஒரு தெளிவு இருக்கு.
இந்த நாவல் ஊட்டியிலே நடக்குதில்லையா, அந்த இடங்கள் எனக்கு பரிச்சயமா இருக்கிறதாலே, உன் ஹீரோ, ஹீரோயினை கூட்டிக் கிட்டுப் போறது, வரது எல்லாம் விஷ்வலா எனக்குத் தெரிஞ்சது. இதுக்கு உன் வேகமான த்ரில்லர்களுக்கு ஏற்ற வேக நடையும்கூட ஒரு காரணம்னு நெனைக்கிறேன்.
மனம் விட்டுச் சொல்லப் போனா, சுஜாதாவுக்கு அப்புறம், விஷயமுள்ள கிடுகிடுன்னு ஓடற த்ரில்லர்களை தர்றது உன் பேனாதான். உன் பல த்ரில்லர்களை பார்த்துட்டு தான் சொல்றேன் இதை. இந்த ஒரு நாலலை வைத்து மட்டும் சொல்லலை.
போடற நாட்ஸ், அங்கங்கே தெறிக்கிற சில ப்ளாஷஸ், ஸஸ்பென்ஸ் வைக்கிற திறமை, அதை கீப் பன்ற பாவ்லாக்கள் எல்லாம் ஜோர்தான். த்ரில்லர்களுக்குரிய சகல அம்சமும் தெரிஞ்சு வச்சிருக்கிறே.
ஆனாலும்...
ஒரு விஷயத்தை சொல்லாம இருக்க முடியலை. நல்ல திறமைகள் சரியான திசையிலே முழுதுமா போகாம இருக்கேங்கிற ஆதங்கம் தான் அது.
விஷயங்களை அழகா சொல்ற தெளிவும், திறமையும் உள்ள நீ, நல்ல நடையைப் பெற்றுள்ள நீ இன்னும் த்ரில்லர்களில் பெரும்பாலும் கான்சன்ட்ரேட் பண்றது எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.
மனதில் போய் ஒட்டிக்கொள்வது நல்ல நாவல். நாவலின் பாத்திரங்கள் படிக்கும் போது தந்த சோகமும், கோபமும், சங்கடமும், சந்தோஷமும் அதைப்பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் புதுப்பிக்க வைக்கிறது ஒரு நல்ல நாவல்.
ரயில் பயணத்திற்கு மட்டும் உதவுகிறவைகளாய் இல்லாமல் வீட்டில், ஷெல்பில் பொக்கிஷமாய் வைத்துக் கொள்கிற அளவிற்கு உன் நாவல்கள் இருக்க வேண்டுமென்பது என் ஆசை. உனக்கு இது முடியாததல்ல. முடியும். முடிந்திருக்கிறது. (உதாரணங்கள்: ஒரு வானம், பல பறவைகள், தொட முடியாத உயரங்கள்).
த்ரில்லர்களை எழுத நிறைய பேர் வருகிறார்கள். யார் கொலை செய்தது என்று நாற்காலியின் விளிம்பில், நகக் கடிப்போடு வாசகர்களை உட்கார்த்தி வைக்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
என் கவலை உன்னைப் பற்றி, உன் எழுத்தைப் பற்றி, அதன் மேன்மை பற்றி. அவை எட்ட வேண்டிய உயரத்தைப் பற்றி.
இதற்கு ஒரு காரணம் உண்டு.
அது - நீ என் பிரியத்துக்குரியவன் என்பது!
உன்,
கார்த்திகா ராஜ்குமார்,
பிரியமான உங்களுக்கு... நான் எழுதியது
வறட்சி, தண்ணீர் பிரச்னை, ரேஷன் க்யூ கஷ்டம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்ப அவர்கள் வரும் வரை டிராஃபிக் பயம். ஆபீசிலிருந்து அவர் சீக்கிரம் வரவேண்டும். லேட்டாய் போனால் டிக்கெட் கிடைக்காது. இன்றைக்கும் புது பிளேடு வாங்க மறந்து போய்... மறுபடி மொன்னை பிளேடால் வெட்டிக் கொள்வோம். ச்சை! புத்தகங்களை வீட்டுக்கு கொண்டு வரவா முடிகிறது? ப்ளோ - அப்பாம், கண்ராவி.
பக்கத்து வீட்டு படுபாவி ஆபிச்சுவரி, மேட்ரிமோனியல் முதற்கொண்டு படித்து விட்டு தான் பேப்பரைத் தருவான் - ஓசியில். எழவு, காஸுக்கு சொல்லி பதினைஞ்சு நாளாச்சு, இன்னும் வரலை. இப்படி கம்முனு இருந்தா எப்படி, ரெண்டாயிரம் தந்தா பி.காம். சீட் தர்றேங்கறாங்க, எப்படியாச்சும் புரட்டி தாங்கப்பா. இன்னொரு தடவை இப்படி லெட்டர் எழுதித் தந்தே செருப்பு பிஞ்சிடும் ராஸ்க்கல். கதவைத் திறந்து போட்டு விட்டு மத்தியானம் தூங்கினால் இப்படிதான் கொள்ளை போகும், பாவம் பைசா பைசா வாய் சேர்த்தது. இந்த கொலை தொடர்பாக போலிசார் மேலும் புலன் விசாரித்து வருகிறார்கள், இன்னும் ரெண்டே ரெண்டு டிக்கெட்டுதான், சீக்கிரம் வாங்க - அதிர்ஷ்டம் கூப்புடுது. பீச்சுக்கு வந்தாலும் தொட விட மாட்டேங்கறியே, ஏய், கிட்டே வாயேன். வாழை மரமும் அதன் பயன்களும்னு கட்டுரை எழுதித்தாடி அக்காவே.
இன்னும் லட்சக்கணக்கான பிரச்னைகளுக்கு நடுவில் இந்த நாவலைப் படிக்கப் போகிற உங்களுக்கு என் இதய நன்றி முதலில்.
மனம் விட்டுப் பேசியிருக்கிற என் நண்பர் எழுத்தாளர் கார்த்திகா ராஜ்குமாருக்கு என் நன்றி கிடையாது. நாங்கள் சொல்லிக் கொள்வதில்லை.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்.
1
ஊட்டி
பெயரை உச்சரிக்கின்ற போதே பற்கள் படபடக்கின்ற ஊர். இயற்கைத் தாய் விசேஷமாய் கருச் சுமந்து உலகில் பெற்றுப் போட்ட குளிர்ச்சிக் குழந்தை. உயரத்தில் இருக்கிறோம் என்ற தலைக்கனம் இல்லாமல் எப்போதும் சிரிக்கின்ற பசுமை பூமி.
கோடையின் கடைசி அத்தியாயம் படிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
குளிர் இல்லை. குகுளிளிர்ர்.
சூரியன் மோசமாய் டல்லடித்தான். அவன் சக்தி அனைத்தும் பனி மேகங்கள் முன்பு தோற்றுப் போயின. சில்ல்ல் காற்று. சிலிர்த்துக் கொள்ளும் பச்சை மரங்கள், ஆனந்தக் கண்ணீர் அடிக்கடி விடும் வானம். ஆளோடு ஆள் இடித்துக் கொள்ளச் செய்யும் பனித்திரை. லீ... என்று பறவைகள். சாலைகள் ஈரம் காய்ந்து பல நாட்களாகிவிட்டது.
காலை மணி 9. ஊர் இன்னும் சுறுசுறுப்பாகவில்லை. வேலைக்குச் செல்பவர்கள் மட்டும் வேறு வழியில்லாமல் தடித்த ஸ்வெட்டர் கோட், குல்லா, டிஃபன் பாக்சுடன் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
கமர்ஷியல் சாலையில் சேரங்கிராஸைக் கடந்து. ஹிக்கின் சாலை வந்து, புனித ஸ்டீஃபன் ஆலயம் அருகில் இருந்த தன் சிறு வீட்டின் வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கினான் பரத்.
ரத்தச் சிவப்பில் கழுத்தை மூடும் வட்டக்கழுத்து ஸ்வெட்டர். அதன் பாக்கெட் பகுதியில் ‘உடனடியாக என்னைக் காதலி’ என்று ஆங்கிலத்தில் வசனம். இந்தியனின் சராசரி உயரத்திற்குச் சற்று மேலே போயிருந் தான். சிகரெட்டின் காரணமாக லேசாய் கறுத்திருந்த உதடுகளுக்கு மேலே... அளவாய் வெட்டிவிடப்பட்ட மீசைக்கு மேலே... கூரான மூக்குக்கு மேலே... அழகுக்காக மெல்லிய பிரேமில் கண்ணாடி அணிந்திருந்தான். அதனுள் எப்போதும் ஒருவித மினுக்கலுடன் கண்கள்.
சைக்கிளைப் பூட்டிவிட்டு கதவை திறக்கச் சென்றவன் நின்றான். கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தது. மெல்ல விசிலடித்துக் கொண்டான். பத்து மணிக்கு வரச் சொன்னதற்கு இப்போதே வந்து விட்டாளா? மெல்ல சிரித்துக் கொண்டான்.
சுசிலா
என்றான்.
உடனே கதவு திறந்தது. மெல்லிய ரோஸ் நிற சேலையில் சுசிலா நின்று கொண்டிருந்தாள். கன்னத்தில் பரு. காதில் வளையங்கள்,
நான் சாவி வைக்கிற இடம் உனக்குத் தெரியுமா?
என்று நுழைந்து கதவைச் சாத்தினான் பரத்.
தெரியும். வந்து...
என்றாள்.
மறந்துட்டேனே... குட்மார்னிங் சுசிலா.
குட்மார்னிங்.
சரி. இப்போ நம்ம உதடுகள் குட்மார்னிங் சொல்லிக்க வேணாமா?
என்று அவள் கையைப் பிடித்தான். விலகினாள்.
இருங்க. நான் அதுக்காக வரலை.
ஆனா நான் அதுக்காகத்தான் வரச் சொல்லியிருந்தேன்.
பத்து மணிக்கு, இப்போ மணி ஒன்போது தான்.
ஒரு மணி நேரத்தில் என்ன வந்திச்சி டார்லிங்?
என்று அவள் இடையில் கிள்ளினான். மறுபடி விலகினாள். லிப்ஸ்டிக் போட்ட அவளின் சின்ன உதடுகள் மெல்லத் துடித்துக் கொண்டிருந்தன.
பரத், நான் பத்து மணிக்கு கண்டிப்பா வர்றேன். இப்போ உடனடியா எனக்கு ஐம்பது ரூபா பணம் வேணும். அதுக்காகத்தான் வந்தேன்.
"தர்றேன்.