Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilamai - Ithudan Inaippu
Ilamai - Ithudan Inaippu
Ilamai - Ithudan Inaippu
Ebook77 pages1 hour

Ilamai - Ithudan Inaippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வர்ணிக்கப்பட வேண்டிய அழகைத் தன்னுள் அடக்கியவளாகிய காயத்ரியை, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த திலக் தன்வசப்படுத்த நினைக்கிறான். காயத்ரி திலக்கிடம் வசப்பட்டாளா? திலக்கால் காயத்ரிக்கு நேர்ந்தது என்ன? இதை இன்ஸ்பெக்டர் ஹரி, பரத், சுசிலா கண்டுபிடித்தார்களா? என்பதை, பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின், 'இளமை - இத்துடன் இணைப்பு' கதையில் காணலாம்...!

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580100908211
Ilamai - Ithudan Inaippu

Read more from Pattukottai Prabakar

Related to Ilamai - Ithudan Inaippu

Related ebooks

Reviews for Ilamai - Ithudan Inaippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilamai - Ithudan Inaippu - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இளமை - இத்துடன் இணைப்பு

    Ilamai - Ithudan Inaippu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் - இ

    அத்தியாயம் - ள

    அத்தியாயம் - மை

    அத்தியாயம் மீண்டும் - இ

    அத்தியாயம் - த்

    அத்தியாயம் - து

    அத்தியாயம் - ட

    அத்தியாயம் - ன்

    அத்தியாயம் - இ

    அத்தியாயம் - ணை

    அத்தியாயம் - ப்

    அத்தியாயம் - பு

    முன்னுரை

    காயத்ரி வர்ணிக்கப்பட வேண்டியவள்.

    ஆரஞ்சுச்சுளை, பலாச்சுளை, மாம்பழம், திராட்சைபழம் என்று சாப்பிடுகிற பொருள்களுடன் வழக்கம் போலத் தாராளமாக ஒப்பிடலாம்.

    அவளைப் பெண் பார்க்க நீங்கள் சென்றால், வரதட்சணை பற்றி மறந்துபோய் உடனே சரி என்று விடுவீர்கள்.

    நிறையப்பேர் அவளுக்காகக் காத்திருந்து சைட் அடிக்கிறார்கள். அவள் வழி கேட்டால் விலாவரியாகச் சொல்கிறார்கள். சிலர் கூடவந்து காட்டுகிறார்கள். அவள் விசாரித்ததும் பழக்கடையில் விலை உடனே சரிகிறது. அவள் நீட்டும் பத்து ரூபாய்க்கு கண்டக்டர்கள் முகம் சுளிப்பதே இல்லை. எல்லாக் கடைகளிலும் சில்லறை இல்லை என்றால் பணம் மெதுவாக வாங்கிக்கொள்ளச் சம்மதிக்கிறார்கள். சினிமா தியேட்டர்களில் அவளுக்காக ஓடிப்போய் முட்டி மோதி டிக்கெட் வாங்கிக்கொடுத்து அவள் சிந்தும் புன்னகை கலந்த தாங்க்ஸை ‘தங்கவாள்’ போலப் பெருமையுடன் பெற்றுக்கொள்கிறார்கள்.

    மேற்படி காயத்ரி எக்கச்சக்க அழகுக்கு அதிபதினி. ஆனால்... அறிவில் டெட் சுமார். ஆகவே...

    காதலித்தாள்.

    எல்லாக் காதலிகளையும் போல ரகசியமாகக் கண்கிறங்கினாள். உதடு கடித்தாள், தலையணை அணைத்தாள். வித்தியாசமான லொக்கேஷன்களில் வித்தியாசமான காஸ்ட்யூம்களில் டூயட் கனவுகள் கண்டாள். சாலையில் மிதந்து நடந்தாள், அலுவலகத்தில் தப்புத் தப்பாய்க் கூட்டினாள்.

    எல்லாம் சரி. முக்கியமான சந்தர்ப்பம் வரும்போது காதலனின் கையை விலக்கி, ம்கூம். இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று எல்லாக் காதலிகளையும் போலச் சொல்ல வேண்டும்.

    சொல்கிறாளா, பார்க்கலாம்.

    காயத்ரி லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாள். உதட்டின் விளிம்பை மீறின சாயத்தை ஸ்பாஞ்ச்சால் துடைத்தாள். சைடில் திரும்பி, அப்புறம் அந்த சைடில் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். கைப்பையை எடுத்துக்கொண்டாள். தன் அறையைவிட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தாள்.

    கண்ணாடி போட்ட அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அம்மா தரையில் அமர்ந்து மல்லிகைப் பூ கட்டிக்கொண்டிருந்தாள்.

    கொலுசின் சப்தம் கேட்டு நிமிர்ந்த அப்பா, இன்னிக்கு சண்டே இல்லை? ஆஃபீசுக்கா போறே?

    இல்லைப்பா. என் ஃபிரண்ட் மாதவி வீட்டுக்குப் போறேன்.

    சரி என்றார் அந்தச் சோப்ளாங்கி அப்பா. ‘யார் அந்த மாதவி? எங்கே இருக்கா? அவ அப்பா என்ன செய்றார்?’ என்று கேட்டுத் துளைத்து அவளைத் தடுமாற வைத்து, ‘தம்பியையும் துணைக்குக் கூட்டிட்டுப் போ’ என்று பொறுப்பாய் செயல்பட்டிருந்தால்... இந்த நாவலுக்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்.

    பூ வச்சுக்கிட்டுப் போ காயத்ரி, உனக்குத்தான் கட்றேன் என்ற அம்மாவுக்காவது தனது மகள் மேல் அசட்டுத்தனமான அசாத்திய நம்பிக்கை இருந்திருக்கக் கூடாது.

    காயத்ரி ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு காத்திருந்தாள். நகம் கடித்தாள். பூ வைத்துக்கொண்டதும், அம்மா, மத்தியானம் அவ வீட்லயே சாப்பிட்டுட்டு சாயங்காலம்தான் வருவேன் என்றதற்கு,

    பெருமாள் மாடு மாதிரி தலையசைத்தாள் அம்மா.

    வெயிலா இருக்கு. குடை எடுத்துட்டுப் போகக்கூடாதோ என்று முணுமுணுத்தார் அப்பா. புரியாத அப்பா. ஏ.சி.கார் காத்திருக்கும்போது குடையாம்! வெயிலாம்!

    காயத்ரி படி தாண்டினாள்.

    நடந்தாள். தன் குடியிருப்பை விட்டு முக்கிய

    Enjoying the preview?
    Page 1 of 1