Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppodu Vilaiyadu!
Neruppodu Vilaiyadu!
Neruppodu Vilaiyadu!
Ebook86 pages53 minutes

Neruppodu Vilaiyadu!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903858
Neruppodu Vilaiyadu!

Read more from Pattukottai Prabakar

Related to Neruppodu Vilaiyadu!

Related ebooks

Related categories

Reviews for Neruppodu Vilaiyadu!

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppodu Vilaiyadu! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நெருப்போடு விளையாடு!

    Neruppodu Vilaiyadu!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    கல்யாணி,

    நான் அன்று சொன்னதை நீ சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையா? ஏதோ குடி போதையில் உளறினேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா? நான் சொன்னது சத்தியம். எந்தக் கோயிலில் கற்பூரம் அணைத்தால் ஒப்புக் கொள்வாய் சொல், அணைக்கிறேன்.

    விரிவாகப் பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம். ஞாயிற்றுக்கிழமை காலையில் ராகம் ஹோட்டலின் ரெஸ்ட்டாரெண்ட்டில் பத்து மணி முதல் உனக்காகக் காக்துக் கொண்டிருப்பேன். நீ வரும்வரை காத்திருப்பேன். என்னை ஏமாற்றி விடாதே கல்யாணி. நான் நொந்து போய்விடுவேன்.

    ப்ளீஸ்... வா! பேசலாம். வருவாய்தானே?

    உன்னுடைய,

    தண்டபாணி.'

    - குப்புறப்படுத்து பீடா மென்றபடி, கால்களை அசைத்தபடி படித்துக் கொண்டிருந்த கல்யாணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. சிரித்தே விட்டாள்.

    குப்புறப்படுத்து சிரிப்பது சிரமமாக இருக்க, புரண்டு சிரித்தாள். நழுவின முந்தானையைப் பற்றிக் கவலையின்றிச் சிரித்தாள். ஜாக்கெட்டின் கழுத்து டைலரின் துணித்திருட்டுக்கு சாட்சியாயிருக்க... சிரிப்பில் குலுங்கின.

    அருகில் நின்று கண்ணாடி பார்த்து தன் நீளமான கூந்தலில் சிக்கெடுத்துக் கொண்டிருந்த சரளா, என்னடி ஆச்சி உனக்கு? காமெடி கதை படிக்கிறியா?

    இல்லை, லெட்டர்

    லெட்டர்ல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?

    லவ் லெட்டர்டி

    யாருக்கு வந்த லெட்டர்?

    எனக்குதான். நான் கூட சொல்லலை, வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்னமோ கோயிலுக்குப் போற மாதிரி என்னை வந்து பிக்கப் பண்ணிக்கிட்டு போவானே, ஒடிசலா உயரமா... நாம கூட கிரிக்கெட் மட்டைன்னு பேர் வெச்சமே... அவன் பேரு தண்டபாணின்னே எனக்கு இப்பதான் தெரியும்

    கல்யாணி மீண்டும் சிரித்தாள்.

    சரளா சீப்பைப் பற்களில் கடித்துக் கொண்டு கூந்தலை இரண்டு கைகளால்லும் கொண்டை போட்டபடி வந்து கட்டிலில் கிடந்த அந்தக் கடிதத்தைப் படித்தாள்.

    என்னடி இது. இவ்வளவு தூரம் உருகி எழுதியிருக்கான்.

    மண்டையில சின்னதா கிராக் இருக்கும் போலிருக்கு

    அவன் என்னத்தை சொன்னான் சீரியஸா அப்படி?

    என்னோட கடந்த கால வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மறந்துடறானாம். என்னை அவன் கல்யாணம் பண்ணிக்கிறானாம்.

    அது சரி. இது மாமூலா இங்கே வர்ற நாலு பேர்ல ஒருத்தன் சொல்ற கதைதான். ஆனா விடிஞ்சதும் மறந்து போய்டுவாங்களே. கொஞ்சம் வித்தியாசமா இருக்கானே. சீரியஸா லெட்டர் போட்டிருக்கான்னா... நிஜமாவே உன்னை லவ் பண்றான் போலிருக்கு கல்யாணி

    அபத்தம்

    உனக்கு அபத்தம். அவனுக்குப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கயேன். ஒரு சிவப்பு விளக்கு குத்து விளக்காகட்டுமே. எத்தனை நாள்தான் இப்படியே இருந்துட முடியும்?

    கல்யாணி சரளாவைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தாள்.

    அறைக்குள் வந்தாள் பூரணி. குட்டித் தேர் போல இருந்தாள். கழுத்து என்ற உறுப்பைக் காணவில்லை. நரைக்கு டை அடித்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

    உங்க ரெண்டு பேர்ல யாருடி ஃப்ரீ?

    நான் குளிக்கணும் என்றாள் கல்யாணி.

    சரளா கல்யாணியின் தாடையைப் பிடித்துக் கெஞ்சி, ஏய்! ப்ளீஸ்டி. எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் போகணும். நீ சேர்த்து ஒரு வழியா குளிச்சுக்கயேன் என்றாள்.

    சரி. எங்கேக்கா? என்றாள் கைகளை சோம்பலாய் உதறிய கல்யாணி.

    பக்கத்தில்தான். புவனா லாட்ஜிலே ஏழாம் நம்பர் ரூமு, வாசல்ல ஆட்டோ ரெடியா நிக்கிது.

    எவ்வளவு பேசியிருக்கே?

    முண்ணூறு, இரநூறு அட்வான்சா கொடுத்துட்டான். மிச்சம் நூறை மட்டும் ஜாக்கெட் பிரிக்கிறதுக்கு முன்னாடியே வாங்கி வச்சிடு. பிசினாரிப் பசங்க சிலபேர் இங்கயும் கடன் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தனியா டிப்ஸ் கேக்கற பழக்கம் எல்லாம் வேணாம். தொழில் கெட்டுப் போய்டும், ஒன் அவருக்குத்தான் பேசிருக்கு. ஆட்டோ வெய்ட்டிங்ல இருக்கும். சுருக்க வந்துடு.

    ஏன்?

    சாயங்காலம் மாமண்டூர்காரன் வர்றேன்னுருக்கான். போன் பண்ணி சொல்லிட்டான். அவன் வந்தா உன்னைதான் கேப்பான்.

    Enjoying the preview?
    Page 1 of 1