Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iruthi Othigai
Iruthi Othigai
Iruthi Othigai
Ebook96 pages54 minutes

Iruthi Othigai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100904009
Iruthi Othigai

Read more from Pattukottai Prabakar

Related to Iruthi Othigai

Related ebooks

Related categories

Reviews for Iruthi Othigai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iruthi Othigai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இறுதி ஒத்திகை

    Iruthi Othigai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    கல்லூரி வாசல்களில், தெருமுனைகளில், நூலகங்களில், பூங்காக்களில், கடற்கரைகளில், திரையரங்குகளில் இன்னும் ஆயிரம் இடங்களில் கூடி நின்றுப் பேசுகின்ற இன்றைய இளைஞர்களின் மத்தியில் போய் நின்று, தேவராணி என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லிப் பாருங்கள்.

    உடனே அவர்களின் முகத்தில் தனியாக வெளிச்சம் அடிக்கும். விழிகளின் பாப்பாக்கள் விரியும். உதடுகள் நாக்கால் ஒருமுறை நனைக்கப்படும். அவர்களின் இரத்த ஓட்டம் தவளைப் பாய்ச்சலாக மாறிவிடும், மனசெல்லாம் தித்திப்புத் ததும்பி...

    அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புதுக்கதாநாயகியாக அறிமுகமாகி சில வருடங்கள், சில படங்களிலேயே புகழ் வாங்கியிருக்கிறாள் தேவராணி.

    அவளை உங்களில் நிறையபேர் விதவிதமான உடைகளில், விதவிதமான அலங்காரங்களில் சினிமாவில் பார்த்துவிட்டீர்கள். சினிமா பார்க்கின்ற வழக்கமில்லாதவர்கள் தொலைக்காட்சியில் சோப்பு விளம்பரத்தில் பார்த்து விட்டீர்கள். அந்தப் பழக்கமும் இல்லாதவர்கள் செய்தித்தாள்களைப் புரட்டும்போது சினிமா விளம்பரங்களில் பார்த்தாயிற்று. நீங்கள் பத்திரிகையும் புரட்டுவதில்லை என்றால், பரவாயில்லை. எப்படியும் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பீர்கள். சாலையில் நடந்திருப்பீர்கள், அப்போது சுவர்களில் வரிசையாக சுவரொட்டிகளில் மெல்லிசான சேலை போர்த்தி தலையை லேசாகச் சாய்த்துச் சிரிக்கின்ற தேவராணிகளை வரிசையாக தரிசித்திருக்க வேண்டும். தேவராணியை கல்லறைக்குள் போன மனிதர்களுக்கும் கர்ப்பப்பையிலிருக்கும் குழந்தைகளுக்கும் தவிர அத்தனைபேருக்கும் தெரியுமென்பதால்...

    தேவராணியை வர்ணிப்பதாய் இல்லை.

    ஆனால், அவளின் பின்னணி பற்றிக் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். தேவராணி எப்படி சினிமா நடிகையானாள்? இந்தக் கேள்விக்கான பதிலை மட்டுமே நான்கு பாகம் கொண்ட நாவலாக எழுதலாம்.

    திருமணம் நடந்தது மூன்று மாதங்களுக்கு முன்பாக. இரகசியமாக திருப்பதியில் ஏடுகொண்டலவாடு சன்னதியில் திருமணம், சென்னைக்குத் திரும்பியதும் பத்திரிகையாளர்களை அவசரமாக அழைத்து செய்தி கொடுத்து... மறுவாரம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடந்தது.

    மித்ராவுக்கு நிறைய தொழில்கள். கர்நாடகாவில் ஏக்கர் ஏக்கராக தேயிலைத் தோட்டங்கள். தேயிலை ஏற்றுமதி நிறுவனம். சென்னையில் மூன்று சினிமா தியேட்டர்கள் கொண்ட ஒரே பெரிய கட்டிடம். அறுபத்தி ஏழு வர்த்தக நிறுவனங்களும், எழுபது அலுவலகங்களும் கொண்ட எட்டு மாடிக் கட்டிடம் அண்ணாசாலையில், மித்ராவிடம் எல்லா வகையிலும் கார்கள் இருக்கின்றன. அவர் பங்களாவில் பதினேழு பேர் வேலை பார்க்கிறார்கள்.

    மித்ரா நல்ல உயரம், ஐந்தடி. ஒன்பது அங்குலங்கள். சிவப்பு நிறம், உயரத்திற்குத் தகுந்த உடற்கட்டு, எப்போதும் முழுக்கை சட்டை, கொஞ்சம் லூசான பேண்ட், உதட்டில் வெளிநாட்டு சிகரெட், கண்களில் அறிவும், சாதுர்யமும் வழங்கிய ஒளி. -

    முக்கியமான ஒரே ஒரு விபரம் மட்டும் சொல்லவிட்டுப் போய்விட்டதே, மித்ராவுக்கு வயது ஐம்பத்தி இரண்டு.

    தேவராணி அவருக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி காலமாகி பதினைந்து வருடங்களாகிவிட்டன. அவருக்கிருந்த ஒரேப் பிள்ளை சில வருடங்களுக்கு முன்பாக விமான விபத்தில் பலியான பிறகு ஆறு மாதங்களுக்கு மித்ரா பைத்தியம் பிடித்தவர் போல இருந்தார்.

    மெதுவாக மனம் தேறி தனது தினசரி அலுவல்களுக்குத் திரும்பி, ஆனாலும் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் இருந்தபோது, ஆறு மாதங்களுக்கு முன்பாக தேவராணியைச் சந்தித்தார்.

    அவருக்குச் சொந்தமான பரணி தியேட்டரில் தேவராணி நடித்த ஒரு படம் நூற்று ஐம்பதாவது நாளாகத் தொடர்ந்து ஓடியதற்காக அந்தத் தியேட்டரிலேயே படத்தின் தயாரிப்பாளர் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தியேட்டரின் உரிமையாளர் என்பதால் அந்த விழாவுக்கு மித்ராவைத் தலைமை தாங்கச் சொல்லி அழைத்திருந்தார்.

    அந்த விழாவிற்குப் பட்டுப்புடவை கட்டி தேவராணி வர, மித்ராவுக்கு ஒரு விநாடி தன் மனைவியே தன்னை நோக்கி நடந்து வருவது போல ஒரு பிரமை ஏற்பட்டது. தன் மனைவியின் சாயல் தேவராணியிடம் அதிகமாகவே இருப்பதைப் பார்த்து அவரால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

    மித்ராவுக்கு சினிமா பார்க்கிற வழக்கமே இல்லை என்பதால் தேவராணியை அன்றைக்குத் தான் முதன் முறையாகப் பார்த்தார். அந்த விழா நடந்து முடியும்வரை அவருக்கு யார் பேசியதும் கவனத்தில் பதியவில்லை.

    அதேபோன்ற புருவங்கள். அதேப்போன்ற கன்னமேடுகள். அதேப்போன்ற காது மடல்கள். அதேப்போன்ற தாடை, சிரிக்கும்போது உதடுகள் இரண்டும் புறமும் சீராக விரியாமல் ஒரு பக்கம் கொஞ்சம் அதிகமாக விரிவதுகூட அதேபோல அமைந்திருக்கிறதே இவளிடம்?

    அன்றைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1