Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kaadhal Mannavaney
En Kaadhal Mannavaney
En Kaadhal Mannavaney
Ebook93 pages1 hour

En Kaadhal Mannavaney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீப்தி ஒரு பத்திரிக்கையாளர், நேர்மை மற்றும் சமுதாய உணர்வும் மிகவும் பிடித்தமான குணங்கள் இவளுடையது. இந்த நேர்மையால் அவளுக்கு நேரிடும் பேராபத்துகள். அந்த பேராபத்தால் தன் சுயநினைவை இழக்கிறாள். தீப்தியின் இந்நிலைக் கண்டு வருந்தும் காதலன். அவளுக்கு உதவும் நண்பன். எவ்வாறு தீப்தியின் நிலைக்கு காரணமானவர்களை அவன் சாதுர்யமாக சிக்க வைக்கிறான் என்பதே கதையின் சுவாரஸ்யம், அவன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடைந்ததா? வாசிப்போம்....

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580100907000
En Kaadhal Mannavaney

Read more from Pattukottai Prabakar

Related to En Kaadhal Mannavaney

Related ebooks

Reviews for En Kaadhal Mannavaney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kaadhal Mannavaney - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    என் காதல் மன்னவனே

    En Kaadhal Mannavaney

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    உங்களில் எத்தனை பேருக்கு காதல் என்றால் என்ன என்று தெரியும்? காமத்திற்கு மாற்றுப் பெயர் என்று பொறுப்பில்லாமல் சொல்பவனுக்கு நிச்சயமாய் அனுபவம் இல்லை. வெறும் இனக்கவர்ச்சி, பருவச் சலனம் என்று வார்த்தை ஜாலமாய் பதில் சொல்பவனுக்கும் சத்தியமாய் அனுபவம் இல்லை.

    சாவு என்பது என்ன? இறக்கும்போது எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்குச் சரியான விடையை உயிரோடு இருப்பவன் ஒருவனாவது சொல்ல முடியுமா? இயலாதல்லவா?

    அப்படித்தான், காதலும்.

    காதல் அனுபவம் இல்லாதவனால் ‘காதல் என்றால் என்ன?’ என்று பதில் சொல்லவே முடியாது. எனக்கு பதில் தெரியும். ஒரு கட்டுரைத் தொடர் எழுதுகிற அளவுக்குத் தெரியும். ஆனால், இந்தக் கட்டுரை எழுதுவதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. தமிழில் எனக்குத் தெரிந்து என் மன உணர்வுகளை சிதைபடாமல் ஏந்தி நிற்கிற வல்லமை எந்த வார்த்தைக்கும் இல்லை.

    காதல் உணர்வு மயமானது. அதற்கு வார்த்தை வடிவமோ, ஒலி வடிவமோ இல்லை. பக்திக்கு அடையாளம் திருநீறு இட்டுக்கொள்ளுதல், பால்குடம் எடுத்தல் என்பது போல்... காதலுக்கு அடையாளங்கள் மட்டுமே உண்டு என்று எனக்கு உணர வைத்தவள், தீப்தி.

    மன்னிக்கவும். என் தீப்தியை நான் வர்ணிப்பதாய் இல்லை.

    காரணம் - என் ஆர்வத்தில் கொஞ்சம் மிகையாய் நான் சொல்ல, உங்கள் கற்பனைப் பார்வை அவளைத் தீண்டிப் பார்ப்பதை என்னால் அனுமதிக்க முடியாது.

    அவள் என்னவள். எனக்காகவே எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து என்னை அடைந்தவள்.

    இன்றைக்கு இவள் இந்த நிலையில் இருந்தாலும், இவளோடு நான் கழித்த உன்னதமான வைர விநாடிகள் எத்தனை! எத்தனை!

    உலகத்திலேயே பெரிய சக்தி எது தெரியுமா? நடந்ததை நினைத்துப் பார்க்க முடிகிற சக்தி. சுகமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஒளிபரப்பிக்கொள்வதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை.

    தீப்தி என்னை ஒரே ஒருமுறைதான் முத்தமிட்டாள்.

    ஆனால், அந்த முத்தம் தந்த சுகத்தை, சிலிர்ப்பை, கதகதப்பை, இதத்தை, உரிமையை, அங்கீகாரத்தை, கௌரவத்தை, ஒப்புதலை... ஒரு லட்சம் முறை மீண்டும் மீண்டும் அனுபவித்துவிட்டேனே!

    இதோ... என் எதிரில் தரையில் அமர்ந்து, சேலை தலைப்பு சரிந்திருப்பது உணராமல் என்னைத் தாண்டி பார்வையை எங்கேயோ நட்டு வைத்து... நான் அவள் தோளைத் தொட்டவுடன் மருட்சியுடன் திரும்பிப் பார்த்து, இரண்டடி பின்னால் நகர்ந்து அமர்ந்து, எங்கிட்ட வராதேடா! என்று கத்துகிறாளே...

    இவள்தான் ‘என் காதல் மன்னவனே’ என்று ஒவ்வொரு கடிதத்திலும் என்னை ஆசையுடன் அழைத்த என் அன்புக் காதலி, தீப்தி!

    2

    என்னம்மா ரெடியா? கொஞ்சம் சீக்கிரம் ஆகட்டும் என்றான், நந்தா.

    சொல்லப்பட்டவள் உள்ளங்கைக்குள் அடங்கும் கண்ணாடியில் பார்த்து, ‘லிப்ஸ்டிக்’ தீற்றிக்கொண்டாள். இளம் பெண். மாடலிங் பெண்.

    அந்த அறையின் ஒரு சுவரில் கறுப்புத் துணி தொங்கவிடப் பட்டிருந்தது. பின்னணியாக, ‘டிரான்ஸ்பரன்சி பிலிம்’ லோடு செய்யப்பட்ட நிக்கான் கேமிரா, ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுத் தயாராக இருந்தது.

    சக்திவாய்ந்த இரண்டு விளக்குகள். அவற்றின் வெளிச்சத்தை ‘சப்ஜெக்ட்’ மேல் பவுன்ஸ் செய்வதற்காக கோணம் பார்த்துப் பொருத்தப்பட்ட இரண்டு வெள்ளைக் குடைகள், எல்லாம் காத்திருந்தன, அவளுக்காக.

    நந்தா பொறுமை இல்லாமல் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். சுழலும் மின்விசிறிக்கு அடியில் வந்து நின்று, வியர்வையில் முதுகோடு ஒட்டிப்போயிருந்த சட்டையின் காலரைப் பின்னால் விசிறிக்கொண்டான்.

    சீக்கிரம்மா. இது, சினிமா இல்லை. ‘ஸ்டில்’தான். ரொம்ப ‘மேக்கப்’ வேணாம். போதும், வாம்மா என்றான்.

    உங்க பத்திரிகை சர்க்குலேஷன் எவ்வளவு சார்?

    ஆறு பத்திரிகை இருக்கு, எங்க நிறுவனத்தில. நீ எதைக் கேக்கறே?

    எதுக்காக என்னை போட்டோ எடுக்கிறீங்க? என்றாள், கன்னங்களில் லேசாக ரோஸ் பவுடரை ஒற்றியபடி.

    "உங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1