Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nila Satchi
Nila Satchi
Nila Satchi
Ebook198 pages1 hour

Nila Satchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100905276
Nila Satchi

Read more from Pattukottai Prabakar

Related to Nila Satchi

Related ebooks

Related categories

Reviews for Nila Satchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nila Satchi - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நிலா சாட்சி

    Nila Satchi

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    மழை நின்றதும் பிரவேசிப்பதற்காக கரிய மேகங்களுக்கு அந்தப் பக்கம் காத்திருந்தது நிலா.

    மும்பாயிலிருந்து வந்த அந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மீனம்பாக்கத்தில் இறங்கியதும் நிலைய ஊழியர்கள் பெரிய பெரிய குடைகள் பிடித்து பயணிகளை நனையவிடாமல் வேனில் ஏற்றி லவுன்ச்சிற்குக் கொண்டுவந்து விட்டார்கள்.

    சுழலும் தடத்தில் தனது பெட்டிக்காகக் காத்திருந்தார் ஜெயராம்.

    ஜெயராம் சிமெண்ட் நிறத்தில் ஸபாரிசூட் அணிந்திருந்தார். சிவந்த கைக்கு கறுப்பு வாருடன் இருந்த கைக்கெடிகாரம் எடுப்பாயிருந்தது. வலது கையில் பனிரெண்டு கற்கள் பதித்த வைர மோதிரமும், இடது கையில் நவரத்தினங்கள் பதித்த மோதிரமும் அணிந்திருந்தார். மெலிதான தங்க பிரேமில் கண்ணாடி. மேலுதடு மறையாமல் ட்ரிம் செய்யப்பட்டு சாயம் பூசப்பட்ட மீசை, நேற்றைக்கு சவரம் செய்திருந்தது தெரிந்தது. சின்னக் கண்களில் ஒரு ஒளி இருந்தது. முகத்தில் லேசாக ‘நான்’ இருந்தது. கீழுதட்டில் நிகோடின் பதித்த கறுப்பு முத்திரை.

    ஜெயராமை அனேகமாக சென்னைவாசிகளில் ஐம்பது சதவீதத்தினருக்கு மேல் தெரியும்.

    ராஜா அண்ணாமலைபுரத்தில் மூன்று மாடிகளுடன் குளிர்சாதனப் பெட்டிகளின் துருத்தல்களுடன் நிற்கும் அழகான ‘ஜெயராம் பில்டர்ஸ்’ அலுவலகத்தின் கட்டிடத்தைப் பார்க்காமல் தவறவிட வாய்ப்பு இல்லை. நகரில் அங்கங்கே எலும்புக் கூட்டுடன் உருவாகிவரும் நிறைய கட்டிடங்களில் ‘ஜெயராம் பில்டர்ஸ்’ என்று போர்டுகள் தொங்கும்.

    ஜெயராம் பாரீஸ் கார்னரில் ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் நின்று தன் உதவியாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். ஜெயராம் ஐந்து நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருப்பார். ஜெயராம் தன் அலுவலக ஹாலில் கட்டிட மினியேச்சர் மாடலை வைத்துக்கொண்டு சுற்றிலும் நிற்கும் பதினைந்து என்ஜினீயர்களுக்கு குறிப்புகள் சொல்லிக் கொண்டிருப்பார். ஜெயராம் கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் அதிகாலையில் நடந்து கொண்டிருப்பார். ஜெயராம் அதிகாலையில் கிளப்புகளில் பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.

    ஜெயராம் நிறைய ரிப்பன்களை வெட்டியிருக்கிறார். நிறைய குத்துவிளக்குகளை ஏற்றியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றி நம்மைப் பார்த்து நிறைய வணக்கம் வைத்திருக்கிறார்.

    ஜெயராமுக்கு வாழ்க்கையில் மூன்று விசயங்கள் மிகவும் மிகவும் மிகவும் பிடித்தமானவை.

    ஒன்று பணம் சம்பாதிப்பது.

    வருமான வரி அதிகாரிகளை எப்படியெல்லாம் வகை வகையாக ஏமாற்ற முடியும் என்று ஆடிட்டர்களுக்கே யோசனை சொல்லக்கூடிய அளவிற்கு கில்லாடி.

    குறுக்கு வழி ரொம்பப் பிடிக்கும்.

    ‘யார் வயத்திலயும் அடிக்கக் கூடாது. அது தப்பு! ஆனா இன்னொருத்தர் மூளையில் அடிக்கலாம். அது தப்பே இல்லை!’ - இது இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

    புத்திச் சண்டைப் பிரியர்.

    இவர் துறையில் ஒருவன் புத்திசாலித்தனமாக எதையாவது சாதித்துவிட்டால் கொதிப்பு ஏற்பட்டு அவனை விட நான் பெரிய புத்திசாலி என்று நிரூபிக்கும் விதமாக சாதித்துக் காட்டிய பிறகுதான் அந்தக் கொதிப்பு அடங்கும்.

    நண்பர்களிடம் சொல்லி வைத்து பலமுறை தன் மூளையின் சாதுரியத்தை நிரூபித்திருக்கிறார்.

    பங்கு மார்க்கெட் சந்தையில், கட்டிடங்களுக்கு அனுமதி வாங்குவதில் கோர்ட் விவகாரங்களில் குயுக்தியாய் யோசித்து, அழகாக காய்களை நகர்த்தி வெற்றி காட்டியிருக்கிறார்.

    ஜெயராமுக்குப் பிடித்த இரண்டாவது விசயம் - ஊர் சுற்றிப் பார்ப்பது!

    சேலம், கோவை, திருச்சி அல்ல; லண்டன், பாகல், நியூயார்க்!

    வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குப் புறப்பட்டு விடுவார்.

    ஜெயராமுக்குப் பிடித்த மூன்றாவது விசயம் - நித்யா!

    நித்யா - இவரின் இரண்டாவது மனைவி. இருபத்தி நான்கு வயது இளமைப் புயல், இவளோடு இருக்கும் நிமிடங்களில் தனது ஐம்பது வயதில் பாதியைத் தொலைத்து விடுவார்.

    நித்யாவின் ஒரு தெற்றுப்பல்லிற்காகவும், மேலுதட்டின் மேல் அமர்ந்து முகத்திற்கு அழகூட்டும் மச்சத்திற்காகவுமே அவளைத் திருமணம் செய்து கொண்டதாக அவளிடம் அடிக்கடி சொல்வார்.

    இப்போது சுழலும் தடத்தில் ஜெயராமின் பெட்டி வர, அதை எடுத்துக்கொண்டு திரும்பிய போது -

    எக்ஸ்க்யூஸ் மீ என்று முதுகைத் தட்டியது ஒரு பெண்ணின் குரல்.

    திரும்பிப் பார்த்தார்.

    அவளுக்கு முப்பத்தைந்தில் இருந்து நாற்பதுக்குள் வயது இருக்கலாம். அம்மை குத்தின இரண்டு தழும்புகள் பளிச்சென்று தெரிய ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தாள். கஞ்சி போட்ட பருத்திச் சேலை சுற்றியிருந்தாள். ஆம், அதை ‘கட்டியிருந்தாள்’ என்று சொல்ல முடியாது. கூந்தலை ஒன்று சேர்த்து உச்சி

    மண்டையில் ரப்பர் சமாச்சாரத்தால் கட்டியிருக்க, அதன்பிறகு அளந்து ஆறு இஞ்ச்சிற்கு கத்தரிக்கப்பட்ட குதிரைவால் அசைந்து கொண்டிருந்தது. பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக் தீற்றி, ஒரு மூக்கில் ஒற்றைக்கல் வைரம்.

    என் பேர் திலகா. நான் ஒரு டாக்டர். உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனா சட்டுன்னு நினைவுக்கு வரலை.

    ஜெயராம் தவிக்கும் அவள் முகத்தையே பார்த்தார். அவள் போட்டிருந்த செண்ட்டின் வாசனைமிக சுகந்தமாய் இருந்தது.

    அது என்ன செண்ட் என்று விசாரிக்க வேண்டும். விசாரித்து நித்யாவுக்கு வாங்கித்தர வேண்டும். அவள் ஒரு செண்ட் பைத்தியம். பீரோ முழுக்க வைத்திருக்கிறாள்.

    ம்... இப்ப நினைவு வந்துடுச்சி. போன மாசம் மியூசிக் அகாடெமியில் மேண்டலின் கச்சேரிக்கு நீங்க வந்திருந்தீங்க சார். திடீர்னு உங்களைப் பேசச் சொல்லிட்டாங்க. நீங்க பிரமாதமாய் பேசினீங்க. பில்டர் ஜெயராம் தானே நீங்க?

    ஆமாம்.

    உங்களை சந்திச்சதில எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார். உங்க மனைவி என்ன பண்றாங்க?

    அவளும் ஒரு என்ஜினீயர். வீடுகளுக்கு உள் அலங்காரம் பண்ணுவா. அவளுக்குன்னு தனியா ஒரு ஆபீஸ் வைச்சிக் கொடுத்திருக்கேன்.

    அந்த டாக்டர் திலகா தன் கைப்பையிலிருந்து தன் முகவரி அட்டை எடுத்துக் கொடுத்து, ஒருநாள் உங்க மனைவியோட கண்டிப்பா என் வீட்டுக்கு வரணும் சார் என்றாள்.

    நன்றிங்க. வர்றேன்.

    இப்ப நான் அசோக் நகர் போகணும். நீங்க?

    பெசண்ட் நகர் போகணும்.

    வண்டி வந்திருக்கா?

    இல்லை... என் பழைய திட்டப்படி இன்னும் ரெண்டு நாள் கழிச்சுதான் நான் ஊர் திரும்பறதா இருந்தேன். திடீர்னு வேலைகள் முடிஞ்சிடுச்சி. புறப்பட்டு வந்துட்டேன். என் வீட்டுக்குத் தகவல் தரலை. திடீர்னு போய் நின்னு என் மனைவிக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி தரப்போறேன்.

    நான் உங்களை உங்க வீட்ல விட்டுட்டுப் போகட்டுமா சார்? எனக்கு கார் வந்திருக்கு, ஒண்ணும் பிரச்சினை இல்லை.

    அசோக் நகர் இங்கே இருக்கு. பெசண்ட் நகர் வரைக்கும் பாவம் நீங்க எதுக்கு அநாவசியமா... ரொம்ப நன்றி. நான் டாக்சி பிடிச்சிக்கிறேன் அவளைப் புன்னகைத்து விட்டு வெளியே நடந்தார் ஜெயராம்.

    ஒரு டாக்ஸி அமர்த்திக்கொண்டு அது புறப்பட்டதும் நீளமான ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, எவ்வளவு நேரமா மழை பெய்யுதுப்பா? என்றார் டிரைவரிடம்.

    சாயங்காலத்திலேர்ந்தே விட்டு விட்டுப் பெய்யுதுங்க சார். கோடை மழை பாருங்க. சீக்கிரத்தில் நிக்காது! என்றான்.

    மழை என்றால் நித்யாவுக்குப் பிடிக்கும். சின்னக் குழந்தை போல குதூகலிப்பாள். ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு, பூத்தூறலை முகத்தில் வாங்கிக் கொள்வதில் மகிழ்ச்சியடைவாள்.

    அந்த மாதிரி சமயங்களில் அவளுக்கு தனி மூடு வந்து விடும்.

    ‘ஜெய்’ என்று கிறக்கமாக அழைத்து, இடுப்பில் கை வைத்துக்கொண்டு, அவள் பார்க்கிற ஒரு பார்வையில் இவர் பார்த்துக்கொண்டிருக்கும் எல்லா வேலைகளையும் தூக்கிப் போட்டு விட்டு உடனே அவளை அள்ளிக்கொண்டு அவள் உடையின் முடிச்சைத் தேடி...

    அப்படி ஒரு மழை நாள் இரவு அமைந்து ரொம்ப நாட்களாகிறது.

    இதோ... இன்றைக்கு! ஜெயராம் புன்னகைத்துக் கொண்டார். அடுத்த விநாடியே வீட்டில் இருக்க வேண்டும் என்று துடிப்பு ஏற்பட்டது. சிகரெட்டை ஆழமாக இழுத்தார்.

    என்னை இன்றைக்கு இந்த பதினோரு மணி இரவில் கண்டிப்பாக அவள் எதிர் பார்க்கவே மாட்டாள். பெரிய அதிர்ச்சியாக இருக்கும். சுகமான அதிர்ச்சி!

    பெசண்ட் நகரில் கடற்கரைக் காற்றை நேரடியாக மார்பில் வாங்கிக்கொண்டு நிமிர்ந்து நின்றது ஜெயராமின் பங்களா. காம்பவுண்டு சுவரில் பத்தடிக்கு ஒரு ரூம் விளக்கு எரிந்தது. உள்புறம் சுவரோரமாக வரிசையாக அசோக மரங்கள் இன்கிரிமின் குடிக்காமலேயே நெடுநெடுவென்று வளர்ந்து பங்களாவை நெடுக்கில் வெட்டி வெட்டி மறைத்தன.

    டாக்ஸி வந்து நின்று ஜெயராம் இறங்குவதைப் பாத்த வாட்ச்மேன் கந்தசாமி ஓட்டமாக வந்து சூட்கேஸ்களை வாங்கிக்கொண்டான்.

    இருவரும் பங்களாவின் முகப்புக்கு வருவதற்குள் லேசாக நனைந்து போனார்கள்.

    ஜெயராம் தன்னிடமுள்ள ஒரு சாவி போட்டு கதவைத் திறந்தார்.

    அம்மா வந்தாச்சில்ல?

    தூங்கிட்டிருக்காங்க சார். பெட்டிகளை அவன் ஹாலில் வைத்து விட்டுப் போனதும் கதவை ஓசையின்றி மூடினார். சிவப்புக் கம்பளம் விரித்த மாடிப்படிகளில் ஏறி தன் அறைவாசலுக்கு வந்து நின்றார்.

    கைப்பிடியை மெதுவாக அழுத்தித் திறந்து உள்ளே வந்து கட்டிலைப் பார்த்தார்.

    நித்யா சிவப்பு நிறத்தில் ஸாட்டீன் நைட்டியணிந்து பிரமாண்டமான வட்ட வடிவப் படுக்கையில் மல்லாந்து படுத்து இருந்தாள். அவள் முகத்தில் ஒரு ஆங்கில நாவல் கவிழ்ந்திருந்தது.

    கட்டிலுக்கு அருகில் படிப்பதற்காக மட்டும் போட்டுக் கொள்ளும் விளக்கு எரிந்து கொண்டிருக்க, குளிர்சாதனம் இயக்கத்திலிருந்தது.

    ஜெயராம் இப்போது ஓசை செய்யாமல் தன் உடைகளைக் களைந்துவிட்டு லுங்கி எடுத்து அணிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1