Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Varum Nimishangal
Ini Varum Nimishangal
Ini Varum Nimishangal
Ebook110 pages59 minutes

Ini Varum Nimishangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விக்னேஷ், தன் காதலி நித்யாவை ஏமாற்ற முயற்சிக்கிறான். இதனால் ஒரு எதிர்பாராத முடிவை எடுக்கிறாள்,நித்யா.

அந்த முடிவினால் எதிர்பாராதவிதமாக நிகழும் சம்பவத்தினால், அவளின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. பிரச்னையிலிருந்து மீள்கிறாளா...இல்லை அதில் மூழ்குகிறாளா?

இனிவரும் நிமிஷங்களில்... பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580100406746
Ini Varum Nimishangal

Read more from Rajesh Kumar

Related to Ini Varum Nimishangal

Related ebooks

Related categories

Reviews for Ini Varum Nimishangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Varum Nimishangal - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    இனி வரும் நிமிஷங்கள்

    Ini Varum Nimishangal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    வெள்ளைப் பெயிண்டைத் தொட்டுப் பட்டையாய்க் கோடு இழுத்த மாதிரி தூரத்தில் குற்றால அருவி தெரிய, டாக்ஸியின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நித்யகல்யாணி ஒரு நான்கு வயதுக் குழந்தையின் சந்தோஷத்தோடு உள்ளங் கைகளைத் தேய்த்து, ஹை என்றாள். தன்னருகே உட்கார்ந்து எதிர்ப்புற கண்ணாடி வழியாய் ரோட்டின் இருபுறமும் தெரிந்த பசுமைப் புரட்சியில் ஆழ்ந்திருந்த சரளாவைத் தொட்டாள். ஆர்வமாய்க் கேட்டாள்.

    இந்தக் குற்றால அருவி எப்பவுமே இப்படித்தான் கொட்டுமா சரள்? சரளா புன்னகையோடு முகத்தைத் திருப்பி நித்யகல்யாணிக்குப் பதில் சொல்வதற்குள் டாக்ஸி டிரைவர் குறுக்கிட்டுப் பேசினான்.

    எப்பவுமே இப்படிக் கொட்டிட்டிருந்தா இந்தக் குற்றாலத்துக்கு இவ்வளவு மவுசு இருக்காதம்மா. ஒவ்வொரு வருஷமும் இந்த ஜூலை, ஆகஸ்ட் மாசங்களில்தான் இப்படித் தண்ணி கொட்டும்... மத்த நாட்கள்ல தண்ணி பாறையோடு பாறையாக் கசியும்.

    டிரைவர் சொன்னதை சிரத்தையாய்க் கேட்டு தலையை ஆட்டிய நித்யகல்யாணி, மறுபடி தூரத்தில் தெரிந்த அருவியில் லயிக்க ஆரம்பித்தாள். ஆழமான லயிப்பு.

    சரளா நித்யகல்யாணியின் தொடைமேல் கையை வைத்தாள்,

    ‘என்ன சரள்?' அவள் திரும்பினாள்.

    சரளா அவளுடைய காதோரமாய்க் கிசுகிசுத்தாள். 'நீ குற்றாலத்துக்கு எந்த பர்ப்பஸுக்காக வந்திருக்கேங்கிறதை நீ மறந்துட்டே போலிருக்கு நித்யா. இந்த அருவியை ரசிக்கிறதுக்காகவும், அதில் குளிக்கிறதுக்காகவும் வரலை. சண்முகராஜனைப் பார்த்துப் பேசறதுக்காக வந்திருக்கே, ஞாபகமிருக்கா?'

    சரேலென முகம் மாறினாள் நித்யகல்யாணி. சில நிமிடங்களுக்கு முன்னால் அருவியைப் பார்த்த மகிழ்ச்சி கண்களில் காணாமல் போக ஒரு நீண்ட நாள் நோயாளியின் முகபாவத்துக்கு வந்தாள். நாலாபக்கமும் போயிருந்த சோகப் பறவைகள் அவளுடைய முகக் கூட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்க, விழிகளில் ஈரம் புது பிளேடின் பளபளப்பாய் எட்டிப் பார்த்தது.

    'சரி... சரி... அழுதுடாதே! ஞாபகமிருக்கான்னுதான் கேட்டேன்'

    சரளா நித்யகல்யாணியின் முதுகை ஆதுரமாய்த் தடவி விட்டாள்.

    எங்கேம்மா இறங்கணும்? டிரைவர் கேட்டான்.

    ஒரு நல்ல காட்டேஜ் இருக்கிற ஏரியாவுக்குப் போங்க... டிரைவர்

    குறிஞ்சி காட்டேஜ் நல்லாயிருக்கும்மா!

    'அங்கேயே போங்க'

    நித்யகல்யாணி இன்னமும் தூரத்தில் தெரிந்த அருவியையே பார்த்துக்கொண்டிருக்க, கார் ரோட்டை வேகமாய்த் தேய்த்து ஐந்தருவி போகும் ஏகாந்தமான சாலையைத் தொட்டது எதிரே ஜனங்கள் வெற்றுடம்புகளோடு, ஈரம் காயாத தலைகளோடு கொத்துக்கொத்தாய் அருவியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்க, மெட்டாடர் வாடகை வேன்களில் வெளியூர் கிராமக்கூட்டம் குழந்தைகளோடு அடைபட்டு அருவியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. சமீபத்திய மழை குற்றாலத்தை அடர்த்தியான பச்சையில் முக்கி எடுத்திருக்க ஆகாயம் ராபின் ப்ளுவாய் இருந்தது.

    ஒரு ஐந்து நிமிஷப் பயணம்.

    டாக்ஸி ரோட்டைவிட்டு விலகி, உள்வாங்கியிருந்த போகன் வில்லாவின் குங்கும நிறப் பூக்களால் போர்த்தப்பட்டிருந்த அந்த வீட்டுக்கு முன்னால் நின்றது.

    ‘இதுதாம்மா குறிஞ்சி காட்டேஜ்...'

    சரளா ஒரு பக்கக் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கி, கையிலிருந்த டம்பப் பையைப் பிரித்துப் பணத்தை எண்ணி டிரைவரிடம் கொடுத்து விட்டு காட்டேஜின் உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

    காரில் இன்னமும் நித்யகல்யாணி உட்கார்ந்திருந்தாள்.

    போகன்வில்லா பூக்களின் மேல் நிலைத்த பார்வை.

    'ஏன் நித்யா... கீழே இறங்கலையா? சந்தோஷப்பட்டா ஒரேயடியா சந்தோஷப்படுவே... விசனப்பட ஆரம்பிச்சா அதுலேயே மூழ்கிடுவே... இறங்கடி' டாக்ஸியின் கதவு வழியாய்க் கையை உள்ளே நுழைத்து நித்யகல்யாணியின் தோளைப் பற்றி உசுப்பினாள்.

    நித்யகல்யாணி கலைந்தாள். ஸாரிடி சரள்...

    டாக்சியின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள். உள்ளே போய்க் கொண்டிருந்த சரளாவைத் தொடர்ந்தாள்.

    காட்டேஜின் முகப்பிலேயே அந்த ரிசப்ஷன் அறை தெரிய, உள்ளே ஒரு அரைக் கிழம் கண்ணாடியை மாட்டிக் கொண்டு லெட்ஜரைப் புரட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. மோவாயிலும் மேலுதட்டுப் பரப்பிலும் முப்பது நாள் தாடி மீசை தத்து எடுத்துக் கொண்ட ஸ்பிக் கிராமத்து வயல் மாதிரி வளப்பமாய் இருந்தது.

    'குட்மார்னிங் சார்!'

    சரளா சொல்ல, கிழம் பதில் குட்மார்னிங் சொல்லாமல் மௌனமாய்த் தலையை உயர்த்தியது. பார்த்துக் கொண்டிருந்த லெட்ஜரில் ஏதோ ராணுவ ரகசியங்கள் இருக்கிற மாதிரியான அவசரத்தோடு லெட்ஜரை மூடி உள்ளே நகர்த்தியது.

    ‘என்ன வேணும்?' கண்டசாலா குரல்.

    'ஒரு காட்டேஜ் வேணும் சார்...!'

    ‘எத்தனை பேர் தங்கப் போறீங்க?'

    நாங்க ரெண்டு பேர் மட்டுந்தான்.

    'எங்திருந்து வர்றீங்க?'

    'கோயமுத்தூர்.'

    'கூட

    Enjoying the preview?
    Page 1 of 1