Puthiya Kadavul
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puthiya Kadavul
Related ebooks
Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsNil... Kavani...Kaathiru! Rating: 2 out of 5 stars2/5Ethayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Ellam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsMagaa Sathi Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsOne + One = Zero Rating: 2 out of 5 stars2/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsIni Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pakalum Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 5 out of 5 stars5/5Thappattam Rating: 0 out of 5 stars0 ratingsVithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsYarum Paarkkatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsBrindha Private Limited Rating: 5 out of 5 stars5/5Matravai Nalliravu 1.05ku Rating: 0 out of 5 stars0 ratingsVivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Puthiya Kadavul
0 ratings0 reviews
Book preview
Puthiya Kadavul - Rajeshkumar
ராஜேஷ்குமார்
புரியாத புதிர் -1
2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் பல அற்புதங்களை செய்து சாதாரண மக்களை மட்டுமல்ல படித்த பண்டிதர்களைக் கூட பிரமிக்க வைத்தார்கள். பார்வைக்கு பித்தர்களைப் போல் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஜீவசமாதி அடைந்த பிறகு அவதார புருஷர்களாய் மாறி ஆண்டவனின் ஆலயங்களில் இடம் பிடித்துக்கொண்டார்கள். சித்தர்கள் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பாடல்கள் புரியாத வார்த்தைகளில் புனையப்பட்டு இருப்பதால் அதை எத்தனை தரம் படித்தாலும் புரிவது இல்லை. பாடல்கள் யார்க்கும் புரிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்...? இந்த புதிர்க்கு இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பதில் காத்திருக்கிறது.
1
ஏ.சி.யின் குளிர் பரவிய அந்த ஆடிட்டோரியத்தில் மொத்தம் 1400 பேர் நேர் பார்வை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். சொற்பமாய் பெண்கள். ஆண்களில் 90 சதவீதம் பேர்க்கு பளீர் வழுக்கைகள். வழுக்கைக்கு தப்பியவர்கள் நரை முடியில் தெரிந்தார்கள். சிலரின் காதுகளில் ஹியரிங் எய்ட்கள் ரகசியமாய் ஒட்டியிருந்துன. ஏ.ஸி. காற்றில் லேசாய் ஜேஸ்மின் பெர்ஃப்யூம் பரவியிருந்தது.
நீள் சதுர மேடையில் ஸ்பாட் லைட் ஒன்று சீராய் வெளிச்சத்தை பரப்பி வைத்து இருக்க, மேடையின் நடுவே போடப்பட்டிருந்த சிம்மாசனம் போன்ற நாற்காலிகளில் அந்த மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேடையின் ஓரத்தில் இருந்த டைஸில் கரு நீல சூட் அணிந்த ஒரு உயரமான மனிதர் நிதானமான குரலில் - தெளிவான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஃபோக்கஸ் விளக்கு அவரை வெளிச்சமாய் காட்டியது.
ஆப்பிரிக்கா கண்டம் உலகத்தில் இரண்டாவது பெரிய கண்டம். இந்தியாவைப் போல் ஒன்பது மடங்கு பெரியது. இந்த கண்டம் 19 வது நூற்றாண்டு வரை ‘இருண்ட கண்டம்’ என்றே அழைக்கப்பட்டது. 1855-ம் ஆண்டு லிவிங்ஸ்டோன் என்பவர்தான் ஆப்பிரிவிக்காவை கண்டுபிடித்தார். இப்போது ஆப்பிரிக்கா உலகத்தில் உள்ள எல்லோர்க்கும் ஒரு திறந்த புத்தகம். அங்கே உள்ள மக்களுக்கு விவசாயம்தான் முதன்மையான தொழில். அங்கே அவர்கள் எப்படி விவசாயம் செய்கிறார்கள் என்பதை உங்களிடம் சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். அவர்கள் காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தீ வைத்து - அங்கே உள்ள மரங்கள் எரிந்து சாம்பலானதும் அந்த சாம்பலை அதே இடத்தில் பரப்பி உழுது விவசாயம் செய்கிறார்கள். எரிந்த மரங்களின் சாம்பல்தான் அவர்கள் பயிரிடும் பயிர்களுக்கு உரம். அவர்கள் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது இல்லை. மரங்கள் எரிந்த இடத்தில் ஒரு முறை அல்லது இரு முறை விவசாயம் செய்துவிட்டு பிறகு சாகுபடிக்கு ஏற்ற நிலமாக அது இல்லையென்று தெரிந்ததும் வேறு இடத்திற்கு சென்று அதே போல் மரங்களுக்கு தீ வைத்து சாம்பலாக்கி - அந்த சாம்பல் பூமியில் மீண்டும் விவசாயம் செய்கிறார்கள். இதுதான் அங்கு பிரபலமாக உள்ள விவசாய முறை. இதற்கு ‘ஷிப்டிங் அக்ரிகல்ச்சர்’ என்று பெயர். நீர் வளமும், நில வளமும், குறைவான மக்கள் தொகையும் கொண்டுள்ள ஆப்பிரிக்கா நிச்சயமாக மிகச்சிறந்த எதிர்காலத்தைக் கொண்டுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள இன்னொரு சாதகமான விஷயம் - அங்கு பெய்யும் மழை. இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை ஆண்டுக்கு 950 மி.மீட்டர்தான் பெய்கிறது. அதுவே நிச்சயம் இல்லை. மழை குறைந்தால் வறட்சி; அதிகரித்தால் வெள்ளப் பெருக்கு. ஆனால் ஆப்பிரிக்காவில் ஆண்டுக்கு 1500 மி.மீட்டர் மழை பெய்கிறது. மழை பொய்ப்பதே இல்லை. சரியான பருவத்தில் மழை கொட்டித் தீர்க்கிறது. உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விவசாயம் சிறப்பாக இருக்கிறது. அமோக விளைச்சல் காரணமாக விளை பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாய் கிடைக்கிறது. ஆனால் நம் இந்தியாவில் அப்படிப்பட்ட நிலைமை இல்லை. காரணம், இங்கே விளை நிலங்கள் எல்லாம் மனைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மனைகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. நதி நீர்க்காக அண்டை மாநிலங்களோடு சண்டை. விவசாயிகளைப் புறக்கணிக்கும் மத்திய மாநில அரசுகள், புதிது புதிதாய் கண்டு பிடிக்கப்படும் உரங்களால் சீர் கேடு அடைகின்ற மண்வளம், அதன் காரணமாய் குறையும் உற்பத்தித் திறன், மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டு போகும் மக்கட் தொகை பெருக்கம் - இப்படி எத்தனையோ காரணங்கள் நம் இந்தியாவை ஒரு அபாயத்தை நோக்கித் தள்ளிக் கொண்டு போகின்றன. இந்த அபாயத்தைக் குறித்து நம்முடைய அரசியல் தலைவர்களோ, அமைச்சர்களோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இயற்கை விஞ்ஞானிகளில் ஒரு சிலர் மட்டுமே வரப்போகம் அபாயத்தின் விபரீதத்தை உணர்ந்து சிவப்புக் கொடியினை கையில் பிடித்து எச்சரிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதையும் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இது குறித்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ‘இயற்கையைக் காப்போம்’ என்கிற கோஷத்தோடு இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த ஆய்வரங்கில் இயற்கை விஞ்ஞானிகள் பலரும் பேச உள்ளார்கள். இதில் நேச்சுரோபதி டாக்டர் ஹேம்நாத் அவர்கள் பேச இருக்கிற ஒரு விஷயம் புதிதானது மட்டுமல்ல, வியப்பானதும்கூட. அவர் ஏற்கெனவே அந்த விஷயத்தைப் பற்றி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக சொல்லியுள்ளார். இப்போது அந்த வியப்பான விஷயத்திற்கு இறுதி வடிவம் கொடுத்து உங்களுக்கு முன்பாக உரையாற்றப் போகிறார். அவர் பேசி முடித்ததும் உங்களுடைய உள்ளங்களில் நிறைய ஐயப்பாடுகள் எழலாம். அதற்கான விளக்கங்களைக் கொடுக்க டாக்டர் ஹேம்நாத் அவர்கள் தயாராக உள்ளார். இப்போது விஞ்ஞானி டாக்டர் ஹேம்நாத் அவர்கள் உரையாற்றுவார்கள்.
அரங்கத்தில் பலத்த கையொலி எழுந்தது.
இருக்கையினின்றும் ஹேம்நாத் எழுந்தார். நிச்சயம் ஆறடி உயரம் இருப்பார் போல் தோன்றியது. எழுபது வயது. உயர்த்தி சீவிய க்ராப். நெற்றியில் சுருக்கங்கள். வெள்ளி ப்ரேமிட்ட கண்ணாடி அவருடைய சதைப் பிடிப்பான முகத்திற்கு பொருந்திப் போயிருந்தது.
மைக்கிற்கு முன்பாய் நின்று உதடுகளை அசைத்தார். நல்ல ஆங்கிலம் அருவியாய் கொட்டியது.
"இந்த ஆய்வரங்கத்தில் உள்ள அனைவர்க்கும் என் வணக்கங்கள்! ஏதோ வந்தோம், பேசினோம், ஒரு நல்ல டின்னர் சாப்பிட்டோம் என்ற அளவில் முடிந்து போய்விடுகின்ற ஆய்வரங்கம் அல்ல இது. எதிர்கால அபாயத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்பதற்காக கூட்டப்பட்ட ஆய்வரங்கம் இது. உண்மையில் இது ஒரு அபாய அறிவிப்பு செமினார். நான் பேசப்போகின்ற தலைப்பு: ‘இந்தியா 2050 - ஓர் எச்சரிக்கை.’
இது ஏதோ நாட்டு மக்களை பயமுறுத்துவதற்காக நான் வைத்துக் கொண்ட தலைப்பு அல்ல. எதிர்காலத்தில் நிகழப் போகின்ற நிஜங்களை சொல்வதற்காக நான் யோசித்து தேர்ந்து எடுத்த தலைப்பு. இதற்கு முன்னால் இது போன்ற செமினார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு - அதில் எத்தனையோ பேர் பேசிவிட்டு போய்விட்டார்கள். அவர்களில் சிலர் இப்போது உயிரோடு இல்லை என்கிற விஷயம் கவலைத்குரியதாக இருந்தாலும், அந்த செமினார்களால் ஒரு பயனும் ஏற்படவில்லை என்பது அதைவிட பெரிய கவலைக்குரிய விஷயம். இந்தியாவின் நீர் வளமும், நில வளமும் சிறிது சிறிதாய் குறைந்து கொண்டே அபாயக் கோட்டை நோக்கிப் போக - இந்தியாவின் மக்கட் தொகையோ வேக வேகமாய் அதிகரித்துக் கொண்டு போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவின் மக்கட் தொகை 131 கோடி. இது இப்படியே வளர்ந்து கொண்டு போனால் 2050 - ல் நம் நாட்டின் மக்கட்தொகை 500 கோடியைத் தொட்டு