Ore Oru Naal
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ore Oru Naal
Related ebooks
Avenue Marangal Rating: 5 out of 5 stars5/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Parappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Oru Kathavu Thattapadukirathu Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/511 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Pagal Nera Alligal Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik December Rating: 0 out of 5 stars0 ratingsNooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5January Nilave! Rating: 5 out of 5 stars5/5Thedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsNimishathukku Nimisham Rating: 0 out of 5 stars0 ratingsKurithuvaithu Kol! Rating: 5 out of 5 stars5/5One + One = Zero Rating: 2 out of 5 stars2/5Ezhavathu Arivu Rating: 2 out of 5 stars2/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Vithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Athe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsTheera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Ore Oru Naal
1 rating0 reviews
Book preview
Ore Oru Naal - Rajeshkumar
20
தெரிந்த வார்த்தை: தெரியாத விஷயம்.
போலியோ சொட்டு மருந்து: குழந்தையின் குடலில் இருக்கும் போலியோ வைரஸ் கிருமி, குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதின் மூலம் வெளியேற்றப்பட்டு சூரிய வெப்பத்தினால் கொல்லப்படுகிறது. போலியோ மருந்து ஒரு குழந்தைக்குப் போடாமல் போனால் அக்குழந்தை பாதிக்கப்படுவதோடு அதன் குடலிலுள்ள கிருமிகள் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரவ வாய்ப்பு உண்டு. ஆகவே ஒவ்வொரு குழந்தைக்கும் கண்டிப்பாய் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்.
1
குட் மார்னிங் ஸார்...!
செர்ரிப் பழ நிற லிப்ஸ்டிக் உதடுகளில் வார்த்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டே ஏ.ஸி.யின் குளிர்ச்சியில் உறைந்து போயிருந்த அறைக்குள் நுழைந்தாள் ஸ்டெனோ பவ்யா.
லாப்டாப் கம்ப்யூட்டரில் எதையோ பார்த்து பேப்பரில் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த தேவேந்திரண் ஸ்டெனோவை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் என்ன...?
என்றான்.
இந்த லெட்டர் வந்து ஒரு வாரமாகுது ஸார். நாம இன்னமும் இதுக்கு பதில் தராமே இருக்கோம். அவங்களும் ரெண்டு தடவை போன் பண்ணி ‘ஸார் என்ன சொன்னார்’ன்னு கேட்டுட்டாங்க. நீங்க ஏதாவது ஒரு பதில் சொல்லிட்டா அதை அவங்களுக்கு சொல்லிடலாமே ஸார்...!
தேவேந்திரண் அப்போதும் தலை நிமிராமல் லாப் டாப்பை பார்த்துக் கொண்டே கேட்டான்.
என்ன லெட்டர் அது...?
கேலக்ஸி டி.வி.யிலிருந்து வந்த லெட்டர் ஸார்.
கையில லெட்டர் வெச்சிருக்கியா?
வெச்சிருக்கேன் ஸார்.
படி...
பவ்யா தொண்டையை செருமிக் கொண்டு கையில் வைத்து இருந்த அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள திரு.தேவேந்திரன் அவர்களுக்கு,
வணக்கம். எங்களுடைய ‘கேலக்ஸி’ டி.வி.யில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு பத்து மணிக்கு ‘சாதிக்கலாம் வாங்க’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டு வருவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அந்த நிகழ்ச்சியில் முப்பது வயதுக்கு உட்பட்ட இளம் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தொழில் துறையில் தாங்கள் சாதித்தவற்றையும் இனிமேல் சாதிக்கப் போகிற விஷயங்களைப் பற்றியும் பரிமாறிக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் பார்த்து பயனடைந்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் தந்தை லட்சுமிபதியால் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி இன்று உங்கள் உழைப்பின் காரணமாக ஆல விருட்சமாய் வளர்ந்து கிளைகளையும் விழுதுகளையும் பரப்பிக் கொண்டு நிற்கிறது. நீங்கள் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றியை எங்கள் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில் உங்கள் விருப்பத்தை அறிய ஆவலாக உள்ளோம்.
இப்படிக்கு
கேலக்ஸி டி.வி. நிர்வாகம்.
கடிதத்தைப் படித்துவிட்டு தேவேந்திரனைப் பார்த்தாள் பவ்யா. அவன் இன்னமும் லாப்-டாப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன பதில் எழுதட்டும் ஸார்?
தேவேந்திரன் நிமிர்ந்தான்.
அந்த லெட்டரை இப்படிக் கொண்டா...
பவ்யா கொடுத்தாள். அந்த லெட்டரை வாங்கிய தேவேந்திரன் அதைத் துண்டு துண்டாய்க் கிழித்து பக்கத்தில் இருந்த ‘வேஸ்ட் பின்’னுக்குள் போட்டான்.
ஸா... ஸார்...
நீ போய்... உன்னோட வேலையைப் பார்...
ஸ... ஸார்... வந்து...
என்ன?
அந்த டி.வி.காரங்க போன் பண்ணிக் கேட்டா என்ன பதில் சொல்றது ஸார்?
இப்படிப்பட்ட வெட்டித்தனமான டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததாலத்தான் எங்க கம்பெனி இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைஞ்சிருக்குன்னு சொல்லு...
........
என்ன... சொல்லுவியா?
எ... எ... எஸ்... ஸார்...
பவ்யா வியர்த்து வழிந்து கொண்டே அறையினின்றும் நகர முயன்ற விநாடி -
தேவேந்திரனின் குரல் மறுபடியும் உயர்ந்தது.
ஒரு நிமிஷம் பவ்யா...
பவ்யா நின்றாள்.
உனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு இல்லையா?
ஆமா... ஸார்...
உன்னோட கணவர்க்கு பேங்க்ல வேலை...! இல்லையா?
ஆமா... ஸார்...
நீ ஆபீஸுக்கு கிளம்பி வரும்போது உன்னோட கணவர் உன்னைப் பார்த்தாரா?
பார்க்கலை ஸார்...! அவர் பேங்க்குக்கு தினசரி எட்டு மணிக்கே புறப்பட்டுப் போயிடுவார். ஏன்... ஸார்... என்ன விஷயம்?
நீ ஆபீஸுக்கு கிளம்பி வரும்போது உன்னோட கணவர் உன்னைப் பார்த்திருந்தா உங்களுக்குள்ளே ஒரு பெரிய சண்டையே நடந்து இருக்கும்...
என்ன ஸார் சொல்றீங்க...?
ஒரு குடும்பப் பொண்ணு இப்படியா ட்ரஸ் பண்ணிட்டு வர்றது? உன்னோட பெட் ரூம்ல போட வேண்டிய ட்ரஸ் இது...?
ஸ... ஸார்... அது... வந்து...
இது சேலையா... இல்லை பாலீதின் பேப்பரா...? ஒரு கண்ணாடிக்கு முன்னாடி போய் நின்னு பாரு... தெரியும்...
ஸ... ஸாரி ஸார்... இது சம்மர் ட்ரஸ்ன்னு சொல்லி...
என்னது... சம்மர் ட்ரஸ்ஸா...? கணவன் மட்டும் பார்க்க வேண்டிய உடம்பை எல்லாரும் பார்க்கிற மாதிரி போட்டுக்கற ட்ரஸ்ஸுக்குப் பேர்தான் சம்மர் ட்ரஸ்ஸா...?
ஸாரி ஸார்...! இனிமேல் இப்படி ட்ரஸ் பண்ணிட்டு வரமாட்டேன்...
நோ... எக்ஸ்க்யூஸ்...! நீ... அரை நாள் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு வீட்டுக்குப் போய் டீஸண்டா ட்ரஸ் பண்ணிட்டு வா... அதுவரைக்கும் எம் முன்னாடி வராதே...
ஸ... ஸார்...
கெட்... லாஸ்ட்... ஃப்ரம் மை ரூம்...
பவ்யா கறுத்துப்போன முகத்தோடு பீறிட்டு வந்த அழுகையை உதட்டைக் கடித்து அடக்கியபடி வெளியே வந்தாள். அறைக்கு வெளியே காத்திருந்த ஜி.எம். கணேசமூர்த்தி அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு கேட்டார்.
என்னம்மா...! ஈ.டி. நல்ல மூடில் இருக்காரா?
உள்ளே போய் பாருங்க ஸார்... தெரியும்...
கணேசமூர்த்தி கழுத்து டையை இறுக்கிக் கொண்டு கையில் ஃபைலோடு உள்ளே போனார்.
குட்மார்னிங் ஸார்...