Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal
Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal
Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal
Ebook384 pages2 hours

Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal

Read more from Rajeshkumar

Related to Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal

Related ebooks

Related categories

Reviews for Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    உலகின் மிகச் சிறந்த மருத்துவமனைகள்:

    அற்புதமான மருத்துவமனைகள் மனிதனின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாள்தோறும் இந்த உலகில் உருவாகி வருகின்றன. நம் இந்தியாவில் தரமான பத்து மருத்துவமனைகள் எது எது என்று பார்த்தோம் என்றால் ஒரு சிறிய பட்டியலை உலக சுகாதர அமைப்பு நம் முன்பு வைக்கின்றது. அதில் முதல் இடத்தில் இருப்பது எய்ம்ஸ் (AIMS) மருத்துவமனை. இந்த எழுத்துக்களின் விரிவாக்கம் - ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES. அடுத்த 9 இடங்களில் எந்தெந்த மருத்துவமனைகள் இருக்கிறது என்பதை இரண்டாவது அத்தியாயத்தில் பார்ப்போம்.

    அழகான அந்த ஆரஞ்சு வண்ணப் பட்டுப் புடவைக்குள் சிறைப்பட்டிருந்த மணிமொழி நிலைக் கண்ணாடிக்கு முன்பாய் நின்று புடவை மடிப்புகள் சரியாய் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த செல்போன் அழைப்பு வந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

    செல்போனின் டிஸ்ப்ளேயில் ரஞ்சித் பெயர் விட்டு விட்டு ஒளிர்ந்தது. செல்போனை காதுக்கு ஒற்றி உற்சாகமாய் குரல் கொடுத்தாள்.

    ரஞ்சித்... சென்னை வந்துட்டியா?

    வந்துட்டேன்.

    இப்போ எங்கே?

    ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்து ஃப்ரீ பெய்ட் டாக்ஸிக்காக லைன்ல வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

    நேரா ஹோட்டலுக்கு வந்துடு.. பத்து ரூம் போட்டிருக்கோம். நீ ஒரு ரூம்ல தங்கிக்கலாம்...!

    எந்த ஹோட்டல்?

    ரூப்கலா... இதோடு இந்தக் கேள்வியை நீ மூணாவது தடவை கேட்டுட்டே!

    ஸாரி.. மணி! அந்த ஹோட்டல் பேர் மட்டும் எப்படியோ மறந்து போயிடுது.

    நல்லவேளை.. இன்னிக்கு எனக்கு கல்யாண நிச்சயதார்த்தம். அதாவது ஞாபகம் இருக்கா...?

    அதை மறப்பேனா.. அதுக்குத்தானே மும்பையிலிருந்து பறந்து வந்திருக்கேன். சரி.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாரும் வந்துட்டாங்களா...?

    டேய்...! உதைப்பேன்.

    உதையா.. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்?

    என்ன கிண்டல் பண்றியா?

    கிண்டலா?

    பின்னே என்னவாம்.. நான் காதலிக்கிற பிரேம்க்கு சொந்த பந்தம் யாரும் கிடையாது. அவரோட அம்மாவும், அப்பாவும் எப்பவோ இறந்துட்டாங்க.. இவர் ஓர் ஆர்பனேஜ்ல தங்கி படிச்சு முன்னுக்கு வந்தவர்ன்னு நான் சொன்னது உனக்கு ஞாபகம் இல்லையா?

    ஸாரி.. ஸாரி மணி. இப்ப ஞாபகம் வருது.

    ரஞ்சித்...! உனக்கு அல்ஸீமர் (ALZHEIMER) இருக்குன்னு நினைக்கிறேன்.

    அல்ஸீமரா.. அப்படீன்னா?

    மறதி நோய்.. என்னோட கல்யாண நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் நுங்கம்பாக்கத்துல நியூராலஜிஸ்ட் நீலகண்டனைப் போய்ப் பார்.

    இதோ பார் மணி.. நான்தான் ‘ஸாரி’ கேட்டுட்டேனே.. எனக்கு என்னோட வொர்க் டென்ஷன்... அந்த ஐ.டி. கம்பெனியில் போய் ஏண்டா சேர்ந்தோம்ன்னு இருக்கு.. ஒரு டெலிகேட்டட் ப்ராஜக்ட்டை என்னோட தலையில் கட்டிட்டாங்க.. லாஸ்ட் டென் டேஸாய் சரியான தூக்கம் கிடையாது. வேளாவேளைக்கு சாப்பாடு கிடையாது. அதுதான் எதுவும் ஞாபகமில்லை.

    வேலைக்கு சேர்ந்தப்ப நல்ல கம்பெனின்னு சொன்னே?

    அது ரெண்டு வருஷத்துக்கு முந்தி...! இப்ப நான் வேலை பார்க்கிற கம்பெனி வேற ஒரு கம்பெனியோடு ‘மெர்ஜ்’ ஆயிட்டதால புது மேனேஜ்மெண்ட் படுத்தி எடுக்கிறாங்க.. டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை படிச்சா உச்சி மண்டைக்கு ரத்தம் கிர்ர்ன்னு பாயறது நல்லாவே தெரியுது!

    வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட வேண்டியது தானே.. சென்னையிலேயே உன்னோட ஸ்கில் செட்டுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும்...!

    நான் ரிசைன் பண்ணிட்டு வந்துடறேன்னு சொன்னா என்னோட அண்ணனும் அண்ணியும் கேட்க மாட்டேங்கறாங்களே?

    ஏன்..?

    எனக்கு இப்போ மும்முரமாய் ‘பெண்’ பார்த்துட்டு இருக்காங்களாம். ‘ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்தை முடிக்கிறவரை அதே கம்பெனியில் இரு. அதுக்கப்பறம் ஆறு மாசம் கழிச்சு வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற வேலையைத் தேடு’ன்னு சொல்றாங்க...

    அவங்க சொல்றதும் சரிதானே ரஞ்சித்? இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறது ரொம்பவும் கஷ்டம். கையில் இருக்கிற வேலையை விட்டுட்டா பொண்ணு வீட்ல ‘மாப்பிள்ளைக்கு என்ன வேலை?’ன்னு கேட்கும்போது உன்னோட அண்ணனும் அண்ணியும் என்ன பதிலைச் சொல்ல முடியும்...?

    என்ன மணி..! நீயும் அவங்க பக்கம் சேர்ந்துகிட்டே...?

    நான் எப்பவுமே உண்மையைப் பேசறவங்க கட்சி...

    சரி.. சரி.. உன்னோட பிரேம் பக்கத்துல இருந்தா ஒரு நிமிஷம் போனை அவர்கிட்டே குடு.. அட்வான்ஸ் வாழ்த்துக்களை கன்வே பண்ணிடறேன்...!

    அவர் அவரோட ரூம்ல நிச்சயதார்த்த ஃபங்ஷனுக்கு ரெடியாயிட்டிருக்கார். நீ மொதல்ல ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு வந்து சேரு.. ப்ரீபெய்ட் டாக்ஸி கிடைச்சுதா இல்லையா?

    இதோ புக் பண்ணிட்டேன்...

    வந்து சேரு... - போனை கட் செய்த மணிமொழி அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வேகமாய்ப் போய் தாழ்ப்பாளைத் திறந்தாள்.

    வெளியே பிரேம் நின்றிருந்தான். லுங்கி பனியனில் இருந்தாலும் அழகான தோற்றம் காட்டினான். மணிமொழி அவனை ஒரு கோபப் பார்வை பார்த்தாள்.

    என்ன பிரேம்.. நீங்க இன்னுமா ரெடியாகலை..? மணி எவ்வளவு தெரியுமா...? ஒன்பது. பத்து மணிக்கெல்லாம் கீழே இருக்கிற ஹாலில் ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆயிடும்.. எங்க சொந்த ஜனமெல்லாம் எட்டு மணியில் இருந்தே வர ஆரம்பிச்சுட்டாங்க...

    இதோ பத்து நிமிஷத்துக்குள்ளே ரெடியாயிடுவேன் மணி மொழி. நான் இப்ப இங்கே எதுக்காக வந்தேன் தெரியுமா?

    எதுக்கு?

    நீ ஒரு விஷயத்துக்கு பர்மிஷன் தரணும்.

    எதுக்கு?

    எனக்கு வேஷ்டி கட்டி பழக்கமில்லை. அதிலும் பட்டு வேஷ்டியை நான் இன்னிக்குத்தான் என்னோட வாழ்க்கையில பார்க்கிறேன். அது சுத்தமா என்னோட இடுப்புல நிக்காது. அதனால...

    அதனால.. இப்படியே லுங்கியும் பனியனுமாய் நிச்சயதார்த்தத்துக்கு வர்றேன்னு சொல்றீங்களா?

    இல்லையில்லை.. நீ அன்னிக்கு ஃபோர் எம் ஹாலில் க்ரே கலர்ல ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும், ஒயிட் கலர்ல சர்ட்டும் என்னோட பிறந்தநாளுக்காக எடுத்துக் கொடுத்தியே?

    ஆமா...

    அதைப் போட்டுக்கட்டுமா?

    நோ.. நோ.. இது நம்ம நிச்சயதார்த்த ஃபங்க்ஷன்.. நான் எப்படி இன்னிக்கு சுடிதாரையும் துப்பட்டாவையும் மறந்துட்டு பட்டுப் புடவையில் இருக்கேனோ அதே மாதிரி நீங்களும் இன்னிக்கு வழக்கமான டிரஸ் கோடில் இல்லாமே பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் இருக்கணும்.. அதுதான் சம்பிரதாயம்...

    நல்ல சம்பிரதாயம் போ...

    ஃபங்க்ஷன் ஒருமணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுடும் பிரேம். அதுவரைக்குமாவது நீங்க பட்டு வேஷ்டியிலும் சர்ட்டிலும்தான் இருக்கணும்.

    ப்ளீஸ்.. மணிமொழி.. என்னோட கோரிக்கையை கொஞ்சம் கன்சிடர் பண்ணு.

    சான்ஸே இல்லை...! மணிமொழி தீர்க்கமாய் தலையாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடி வராந்தாவில் அந்தக் குரல் கேட்டது.

    என்னம்மா மாப்பிள்ளையோட சண்டை?

    மணிமொழி திரும்பிப் பார்த்தாள். அவளுடைய அப்பா கோசலராமனும், அம்மா மனோகரியும் சிரிப்போடு வந்து கொண்டிருந்தார்கள். இருவரின் முகங்களிலும் பூரிப்பு பௌடர் பூசியது போல் தெரிந்தது. அவர்களின் சிரிப்பில் மணிமொழியும் கலந்து கொண்டாள்.

    சண்டை எல்லாம் இல்லேப்பா.. உங்க மாப்பிள்ளைக்கு பட்டு வேஷ்டியும் சர்ட்டும் வேண்டாமாம். ஜீன்ஸ் பேண்ட், சர்ட்ல ஃபங்க்ஷனுக்கு வர்றாராம்...

    வரட்டுமே.. அதனால என்னம்மா?

    என்னப்பா.. நீங்களும் அவர்கூட சேர்ந்துட்டு...? பார்த்தாலே மாப்பிள்ளைன்னு தெரியறமாதிரி டிரஸ் இருக்க வேண்டாமா...?

    கோசலராமன் பிரேமிடம் திரும்பினார்.

    மாப்ளே...! மணிமொழி சொல்றதும் சரிதான்...! இந்தக் கல்யாண நிச்சயதார்த்தம், கல்யாணமெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவைதான். பட்டு வேஷ்டியையே கட்டிட்டு வாங்க. எங்களுக்கும் உங்களை அந்தக் கோலத்துல பார்க்கலாம்ன்னு ஆசையாய் இருக்கு...

    பிரேம் சிரித்தான்.

    வேற வழியில்லை.. பட்டு வேஷ்டியை சுத்திக்க வேண்டியதுதான்!

    சீக்கிரமா ரெடி பண்ணிட்டு வாங்க... என்று சொன்ன மணிமொழி தன் அம்மா மனோகரியிடம் திரும்பினாள்.

    ரஞ்சித் மும்பையிலிருந்து சென்னை திரும்பியாச்சு. இப்பத்தான் ஏர்போர்ட்டிலிருந்து போன் வந்தது...!

    பரவாயில்லை... லீவு கிடைக்காது, வரமுடியாதுன்னு சொல்லிட்டு இருந்தான்.

    நம்ம வீட்ல ஒரு விசேஷம்ன்னா அவன் வராமே இருப்பானா என்ன?

    அவன் வந்தாலே போதும் - ஃபங்ஷன் தீபாவளி மாதிரி ‘கலகல’ன்னு களைகட்டிட்டும்..! மனோகரி பெருமையாய் சிரித்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே மணிமொழி பிரேமிடம் திரும்பினாள்.

    நீங்க இன்னுமா உங்க ரூமுக்குப் போகலை?

    இதோ கிளம்பிட்டேன்...!

    பிரேம் அவசர அவசரமாய் நகர்ந்து வராந்தாவில் நடையிட்டு கடைசியில் இருந்த தன் அறைக்கு முன்பாய் நின்று பூட்டியிருந்த பூட்டுக்கு சாவியைக் கொடுத்து கதவைத் தள்ளினான்.

    உள்ளே நுழைய முயன்ற விநாடி -

    திடும் என்று அவனை மோதிக் கொண்டும், தள்ளிக் கொண்டும் யாரோ அறைக்குள் நுழைந்தார்கள்.

    பிரேம் நிலை குலைந்து போனவனாய் கீழே விழப் பார்த்து சமாளித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது யாரென்று பார்த்தான். விழிகளில் திகில் பரவியது.

    தாடி, மீசை என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு முகம் முழுவதும் ரோமக்காடாய் தெரிய, கண்களுக்கு குளிர் கண்ணாடியைக் கொடுத்து தலைக்கு ஒரு மங்க்கி தொப்பியையும் மாட்டியிருந்தான் அந்த நபர்.

    யா... யார்... நீ...! - பிரேம் திணறலாய் கேட்க, அவன் சிரித்தான். கதவை மறுபடியும் சாத்தி தாழிட்டு விட்டு திரும்பினான். குனிந்து குரலைத் தாழ்த்தினான்.

    என்ன மாப்பிள்ளை ஸார்.. நல்ல வசதியான இடமாய்ப் பார்த்து செட்டில் ஆயிட்டீங்க போலிருக்கு?

    நீ என்ன சொல்றே? - பயத்தோடு பின்வாங்கிக் கொண்டே கேட்டான் பிரேம்.

    அவன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். நிதானமாய் முகத்தில் இருந்த தாடி மீசையை பிரித்து எடுத்தான். குளிர்கண்ணாடியையும், தொப்பியையும் கழற்றினான்.

    பிரேம் வியப்புக்குப் போனான்.

    ரஞ்சித்.. நீயா...?

    2

    இந்தியாவில் உள்ள ஹாஸ்பிடல்களில் எய்ம்ஸ் - முதல் இடம் பிடித்து சிறந்த ஹாஸ்பிடலாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது பிஜீமெர் ஹாஸ்பிடல். இது சண்டிகாரில் உள்ளது. மூன்றாவது இடம் தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள ‘கிறிஸ்டியன் மெடிக்கல் சாரிடிஸ்’ (சி.எம்.சி). சென்னையில் உள்ள அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு நான்காவது இடமும், குர்கானில் உள்ள மெடான்டா தி மெடிசிட்டி ஹாஸ்பிடலுக்கு ஐந்தாவது இடமும் கிடைத்துள்ளது. ஆறாவது இடம் நியூடெல்லியில் உள்ள இந்திர பிரஸ்தா ஹாஸ்பிடலுக்கும் ஏழாவது இடம் பாண்டிச்சேரியின் ஜிப்மெர் மருந்துவமனைக்கும், எட்டாவது இடம் மும்பையில் உள்ள லீலாவதி ஹாஸ்பிடலுக்கும், ஒன்பதாவது இடம் மும்பையின் பி.டி.ஹிந்துஜா மருத்துவமனைக்கும் பத்தாவது இடம் லக்னோவில் உள்ள எஸ்.ஜி.பி.ஜி.ஐ ஹாஸ்பிடலுக்கும் கிடைத்துள்ளது.

    டாக்டர் மாதவமேனன் டி.வி.யை ஆன் செய்து விட்டு சோபாவில் சாய்ந்து கொண்டே ஹாலின் உட்பக்கம் பார்த்து குரல் கொடுத்தார்.

    யாமினி.

    வந்துட்டேன். உள்ளேயிருந்து குரல் வந்தது.

    சீக்கிரமா வா.. மணி எட்டரை. என்னோட பேட்டி டெலிகாஸ்ட் ஆகப் போகுது.

    நாற்பது வயதைத் தாண்டிய யாமினி அடுத்த சில விநாடிகளில் லேசான மேக்கப்போடு பிங்க் நிற சேலையில் வெளிப்பட்டாள்.

    இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கே? - சொல்லிக் கொண்டே தன் கணவர்க்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

    பேட்டி எவ்வளவு நேரம் போகும்?

    எப்படியும் ஒரு மணி நேரமாயிடும்

    அப்படீன்னா இன்னிக்கு ஓ.பி. பார்க்க முடியாது.

    ஆமா.. ஆனா அந்த ஓ.பி. அப்பாய்ண்ட் மெண்ட்டை எல்லாம் ஈவினிங் ஃபோர் டூ ஃபைவ்க்கு மாத்திட்டேன்.

    டாக்டர் மாதவமேனன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டி.வி.யின் திரையில் அந்த அழகான பெண்ணின் முகம் உற்பத்தியாயிற்று. ஒரு புன்னகையோடு பேச ஆரம்பித்தாள்.

    "நம் ‘ப்ளூ வேவ்ஸ்’ டி.வி. நேயர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்போது நாம் பார்க்கக் கூடிய நிகழ்ச்சி ‘மாறி வரும் உலகில் மகத்தான மருத்துவம்.’ இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இடம் பெற்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறார். இன்று நாம் சந்திக்கப் போகும் மருத்துவர் திரு. மாதவ மேனன் அவர்கள். 52 வயதான மாதவமேனன் அவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர். சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து, வெளிநாட்டில் எம்.எஸ். முடித்து மேலும் எம்.சி.ஹெச். படிப்பையும் முடித்தவர். மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் தற்சமயம் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். மூளை மற்றும் முதுகுத் தண்டுத் துறையில் அகில இந்திய அளவில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ‘மாஸ்ட்ரோ இன் டாக்டரேட்’ என்னும் விருதையும் பெற்றுள்ளார்.

    எல்லாவற்றைக் காட்டிலும் சென்னையில் உள்ள - இவர்க்கு உரிமையான - இவருடைய உழைப்பில் உருவான - ‘மாயா ஹாஸ்பிடல்’ இந்தியாவின் தலைசிறந்த ஹாஸ்பிடல்களில் ஒன்றாக இடம் பிடித்து இருப்பது நமக்கும் நம்முடைய மாநிலத்துக்கும் பெருமை தரக்கூடிய செய்தியாகும். அவரோடு இப்போது பேசுவோம்."

    காட்சி மாறியது.

    டி.வி. நிலையத்தின் வரவேற்பறை ஒரு ஹோட்டலின் லாபி போல் அமர்க்களமாய் தெரிய அதன் மையத்தில் போடப்பட்டிருந்த நீலவண்ண சோபாவில் டாக்டர் மாதவமேனன் சாய்ந்து உட்கார்ந்திருக்க அவர்க்கு எதிரே ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.

    வணக்கம் டாக்டர்!

    வணக்கம்!

    ‘மாறி வரும் உலகில் மகத்தான மருத்துவம்’ என்கிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களுடைய மேலான கருத்துக்களை எங்கள் டி.வி நேயர்களோடு பகிர்ந்து கொள்ள வருகை தந்தமைக்கு எங்கள் நன்றி!

    மாதவமேனன் சிரித்தார். நான்தான் நன்றி சொல்ல வேண்டும். மருத்துவ சிகிச்சை முறைகள் நாள்தோறும் மாறிக் கொண்டு இருக்கின்றன. இதுபற்றிய போதுமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. அந்த விழிப்புணர்வை ஊட்டுவதற்கு இதுமாதிரியான பேட்டிகள் நிச்சயம் பயன் தரும்.

    நன்றி டாக்டர்... நான் உங்களிடம் கேட்க விரும்பும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் உருவாக்கிய மருத்துவமனைக்கு ‘மாயா ஹாஸ்பிடல்’ என்று பெயர் வைத்துள்ளீர்கள். இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம்?

    காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    பேட்டி எடுக்கிற பெண் சிரித்துவிட்டு சொன்னாள்: நான் சொல்வதைக் கேட்டுவிட்டு நீங்கள் தப்பாய் நினைக்கக் கூடாது.

    தப்பாகவே இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்கள்.

    "என் கருத்து இதுதான்...! இந்த உலகமே மாயம்; வாழ்வே மாயம். மனித வாழ்க்கை என்பது ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1