Aayul Aare Naal
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Aayul Aare Naal
Related ebooks
Mottukkal Pookattum Rating: 5 out of 5 stars5/5Pagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Minnal Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Puthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Koodave Oru Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsThirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Inimeal Charumathi Rating: 0 out of 5 stars0 ratingsArai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsNilavukkul Iruttu and Velvet Kanavugal! Rating: 5 out of 5 stars5/5Athikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsBrindha Private Limited Rating: 5 out of 5 stars5/5Athikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSheela, Simla, Sirithu Rattham! Rating: 0 out of 5 stars0 ratingsInimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivekum 41 Nimishangalum Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Manjal Diary Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Niram Karuppu Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratings01.01.2000, Muthal Nimisham Rating: 5 out of 5 stars5/5Manam Iranthu Pesugiran Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Theera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Aayul Aare Naal
1 rating0 reviews
Book preview
Aayul Aare Naal - Rajeshkumar
25
1
அண்ணே! கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடணும். சவாரி வந்துடுச்சு, பழனி போயிட்டேன். திருச்செந்தூர் போயிட்டேன்னு, சொல்லக்கூடாது. மண்டப வாசலுக்கு ‘டாண்’னு அஞ்சு மணிக்கு வந்துடணும். ஆறு மணிக்கு முகூர்த்தம். ஏழு மணிக்கு டிபன். பத்து மணிக்கு ஆர்கெஸ்ட்ரா பாட்டுக் கச்சேரி... பனிரெண்டு மணிக்கு... விருந்து. மத்தியானம் மூணு மணிக்கு நலங்கு... சாயந்தரம் கார்ல பொண்ணு வீட்டுக்கு ஊர்வலம் எல்லாத்துக்கும் இருந்து கல்யாணத்தை ஜாம்ஜாம் ன்னு நடத்திக் கொடுத்துட்டுதான் போகனும். நீங்க மட்டும் கல்யாணத்துக்கு வராமே இருந்தீங்க, அப்புறம் உங்க வீட்ல நடக்கிற எந்த விசேஷத்துக்கும் இந்த சத்யம் எட்டிப் பார்க்க மாட்டான்
- இடம் தி.நகர் டாக்ஸி ஸ்டாண்ட். மாலை 5.10.
கை நீட்டி - கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொண்ட சக - டாக்ஸி டிரைவர் குருசாமி சிரித்தார். கண்டிப்பா வர்றேன் சத்யம். உன் கல்யாணத்துக்கு நான் வராமே இருப்பேனா...?
நீங்க மட்டும் தனியா வந்தா ஒத்துக்க மாட்டேன்.
பின்னே...?
உங்க ரெண்டு ஒய்ஃபையும்... ஏழு குழந்தைகளையும் கூட்டிகிட்டு வரணும்.
நல்ல வேளை. சூளைமேட்ல செட்டப் பண்ணி வெச்சிருக்கிற சின்ன வீட்டையும் கூட்டிட்டு வான்னு சொல்லாமே விட்டியே...?
முடிஞ்சா அதையும் கூட்டிட்டு வாங்கண்ணே...
குருசாமி முறைக்க - சத்யம் சிரித்துக் கொண்டே மற்ற டிரைவர்களை நோக்கிப் போனான். பத்திரிக்கை விநியோகத்தை பரபரவென்று நடத்தினான்.
லாரன்ஸ்! ஞாயிற்றுக் கிழமை. முகூர்த்தம். நீ பாட்டுக்கு சர்ச்சுக்கு போயிடாதே! ப்ரெண்ட் கல்யாணத்துக்கு போறேன்னு சொன்னா... ஏசுநாதர் கோவிச்சுக்க மாட்டார். ஒய்ப் ரெஜினாவோடு வந்து சேரு...
ம்... ம்...
குமாரு! உன்னைய நான் பத்திரிகை வெச்சு கூப்பிட வேண்டியதே இல்லை... மொத நா ராத்திரியே வந்துடு...
"வர்றேன் போடா... பெரிய மனுஷா...
சிகாமணி அண்ணே! இந்தாங்க பத்திரிக்கை. மொய் வெக்கணுமேன்னு வராமே இருந்துடாதீங்க. பத்திரிகையிலேயே பிரிண்ட் பண்ணியிருக்கேன். தயவு செய்து அன்பளிப்புகளை தவிர்த்திடுங்கள்’ - ஸோ... நீங்க தைரியமா வரலாம்...
"சிகாமணி அடிக்க வர - எல்லோரும் சிரித்தார்கள். சத்யம் பயந்து ஓடுவது போல் பாவ்லா காட்டி - தூங்குமூஞ்சி மரத்துக்குக் கீழே உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த சுலைமானிடம் வந்தான்.
பாய்! பேப்பரை அப்புறமா படிக்கலாம். மொதல்ல பத்திரிக்கையை வாங்கிக்கிங்க.
சுலைமான் நிமிர்ந்து - தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு சத்யத்தை ஏறிட்டார்.
"உட்கார்றா... பையா...
சத்யம் உட்கார்ந்தான். என்ன பாய்...?
இருபது நாளா நான் டாக்ஸி ஸ்டாண்ட்டுக்கு வரலை... அதான் உன்னோட கல்யாணத்தைப் பத்தி எந்த விஷயமும் எனக்குத் தெரியலை... வீட்ல வயசுக்கு வந்த தங்கச்சி இருக்கும் போது... நீ ஏண்டா மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிறே…? அவளுக்கு ஒரு காரியத்தை பண்ணிட்டுதானே... நீ... இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டணும்?
"அ... அது வந்து பாய்... தங்கச்சிக்கு வயசு பதினாறுதான் ஆகுது. அதுவுமில்லாமே காலேஜ் போய் படிக்க ஆசைப்படறா... அம்மாவுக்கு முன்னே மாதிரி வீட்டு வேலை செய்ய முடியலை... அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வந்துடுது. வீட்டு வேலைகளை கவனிக்கிறதுக்காகவாவது நான் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டிய கட்டாயம்... எனக்கொன்னும் கல்யாண ஆசை இல்ல பாய்...
சுலைமான் பாய் சிரித்தார். "ஏதோ ஒரு காரணம். சரி! பொண்ணு யாரு...?
பேரு பிருந்தா. அம்மா இல்லை. அப்பா
மட்டுந்தான். அப்பாவுக்கு ஹார்பர்ல வேலை..."
பக்கத்து அம்பாசிடரில். உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பத்ராச்சலம் குரல் கொடுத்தான், "பாய்! பொண்ணு யார் தெரியுமா? உங்களுக்கு நல்லாவே தெரியும்.’
சுலைமான் பத்ராச்சலத்திடம் திரும்பினார்.
"எனக்குத் தெரியுமா...? யாரது...?’
தெனமும் காலையில் ஏழு மணிக்கு சரியா... நம்ம டாக்ஸி ஸ்டாண்ட்டுக்கு எதிரில் இருக்கிற பஸ் ஸ்டாப்புக்கு... பழைய ஸ்ரீதேவி டைப்ல... ஒரு பொண்ணு ‘சிக்’ன்னு வந்து நிப்பாளே...?
பாய் பற்களைக் காட்டினார்.
ஓ அந்தப் பொண்ணா...?
"அவளேதான்... ஆறு மாசமா இந்த சத்யம் அவளை டாவடிச்சு காதலிச்சிருக்கான்...
அப்போ... இது காதல் கல்யாணம்?
ஆமா… பாய்...
- பத்ராச்சலம் தலையை ஆட்ட, சத்யம் பின்னந்தலையைச் சொறிந்தான். பாய் அவனை முறைத்தார்.
"எத்தினி நாளா... அந்த பொண்ணைக் காதலிக்கிறே?’
இப்பதான் பாய்... ஒரு ஆறு மாசமா...
"பொண்ணு எங்கேயாவது வேலைக்குப் போறாளா...?
"முன்னே... ஒரு விளம்பரக் கம்பெனிக்கு டைப்பிஸ்ட்டா போயிட்டிருந்தா. கல்யாணம் நிச்சயமானதும் ராஜினாமா பண்ணிட்டா...’
ஏண்டா...?
நான்தான் ராஜினாமா பண்ணச் சொன்னேன்.
ஏன் வேலைக்குப் போனா என்ன...? அவ சம்பாத்தியமும் உன்னோட குடும்பத்துக்கு உதவுமே?
வேண்டாம் பாய்! அம்மாவுக்கு உடம்பு முடியலைங்கிற ஒரேயொரு காரணத்துக்காக... பிருந்தாவை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கொண்டு போறேன்...
சரி... சரி... பத்திரிகையை குடு...! கல்யாணத்துக்கு வந்து சேர்ந்துடறேன்...
கண்டிப்பா வரணும் பாய்!
வர்றேன்... வர்றேன்...
சத்யம் எழுந்தான்...
பத்ராச்சலம் கேட்டான்.
பத்திரிகை டிஸ்டிரிப்யூஷன் முடிஞ்சதா... சத்யம்?
ம்... முடிஞ்சுது...
உன்னோட பத்திரிகையில் எனக்கு... பிடிக்காத ஒரு அம்சத்தைச் சொல்லட்டுமா?
என்ன...?
கட்சித் தலைவர் பர்வதராஜனை தலைமை வகிக்கச் சொல்லியிருக்கியே அதான்...
சத்யம் சிரித்தான்.
நான் அவரோட தொண்டன். தொண்டனோட்டம் கல்யாணத்தை தலைவர் தலைமை தாங்கினா என்ன...?. அவர்க்கு இருக்கிற எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் – என் கல்யாணத்துக்கு வர ஒத்துக்கிட்டதே பெரிய காரியம் என்னோட பாக்யம்...
"நீ என்னதான் சொல்லு... உன்னோட கட்சி ஈடுபாட்டையும் கல்யாணத்தையும் கலந்தது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கலை...
எனக்குப் பிடிச்சிருக்கு.
"என் மனசுல பட்டத்தைச் சொன்னேன்! சரி
சாம்பமூர்த்திக்கு பத்திரிகை வெச்சுட்டியா...?"
இல்ல...
அதே வர்றேன்... போய் வெச்சுடு...
சத்யம் திருப்பிப் பார்க்க - எங்கோ சவாரி போய்விட்டு வந்த சாம்பமூர்த்தி - அம்பாசிடரை ஓரங்கட்டி நிறுத்திக் கொண்டிருந்தான்.
சத்யம் பத்ராசலத்தை ஏறிட்டான். "ஒரு சவாரி பிடிக்கிறதுல எனக்கும் அவனுக்கும் ஏற்பட்ட