Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sheela, Simla, Sirithu Rattham!
Sheela, Simla, Sirithu Rattham!
Sheela, Simla, Sirithu Rattham!
Ebook161 pages50 minutes

Sheela, Simla, Sirithu Rattham!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sheela, Simla, Sirithu Rattham!

Read more from Rajeshkumar

Related to Sheela, Simla, Sirithu Rattham!

Related ebooks

Related categories

Reviews for Sheela, Simla, Sirithu Rattham!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sheela, Simla, Sirithu Rattham! - Rajeshkumar

    30

    1

    சிம்லா. இரவு பதினோரு மணி. வானத்திலிருந்து கோலப்பொடி தூவுகிற சைஸில் பனி. ஹோட்டல் 'ஓபேராய் க்ளார்க்ஸ்' காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த நிஷாந்த் கார் நுழைந்து- பனியில் நனைந்து கொண்டிருந்த கார் வரிசையில் போய் நின்று - எல்லா விளக்குகளையும் அணைத்துக் கொண்டது.

    ட்ரைவிங் ஸ்தானத்திலிருந்து அவன் இறங்கினான். கனமான கம்பளியாலான ஓவர் கோட். தலையில் வெள்ளை நிற 'ஸ்பர்' தொப்பி. க்ளவுஸ் அணிந்த கைகள். வலது கை விரல்களில் - புகையும் சாக்லெட் நிற வெளிநாட்டு சிகரெட்.

    காரின் கதவை நோகாமல் சாத்திவிட்டு - பனியில் நனைந்து ஈரமாயிருந்த பேவ்மெண்டில் நடந்து - ஹோட்டலின் வரவேற்பறைக்குள் நுழைந்தான். ஜெர்கின் கோட் அணிந்து - கெளண்டர்க்குள் நின்றிருந்த இளைஞனை நெருங்கினான். எதையோ எழுதிக் கொண்டிருந்த அவன் நிமிர்ந்தான்.

    எஸ்...

    மிஸ்டர்... நம்பி... எந்த அறையில் தங்கியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா...?

    அவன் சார்ட்டைப் பார்த்துவிட்டுக் கேட்டான். மிஸ்டர் ஏ. நம்பி ஃப்ரம் மெட்ராஸ்...?

    "ஆமாம்.

    ஃபிப்த் ஃப்ளோர், ரூம் நெம்பர் ஃபைவ் நாட் நைன்...

    தாங்க்யூ... சொன்ன கம்பளிக்கோட்காரன் விரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த - சிகரெட்டை - மேஜையின் மேலிருந்த ஆஷ்ட்ரேயில் இட்டு நசுக்கிவிட்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தான். விரியக் கிடந்த லிஃப்ட்டில் நுழைந்து முப்பது விநாடிகள் தனியாய் பயணித்து - ஐந்தாவது மாடியைத் தொட்டு - 509 எண்ணிட்ட அறைக்கு முன்பாய் வந்து நின்றான்.

    காலிங் பெல்லுக்கு வேலை கொடுக்க - கதவு திறந்தது.

    உள்ளே - நைட் கவுனில் நின்றிருந்த இளைஞன் சிரித்தான். வா... ஜனா... என்று சொல்லி - அவனை உள்ளே இழுத்துக் கொண்டு - கதவை மூடினான். பத்து மணிக்கே போன் பண்ணினேன். இவ்வளவு லேட்டா வர்றியே...?

    ஸாரி... நம்பி...! கோட்காரிலிருந்து ஹோட்டலுக்கு வரும் பத்து கிலோ மீட்டர் ரோட்டிலும் கடுமையான பனி. கார் பனிச்சகதியில் - சிக்கிக் கொண்டு ரெண்டு தடவை... ஏகப்பட்ட சிரமம். வேகமா வந்தா... காரோடு சேர்ந்து நானும் அதளபாதாளத்துக்கு போக வேண்டியதுதான்...

    சரி... என்ன சாப்டறே...? நம்பி பெருவிரலை காட்டி கேட்டான்.

    எதுவானாலும்...?

    விஸ்கி...?

    பேஷா... ஆனா... சோடா கலக்காமே...

    முன்னைக்கு இப்போ... உடம்பு பெருத்துட்டே...!

    எல்லாம் என் பெண்டாட்டி செத்த சந்தோஷம்தான்.

    நம்பி திடுக்கிட்டான். ஜனா! நீ என்ன சொல்றே? ராஷ்மி செத்துட்டாளா...? எப்போ...?

    ஆறுமாசமாச்சு...

    பின்னே எனக்கு நீ தகவலே சொல்லலை...?

    நான் யார்க்குமே சொல்லலை...

    ஏன்...?

    அவளோட மரணம் அப்படி...

    எனக்குப் புரியலை...

    தற்கொலை பண்ணிக்கிட்டா...

    தற்கொலையா... ஏ... ஏன்...?

    நான் கண்டிச்சேன்...

    எதுக்காக கண்டிச்சே...?

    விஸ்கி... ப்ளீஸ்...

    நம்பி கண்ணாடி டம்ளரில் - ஒரு 'லார்ஜ்' ஊற்றி நீட்டினான். அவன் அதை வாங்கி விழுங்கிவிட்டு ஒன் மோர் என்றான்.

    ராஷ்மியை எதுக்காக கண்டிச்சேன்னு சொல்லு...

    சொன்னா நீ ஆச்சர்யப்படுவே...

    சொல்லு...

    என்னோட ஆப்ரிகாட் தோட்டத்தில் சூபர்வைஸரா வேலை பார்த்த ஒருத்தனுக்கும் ராஷ்மிக்கும் தொடர்பு இருந்தது.

    அடப்பாவமே!

    ரெண்டு பேரையும் ஒரே கம்பளிப் போர்வைக்குள்ளே கையும் களவுமா பிடிச்சேன். அவன் தப்பிச்சு ஓடிட்டான். நான் ராஷ்மியை கண்டிச்சேன். மறுநாள் காலையில் அவ வெண்டிலேட்டர் கம்பியில் தூக்கு போட்டுகிட்டா...

    ராஷ்மி அப்படிப்பட்டவளா...? என்னால் நம்ப முடியலை...

    அந்த விபச்சாரி செத்துப்போனதுக்காக நான் ஒரு சொட்டு கண்ணீர் கூடவிடலை...! விஸ்கி ஒன் மோர் லார்ஜ்...

    நம்பி - ஊற்றிக் கொடுத்தான். ஜனா அதையும் வாங்கி ஒரே மடக்கில் விழுங்கிவிட்டு அவனை ஏறிட்டபடி கேட்டான்.

    என்னோட கதை இருக்கட்டும். நீ இப்போ என்ன பண்றே?

    அதே கோல்ட் பிஸ்கெட் பிஸினெஸ்தான்.

    போன தடவை பார்த்தப்ப... விட்டுடப் போறதா சொன்னே...?

    விட முடியலை...! அதை விட்டுட்டா வேற தொழில் என்ன பண்றதுன்னும் தெரியலை... அதான் பிஸ்கெட் பிசினஸையே கண்டினியூ பண்ணிட்டிருக்கேன்...

    கஸ்டம்ஸ் கெடுபிடி இப்போ அதிகமாமே...?

    என்ன கெடு பிடி இருந்தாலும் என்ன...? எல்லா ஏர்ஃபோர்ட்களிலேயும்... எனக்கு விசுவாசமான ஆட்கள் இருக்காங்க...

    சரி... இனி விஷயத்துக்கு வருவோம்...! இந்த ராத்திரி வேளைல் என்னை எதுக்காக உடனே புறப்பட்டு வரச்சொன்னே...?

    காரணமில்லாமே வரச் சொல்லுவேனா...?

    என்ன சொல்லு...

    இந்த சிம்லாவில் ஒரு வாரம் தங்கி... இருபது லட்ச ரூபாயை சம்பாதிக்கிறதுக்காக வந்திருக்கேன்...

    நம்பி... நீ... என்ன சொல்றே...? இருபது லட்ச ரூபாய் சம்பாதிக்கப் போறியா...?

    ஆமா... ஆமா...! அதுக்கு நீ உதவி பண்ணினா... பணம் உனக்குப் பாதி... எனக்குப் பாதி...

    ஜனா ஆர்வமானான்.

    "உன்னோட திட்டமென்ன... சொல்லு...'

    நம்பி எழுந்துபோய் - தன் சூட்கேஸை திறந்து - ஒரு கார்டு சைஸ் போட்டோவைக் கொண்டு வந்து ஜனாவிடம் நீட்டினான்.

    ஜனா வாங்கிப் பார்த்தான்.

    ஒரு பெண்ணின் போட்டோ.

    அழகாக இருந்தாள். பெரிய கண்கள். இறுக்கான முகத்தோடு காமிராவை நேர்பார்வை பார்த்தாள். அணிந்திருந்த சல்வார் கம்மீஸ் நிறமும், காதில் இருந்த 'ஸ்டட்'களின் நிறமும் ஒத்துப் போயிருந்தது.

    நம்பி! யாரிந்த பொண்ணு...?

    நம்பி - விஸ்கி பாட்டிலை எடுத்து - டம்ளரில் ஊற்றிக் கொண்டே சொன்னான். பேரு... ஷீலா, வயசு இருபத்தி மூணு... மகா சொத்துக்காரி.

    சரி...

    கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகுது... புருஷன் பேரு பாலச்சந்திரன். பம்பாயில் இருக்கிற ஒரு பெரிய கம்பெனிக்கு எக்ஸிக்யூடிவ் டைரக்டர்.

    சரி...

    "ரெண்டுபேரும் நாளைக்கு ராத்திரி டெல்லியிலிருந்து - கால்கா மெயிலில் புறப்பட்டு மறுநாள் காலையில் - ஆறே

    Enjoying the preview?
    Page 1 of 1