Thedungal Kidaikkathu and Indiya Nadu En Vedu-II
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thedungal Kidaikkathu and Indiya Nadu En Vedu-II
Related ebooks
Thee. Deepaa.. Deepaavali... Rating: 0 out of 5 stars0 ratings2000 Sathura Adi Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Siraiyil Oru Paravai Rating: 5 out of 5 stars5/5Oru Gram Thurogam Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Ithazhum Sila Raththa Thuligalum Rating: 0 out of 5 stars0 ratingsVellikizhamai Vidiyumvelai Rating: 5 out of 5 stars5/5Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSivappaai Sila Kanavukal Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Paarijathangal Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsEthuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Sheela, Simla, Sirithu Rattham! Rating: 0 out of 5 stars0 ratingsRoja Mul Kireedam Rating: 4 out of 5 stars4/5Arai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Miss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5Kaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsKannimaika Neramillai! Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sirakadikka Aasai Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Theerppu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thedungal Kidaikkathu and Indiya Nadu En Vedu-II
0 ratings0 reviews
Book preview
Thedungal Kidaikkathu and Indiya Nadu En Vedu-II - Rajeshkumar
எடுக்கப்படும்.
தேடுங்கள் கிடைக்காது
1
ஒரு ஜூன் மாத ராத்திரி நேரம். மணி மிகச்சரியாக 10.59.
லேசாய் மழை தூறிக் கொண்டிருந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் க்ரே நிற அம்பாசிடர் கார் ஒன்று - அவசரமில்லாத வேகத்தில் போய்க் கொண்டிருக்க - ட்ரைவிங் ஸீட்டில் அந்த இளைஞன் தெரிந்தான். இளைஞனுடைய வலது கை ஸ்டீரியங்கை சிரத்தையாய் கையாண்டு கொண்டிருக்க - இடது கையின் விரல்கள் - பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணின் இடுப்பில் பதிந்திருந்தது.
அவள் சிணுங்கினாள்.
உங்க கைக்கு 144 தடைச் சட்டத்தைப் போடணும்.
அப்படி போட்டாலும் என் கை தடை சட்டத்தை மீறும்.
வேண்டாங்க!
என்ன வேண்டாம்?
கார்ல இதெல்லாம் வேண்டாங்க.
பின்னே?
நம்ம கெஸ்ட ஹவுஸுக்கு போய் வெச்சுக்கலாம்.
கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர அரை மணி நேரமாகுமே? அது வரைக்கும் எனக்குப் பொழுது போக வேண்டாமா...? மழை பெஞ்சு... காத்து வேற 'சில்'ன்னு அடிக்குது. அழகான பெண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்துட்டு வர்றப்ப என் கை சும்மாவா... இருக்கும்.
அப்ப... நீங்க ஒரு காரியம் பண்ணியிருக்கணும்.
என்ன?
ஆபிஸை விட்டு சீக்கரமாய் வந்திருக்கணும்...
இன்னிக்குப் பார்த்து போர்டு மீட்டிங்...! எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அப்பா ஒத்துக்க மாட்டார்...
சரி... எதிர்ல ஒரு லாரி வருது... ஒதுக்கி ஓட்டுங்க.
வேகத்தைக் குறைத்து - காரை ஒதுக்கி - பின் வேகமெடுத்தான். சேஷஞ்சாவடி பஞ்சாயத்து யூனியன் ஒரு மஞ்சள் போர்டில் - அவர்களை அவசர அவசரமாய் வரவேற்றுவிட்டு பின்னுக்கு போயிற்று.
மழை இன்னிக்கு ராத்திரி பூராவும் ஊத்தும் போலிருக்கே?
அம்சமான ராத்திரி...
அவன் கண் சிமிட்டினான்.
என்னங்க போனதும் பாட்டிலை எடுத்துக்காதீங்க...
மொதல்ல நீ. அப்புறம் பாட்டில். அப்புறம் நீ. அப்புறம் பாட்டில். அப்புறம் நீ...
வர வர நீங்க ரொம்ப மோசம்...
நீ மட்டும் ஒழுங்கா... அன்னிக்கு...
சரி... சரி... நானும் மோசம் தான்... நீங்க எதையும் சொல்ல வேண்டாம்.
"அப்படி வா வழிக்கு...! அவளுடைய இடுப்பை ஆழமாய்க் கிள்ளியவன் - மறுபடியும் பார்வையை உயர்த்திய போது -
ரோட்டின் ஓரத்தில் ஒரு மரத்துக்குக் கீழே - மழையில் நனைந்தபடி - காரின் ஹெல்லைட் வெளிச்சத்தில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிந்தார். கையில் வைத்திருந்த லாட்டியால் - காரை நிறுத்தும்படி அசைத்தார். அருகே பைக்.
அவள் கலவரப்பட்டாள்.
என்னங்க போலீஸ்...?
ஏதாவது செக்கிங்கா இருக்கும். இந்த நேஷனல் ஹைவேஸ்ல இது சகஜம் தானே...?
சொன்னவன் காரைக் கொண்டு போய் - இன்ஸ்பெக்டர்க்குப் பக்கத்தில் நிறுத்தினான். கண்ணாடியை இறக்கி - எஸ்
என்றான். இன்ஸ்பெக்டர் குனிந்து கேட்டார்.
எங்கே போயிட்டிருக்கீங்க...?
பேரல் ஹில்ஸுக்கு...
இஃப் யூ டோண்ட் மைண்ட்...! நீங்க ஒரு உதவி பண்ண முடியுமா...?
என்ன...?
ஒரு கர்ப்பிணி பெண்ணை பிரசவத்துக்காக் ஹாஸ்பிடல்ல சேர்க்கணும். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஆத்தூர் ஹாஸ்பிடலில் சேர்த்துட்டா போதும்...
வாட் ஈஸ் தேர்...? பொண்ணைக் கூட்டிட்டு வாங்களேன்...
தாங்க்யூ வெரி மச்...
என்று சந்தோஷப்பட்ட இன்ஸ்பெக்டர் - பக்கத்தில் இருந்த குடிசையை நோக்கிப் போய் குரல் கொடுத்தார்.
இந்தாப்பா... சீத்தாபதி...! ஒரு காரை நிறுத்தி விஷயத்தைச் சொல்லியிருக்கேன்... அவங்க ஆத்தூர் ஹாஸ்பிடல்ல கொண்டுபோய் விட்டுடுவாங்க. உம் பெஞ்சாதியைக் கூட்டிகிட்டு வெளியே வா...
உள்ளேயிருந்து குரல் வந்தது.
அய்யா! அவ மயக்கமாயிட்டா...
சரி. தூக்கிட்டு வந்து கார் பின் சீட்ல படுக்க வைய்யி...! நீ கள்ளச் சாராயம் காய்ச்சறதா கேள்விப்பட்டு உன்னை பிடிக்க வந்தா... வந்த இடத்துல உம் பொஞ்சாதிக்கு பிரசவம் பார்க்க வெச்சுடுவே போலிருக்கே...
அடுத்த சில விநாடிகளில் -- பம்மின வயிரோடு ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க வந்தான் சீத்தாபதி. பனியனும் வேஷ்டியும் அணிந்து தலைக்கு துண்டைச் சுற்றியிருந்தான் அவன்.
ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்ன்னு சொன்னா... கேக்கிறாளா... இ...? இந்த மழை பெய்யற ராத்திரியில திடீர்ன்னு வயித்தைப் பிடிச்சிகிட்டு புழுவா துடிச்சா நான் என்ன பண்ணுவேன்...?
காரின் டிரைவிங் ஸீட்டில் உட்கார்ந்த இளைஞன் இறங்கி வந்து - பின் பக்கக் கதவைத் திறந்து விட்டான்.
மெதுவா. மெதுவா. படுக்க வையுங்க.
ஸ... ஸார்... நீங்க. யாராயிருந்தாலும் சரி, நான் உங்களை என் குலதெய்வமாவே நினைக்கிறேன்...
பேசிகிட்டு இருக்காதே... உள்ளே ஏறு.
இன்ஸ்பெக்டர் விரட்ட சீத்தாபதி தன் மனைவியை பின் சீட்டில் கிடத்திவிட்டு - உள்ளே போனான். இன்ஸ்பெக்டர் இளைஞனிடம் வந்தார்.
ஸாரி உங்களுக்கு தொந்திரவு...
நோ... நோ...
உங்க பேரு...?
என் பேரு பாலாஜி. ஷி ஈஸ் மை ஒய்ஃப் சந்திரிகா.
ஓ.கே. மிஸ்டர் பாலாஜி! நீங்க அந்தப் பெண்ணை ஹாஸ்பிடல்ல கொண்டு போய் விட்டுட்டா... ரொம்பவும் உதவியா இருக்கும்...
டோண்ட் ஒர்ரி... இதுக்குக்கூட என்னோட கார் உபயோகப்படலைன்னா எப்படி... ஸார்...?
பாலாஜி சொல்லிக் கொண்டே போய் ட்ரைவிங்க் சீட்டை ஆக்ரமித்தான்.
கார் கிளம்பியது.
பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சீத்தாபதி அழுகிற குரலில் பதறினான். கொஞ்சம் சீக்கிரமா போங்க ஸார்... கண்ணு முழியெல்லாம் நின்னு போச்சு...
சந்திரிகா திரும்பிப் பார்த்து கேட்டாள்.
இது தலைச்சனா...?
ஆமாங்க...
ஆஸ்பத்திரிக்கு சாயந்தரமே போயிக்க வேண்டியது தானே?
நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேங்க. கழுதை கேக்கலை... அடுத்த வாரம் தான் பிரசவம் ஆகும்ன்னு... டாக்டரம்மா சொன்னாளாம். அதை நம்பிகிட்டு... இந்த பைத்தியகாரி ஆஸ்பத்திரிக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டா...
காரின் வேகத்தை அதிகப்படுத்தினான் பாலாஜி.
பிரசவ வலி வந்து எவ்வளவு நேரமாச்சு...?
இப்பத்தாங்க ஒரு கால் மணி நேரம் இருக்கும். வழியில போன ரெண்டு மூணு காரை நிறுத்தச் சொல்லி கையைக் காட்டியும் யாரும் நிறுத்தலை. அப்பத்தான் இன்ஸ்பெக்டரய்யா வந்தாங்க... கள்ளச் சாராய கேஸக்காக என்னை விசாரிக்க வந்தாரு... நிலவரத்தைப் பார்த்ததும்... எனக்கு... உதவி பண்ண ஆரம்பிச்சிட்டாருங்க... நீங்களும் காரை நிறுத்தாம போயிருந்தீங்கன்னா... பேஜாரா போயிருக்கும்.
வீட்ல துணைக்கு பொம்பளைங்க யாருமில்லையா...?
இல்லீங்க...! என் கூடப் பொறந்தவ... நேத்திக்கு வரைக்கும் வூட்ல இருந்தா... இன்னிக்கு காத்தாலத்தான் உளுந்தூர்பேட்டைக்கு போனா...
கார் மாங்கொல்லை கிராமத்தைத் தாண்டியதும் - மழை சுத்தமாய் நின்று போயிருந்தது. வைப்பர்களின் இயக்கத்தை நிறுத்தினான் பாலாஜி.
கார் மேலும் இரண்டு கிலோ மீட்டர்களை விழுங்கி - தேவன் குளம் கிராமத்தை தொட்ட போது - சீத்தாபதி குரல் கொடுத்தான்.
ஸார்
ம்...
அப்படி ரோட்டோரமா ஒரு நிமிஷம் காரை நிப்பாட்டறீங்களா...?
எதுக்கு?
அதோ! அந்த மரத்துக்குப் பின்னாடி தெரியற குடிசைக் குடியிருப்புலதான் எங்கண்ணனும் அண்ணியும் இருக்காங்க... பிரசவ சமயத்துல அண்ணி பக்கத்துல இருந்தா... எனக்கு கொஞ்சம் தெம்பாயிருக்கும்... நீங்க காரை நிப்பாட்டினா... ஓடிப்போயி ஒரே நிமிஷத்துக்குள்ள எங்கண்ணியை கூட்டிட்டு வந்துடுவேன்...
காரின் வேகத்தைக் குறைத்தான் பாலாஜி.
லேட் பண்ணிடாதே.
பாக்கு கடிக்கிற நேரத்துல் கூட்டிகிட்டு வந்துடுவேன் ஸார்...
எங்கே நிறுத்தணும்...?
அந்த மைல் கல்லுக்குப் பக்கத்துல...
காரை ஒதுக்கி நிறுத்தினான் பாலாஜி. சீத்தாபதி காரின் கதவைத் திறந்து கொண்டு - இருட்டில் குதித்து ஓடினான். எஞ்சின் உதறிக் கொண்டிருந்தது. சந்தரிகா...!
ம்...
அந்தப் பொண்ணுக்கு நிலைமை எப்படியிருக்குன்னு பாரு...?
சந்திரிகா எட்டிப் பார்த்தாள். உடனே முகம் மாறி ஆச்சர்யப்பட்டாள். அந்தப் பெண்ணின் பம்மலான வயிற்றுப் பகுதி - இப்போது காணாமல் போயிருந்தது. எ... என்னங்க...?
பாலாஜி தோளைப் பற்றி உசுப்பினாள். ம்...
இந்தப் பொண்ணைப் பாருங்க...
பார்த்த பாலாஜி - முகத்தில் பெரிதாய் அதிர்ச்சியை வாங்கினான். காஞ்சனா! - என்று உள்ளுக்குள் இருதயம் பெரிதாய் அலறியது.
எ... என்னங்க... இ... இந்தப் பொ... பொண்ணுக்கு வயித்தையே காணோம். கார்க்குள்ளே படுக்க வைக்கும் போது - எவ்வளவு பெரிசா இருந்தது...?
பாலாஜியின் விழிகள் நிலைத்துப் போயிருந்தன.
'இவள் காஞ்சனா தானா...? இல்லை வேறு யாராவதா...?’
என்னங்க... உங்களைத்தானே...?
ம்...
இதுல என்னமோ மோசடி இருக்குங்க...
பாலாஜி காரினின்றும் பதட்டமாய் இறங்கி - பின்பக்க கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். இன் சைட் லேம்ப்பை பொருத்தி விட்டு - அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்தான்.
'இ... இவள் காஞ்சனாதான்... சந்தேகமே இல்லை. இவள் எதற்காக கர்ப்பஸ்திரி வேஷம் போட்டுக் கொண்டு - யார் அந்த சீத்தாபதி?'
ச. சந்திரிகா.
என்னங்க...?
இ. இ. இந்தப் பொண்ணை எ... எ... எனக்குத் தெரியும். இவ... இவ. பேரு காஞ்சானா...?
காஞ்சனாவா...?
ஆமா.
இவளை உங்களுக்கு எப்படித் தெரியும்...?
"அதை அப்புறமா சொல்றேன்...? மொதல்ல இவளை --- சொல்லிக் கொண்டே - காஞ்சனாவை புரட்டினான்.
முதுகில் அந்த கத்தி ஆழமாய் பாய்ந்து - கைப்பிடியின் பித்தளைப் பாகத்தை மட்டும் காட்டியது. அணிந்திருந்த வெளிர் நீல நிற ஜாக்கெட் முழுவதும் - உறைந்து போன ரத்தம்.
2
வால்பாறை. காலை ஆறு மணி.
குளிர்க்கு பயந்து கம்பளிக்குள் - பதுங்கியிருந்த தீபதரன் தலைக்குப் பக்கத்தில் உட்காந்திருந்த இண்டர்காமின் முணுமுணுப்புக் கேட்டதும் - கையை மட்டும் வெளியே நீட்டி ரிஸீவரை எடுத்தான்.
எஸ்...
குட்மார்னிங் ஸார்...
- மறுமுனையில் பி.ஏ. கிருஷ்ணா குரல் கொடுத்தான்.
குட்மார்னிங்...
ஸார்! நாம பேப்பர்ல குடுத்த விளம்பரத்தைப் பார்த்துட்டு பம்பாயிலிருந்து ஒரு பார்ட்டி வந்திருக்காங்க...
பேரு...?
வாலா வல்கர்...
அவர் மட்டுந்தான் வந்திருக்காரா...?
இல்லை ஸார்... அவரோட டாட்டரும் வந்திருக்காங்க...
எங்கே உட்கார்த்தி வெச்சிருக்கே?
ட்ராயிங் ரூம்ல...
சரி காப்பி ப்ரெவைட் பண்ணி - பேசிட்டிரு நான் குளிச்சிட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்...
"எஸ்...