Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siraiyil Oru Paravai
Siraiyil Oru Paravai
Siraiyil Oru Paravai
Ebook84 pages45 minutes

Siraiyil Oru Paravai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402143
Siraiyil Oru Paravai

Read more from Rajesh Kumar

Related to Siraiyil Oru Paravai

Related ebooks

Reviews for Siraiyil Oru Paravai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siraiyil Oru Paravai - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    சிறையில் ஒரு பறவை

    Siraiyil Oru Paravai

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிறையில் ஒரு பறவை

    ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    போலீஸ் ஜீப் துடைத்து வைத்த மாதிரிக் கிடந்த திவான்பகதூர் சாலையில் அந்தக் காலை வேளையில் சீறிக்கொண்டு போனது. ஜீப்புக்குள் இரண்டு கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள்.

    முன்புறம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனும், சப்-இன்ஸ்பெக்டர் முகுந்தனும் அமர்ந்திருந்தார்கள்.

    வானம் தன் முகத்துக்கு வெளிச்சத்தை பவுடர் மாதிரிப் பூசிக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

    கார்த்திகேயன் தன் ரிஸ்ட் வாட்சைப் பார்த்தார்.

    பால் பூத்களில் க்யூ வரிசைகள் தெரிந்தன. நாய்க் குட்டிகளுடன் சிலர் வாக்கிங் போனார்கள். பெட்டிக்கடை முகப்புகளில் கிழங்கள் பேப்பரும், அரசியல் அரட்டையுமாய்க் கண்ணில் பட்டார்கள்.

    ரத்தின விநாயகர் கோயிலில் தீபாராதனை விருட்டென்று தெரிந்து மறைந்தது.

    கார்த்திகேயன் கேட்டார்.

    ஃபோன் எப்ப வந்தது?

    முகுந்தன் பதில் சொன்னார்.

    கொஞ்சம் முன்னாடிதான், ஒரு பதினைஞ்சு நிமிஷம் இருக்கும்...

    ஃபோன் பண்ணினது யாரு?

    'வேலைக்காரப் பொம்பளை... சாரதான்னு பேர் சொல்லிச்சு."

    என்ன நடந்ததுன்னு தெரியலையா?

    அந்தப் பொண்ணு தெளிவா சொல்லலை... திக்கல் திணறலோட பேசினா... அவ சொன்ன விலாசம் புரிஞ்சது... அவளோட எஜமானியம்மாவுக்கு என்னவோ ஆபத்துன்னு புரிஞ்சுது... நிறைய பயந்து போயிருக்கா. உடனே வாங்க உடனே வாங்கன்னு மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னா...

    உங்களாலே ஏதும் கெஸ் பண்ண முடியுதா?

    முடியலை ஸார்.

    ஃபோன் வந்தது, டாக்டர் மோகன்குமார் வீட்டிலிருந்து! மோகன்குமார் ஊர்ல பெரிய டாக்டர் மட்டுமில்லை... நம்ம கமிஷனருக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் வேற. நாளைக்கு ஏதாவதுன்னா. கமிஷனர் நம்மைக் கூப்பிட்டுக் காயக் கூடாது பாருங்க...

    எத்தையெல்லாம் அனுசரிச்சுப் போக வேண்டியிருக்கு!

    முகுந்தன் சலித்துக் கொண்ட போது - ஜீப் ‘சர்ரக்’கென்று பிரேக் அடித்து அந்த பங்களாவை நோக்கித் திரும்பியது.

    காம்பவுண்ட் கேட் திறந்தே கிடக்க-

    க்ரோட்டன்ஸ் செடி வரிசைகளைக் கடந்து போர்டிகோவைத் தொட்டது ஜீப், போர்டிகோவில் மேற்பரப்பு முழுவதும் போகன்வில்லா கொடி ரோஸ்மில்க் நிறப் பூக்களோடு பூத்துக் கிடந்தது.

    சிட் அவுட்டிலிருந்து பதட்டத்துடன் ஓடி வந்தாள் அந்த வேலைக்காரி.

    இன்ஸ்பெக்டரய்யா. சீக்கிரமா வாங்க.

    பச்சை நிறத்தில் நூல் புடவையைச் சுற்றியிருந்தாள், வேலைக்காரி சாரதா, அழகாயிருந்தாள். அவளைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்கள் கார்த்திகேயனும் - முகுந்தனும்.

    பெரிய சைசில் ஹால் வந்தது.

    ஹாலின் தரை விரிப்பு நிறையக் கலைந்து போயிருந்தது. ஒன்றிரண்டு பிரம்பு நாற்காலிகள் தலை குப்புறக் கிடந்தன. ஷோகேஸ் கண்ணாடி - சில்லுகளாய்த் தரையில் உதிர்ந்து கிடந்தது. டீபாய் மேல் இருக்க வேண்டிய ஃப்ளவர் வாஸ் சுவர் ஒரமாய் உருண்டு கிடந்தது.

    என்ன நடந்தது...?

    வேலைக்காரியை அதட்டலாய்க் கேட்டார் கார்த்திகேயன்.

    அவளுடைய உடம்பு நடுங்கியது. அய்யா... நாலைஞ்சு பேர் திடும்னு வீட்டுக்குள்ளே வந்து... அம்மாவைக் கட்டிப் போட்டுட்டு... அய்யாவை...

    பேச முடியாமல் பீறிட்டு வந்த அழுகையைச் சேலைத் தலைப்பால் பொத்திக் கொண்டாள்.

    அம்மா எங்கே?

    சாரதா ஹாலை ஒட்டின பக்கவாட்டு அறைக்குள் நுழைந்தாள்.

    அம்மா இங்கதான் இருக்காங்க...

    அந்த அறையை நெருங்கிய போது-

    ம்... ம்....ம்... என்று பலஹீனமான

    Enjoying the preview?
    Page 1 of 1