Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karpura Bommaigal
Karpura Bommaigal
Karpura Bommaigal
Ebook95 pages50 minutes

Karpura Bommaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466077
Karpura Bommaigal

Read more from Rajeshkumar

Related to Karpura Bommaigal

Related ebooks

Reviews for Karpura Bommaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karpura Bommaigal - Rajeshkumar

    13

    1

    அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் டாக்டரம்மாவின் அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா.

    பெரிய கொண்டை போட்டு பளிச்சென்ற ஸ்டிக்கர் பொட்டோடு மெலிதான ரோஸ் நிற சேலையில் இருந்தாள் டாக்டரம்மாள் நித்யகல்யாணி. காலை ஏழு மணியிலிருந்து அவுட்பேஷண்ட்களைப் பார்த்ததில் ஒரு லேசான களைப்பு கண்களில் தொற்றியிருந்தது.

    உட்கார்ம்மா...

    நித்யகல்யாணி எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட பவித்ரா தயக்கமாய் உட்கார்ந்தாள்.

    சொல்லும்மா... என்ன உடம்புக்கு...

    டாக்டர் எனக்கு கல்யாணமாகி முணு மாசம்தான் ஆச்சு... இப்போ கன்சீவ் ஆகி இருக்கேன்... இவ்வளவு சீக்கிரத்தில் உண்டாவேன்னு எனக்குத் தெரியலை... எனக்கு இப்போ இந்தக் குழந்தை வேண்டாம்னு மனசுக்குப் படுது...

    ஏம்மா வேண்டாங்கறே...

    வேண்டாம் டாக்டர்...

    அதான் ஏன்னு கேக்குறேன்... ஒரு பொண்ணுக்கு இதை விட ஒரு பெரிய சந்தோஷம் இருக்க முடியுமா...

    நான் சந்தோஷப்படலாம் டாக்டர்... ஆனா என்னைப் பெத்தவங்க சந்தோஷப்படலையே...?

    என்னது உன்ன பெத்தவங்க சந்தோசபடலையா...?

    ஆமா டாக்டர்! மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அப்பா நாய் படாத பாடுபட்டு அங்கே இங்கே கடன் வாங்கி எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வெச்சார்... அந்தக் கடனே அவரோட கழுத்தைப் பிடிச்சிட்டிருக்கும்போது நான் உண்டாயிருக்கிற விஷயம் அவங்களுக்கு எப்படி சந்தோஷமா இருக்க முடியும்...? பிரசவ செலவு குழந்தை பொறந்தா அதுக்கு நகை செய்ய வேண்டிய செலவு இதையெல்லாம் என்னோட அப்பாவால தாக்குப் பிடிக்க முடியாது டாக்டர்... இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எனக்குக் குழந்தை பொறக்காமே இருக்கணும்...

    சொல்லும்போதே பவித்ராவுக்கு கண்களில் நீர் கட்டிக் கொண்டு நின்றது.

    நித்யகல்யாணி மேஜையின் மீது தன் இரு கைகளையும் ஊன்றியபடி கேட்டாள்.

    உன்னோட கணவர் வேலைக்குப் போறாரா இல்லை பிசினஸா...?

    வேலைக்குப் போறார்...

    எங்கே...?

    ஒரு சிட்பண்ட் கம்பெனியில் அவர் ஃபீல்டு ஆபிசர்...

    நீ குழந்தை உண்டாகியிருக்கிற விஷயம் உன் வீட்டுக்காரர்க்குத் தெரியுமா...?

    அவர்க்கு மட்டும்தான் தெரியும்... என்னோட மாமியாருக்கும் மாமனாருக்கும் தெரியாது...!

    கருவைக் கலைச்சிடலாம்னு உன்னோட வீட்டுக்காரர்கிட்டே சொன்னியா...?

    சொன்னேன்...

    அவர் அதுக்கு ஒத்துகிட்டாரா...?

    மொதல்ல அவர் ஒத்துக்கலை... அப்புறம் நான் நிலைமையை எடுத்துச் சொன்ன பிறகு சரி உன்னோட இஷ்டப்படி செய்துக்கன்னு சொல்லிட்டார். பார்மஸிக்குப் போய் மருந்து வாங்கி சாப்பிட்டேன்... ஒண்ணும் ஆகலே... இதை கணவர்கிட்டே சொன்னா... இருந்துட்டுப் போகட்டுமேன்னு சொல்லிடுவார்... அதான் உங்களைப் பார்க்க வந்தேன்...

    நித்யகல்யாணி ஸ்டெத்தை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டபடி கேட்டாள்.

    எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு...?

    இருபது நாள்...

    அப்படி அந்த மேஜை மேல ஏறிப்படும்மா...

    பவித்ரா போய்ப் படுத்தாள்.

    நித்யகல்யாணி சில நிமிஷங்களை எடுத்துக் கொண்டு சோதித்துப் பார்த்து விட்டுப் புன்னகைத்தாள்.

    கரு நல்லா ஃபார்ம் ஆயிடுச்சு... இனிமே மாத்திரையால ஒண்ணும் முடியாது...டி அண்ட் ஸி தான் பண்ணியாகணும்...

    பண்ணிடுங்க டாக்டர்...

    நாளைக்குக் காலையில ஆறு மணிக்கு எதுவும் சாப்பிடாம வெறும் வயித்தோட இங்கே வரணும்...

    வர்றேன் டாக்டர்...

    துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வந்துடு...

    பக்கத்து வீட்டுப் பொண்ணை கூட்டிகிட்டு வர்றேன்...

    வா...

    டாக்டர்...

    பவித்ரா தயங்கினாள்.

    என்ன...?

    ஃபீஸ் எவ்வளவாகும்...?

    இரண்டாயிரம்

    டாக்டர்... எனக்காக குறைச்சிக்க முடியாதா...?

    சரி... ஆயிரத்து ஐநூறு கொண்டா...

    பவித்ரா கை குவித்து நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தாள். காலை பத்து மணி வெய்யில் முகத்தைத் தீயாய்ச் சுட்டது. புறங்கழுத்து வியர்த்து வழிய வேகவேகமாய் நடை போட்டு ஹாஸ்பிட்டல் காம்பவுண்டைக் கடந்து ரோட்டோர மர நிழலில் நடந்தாள், ஐந்து நிமிஷ நடை.

    சிவப்பாய் பூத்துக் கொட்டிய அந்த மே ஃபிளவர் மரத்துக்குக் கீழே ஸ்கூட்டரோடு ஒரு பெண் நின்றிருக்க - அவளை நெருங்கினாள்.

    அந்தப் பெண் கேட்டாள்.

    "என்ன பவித்ரா... டாக்டரைப் பார்த்தியா...?

    பார்த்தேன் ரேணு...

    என்ன சொன்னார்...?

    நாளைக்குக் காலையில ஆறு மணிக்கெல்லாம் வந்துடணுமாம்...

    உன் மேல டாக்டரம்மமாவுக்கு எந்த சந்தேகமும் வரலையே...?

    வரலை...

    சரி... தாலியைக் கழட்டி வானிடி பேக்குக்கு போட்டுகிட்டு பில்லியன்ல ஏறி உட்கார்... கிளம்பலாம்...

    அந்த ரேணு சொல்ல பவித்ரா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கழுத்தில் இருந்த தாலியை தலை வழியாகக் கழற்றி ஸ்கூட்டரின் கிட் பாக்சில் இருந்த வானிடி பேக்குள் போட்டாள். பில்லியனில் ஏறி உட்கார்ந்தாள்.

    ஸ்கூட்டர் கிளம்பியது. ரேணு அதை மெதுவாய் விரட்டிக் கொண்டே கேட்டாள்.

    டி அன்ட் ஸி பண்ணணுமா இல்லை மாத்திரை சாப்பிட்டா போதுமா...

    டி அன்ட் ஸிதான் பண்ணணுமாம்

    புருஷனைக் கூட்டிட்டுவான்னு சொல்லலையா...?

    "அப்படிச் சொல்லலை... நாளைக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1