Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sandarpatthai Payanpaduthi Kol
Sandarpatthai Payanpaduthi Kol
Sandarpatthai Payanpaduthi Kol
Ebook126 pages26 minutes

Sandarpatthai Payanpaduthi Kol

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sandarpatthai Payanpaduthi Kol

Read more from Rajeshkumar

Related to Sandarpatthai Payanpaduthi Kol

Related ebooks

Related categories

Reviews for Sandarpatthai Payanpaduthi Kol

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sandarpatthai Payanpaduthi Kol - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    வீட்டின் எல்லா அறைகளுக்குள்ளும் சூரிய வெளிச்சம் நிரம்பி இரண்டு மணி நேரங்கள் கழிந்திருந்தது. நவீனா சமையலறைக் கடமைகளை முடித்து கேஸ் ஸ்டவ்வை உயிரிழக்கச் செய்து விட்டு - போன நிமிஷம் சூடு பண்ணின காபியை டம்ளரில் வார்த்துக் கொண்டு - எட்டாவது தடவையாக கணவன் விவேகானந்தனின் அறையை நோக்கி நடந்தாள்.

    கால் சதத்துக்கு ஒரு வயது குறைவாய்ப் பயணிக்கின்ற நவீனா விவேகானந்தனை அக்னி சாட்சியாய்க் கை பிடித்து போன மாதத்தோடு மூன்று வருஷங்கள் ஓவர். கு.க. கட்டாயமாய் அமல் படுத்தும் அவர்கள் வீட்டுக்குள் இன்னும் மழலைச் சத்தத்தை அனுமதிக்கவில்லை. எத்தனை சீவினாலும் பப்பென சிலும்பிக் கொள்கிற அலை போட்ட சுருள் கூந்தல் நவீனாவுக்கு. மொசைக் தனமாய் பளபளக்கும் உதடுகள். அதில் எப்போதும் ஈரம். ஆண்பாவம் சீதாவுக்கு இருக்கிற அதே விஷேசமான கண்கள், உடம்பின் இருபக்கமும் வழித்து விட்ட மாதிரியான தோள்கள். இளம் பச்சை டி.ஸி. ஸாரி உடலை கவ்வி ஜெயராஜின் ஓவியப் பிரதேசங்களை அப்பட்டமாய் காட்டியது.

    இரண்டு கதவுகளைக் கடந்து - வலது பக்கம் பெட்ரூம் தெரிய அதன் உள்ளே நுழைய நுழையவே, இரைந்தாள் நவீனா.

    எத்தனை தடவைதான் உங்களை எழுப்பறதோ...? என்னங்க! ஆஃபீஸ் போகணும்கற நினைப்பே யாதா...? இப்பவே மணி எட்டாச்சு... எட்டரை மணிக்கு நான் வேற ஆஃபீஸ் கிளம்பணும்... புது மேனேஜர் கருங் குரங்கு அஞ்சு நிமிஷம் லேட் ஆனா கூட உலக மகா தப்பு பண்ணின மாதிரி கத்தும்.

    போர்வைக்குள் இதமாய் முடங்கியிருந்த விவேகானந்தன் தலை மட்டும் தெரிய கொஞ்சமாய் போர்வையை விலக்கினான். டிஸ்கோ ஹேர் ஸ்டைல் கலைந்திருந்தது. தூங்கி அப்போது தான் எழுந்த முகத்தில் கூட ஒருவித ஈர்ப்பு இருந்தது. விழியோரங்களில் கொஞ்சமாய்த் தூக்கத் தேக்கம், ரகுமான் தனமாய் மோவாய், மீசைப் பகுதி எல்லாமே சுத்தம் பண்ணின சலவைக்கல் தரையாய் வழவழத்தது. நவீனாவைப் பார்த்துப் புன்னகைத்தபோது பிசகியிருக்காத பல்வரிசை தெரிந்தது.

    ஹாவ் என்ற கொட்டாவிக்குப் பின் பேசினான்.

    இன்னொரு அரை மணி நேரம் நவீன்...

    ந்நோ... தலையணையால் அடிப்பேன்...

    காஃபியை டீபாயின் மேல் வைத்தாள்.

    ம்... எந்திரிங்க...! எந்திரிங்க... என் தூங்கு மூஞ்சிக் கணவனே! சொல்லிக் கொண்டே அவனோடு தலையனை யுத்தத்துக்கு தயாரான மாதிரி புடவைத் தலைப்பை இழுத்துச் சொருகினாள் நவீனா. அந்தச் சொருகலில் இடுப்பு அபார வளைவோடு தெரிந்தது.

    அஞ்சே நிமிஷம் நவீனா... என்ற முனகலோடு மறுபடியும் படுக்கைக்குள் முடங்கிய விவேகானந்தனை - 'தொம்மென அவன் கால்மாட்டிலிருந்த தலையணையை எடுத்து சாத்தினாள், கத்தினாள்.

    அப்புறம் நான் விட்டுட்டு ஆஃபீஸ் போயிடுவேன்... நீங்களேதான் குளிக்கணும், சாப்பிடணும்... புறப்படணும்... நவீனா துண்டு கொண்டா... நவீனா இன்னும் இரண்டு இட்லி... நவீனா இந்த சீப்பு சனியன் எங்கே தொலைஞ்சதுன்னு தொட்ட தொண்ணூறுக்கு என்னைக் கூப்பிட்டா நான் இருக்க மாட்டேன்...

    அப்பா... விட மாட்டியே...! மனுஷனை கொஞ்ச நாழி தூங்க விடமாட்டியே...?

    சலித்துக் கொண்டே சொன்னபடி போர்வையை முழுசுமாய் விலக்கி கட்டில் மேலேயே கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்தான். நவீனா டீபாயின் மேல் வைத்த காபியை நீட்டினாள். வாங்கி உதட்டுக்கு கொடுத்தபடியே சொன்னான்.

    நவீனா... இன்னிக்கு நீ புறப்பட்டு சீக்கிரம் போ... நான் இனி குளிச்சு ரெடியாகறதுக்குள் உனக்கு லேட் ஆயிடும்... மணிக்கட்டை பார்த்த நவீனாவின் கண்களில் 8.10 பதிவாக -

    வாஸ்தவம்தான் என்ற உணரலோடு புறப்பட ஆரம்பித்தாள். அவசர அவசரமாய் பவுடரை டச் பண்ணினாள். நேற்று ராத்திரியே தீர்மானித்து வைத்திருந்த ஊதாநிற பெரிய பூக்கள் சிதறியிருக்கும் ஷிபானை உடலுக்கு சமர்ப்பித்தாள். - நாலைந்து இட்லி விள்ளல்களில் காலை டிஃபனை முடித்துக் கொண்டு -

    விவேகானந்தனுக்கும் தனக்கும் இரண்டு காரியர்களில் மதிய உணவை அடைத்து நிமிர்ந்த போது - நேரம் 8.27 ஆகியிருந்தது.

    என்னங்க... நவீனாவின் அழைப்புக்கு பதில் குரல் பாத்ரூமுக்குள்ளிருந்து வந்தது.

    என்ன நவீனா...?

    கதவருகே போய்ப் பேசினாள்.

    டேபிள் மேல இட்லி தட்டு இருக்கு... பேருக்கு கொறிக்காம வயிறு நிரம்ப சாப்பிட்டுப் போங்க... அங்கேயே டிஃபன் காரியரும் பையில் போட்டு வெச்சிருக்கேன்... சரியா?

    ம்...

    இல்லைன்னா காரியரை எடுத்து ஸ்கூட்டர் பாக்சில் வெச்சிடவா...?

    ம்...

    அப்ப நான் கிளம்பறேன்...

    ம்...

    "எல்லாத்துக்கும் உணர்ச்சியே இல்லாம 'ம்ம் ' என்று

    Enjoying the preview?
    Page 1 of 1