Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akkarai Sivappu
Akkarai Sivappu
Akkarai Sivappu
Ebook78 pages29 minutes

Akkarai Sivappu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Akkarai Sivappu

Read more from Rajeshkumar

Related to Akkarai Sivappu

Related ebooks

Related categories

Reviews for Akkarai Sivappu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akkarai Sivappu - Rajeshkumar

    1

    நித்யா சப்தமிடும் டெலிபோனின் ரிசீவரை ஆவலோடு வாரி எடுத்தாள்.

    இருபத்தியொரு வயது நித்யா. இளமை அவள் உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் விசா வாங்கிக்கொண்டு குடியேறி இருந்தது. பால்கோவா நிற நெற்றி மையத்தில் வசீகரமாய்க் குங்குமப் பொட்டு, சங்குக்கழுத்தில் தங்கச்சங்கிலியோடு கனமான தாலிக்கொடியும் தவழ்ந்தது.

    ஹலோ... குரல் ஐஸ் வாட்டர் குளிர்ச்சியுடன் ரிசீவரில் இறங்கியது.

    ஹலோ நித்யாவா...?

    மறுமுனையிலிருந்து பரபரப்பாய் மனோஜின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவதைப் போல் வெகு ஆழத்தில் கேட்டது.

    பரபரப்பு நித்யாவையும் தொற்றிக் கொண்டது.

    அவன் குரலைக் கேட்ட சந்தோஷத்தில் மூச்சுத் திணறப் பேசினாள்.

    நித்யாதாங்க பேசறேன்... எப்படி இருக்கீங்க...?

    நல்லாயிருக்கேன்... நீ...?

    ம்... இருக்கேங்க...

    உன் அண்ணன் சிவா...?

    அவரும் நல்லாருக்கார்.

    போன வாரம் நான் அனுப்பி வெச்ச பணம் கைக்கு வந்து சேர்ந்ததா... என்கேஷ் பண்ணிட்டீங்களா...?

    ம்...

    வரி நீங்கலாக ஐந்து லட்சத்தி சொச்சம்...! என்னோட ஒருவருஷத்திய உழைப்பு... என்ன சுரத்தே இல்லாம ஒரு ‘ம்’...?

    நமக்குக் கல்யாணமாகி இன்னியோட சரியா ஒரு வருஷம் ஆயிடுச்சுங்க... ஆனா முழுசா ஒரு மாசம்கூட நாம சேர்ந்து இருக்கலை. அரைகுறையா ஹனிமூன். துபாயில் வேலை கிடைச்சு மூணாவது வாரமே நீங்க ஃப்ளைட்ல அபுதாபிக்குப் பறந்துட்டீங்க... லெட்டர்ல உங்க கையெழுத்து... போன்ல உங்க குரல்... இதான் நான் கண்ட தாம்பத்யம்...

    நித்யா...

    நமக்கு ஒரு வாரம் கழிச்சுக் கல்யாணம் ஆச்சே உங்க சித்தப்பா மக பத்மா... அவளுக்கு கொழுக் மொழுக்ன்னு அழகா ஒரு பையன் பொறந்திருக்கான்...

    நித்யா வாழ்க்கைக்குப் பணம் முக்கியமில்லையா?- பணம் இருந்தாத்தான் நாலு பேர் நம்மை மதிப்பாங்க. எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா என்ன...? நிறைய இருக்கு... ஆனா நம்ம குழந்தையை நம்மை மாதிரியே மிடில் கிளாஸ் கஷ்டங்களோட ஏனோதானோன்னு வளர்க்கறதில் எனக்குக் கொஞ்சமும் இஷ்டம் இல்லை... கேட்டதெல்லாம் வாங்கித் தரணும்... நிராசையேகூடாது... அதுக்கு நிறைய பணம் வேணும்... அந்தப் பணத்தை சம்பாதிக்கத்தான் பல்லைக் கடிச்சுகிட்டு இந்தப் பாலைவனத்தில் இருக்கேன்...

    நீங்க ஆயிரம்தான் காரணம் சொல்லுங்க... என் நெஞ்சில் சுத்தமா நிம்மதியில்லைங்க... இன்னிக்கு நம்ம முதல் வெட்டிங் டே... நாளும் கிழமையுமா உங்களோட ஒண்ணா சேர்ந்து கோயிலுக்குப் போறதுக்குக்கூட விதியத்தவளா இருக்கேனே...

    பேசப் பேசவே உடைந்து போய்க் குலுங்கி அழ ஆரம்பித்தாள் நித்யா.

    ஏய் நித்யா... அழாதே...

    விசித்துக்கொண்டே குமுறினாள். எப்படிங்க அழாம இருக்க முடியும்...?

    காம் டவுன் ப்ளீஸ். இன்னிக்கு நம்ம கல்யாண நாள்ன்னுதான் ஆசை ஆசையா உனக்கு கால் பண்ணினேன்... நீ இப்ப என் மூடையும் சேர்த்து ஸ்பாயில் பண்றே...

    நித்யா அழுகை வெள்ளத்திற்குப் பிரயத்தனப்பட்டு அணை போட்டாள்.

    மனசு தாளாம அழுதுட்டேன்... என்னை மன்னிச்சுக்குங்க... எனக்காவது ஆறுதல் சொல்ல அண்ணன் இருக்கார்... நீங்க பாவம் கண்காணாத தொலைவில் தன்னந்தனியா பாடுபட்டிருக்கீங்க... உங்களை நான் மூட் அவுட் பண்ணலை...

    குட்... இப்பத்தான் நீ நல்ல பொண்ணு... மொதல்ல கண்ணு ரெண்டையும் துடைச்சிக்கோ...

    ம்... துடைச்சிட்டேன்...

    ரெடியா...?

    என்ன ரெடியா?

    உனக்கு இப்ப நான் ஒரு கல்யாண நாள் பரிசு தரப் போறேன்... அதை வாங்கிக்க நீ ரெடியான்னு கேட்டேன்.

    குப்பென்று ரோஜா இதழ்களைப் போல் முகம் சிவந்தாள் நித்யா.

    தெரியும்... நீங்க என்ன பரிசு தருவீங்கன்னு எனக்குத் தெரியும்...

    "தெரியுமா...? உன் குரல்ல என்ன இவ்வளவு வெட்கம்...? அபுதாபியிலிருந்து பேசறப்பவே இப்படி வெட்கப்படறவ நேருக்கு நேரா

    Enjoying the preview?
    Page 1 of 1