Raja Ragasiyam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Raja Ragasiyam
Related ebooks
Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Thalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratings1+1=0 Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Vida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsDinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Vilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Vidindhal Iravu Rating: 5 out of 5 stars5/5Ootha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Monalisa (Punnagai) Azhugai Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Thedungal Kidaikkathu and Indiya Nadu En Vedu-II Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum Vivek! Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKaatru Urangum Neram... Rating: 5 out of 5 stars5/5Minnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5Thirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Meendum Vivekin Visparoopam Rating: 3 out of 5 stars3/5Vivek Irukka Payamen-II Rating: 4 out of 5 stars4/5Vivek Never Out Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Raja Ragasiyam
0 ratings0 reviews
Book preview
Raja Ragasiyam - Rajeshkumar
23
1
நமது மூலாதாரத்தில் சுருண்ட பாம்பின் வடிவில் உறங்கிக் கொண்டிருக்கும் சக்தியே குண்டலினி சக்தி எனப்படும். இக்குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தால் வியக்கத்தக்க அனுபவங்களைப் பெறலாம். விபரீதமான யோகங்களையும் பெறலாம். இறைவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் ஏணியாகவும் இந்த குண்டலினி சக்தியை உபயோகித்துக் கொள்ளலாம்.
சென்னை ஹைகோர்ட்.
பதினைந்தாவது சேம்பர். காலை பதினொன்றரை மணி. ஜட்ஜ் தெய்வநாயகம் இருக்கைக்கு சற்றே சாய்ந்து உட்கார்ந்து இடது கை விரல்களை கன்னத்துக்கு முட்டுக்கொடுத்தபடி லாயர் ராஜராஜனின் ஆவேசமான ஆர்க்யூமெண்ட்டை உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்.
யுவர் ஆனர்... வரதட்சணைக் கொடுமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அந்தக் குற்றத்தைச் செய்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே... இதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் சில சமயம் அந்த சட்டம் நேர்மையான சிலர் மீதும் பாய்ந்து அவர்களைக் குதறிவிடுவதுதான் கொடுமை. இது ஒரு வக்கீல் என்கிற முறையில் என்னுடைய கருத்து மட்டுமல்ல. பொது மக்களின் ஒட்டுமொத்த கருத்துமாகும். இன்றைக்குக் காலை வந்த ஒரு நாளிதழில் வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களை கோர்ட்டார்க்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். பெண்கள் கூறும் புகார்களை விசாரித்து அவர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மகளிர் காவல் நிலையம் இன்று பெண்களாலேயே தவறாக பயன்படுத்தப்படுகிறது. மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் வழக்குகளில் பெரும்பாலும் கணவன் - மனைவி பிரச்னையாகத்தான் இருக்கிறது. இவர்களுக்கிடையில் எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் மனைவியானவள் உடனே மகளிர் காவல் நிலையத்துக்குப் போய் ‘வரதட்சணைக் கொடுமை’ என்று ஒரே வரியில் புகார் மனு கொடுத்துவிடுகின்றாள். அதுவும் கணவன் மீது மட்டுமல்ல... அவனது பெற்றோர், நாத்தனார், கொழுந்தனார் உட்பட புகார் கொடுக்கப்பட்டவுடன் மகளிர் போலீஸார் அவ்வளவு பேரையும் கைது செய்து உள்ளே தள்ளிவிடுகின்றனர். இவர்கள் குறைந்தபட்சம் அறுபது நாட்களாவது சிறையிலிருந்துவிட்டு பின் ஜாமீனில் வெளியே வந்து ‘நாங்கள் வரதட்சணைக் கொடுமை செய்யவில்லை இது கணவன் மனைவி சம்பந்தப்பட்ட பிரச்னை’ என்பதை அரும்பாடுபட்டு நிரூபிக்க வேண்டும்.
கோர்ட் அமைதியில் உறைந்து போயிருக்க ராஜராஜன் தன் கறுப்பு கவுனை சரியாய் இழுத்துவிட்டுக்கொண்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
"இது எந்த அளவுக்கு மோசமாகப் போய்விட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சேலத்தில் ஒரு மருமகள் தன்னுடைய மாமனார், மாமியார் மீது வரதட்சணைப் புகார் கொடுத்ததால் அந்த வயதானவர்கள் தங்கள் வளர்ப்பு நாயுடன் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயுள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை? அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியது யார்... அந்த மருமகள்தானே...? மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமை என்று ஒரு பெண் புகார் கொடுத்தால் உண்மையிலேயே அது வரதட்சணைக் கொடுமைதானா என்பதை அக்கம் பக்கத்து வீடுகளில் முதல்கட்ட விசாரணையை நடத்தி முடித்த பிறகுதான் கைதுக்குப் போக வேண்டும். போலீஸார் ஒன்றுமே விசாரிக்காமல் எடுத்தவுடன் கைது, அதன்பின் ஜாமீன், அதன்பின்தான் விசாரணை என்பதால் ஐம்பது சதவீத நிரபராதிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தின் காரணமாக சில பெண்கள் கணவர் வீட்டில் வேறு எந்த விதமான சிக்கல் பிரச்னை என்றாலும்கூட ‘வரதட்சணைக் கொடுமை என்று போலீஸில் சொல்லி விடுவேன்’ என்று பிளாக்மெயில் செய்கின்றனர். ஆகையால் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் புகார்களைத் தீர விசாரித்த பின்னரே கைது நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும். எத்தனையோ வயதான பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செய்தபின் அவனுக்கு வரும் மனைவி மூலமாகவா அவர்கள் சிறைக்குப் போக வேண்டும்...? உண்மையான குற்றத்தை - குற்றவாளியை சட்டம் சத்தம்போட்டு தண்டிக்கலாம். ஆனால் அதே சட்டத்தால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.’
பேச்சை நான்கைந்து விநாடிகளுக்கு நிறுத்திய ராஜராஜன் தொடர்ந்து குரலை உயர்த்திப் பேசினான். மிலாட்...! நான் இப்போது சொன்னது பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு வாசகரின் மனக் குமுறல். அந்த வகையில் பார்த்தால் இப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் என்னுடைய கட்சிக்காரர்களான வையாபுரி அவர்களும், அவருடைய மனைவி ராஜலட்சுமியும், இந்த இருவரின் மகன் குணசீலனும் நிரபராதிகள். குணசீலனின் மனைவியான அகிலா தன்னுடைய தனிப்பட்ட சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மாமனார், மாமியார் மீதும், கணவன் மீதும் ‘வரதட்சணைக் கொடுமை’ என்ற பழியைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இவர்கள் மீது வேண்டுமென்றே அகிலா மகளிர் போலீஸில் பொய்ப்புகார் கொடுத்து இருக்கிறார்.
ஜட்ஜ் குறுக்கிட்டு கேட்டார். அது பொய்ப்புகார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் மிஸ்டர் ராஜராஜன்...?
அது பொய்ப்புகார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது யுவர் ஆனர்...
என்ன ஆதாரம்...?
மூன்று மாதங்களுக்கு முன்னால் அகிலா தன்னுடைய அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் தான் கணவர் வீட்டில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், மாமனாரும் மாமியாரும் தன்னை சொந்த மகள் போல் பார்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மகளிர் காவல் நிலையத்தில் அவர் எழுதிக் கொடுத்த புகாரில் கடந்த ஆறுமாத காலமாக மாமனாரும், மாமியாரும், கணவரும் தன்னை துன்புறுத்துவதாக சொல்லியுள்ளார். இந்த ஒரு விஷயத்திலேயே எவ்வளவு பெரிய முரண்பாடு இருக்கிறது என்பதை கோர்ட்டார் கவனிக்க வேண்டும்.
"அகிலா தன்னுடைய பெற்றோர்க்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதம் உங்களிடம் இருந்தால் அதை கோர்ட்டில் ஒப்படையுங்கள். அதை