Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nanthini Nalai Irakkiral!
Nanthini Nalai Irakkiral!
Nanthini Nalai Irakkiral!
Ebook117 pages40 minutes

Nanthini Nalai Irakkiral!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nanthini Nalai Irakkiral!

Read more from Rajeshkumar

Related to Nanthini Nalai Irakkiral!

Related ebooks

Related categories

Reviews for Nanthini Nalai Irakkiral!

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nanthini Nalai Irakkiral! - Rajeshkumar

    23

    1

    ஜெயராஜ்...

    ம்...

    என்ன முடிவுக்கு வந்திருக்கீங்க...?

    அதான் யோசனை பண்ணிட்டிருக்கேன் பிரபா...

    பெரிசா என்ன யோசனை வேண்டிக் கிடக்கு...? என்கூட ஊட்டி வர உங்களுக்குப் பிடிக்கலையா...?

    என்னது... பிடிக்கலையாவா...? துடிச்சிட்டிருக்கேன்...

    பின்னே என்ன யோசனை?

    நந்தினிகிட்டே என்ன பொய்யைச் சொல்லிட்டு வர்றதுன்னுதான்...! அவ முன்னே மாதிரியில்லை. எதிர்க் கேள்வி நிறைய கேக்கிறா... அடிக்கடி ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி நான் சீட்ல இருக்கேனா, இல்லையான்னு... டெஸ்ட் பண்ணிக்கிறா...

    இருந்தாலும் பெண்டாட்டிக்கு நீங்க ரொம்பத்தான் பயப்படறீங்க ஜெயராஜ்... பொருத்தமா ஏதாவது பொய்யைச் சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதானே...?

    நீயே ஒரு பொய்யைச் சொல்லேன்...

    பிரபா தன் அழகான நெற்றியை- நெயில் பாலீஷ் பூசப்பட்ட இடது கை விரல்களால் தேய்த்துக் கொண்டே யோசித்தாள். சில விநாடிகளுக்குப் பின் நிமிர்ந்தாள்.

    சேலத்துல ஆபீஸ் கொலீக் ஒருத்தருக்கு மேரேஜ்... கண்டிப்பா போகணும்னு சொல்லுங்களேன்...

    ஜெயராஜ் சிரித்தான்.

    என்ன சிரிக்கறீங்க...?

    இது என்ன மாசம்...?

    அக்டோபர்...

    தமிழ்ல என்ன மாசம்...?

    புரட்டாசி...

    புரட்டாசியில் யாராவது கல்யாணத்தை பண்ணுவாங்களா...? அதுவுமில்லாம இன்னிக்கு அஷ்டமி. நாளைக்கு நவமி...

    இதெல்லாம் வேற யோசிக்கணுமா...?

    பின்னே...? பொய் சொல்றதாயிருந்தாலும் பொருத்தமா சொல்லணும்... இல்லேன்னா எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதுதான்...

    இப்படி சொல்லிப் பாருங்களேன்...

    எப்படி...?

    நாளைக்கு ஈரோடு ஆபீஸ் பிராஞ்ச்சில் ஒரு ஆடிட்டிங்...! அந்த ஆடிட்டிங் குழுவில் நானும் ஒருத்தன். கண்டிப்பா அட்டெண்ட் பண்ணியே ஆகணும்னு சொல்லுங்களேன்...

    நம்புவாளா... நந்தினி...?

    நம்பற மாதிரி சொல்லுங்க...

    ஓ.கே... கிளம்பலாமா...?

    ம்...

    அரையிருட்டான ரெஸ்டாரெண்டிலிருந்து ஜெயராஜும், பிரபாவும் வெளிப்பட்டு- சிப்ரஸ் மரத்துக்கு கீழே இருந்த பியட் காருக்கு வந்தார்கள்.

    காரை மாத்தப் போறதா சொன்னீங்க ஜெயராஜ்...

    ஆமா...

    எப்போ...?

    கூடிய சீக்கிரமே...

    என்ன காரை வாங்கப் போறீங்க...?

    மாருதி தௌஸண்ட்...

    ஒய் நாட்... காண்டஸா...?

    நந்தினிக்கு- காண்டஸா பிடிக்கலை...

    பியட்டுக்குள் நுழைந்தார்கள். ஜெயராஜ் காரை கிளப்பிக் கொண்டே கேட்டான்.

    பிரபா! உன்னை எங்கே ட்ராப் பண்ணட்டும்...?

    கௌலிப்ரவுன் ரோடு கார்னர்ல...

    கார் விரைந்தது. பிரபா, ஜெயராஜின் தோளோடு இழைந்து கொண்டே கொஞ்சினாள்.

    அடுத்த மாசம் தீபாவளி. ஞாபகமிருக்கா...?

    ம்...ம்...

    அஞ்சு பவுன்ல கல் பதித்த நெக்லஸ் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கீங்க... அதுவும் ஞாபகமிருக்கா...?

    ம்...ம்...

    நெக்லஸ் எப்போ என் கழுத்துக்கு வரும்...?

    தீபாவளிக்கு முந்தின ராத்திரி...

    அதுக்கு முந்தியே என் கழுத்துக்கு வந்தா என்னவாம்...?

    சரி... உனக்கு எப்ப வேணும்...?

    அடுத்த வாரம்...

    அவ்வளவுதானே...? அடுத்த வாரம் இந்நேரம் உன் கழுத்துல அந்த நெக்லஸ் இருக்கும்...

    ஜெயராஜின் முகத்தை இழுத்துப் பிடித்து- ‘ப்ப்ச்’சென்று முத்தமிட்டாள்.

    ஆஹா... இன்னொண்ணு...

    அவ்வளவுதான்... சிரித்தாள் அவள்.

    பிரபா...

    ம்...

    வீட்டுக்குப் போக எனக்கு மனசேயில்லை...

    எனக்கு மட்டும் என் வீட்டுக்குப் போக இஷ்டமாக்கும்...?

    நந்தினியைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருது... பிரபா!

    ஏன், உங்க மனைவி அழகாத்தானே இருக்கா...?

    அழகாத்தான் இருக்கா... ஆனா... எனக்கென்னமோ அவளைப் பிடிக்கலை...

    பின்னே ஏன் கல்யாணம் பண்ணிட்டீங்க...?

    சொத்து கிடைக்குதேன்னுதான்... அவ கழுத்துல நான் தாலி கட்டியிருக்கலேன்னா... இந்தக் கார் ஏது? பங்களா வாசம் ஏது...?

    உங்க மனைவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஜெயராஜ். ஹோம்லி ஃபேஸ். அந்தக் கண்ணும் பல் வரிசையும் அம்சம்...

    கார் லாலி ரோட்டை வெட்டிக் கொண்டு கௌலிபிரவுன் ரோட்டுக்குள் நுழைந்து- ஓரமாய் ஒதுங்கியது.

    எங்கே நிறுத்தட்டும்...?

    அதோ... அந்தக் கார்னர்...

    அவள் சொன்ன இடத்தில் கார் போய் நின்றதும் பிரபா இறங்கிக் கொண்டாள். அப்ப நாளைக்கு காலையில்...?

    "ஆறு மணிக்கெல்லாம்...

    Enjoying the preview?
    Page 1 of 1