Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Astami Ratthirigal
Astami Ratthirigal
Astami Ratthirigal
Ebook151 pages45 minutes

Astami Ratthirigal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Astami Ratthirigal

Read more from Rajeshkumar

Related to Astami Ratthirigal

Related ebooks

Related categories

Reviews for Astami Ratthirigal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Astami Ratthirigal - Rajeshkumar

    22

    1

    வெள்ளிக்கிழமை கிழக்குத் திசையில் அரும்பிக் கொண்டிருந்தது. வைகறை வேளை. மணி 5.45.

    மொட்டை மாடியில் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த அஜய் கீழே எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

    பூர்ணி...

    இதோ... வந்துட்டேன்ங்க... கீழே கிச்சனிலிருந்து குரல் வந்தது.

    "எனக்கு காப்பி ரெடியா...?'

    உங்களுக்குக் காப்பி பால்காரன் வந்தாத்தான்.

    "பால் வர இன்னும் எவ்வளவு நேரமாகும்...?'

    எப்படியும் ஒரு அரைமணி நேரமாயிடும்.

    என்னது! அரை மணி நேரமா...? அம்மாடி! என்னால தாங்கிக்க முடியாது. நான் பொடி நடையா தெருமுனையில் இருக்கிற டீக்கடைக்குப் போய் ஒரு டீயாவது குடிச்சுட்டு வந்துடறேன். இந்த உலகத்துல ஆக்சிஜன் இல்லாமே கூட உயிர் வாழ்ந்துடலாம். காலையில காப்பி டீ குடிக்காமே உயிர் வாழவே முடியாது...

    அந்த முப்பது வயது அஜய் ஜாக்கிங் செய்வதை நிறுத்திவிட்டு மாடிப்படிகளில் இறங்கி வந்தான்.

    அந்த நேரத்துக்கே குளித்து முடித்திருந்த பூர்ணி தலைக்கு டவலைச் சுற்றிக் கொண்டு வாசலில் கோலம் போடக் கிளம்பிக் கொண்டிருந்தாள். இருபத்தி மூன்று வயது பூர்ணிக்கு மாநிறத்துக்கும் சற்றே குறைவான நிறம் என்றாலும் திருத்தமாக இருந்தாள். முகத்துக்குப் பூசியிருந்த மஞ்சள் இப்போது ஒரு எக்ஸ்டரா அழகைக் கொடுத்தது.

    "பூர்ணி...! அதுக்குள்ளே குளிச்சுட்டியா?'

    'பின்னே! இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஆறரை மணிக்குள்ளே கோயிலுக்கு வேற போயாகணும். வீர மாத்ரே அம்மன் கோயில்ல இன்னிக்கு ரொம்பவும் விசேஷமாயிருக்கும். சுமங்கலி பூஜை வேற..."

    சரியாப் போச்சு...

    ஏங்க...?

    நீ கோயிலுக்குப் போய்ட்டு திரும்ப எப்படியும் ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும். நீ எப்ப டிபன் பண்ணிக்க கொடுத்து நான் எப்ப ஆபீஸ் கிளம்பிப் போறதாம்...?

    கவலையே படாதீங்க...! கோயிலுக்குப் போறதுக்கு முந்தி உங்களுக்கு டிபன் பிரிப்பேர் பண்ணி வெச்சுடுவேன்.

    அவ்வளவு சீக்கிரத்துல என்ன டிபனை உன்னால பிரிப்பேர் பண்ணிக் கொடுக்க முடியும்?

    "பூர்ணி சிரித்தாள்.

    உங்களுக்குத் பிடிச்ச டிபன் தான் அது...

    என்ன டிபன்?

    நேத்து ராத்திரி மீந்து போன இட்லிகளைப் பொடி பண்ணி உப்புமா மாதிரி...

    பூர்ணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே படுக்கையறையிலிருந்த டெலிபோன் மெலிதாய் சிணுங்கி சிணுங்கிக் கூப்பிட்டது.

    "இவ்வளவு காலையில யார் போன் பண்றதுன்னு தெரியலையே...?'

    அஜய் தனக்குள் முணகிக் கொண்டே போய் ரிசீவரை எடுத்துக் காதுக்கு ஒட்ட வைத்தான்.

    ஹலோ...

    மறுமுனையில் ஒரு கரகரப்பான ஆண் குரல் கேட்டது.

    அது அஜய் வீடா...?

    ஆமா...

    மதுக்கரையில் நீங்க இப்போ புதுசா வீடு கட்டிக்கிட்டு இருக்கீங்க இல்லையா...?

    ஆமா...

    அந்த சைட்டுக்கு நீங்க இப்போ கொஞ்சம் வந்துட்டுப் போக முடியுமா...?

    எதுக்கு...?

    வாங்க சொல்றேன்.

    பேசற நீங்க யார்ன்னு சொல்லவே இல்லையே.

    போலீஸ்

    போ...போலீஸ்...? அஜய் குரல் விக்கியது.

    எஸ்... நான் இன்ஸ்பெக்டர் பாலவர்மா பேசிட்டிருக்கேன்...

    இ... இன்ஸ்பெக்டர்...! என்னோட சைட்டுக்கு என்னை எதுக்காக வரச் சொல்றீங்க...? அங்கே ஏதாவது பிரச்சனையா?

    போன்ல எதையும் சொல்லிட்டிருக்க முடியாது. ப்ளீஸ் கம் டூ த சைட்...

    மறுமுனையில் இன்ஸ்பெக்டர் ரிசீவரை வைத்து விட அஜய் லேசாய் வியர்வை பூத்த முகத்தோடு பக்கத்து நாற்காலிக்கு சாய்ந்து உட்கார்ந்தான்.

    போன்ல யார்ங்க...? — பூர்ணி.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் பேசினார். 'மதுக்கரையில் நீங்க இப்போ புதுசா வீடு கட்டிக்கிட்டு இருக்கீங்க இல்லையா'ன்னு கேட்டார். நான் 'ஆமா'ன்னு சொன்னதும் அவர் உடனே என்னை சைட்டுக்குப் புறப்பட்டு வரும்படியா சொல்றார்.

    பூர்ணி பதட்டமாகிக் கவலையான குரலில் கேட்டாள்.

    விஷயம் என்னான்னு சொன்னாரா?

    சொல்லலை... 'போன்ல எதையும் சொல்லிட்டிருக்க முடியாது. நேர்ல வாங்க'ன்னு சொல்றார்.

    பூர்ணி கலவரமானாள்.

    என்னங்க இது... வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலங்கார்த்தால போலீஸ்... அது... இதுன்னு ஏதோ பிரச்சனை ஆரம்பமாகுது...

    பயப்படாதே...! நாம எந்தத் தப்பும் பண்ணாத போது போலீஸைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் போய் என்னான்னு பார்த்துட்டு வர்றேன்.

    என்னங்க...! நானும் உங்க கூட வர்றேன்.

    நீ எதுக்கு! வேண்டாம்...! வீட்லயே இரு. நான் போய் இன்ஸ்பெக்டரைப் பார்த்து விபரம் என்னான்னு தெரிஞ்சிட்டு வர்றேன்...

    இல்லீங்க...! விஷயம் என்னான்னு தெரியற வரைக்கும் என் மனசுக்கு நிம்மதி இருக்காது. புறப்படுங்க ஒண்ணாவே போய் பார்த்துட்டு வந்துடலாம்...

    அடுத்த பத்து நிமிஷத்திற்குள் அஜய் - பூர்ணி இரண்டு பேரையும் சுமந்து கொண்டு யமஹா பைக் சிட்டியின் அவுட்டரில் இருந்த மதுக்கரையை நோக்கிப் பயணமாயிற்று.

    அந்த விடியற்காலை வேளையில் கோவை நகர வீதிகள் வெறிச்சோடிப் போய்க் கிடக்கக் கார்ப்பரேஷனின் சோடியம் வேப்பர் விளக்குகள் இன்னமும் மின்சாரத்தைத் தின்று ஆரஞ்சு வண்ண வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.

    பைக்கின் பில்லியனில் உட்கார்ந்திருந்த பூர்ணி அஜய்யின் தோளை நடுக்கமாய்த் தொட்டாள்.

    என்னங்க...

    ம்...

    "போலீஸ் எதுக்காக வரச் சொல்லியிருப்பாங்கன்னு உங்களால ஏதாவது கெஸ் பண்ண முடியுதா...?'

    நானும் அதைப்பத்தித்தான் யோசனை பண்ணிட்டிருக்கேன்...

    'பக்கத்து லேண்ட்காரன் வேலி போடற விஷயமா ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க கூட சண்டை போட்டானே...? அது விஷயமா அவன் போலீஸுக்குப் போய் ஏதாவது கம்ப்ளைய்ண்ட் பண்ணியிருப்பானோ...?'

    "அப்படியே அவன் கம்ப்ளைய்ண்ட் பண்ணியிருந்தாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1