Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugal Inge Virkkapadum
Kanavugal Inge Virkkapadum
Kanavugal Inge Virkkapadum
Ebook87 pages1 hour

Kanavugal Inge Virkkapadum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466176
Kanavugal Inge Virkkapadum

Read more from Rajeshkumar

Related to Kanavugal Inge Virkkapadum

Related ebooks

Reviews for Kanavugal Inge Virkkapadum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugal Inge Virkkapadum - Rajeshkumar

    16

    1

    ‘கோயில் கோபுரத்திலிருந்த ஒலிபெருக்கியிலிருந்து சின்னஞ்சிறு பெண் போலே...’ என்று சீர்காழி கோவிந்தராஜன் வெல்லப் பாகாய் கரைந்து கொண்டிருக்க -

    போர்வைக்குக் கீழே குளிருக்கு இதமாய் சுருண்டிருந்த பிரார்த்தனா விழித்துக் கொண்டாள். அம்மாக்காரி கோகிலம் தண்ணீர் நிரம்பிய வாளியோடு வாசலுக்குப்போய் ‘தட் தட்’ என்று நீர் தெளிக்கும் சத்தமும், அப்பா ‘கல்ல்ல்’ என்று இருமும் சத்தமும் நன்றாய்க் கேட்டது.

    எப்படியும் மணி ஆறரை இருக்கும். இனிமேலும் தூங்கிக் கொண்டிருந்தால் - அம்மா லேசாய் முனக ஆரம்பித்து விடுவாள். ‘கார்த்திகை வந்தா இருபது முடியப் போகுது... மனசுக்குள்ளே பொட்டச்சிங்கற நினைப்பு கொஞ்சம் கூட இல்லை. மீசை மொளைச்ச ஆம்பிளையாட்டம் ஏழு மணி வரைக்கும் தூங்க வேண்டியது. வாயைக் கொப்புளிக்காமே காப்பி சாப்பிட வேண்டியது... வெந்நீர் போட்டு வெச்சா குளிச்சுட்டு, ஏதாச்சும் கதை புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு மாடி ரூமுக்கு போயிட வேண்டியது... எல்லாம் உங்க அப்பா தர்ற இடம்... குதிர் மாதிரி வளர்ந்து என்ன பிரயோசனம்...?’

    அம்மாவின் வழக்கமான இந்த திட்டுகளுக்கு பயந்து பிரார்த்தனா போர்வையை உதறிக் கொண்டு எழுந்தாள்...

    அப்படி எழுந்த பிரார்த்தனாவுக்கு செப்பு நிறம், அம்மா மாதிரியே சுருட்டை முடி. ஏராளமான கண்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரின் இயக்கம் தெரிந்தது. சிவப்பான சின்ன உதடுகளை விரித்து சிரிக்கையில் - அரிசியைக் கோர்த்த மாதிரியான பல்வரிசை தெரிகிற நிமிஷம் ஒரு விசேஷமான நிமிஷம். ப்ளஸ் டூ வரைக்கும் படித்துவிட்டு - காலேஜ் போகப் பிரியப்படாமல் டைப் தட்டப்போய் - லோயரையும், ஹையரையும் பாஸ் செய்தாள். தையல் கிளாஸுக்குப் போய் மூன்றே மாதத்தில் ஜாக்கெட், பாவாடை தைக்கக் கற்றுக் கொண்டாள். எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் 06798911-UG-என்ற எண்ணில் தன் பெயரை பதித்து விட்டு - இண்டர்வ்யூ கார்டுக்காக காத்திருந்தாள். அவளுடைய பீட் போஸ்ட்மேன் தினமும் அவளுக்கு ‘பெப்பப்பே’ காட்டியபடி அடுத்த வீட்டுக்கு தபாலைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    ஏண்டி... இன்னமுமா உனக்கு விடியலை...? கண்ணைக் கூசற மாதிரி வெளிச்சம் வந்தாச்சு...

    அம்மா கோகிலம் காலியான பக்கெட்டோடு உள்ளே வந்தாள். நாக்கு வேகமாய் அசைய வார்த்தைகள் பொரிந்தன. பிரார்த்தனா போர்வையை மடித்துக் கொண்டே சொன்னாள்.

    இ... இதோ... எந்திரிச்சுட்டேன்மா...

    நல்லா எந்திரிச்சே போ... உன்னை விட ஒரு வயசுச் சின்னவ எதிர்வீட்டு சைலஜா... அஞ்சரை மணிக்கே அந்தப் பொண்ணு எந்திரிச்சு... குளிச்சு... தலைக்கு ஈரத்துண்டை கட்டிக்கிட்டு... வாசலை தெளிக்கிறதென்ன...? கோலம் போடறதென்ன...? பூத்துக்குப் போய் பால் பாக்கெட்டை வாங்கிட்டு வர்றதென்ன...?

    கோகிலம் பொருமப் பொரும -

    கட்டிலில் படுத்திருந்த சிவசைலம் எழுந்து உட்கார்ந்து - சின்னதாய் ஒரு இருமலை வெளிப்படுத்திவிட்டு மனைவி கோகிலத்தை ஏறிட்டார். காலங்கார்த்தாலே ஏண்டி குழந்தையைத் திட்டறே?

    குழந்தை...? சாயந்தரம் வர்றப்ப மறக்காமே ஒரு ஃபீடிங் பாட்டில் வாங்கிட்டு வாங்க... மூணு வேளையும் மடியில கிடத்திகிட்டு புகட்டி விடறேன்... வயசென்ன கொஞ்ச நஞ்சமா ஆகுது...? நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கப் போற இடத்துல இப்படி ஏழுமணி வரைக்கும் தூங்கினா மாமியார்க்காரி மூலையில சாத்தி வெச்சிருக்கிறதை எடுத்துக்குவா...

    வெள்ளிக்கிழமையும், அதுவுமா... ஏம்மா இப்படி பேசறே. நாளைக்கு காலையிலிருந்து நான் சீக்கிரமா எந்திரிச்சுடறேன் போதுமா...?

    இதே வார்த்தையை எழுநூறு வாட்டி சொல்லியாச்சு... போ... போயி... யாராச்சும் சிரிக்கிறதுக்கு முன்னாடி கோலத்தையாவது போட்டுட்டு வந்துடு போ...

    மாடத்தில் இருந்த கோலப்பொடி நிரம்பிய அலுமினிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பிரார்த்தனா வாசலை நோக்கிப் போனாள்.

    தெருவில் வெளிச்சம் பளிச்சென்று விழுந்திருந்தது. அந்தச் சிறிய தெருவின் எல்லாருடைய வீட்டு வாசல்களிலும், தண்ணீர் தெளிப்பும், விதவிதமான சைஸ்களில் கோலங்களும் தெரிந்தன. என்ன கோலம் போடலாம் என்று யோசித்துக் கொண்டே, குனிந்து கோலப் புள்ளிகளை வைக்க ஆரம்பித்தாள் பிரார்த்தனா.

    அதே விநாடி –

    தடதடவென்ற சத்தத்தோடு அந்த ஆட்டோ தெருவில் நுழைந்து - குழிகளில் விழுந்து எழுந்து பல்லாங்குழி ஆடிக்கொண்டே வந்தது.

    பிரார்த்தனா கோலம் போடுவதை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு ஆட்டோ போவதற்கு வழிவிட்டு ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.

    ஆட்டோ அவளருகே வந்ததும் சட்டென்று நின்று வாயைச் சாத்திக் கொண்டது.

    ஆட்டோவினின்றும் அந்த இளைஞன் இறங்கினான். ரகுவரனின் உயரம். பாலீஷ் செய்யப்பட்ட கோதுமை நிறம். கொஞ்சம் அழுக்கோடு கூடிய ஜிப்பா, பைஜாமா. திறந்திருந்த ஜிப்பாவின்

    Enjoying the preview?
    Page 1 of 1