Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondru Vinaadi Mugam
Moondru Vinaadi Mugam
Moondru Vinaadi Mugam
Ebook109 pages45 minutes

Moondru Vinaadi Mugam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Moondru Vinaadi Mugam

Read more from Rajeshkumar

Related to Moondru Vinaadi Mugam

Related ebooks

Related categories

Reviews for Moondru Vinaadi Mugam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondru Vinaadi Mugam - Rajeshkumar

    30

    1

    ‘தேஜ்..."

    ம்...

    ரெடியா...?

    ‘‘நான் ரெடியாகி பதினஞ்சு நிமிஷமாகுது...’’

    "சொன்னதெல்லாம்...?’’

    ‘‘ஞாபகம் இருக்கு...?"

    "காரியத்தைத் துல்லியமா முடிக்கணும்...’’

    ‘‘அது என்னோட கவலை..."

    காரியம் முடிஞ்சதும் நேரா முந்திரித் தோப்பு பங்களாவுக்குப் போயிடு...! என்னை போன்ல காண்டாக்ட் பண்ற வேலை வேண்டாம்.

    ‘‘ஏற்கெனவே சொன்னதுதானே...? நான் கிளம்பட்டுமா...?’’

    ‘‘ம்... கிளம்பு... குறி மார்புக்கு வை. தலைக்கு வைக்காதே...!’’ தேஜ் என்கிற அந்த இருபத்தைந்து வயது இளைஞன் ஒரு ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். காலை நேர சென்னை. எட்டு மணி. ஜனங்கள் பல்லவன்களில் அடைபட்டு - கோஷ்டி கோஷ்டியாய் போய்க் கொண்டிருந்தார்கள். எலக்ட்ரிக் ட்ரெயின்கள் ‘தடக் தடக்’கென்று தண்டவாளங்களில் நொண்டின. காலைநேரக் காற்றில் வாகனங்கள் வெளித்தள்ளிய கரியமில வாயு நிதானமாய்க் கலந்து கொண்டிருந்தது.

    தேஜ் தன் ஆர்.எக்ஸ். பைக்கை உதைத்து புகை கக்கி வேகம் பிடித்தான். மவுண்ட்ரோட்டின் மெகா ட்ராஃபிக்கில் கலந்து ஒரு தீர்க்கமான வேகத்தில் பயணம் செய்து - கிண்டியின் விளிம்பைத் தொட்டான்.

    தேஜ் நல்ல உயரம். அணிந்திருந்த ஸ்டோன்வாஷ் சர்ட் பேண்டுக்குள் அவனுடைய தேகாப்பியாசம் உடம்பு தெரிந்தது. முகத்திற்கு பவுடர் அடித்த மாதிரி நிறம், பிடரி வலிய முடி. அடர்த்தியான புருவங்களுக்கு கீழே சின்னக் கண்கள் சற்றே தூக்கலான மேலுதட்டுக்கு மேல் சிரத்தையாய் எண்ணெய் தடவி வளர்த்த மீசை. அன்றைய சவரத்தில் ரோமம் இல்லாத மோவாய்.

    தேஜ் இப்போது கிண்டி ரோட்டில் ஆர்.எக்ஸ் பைக்கை விரட்டிக் கொண்டிருந்தான். பைக்கில் போகப் போகவே - இடது கை சர்ட் பாக்கெட்டுக்கு போய் - ஒரு சிகரெட்டை எடுத்தது. உதட்டுக்கு கொடுத்தது. பின் அதே சிகர்லைட்டரை எடுத்து - பெருவிரலால் தட்டி ஒரு நெருப்பு ஜூவாலையை உற்பத்தி செய்து - சிகரெட் அந்த ஜூவாலையில் தலை முழுக - முதல் புகை கசிந்தது.

    ஐந்து நிமிஷ பயணம்.

    சிகரெட்டின் பாதி உடம்பு மிச்சமிருக்க - பைக்கின் வேகத்தை குறைத்து - சாலையோரமாய் இருந்த ரெஜியா மரத்துக்குப் பின்னால் கொண்டு போய் நிறுத்தினான்.

    சற்று மரங்கள் அடர்ந்த வேண்டாத நிசப்தத்தோடு கூடிய சூழ்நிலை. பைக்கை லாக் செய்து - ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு - மிச்ச சிகரெட்டை புகையாக மாற்றியபடி நடந்தான்.

    சாலையோர நடை. ஒரு நிமிஷ நடை.

    ரோட்டின் வலதுபக்கம் தெரிந்த வெல்ஃபேர் அசோசியேஷன் ஹால் கட்டிடத்திலிருந்து - யாரோ மைக்கில் பேசுவது காற்றில் கலந்து கேட்டது.

    ‘‘சட்டம் வேறு செயல்முறை வேறு என்ற கோணத்தில்தான் நம் நாட்டிலே விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற உணர்வு சட்டத்துக்கு எப்போதும் உண்டு. சுதந்திரம் அதிகாரவர்க்கமாக செயல்படும்போது - சட்டம் அங்கே நுழைந்து தன் வேலையைச் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அது சட்டம். தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் இந்த நாட்டுக்கு புற்றுநோயைப் போன்றவர்கள். இப்பேர்ப்பட்ட புற்றுநோய் ஆட்களை வளரவிடுவதும், சரியான நேரத்தில் தடுக்காமல் விடுவதும் நாட்டுக்கே கேடு விளைவிப்பதாக முடியும். யார் தவறு செய்தாலும் சட்டம் தட்டி கேட்க வேண்டும்."

    தேஜ் கையிலிருந்த சிகரெட்டை வீசிவிட்டு பேச்சை காதில் வாங்கிக் கொண்டே நடந்தான்.

    மைக்கில் இப்போது குரல் அதிகப்பட்டது.

    ‘‘சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் சதிகாரர்களை தக்க தருணத்தில் நாம் தண்டிக்கவில்லையென்றால் கோர்ட் என்கிற அமைப்பு எதற்கு...? நீதிபதி... என்கிற பதவி எதற்கு? நீதித்துறையிலே இருப்பவர்கள் அரசியல்வாதிகளின் அரவணைப்புக்கும் அவர்கள் காட்டும் பணத்திற்கும் மசிந்து – நீதி தேவதையை சோரம் போகச் செய்யும் இந்த காலத்தில் ஹைகோர்ட் நீதிபதி வாத்சல்யன் அவர்கள் துணிச்சலாய் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். யாருடைய மிரட்டலுக்கும் பணியாமல் எதற்கும் தலை வணங்காமல் - ஒரு தீவிரவாத கும்பலைச் சேர்ந்த பதினோரு பேர்க்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீவிரவாதிகளின் வழக்கை விசாரித்து - தீர்ப்பு வழங்க மற்ற நீதிபதிகள் மறுத்து பின்வாங்கிய போது வாத்சல்யன் அவர்கள் முன் வந்தார்கள்.’’

    தேஜ் அந்தக் கட்டிடத்திற்கு எதிர்ப்புறமாய் - வைக்கப்பட்டிருந்த அந்த எழுபது அடி உயர கட்-அவுட்டுக்குப் பக்கத்தில் வந்தான். ஒரு அரசியல் தலைவர் கட்-அவுட் அது. மூன்று மாதங்களுக்கு முன்னால் அந்த தலைவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது - வைக்கப்பட்ட கட்-வுட். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடு போடுகிற போஸில் நின்றிருந்த அவர் சமீபத்திய மழைக்கு சாயம் போயிருந்தார். அடித்த காற்றுக்கு உடம்பில் இரண்டு மூன்று இடங்களில் பொத்தல்கள்.

    தேஜ் கட்-அவுட்டுக்கு பின்பக்கம் வந்தான். மரங்கள் அடர்ந்து ஒருவித செயற்கை ஆசிட்டோடு தெரிந்தது.

    கட்-அவுட்டை தாங்கிப் பிடித்திருந்த - ராட்சஸ மூங்கில் சாரத்தை ஏறிட்டான். நூற்றுக்கணக்கான மூங்கில்கள் - தாம்புக் கயிற்றால் கட்டப்பட்டு - ஒரு டவர் மாதிரி தெரிந்தது.

    தேஜ்

    Enjoying the preview?
    Page 1 of 1