Kannamoochi
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Kannamoochi
Related ebooks
January Maranangal Rating: 4 out of 5 stars4/5Engiruntho Aasaikal Rating: 0 out of 5 stars0 ratingsRanikku Check Rating: 5 out of 5 stars5/5Oru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Everst Thavaru Rating: 5 out of 5 stars5/5Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsPanneer Poopanthal Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Saiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Irandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Vivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Sivappu Udai Thevathai! Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsMonday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsIndru Irappu Vizha Rating: 0 out of 5 stars0 ratingsRani Irandaayiram Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsNatchathiram Illaatha Iravu Rating: 5 out of 5 stars5/5Varnaavin Maranam Rating: 0 out of 5 stars0 ratingsSila Thavarugal Rating: 4 out of 5 stars4/5Sorkka Vasal Rating: 0 out of 5 stars0 ratingsIni Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyaai Oru Akiramam Rating: 5 out of 5 stars5/5Aadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Kannamoochi
0 ratings0 reviews
Book preview
Kannamoochi - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
தலை பூராவும் ரத்தமயமாய் ஸ்ட்ரெச்சரில் வைத்து வேகவேமாய்த் தள்ளப்பட்டு இன்டென்சிவ் வார்டுக்குள் கொண்டு போகப்பட்டார் செல்வகிருஷ்ணன். கதவின் நெற்றியில் - சிகப்பு விளக்கு ஒளிர, வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் சத்தமில்லாமல் சாத்தப்பட்டன. வார்டுக்கு வெளியே வராந்தாவில் பதட்டமாய் ஒரு சின்னக் கும்பல். கும்பலுக்கு நடுவே இருட்டடித்த முகங்களோடு சசிதரன், மனோகர், ரசிகா.
ரசிகா அழவே ஆரம்பித்திருந்தாள்.
பெ... பெரியப்பாவுக்கு ஒண்ணும் ஆ... ஆயிடாதே... ம்... ம்... மனோகர்...?
ஒண்ணும் ஆகாது...
எவ்ளோரத்தம்...! மண்டை ரெண்டா உடைஞ்சிருக்குமா?
சசிதரன் கொஞ்சம் பயமாய் எச்சில் விழுங்கி விட்டுச் சொன்னான்.
அ... தெல்லாம் ஒண்ணுமில்லை... நெத்தியில் மட்டும் ஒரு சின்னப்பொத்தல். வழிஞ்ச ரத்தம் எல்லாப் பக்கமும் பரவி - பார்க்கிறதுக்கு வயித்தைக் கலக்குது. அவ்வளவுதான்.
எக்ஸ்க்யூஸ் மீ.
தன் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டுத் திரும்பினான் சசிதரன். இன்ஸ்பெக்டர் ஒருவர் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். புருவங்களுக்கு மேல் வியர்த்திருந்தார்.
எஸ்...
மிஸ்டர் செல்வகிருஷ்ணன் உங்க பெரியப்பாதானே?
ஆமாம்.
அவர்க்கு எப்படி அடிபட்டதுன்னு சொல்ல முடியுமா?
மனோகர் ஆச்சர்யமாகிக் குறுக்கிட்டுக் கேட்டான்.
அவர் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறதா... உங்களுக்கு யார் சொன்னாங்க இன்ஸ்பெக்டர்...
ஒரு போன் கால் வந்தது. பேசினவங்க தன்னோட பேரைச் சொல்லிக்க விரும்பாமே... விஷயத்தை மட்டும் சொல்லிட்டு ரிஸீவரை வெச்சுட்டாங்க.
போன்ல என்னான்னு சொன்னாங்க?
'செல்வகிருஷ்ணன் ரத்தக் காயமடைஞ்சு ஹாஸ்பிடல் கொண்டு போகப்பட்டிருக்கிறார். அந்தக் காயம் அவர்க்கு எப்படி ஏற்பட்டதுங்கிறதை போலீஸ் கண்டுபிடிக்கணும்ன்னு சொன்னாங்க. அதான் உண்மையைத் தெரிஞ்சிட்டுப் போக வந்தேன்.
ரசிகா சிறிது கோபமான குரலோடு இன்ஸ்பெக்டரை ஏறிட்டாள்.
இன்ஸ்பெக்டர் எங்க பெரியப்பாவுக்கு ஏற்பட்ட ரத்தக்காயம் சம்பந்தமா எங்களை நீங்க சந்தேகப்படறீங்களா?
நோ... நோ... ரத்தக் காயம் அவர்க்கு எப்படி ஏற்பட்டதுங்கிறதைச் சொன்னாப் போதும். நான் போய்க்கிட்டே இருப்பேன்.
மனோகர் சொன்னான்.
பெரியப்பா பேப்பர் பார்த்துகிட்டே மாடிப்படிகளில் இறங்கிட்டிருந்தார். திடீர்ன்னு கால் பிசகி உருண்டுட்டார்... எல்லாமே கிரானைட் மாடிப்படிகள். ஏதோ ஒரு படியில தலை மோதிக்கிச்சு.
மிஸ்டர் செல்வகிருஷ்ணனுக்கு என்ன வயசு இருக்கும்?
அறுபத்து நாலு.
அவர்க்கு சன்னோ டாட்டரோ இல்லையா?
இல்லை.
அவங்க ஒய்ப் எப்போ இறந்தாங்க?
பெரியம்மா இறந்து பத்து வருஷத்துக்கு மேலாகுது.
நீங்க மூணு பேரும் பெரியப்பாகிட்டேதான் வளர்ந்தீங்களா?
ஆமா. எங்க ஃபாதர் மதர் இறந்ததும் பெரியப்பா ஊர்ல இருந்த எங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டார். அவர்தான் எங்களை வளர்த்தார். படிக்க வெச்சார். இன்னிக்கு அவரோட கம்பெனியிலேயே எங்க மூணு பேர்க்கும் பொறுப்புகளைக் குடுத்து கம்பெனி நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லியிருக்கார். பெரியப்பா மேலே நாங்க பாசத்தை வைக்கலை. பக்தியையே வெச்சிருக்கோம். யாரோ போன் பண்ணி ஏதோ சொன்னாங்கிறதுக்காக எங்களை விசாரிக்க வந்தது சரியில்லை மிஸ்டர் இன்ஸ்பெக்டர்...
ஸாரி...! எங்களுக்கு ரிப்போர்ட் எங்கேயிருந்து வந்தாலும் சரி... அது உண்மையா பொய்யான்னு விசாரிக்க வேண்டியது எங்க கடமை.
உங்களுக்குப் போன் எத்தனை மணிக்கு வந்தது இன்ஸ்பெக்டர்?
அரை மணி நேரத்துக்கு முன்னாடி.
போன்ல பேசினவனோட குரல் எப்படியிருந்ததுன்னு சொல்ல முடியுமா?
ஒரு சாதாரண ஆண் குரல். பேசின நபர்க்கு நடுத்தர வயதைத் தாண்டியிருக்கலாம்.
- இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "
இன்டென்சிவ் வார்டின் அறைக் கதவுகள் சத்தமில்லாமல் திறக்கப்பட்டு டாக்டர் ஞானமூர்த்தி வெளியே வந்தார்.
சசிதரன், மனோகர், ரசிகா மூன்று பேரும் அவரை நோக்கிப் பாய, இன்ஸ்பெக்டரும் அவர்களைத் தொடர்ந்தார்.
டாக்டர்...! பெரியப்பாவுக்கு இப்போ எப்படியிருக்கு?
டாக்டர் சோர்வாய்க் கண்களை மூடித் திறந்தார்.
இப்போ எதுவுமே சொல்ல முடியாத நிலைமை. ரத்தம் நிறையச் சேதமாகியிருக்கு. ரத்தம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கோம். ரத்தத்தை உடம்பு ஒத்துகிட்டதும் - ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்.
ரசிகா குரல் தழுதழுப்போடு குறுக்கிட்டாள்.
டாக்டர்! பெரியப்பாவோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லையே?
-
அதை இப்போ எப்படிம்மா சொல்ல முடியும்...! அடிபட்டது இளைஞனாக இருந்திருந்தா... இந்த... ரத்த சேதத்தை அவன் தாங்கியிருப்பான். ஆனா இவர் ஏஜ்டு... தாங்க முடியலை.
எக்ஸ்க்யூஸ்மீ டாக்டர்.
மனோகரை ஒதுக்கிக் கொண்டு - அந்த இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தார்.
டாக்டர் ஏறிட்டார்.
எஸ்.
மிஸ்டர் செல்வகிருஷ்ணன் அடிபட்டது சம்பந்தமா ஒரு சின்ன என்கொய்ரி.
என்ன கேக்கப் போறீங்க?
அவர் எப்படி அடிபட்டார்?
மாடிப்படிகளில் இறங்கி வரும்போது - கால் பிசகிக் கீழே உருண்டு விழுந்திருக்கிறார். நெற்றி படிக்கட்டில் மோதியதில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அது படிக்கட்டில் மோதிய காயம்தானா டாக்டர்?
யூ... மீன்...?
செல்வகிருஷ்ணன் ஏதாவது ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்காரான்னு தெரிஞ்சுக்கத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
நோ... சர்ட்டன்லி நாட்...! செல்வகிருஷ்ணன் யாராலும் தாக்கப்படலை. இது எதிர்பாராத விபத்துதான்.
அவர்க்கு... இப்போது நினைவிருக்கிறதா டாக்டர்?
நினைவில்லை.
நினைவு எப்போ திரும்பும்?
ரெண்டு மணி நேரமாகலாம்.
டாக்டர் அவர்க்கு நினைவு திரும்பினதும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. நான் அவர்கிட்டே வாக்குமூலம் வாங்கணும்.
இதென்ன மர்டர் கேஸா...?
சசிதரன் பொரும,
இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார்.
"நீங்க என் மேல கோபப்படறதையும் ஆத்திரப்படறதையும் பார்த்தா... எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. மிஸ்டர் செல்வகிருஷ்ணன் இந்த சிட்டியில் ஒரு பெரிய மில்லினர். அவர் அடிபட்டு ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கார். அந்த அடி ஏற்பட்டது குறித்து யாரோ ஒருத்தர் எங்களுக்கு போன் பண்ணி விசாரிக்கச் சொல்லியிருக்கார். அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க