Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorkka Vasal
Sorkka Vasal
Sorkka Vasal
Ebook130 pages31 minutes

Sorkka Vasal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466749
Sorkka Vasal

Read more from Rajeshkumar

Related to Sorkka Vasal

Related ebooks

Related categories

Reviews for Sorkka Vasal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorkka Vasal - Rajeshkumar

    1

    அலாரம் சினுங்கியதுமே சௌந்தர்யா விழித்துக் கொண்டாள். ராஜவீதி சௌடாம்பிகை அம்மன் கோவிலில் இருந்து பாசுரங்களும் கோட்டைமேடு மசூதியில் இருந்து அல்லாஹ் ஹு அக்பர் கூவலும் கலந்து கதம்பமாய் கேட்டது. இந்த நிமிஷத்தில் சர்ச் மணியோசையும் கேட்டால் எவ்வளவு பொருத்தமாய் இருக்கும் சௌந்தர்யா யோசித்தபடியே எழுந்தாள். ஜன்னல் வழியே வைகறை இருட்டு இன்னமும் கெட்டியாகவே இருந்தது. பக்கத்து வீட்டுப் பன்னீர் மரம் மார்கழிக் குளிர்காற்றில் வாசனையை மட்டும் அனுப்பி வைத்தது.

    சௌந்தர்யா படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு வீட்டு பின்பக்கம் போனாள். கார்ப்பரேசன் குழாய் தண்ணீர் வருவதற்கு அறிகுறியாய் வெறும் காற்றை சர்புர் என்று வெளியிட்டு உறுமிக் கொண்டிருந்தது. ஹோஸ் பைப்பை எடுத்து அதன் ஒரு வாயை குழாய்க்கு கொடுத்து மற்றொரு வாயை தொட்டிக்குள் போட்டாள்.

    இருமல் சத்தம் கேட்டது, திரும்பினாள்.

    அப்பா கழுத்துக்கு மப்ளரை சுற்றிக்கொண்டு கையில் பால் கூப்பனோடு நின்றிருந்தார். இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு முறைத்தாள் சௌந்தர்யா.

    பூத்துக்கு கிளம்பிட்டீங்களாக்கும்

    ஆமாம்மா...

    கூப்பனை அந்த ஜன்னல் திட்டு மேல வைங்கப்பா. வாசல் தெளிச்சுட்டு நான் போய்ட்டு வந்துடறேன்

    அட நீ ஏம்மா சிரமப்படறே? நீ வீட்டு வேலையை பாரு. நான் பொடி நடையாய் போயிட்டு வந்துடறேன்

    சௌந்தர்யா வேகவேகமாய் வந்து அப்பா சிவசாமியின் கையில் இருந்த பால் கூப்பனை பறித்தாள். படபடவென பொரிந்தாள்.

    ராத்திரி பூராவும் லொக் லொக்னு இருமிட்டு இருப்பதை நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். இந்தப் பனியில் போனா அவ்வளவுதான்

    சிவசாமி சிரித்தார். இன்னிக்கு நேத்தா நான் இருமிட்டிருக்கேன்? இந்த பனியெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாதும்மா

    நீங்க என்ன சொன்னாலும் சரிப்பா இன்னிக்கு உங்களை பால் பூத்துக்கு போக விடமாட்டேன்.

    அட கூப்பனைக் கொடும்மா

    மாட்டேன்

    பிடிவாதம் பிடிக்காதேம்மா. இப்ப போனா பூத்துல கூட்டம் இருக்காது. போனதும் பால் பாக்கெட்டை வாங்கிட்டு வந்துடுவேன்

    மாட்டேன். கூப்பனை தரமாட்டேன்

    "ப்ளக்’ பக்கத்து அறையின் கதவு தாழ்ப்பாள் விலகியது. கதவு திறக்க அண்ணி ரோகிணியின் தூக்கம் கெட்ட முகம். தலை சிலுப்பியிருக்க குங்குமப் பொட்டு கலைந்து தெரிந்தது,.

    அப்பாவும் மகளும் காலங்காத்தால சண்டை போட்டு தூக்கத்தை ஏன் கெடுக்கறீங்க. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் போய் பாலை வாங்கிட்டு வர வேண்டியதுதானே?

    அது வந்து அண்ணி... வெளிய பனி ஜாஸ்தியா இருக்கு. அப்பாவோட உடம்புக்கு...

    எல்லாம் ஒத்துக்கும். பால் பூத்துல போய்ப்பாரு உங்கப்பா வயசுல இருக்கிறவங்கதான் பால் வாங்க வந்திருப்பாங்க. நீ என்னமோ... கூப்பனை அவர் கையில் குடு

    அண்ணி ரோகிணி பேச வாயைத் திறந்துவிட்டால் அவ்வளவு சுலபத்தில் மூடமாட்டாள். அவளுடைய கோபத்தை அதிகப்படுத்தாமல் கூப்பனை அப்பாவிடம் கொடுக்க அவர் வாங்கிக்கொண்டு வேகவேகமாய் நகர முயன்றார்.

    மாமா

    நின்று மருமகளை ஏறிட்டார்.

    என்னம்மா?

    பால் வாங்கிட்டு அப்படியே அடுத்த வீதி கார்னர்ல இருக்கிற பார்மஸிக்கும் போய் ரெண்டு பரால்கான் மாத்திரை வாங்கிட்டு வந்துடுறீங்களா

    சரிம்மா

    அப்பா தலையாட்டிவிட்டு போவதையே பார்த்துக்கொண்டிருந்த அவள், அவர் தலை மறைந்ததும் இருட்டில் நின்றிருந்த அவனை நோக்கினாள்.

    இருட்டில் மறைந்திருந்த அவனை நோக்கி ‘என்ன விஷயம்’ என்று அபிநயித்துக் கேட்டாள்.

    அவன் வா என்றான்.

    வேண்டாம் அண்ணன் பார்த்து விட்டால் பெல்ட் அடியில் முதுகுத் தோல் உரிந்து போய் விடும் அவள் அபிநயித்துக் காட்ட அவன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மறுபடியும் வா என்று தலையசைத்து கூப்பிட்டான்.

    சௌந்தர்யா எகிறுகிற இருதயதுடிப்போடு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கோலப்பொடி கிண்ணத்தோடு வருணை நெருங்கினாள்.

    என்னங்க வருண். வீட்டுக்கே வந்துட்டீங்க? நான்தான் வீட்டுப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லையா

    ஸாரி சௌ... இன்னிக்கு என்னமோ காலையில கண் விழித்ததுமே உன்னை பார்க்கணும் போல இருந்தது. அதுதான் ஜாக்கிங் போற ரூட்டை மாத்திக்கிட்டு இந்தப் பக்கமா வந்துட்டேன். ஆஹா எவ்வளவு திவ்யமான காட்சி?

    திவ்யமான காட்சியா

    ஆமா தலையில ஈர டவலை சுத்திக்கிட்டு இந்த மார்கழிப் பனியில குனிஞ்சு கோலம் போடற அழகு இருக்கே... ஆஹா

    சரி சரி இடத்தை மொதல்ல காலி பண்ணுங்க. பால் பூத்துக்கு போயிருக்கிற அப்பா எந்த நிமிஷத்திலும் வந்துடுவார். அண்ணனும் அண்ணியும் உள்ளார இருக்காங்க. அக்கம் பக்கத்து வீடுகள்ல இருக்கிற யாராவது பார்த்துட்டாலும் வம்பு. உடனே கிளம்புங்க. வீட்டுப்பக்கம் வர்ற வேலையெல்லாம் இனிமேல் வெச்சுக்காதீங்க

    ஏன்தான் இப்படி பயப்படறியோ

    பயப்படாம என்ன பண்றது? எங்க அண்ணனுக்கு வர்ற கோபத்தை பத்திதான் உங்ககிட்டே சொல்லியிருக்கேனே. அப்பா மூலமா அண்ணனுக்கு நம்ம விவகாரத்தை தெரியப்படுத்தறவரைக்கும் ஜாக்கிரதையா இருந்தே ஆகணும். போங்க போங்க...

    ஏன் பிச்சைக்காரரைத் தொரத்தற மாதிரி தொரத்துறே? நீ பாட்டுக்கு கோலம் போட்டுகிட்டு இரு. நான் இந்த மரத்துக்குப் பின்னாடி இருந்து ரெண்டு நிமிஷம் பார்த்துட்டுப் போயிடுறேன். நீ கோலம் போடற அழகு இருக்கே...

    அய்யோ... என்று மெல்ல சிணுங்கி இடது கை விரல்களால் நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள் சௌந்தர்யா.

    இது கூட அழகாத்தான் இருக்கு

    உங்களை...

    இந்த கோபம் கூட அழகாத்தான் இருக்கு

    அய்யய்யோ...

    என்ன

    அப்பா வந்துட்டிருக்கிறார்

    வருண் வேப்பமரத்துக்குப் பின்னால் சட்டென்று ஒண்டிக்கொள்ள சௌந்தர்யா மறுபடியும் கோலத்துக்கு வந்தாள்.

    சிவசாமி இருமிக்கொண்டே நெருங்கினார். கையில் பால் கவர் தளும்பியது. கோலத்தை இழைத்துக்கொண்டே கேட்டாள் சௌந்தர்யா.

    ஏம்பா இவ்வளவு நேரம்? பால் வேன் வரலையா?

    அதெல்லாம் வந்துட்டதும்மா. உன் அண்ணி கேட்ட மருந்து அடுத்த தெரு பார்மஸில கிடைக்கலை. மெயின் ரோடு பார்மஸிக்குப் போய் வாங்கிட்டு வந்தேன் அம்மாடி சொன்னவர் கால் முட்டைப் பிடித்துக்கொண்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து விட்டார்.

    உங்களை யாருப்பா மெயின் ரோட்டுக்கு போகச் சொன்னது? பக்கத்து தெரு பார்மஸியில கிடைக்கலைன்னா வந்துட வேண்டியதுதானே?

    அதெப்படிம்மா மருந்துன்னு கேட்டப்புறம் போகாம இருக்க முடியுமா? எனக்கு கொஞ்சம் வெந்நீர் வச்சுக் கொடும்மா

    நீங்க போய் படுங்கப்பா. நான் வந்துடறேன்

    சிவசாமி எழுந்து தளர்வாய் உள்ளே போக... சௌந்தர்யா வேக வேகமாய்க் கோலத்தை இழைத்துவிட்டு எழுந்தாள். சுற்றும் முற்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1