Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeithavan Pesugirean
Jeithavan Pesugirean
Jeithavan Pesugirean
Ebook91 pages1 hour

Jeithavan Pesugirean

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100904093
Jeithavan Pesugirean

Read more from Pattukottai Prabakar

Related to Jeithavan Pesugirean

Related ebooks

Related categories

Reviews for Jeithavan Pesugirean

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    V G o o d s t o r y
  • Rating: 5 out of 5 stars
    5/5
    18th time I'm going to read. I had lost this book with 3 stories

Book preview

Jeithavan Pesugirean - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in

ஜெயித்தவன் பேசுகிறேன்

Jeithavan Pesugirean

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

1

ஹலோ, வணக்கம்.

கை கொடுங்கள். குலுக்கிவிட்டுத் திருப்பித் தந்து விடுகிறேன். போட்டிருக்கும் மோதிரம் அப்படியே இருக்கும். நம்பலாம். நான் திருடுவதில்லை (இன்றைய தேதிக்கு)

உலகத்து மக்களை எல்லாம் நல்லவன், கெட்டவன் என்று இரண்டே தலைப்புகளில் வகைப்படுத்தினீர்கள் என்றால், ஸாரி நான் முதல் ரகமில்லை.

கெட்டவன், சுமாரான கெட்டவன், மோசமான கெட்டவன், கெட்டவனோ கெட்டவன் என்று அதிலேயே உபபிரிவுகள் பிரித்தீர்கள் என்றால்... நான் சுமாரான கெட்டவன்தான்.

ரொம்ப நிஜமாகப் பார்த்தால் உலகத்தில் நல்லவன் என்று மண்டைக்குப் பின்னால் ஒளிச் சக்கரம் பொருத்திக் கொண்டு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொய் பேசிவிட்டாலே அவனை நல்லவன் லிஸ்ட்டில் இருந்து தூக்கி கடாசி விடலாம். நாமோ நிமிஷத்திற்கு அறுபது விநாடிகள் என்றால் அறுபத்தெட்டு பொய்கள் பேசுகிற ஜென்மங்கள்.

நான் மட்டுமா? நம்மால் இயங்குகிற சகலமும் பொய் பேசுகின்றன, பத்திரிகைகள் பொய் பேசுகின்றன. ரேடியோ பொய் பேசுகிறது. டெலிவிஷன் பொய் பேசுகிறது அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் பொய் பேசுகின்றன.

இத்தனாம் தேதியிலிருந்து இந்தியாவுக்கு சுபிட்சம் என்று எத்தனை நீளத் துண்டுகள் மைக்கில் பொய் பேசுகின்றன. ‘வியாபாரமே இல்லைங்க' என்று இன்கம் டாக்ஸ் ஆபீசரிடம் வியாபாரிகள் பொய் பேசவில்லை? விருந்தினர் வீட்டுக்குப் போனதும் உபசரிக்கப்படும் போது 'இப்பதான் சாப்பிட்டு வந்தேன்’ என்கிற சாதாரண பொய்யில் இருந்து ‘நரசிம்மராவிடம் ஒரு கோடி ரூபாய் சூட்கேசில் உருட்டிச் சென்று கொடுத்தேன்' என்கிற அசுரப் பொய் வரை... எல்லாரும் எல்லா மட்டங்களிலும் பொய் பேசுவதால்...

நானும் பொய் பேசினேன்.

என் வாழ்க்கைப் பாதை முழுக்க பூக்கள் இல்லை; பொய்கள்தான்.

இந்தப் பொய்கள் எனக்காக. என் வெற்றிக்காக. எதிலும் நான் ஜெயிப்பதற்காக. எனக்குள்ளேயே இன்னொரு நான் விடுத்த சவால்களுக்காக,

என் கடந்த காலத்தில் நிறைய சவால்கள். அத்தனையிலும் நான் ஜெயித்திருக்கிறேன். வெற்றிகளுக்கு அடிப்படை பொய்கள்!

பொய் - சுலபமல்ல; அது ஒரு கலை. அதில் நான் கலைஞன். முகபாவம் ஒத்துழைக்க வேண்டும். குரல் ஒத்துழைக்க வேண்டும். சரியான வார்த்தைகளைப் பொறுக்கிப் போட வேண்டும். ஒரு வார்த்தையில் கூட பிசிறு தட்டக்கூடாது.

பொய்களாலேயே என் சவால்களை ஜெயித்தவன் இப்போது உங்களிடம் பேசுகிறேன்.

எனக்கு நிறைய ஓய்விருக்கிறது. பொறுமையாய் சொல்ல அவகாசமாயிருக்கிறது. சொல்ல ஆர்வமிருக்கிறது. சொல்கிறேன்...

என் பெயர் விஜயரங்கன். என் உருப்படாத அப்பா தேர்ந்தெடுத்து சூட்டிய திருநாமம் ‘உருப்படாத’ அடைமொழிக்குக் காரணம் அயச் சீட்டாட்டத்தில் தன் பெண்டாட்டி அலையஸ் என் அம்மா தவிர சகலமும் தோற்று தாத்தா விட்டுச் சென்ற வீட்டையும் விற்று எனக்கும், என் அண்ணனுக்கும் நாமம் போட்டுவிட்டு, குடிபோதையில் நீச்சலடித்தே செத்துப் போனதுதான்.

கடல், ஆறு, நீச்சல்குளம் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு நடு சாலையில் நீச்சலடித்தால் சைக்கிள்காரன் விலகிப் போவான். வேகமாக வந்த லாரிக்காரன் விலகிப் போவானா?

பொட்டசித்த அம்மா ஒரு சொட்டுக்கூட தண்ணீர் சிந்தவில்லை. எனக்கு அப்போது வயது பதினைந்து. அண்ணனுக்கு பத்தொன்பது.

அம்மா, நீ கவலைப்படாதே! நம் குடும்பத்தை நான் தலைநிமிர வைக்கிறேன், அப்பா விற்ற அதே வீட்டை நான் விலைக்கு வாங்கவில்லை என்றால் என் பெயர் மணியரசன் இல்லை என்று சுமாரான மீசையைத் தடவி அண்ணன் சபதம் செய்த போது, எனக்கும் வேகமாகத்தான் இருந்தது.

அண்ணன் தன் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஒரு மெடிக்கல் ஸ்டார்சில் சம்பளத்திற்கு சேர்ந்தான். நானும் பத்தாவது போதும் என்று ஒரு டெய்லர் கடையில் காஜா எடுக்கும் கடைசி உதவியாளனாக சேர்ந்தேன்.

நேர்மையாக உழைத்து முன்னேறி, நிறைய பணம் சேர்த்து, அப்பா தொலைத்த அதே வீட்டை விலைக்கு வாங்கி அம்மாவை கண்ணீர் துடைத்து அந்த வீட்டில் குடியேற்ற வேண்டும்... என்று என்ன ஒரு கதாநாயக லட்சியத்துடன் இருந்திருக்கிறேன்.

அப்பா போன பிறகு வெறித்த பார்வை ஒன்றே மொழியாகக் கொண்டிருந்து அம்மா எங்கள் லட்சியங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மழை பெய்த ஒரு நடுராத்திரியில் காற்றில் விளக்கணைய... அவளும் அணைந்தாள்.

அண்ணாச்சி தன் லட்சியத்தைக் கழற்றிவிட்டு புதிய லட்சியம் மாட்டிக் கொண்டார். அதாவது

Enjoying the preview?
Page 1 of 1