Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Peyar Dhayalan
En Peyar Dhayalan
En Peyar Dhayalan
Ebook90 pages42 minutes

En Peyar Dhayalan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உஷா ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அதே கம்பெனியில் அக்கவுன்ட் செக்‌ஷனில் வேலை பார்க்கும் பெண் பிரசவத்திற்கு லீவு போட்ட காரணத்தினால் தற்காலிகமாக உஷா அந்த பதவியை ஏற்கிறாள். அந்த சமயம் அவள் அலுவலகத்தில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்பதையும், அந்த கொள்ளையை கண்டறிந்தார்களா? பார்ப்போம்.....
Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580100906986
En Peyar Dhayalan

Read more from Pattukottai Prabakar

Related to En Peyar Dhayalan

Related ebooks

Reviews for En Peyar Dhayalan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Peyar Dhayalan - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    என் பெயர் தயாளன்

    En Peyar Dhayalan

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்,

    துப்பறியும் கதைகள் எழுதும்போது போலீஸ் வந்தே தீரும். தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் பரத் தன் காதலி சுசிலாவுடன் இணைந்து செயல்படுவதாக ஏராளமான கதைகள் எழுதியிருக்கிறேன். பரத், சுசிலா போல காவல்துறை அதிகாரிகள் சிலரையும் தொடர்ந்து கற்பனைப் பாத்திரங்களாக உலவவிட நினைத்தேன். அவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகாரிகள் நியூட்டனும், தயாளனும்.

    தயாளன் ஒரு சப் - இன்ஸ்பெக்டர். அவர் வேலை பார்க்கும் காவல் நிலையங்களில் அவருக்கு உயரதிகாரிகளாக அமையும் எல்லா இன்ஸ்பெக்டர்களுமே இவரை அடக்கி ஆள்பவர்களாக, இவரை அலட்சியப் படுத்துகிறவர்களாக அமைவார்கள்.

    ஒரு குற்றம் தொடர்பான விவாதங்களில் தயாளனின் கருத்துக்கள் ஒதுக்கித் தள்ளப்படும். தயாளனின் அணுகுமுறைகளுக்கு மரியாதையே இருக்காது. மாறாக திட்டப்படுவார், விரட்டப்படுவார், புறக்கணிக்கப்படுவார்.

    தயாளனும் 'சரி, நமக்கென்ன... எப்படியோ போய்த் தொலையுங்கள்' என்று பேசாமல் உட்கார்ந்துவிட மாட்டார். தனிப்பட்ட முறையில் தன் அணுகுமுறையை மாற்றாமல் முயற்சிகளை மேற்கொண்டு குற்றச் சிக்கல்களை விடுவிப்பார்.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    37/1, கெனால் பேங்க் ரோடு,

    கஸ்தூரிபா நகர்,

    அடையாறு, சென்னை - 20.

    E.mail : pattukkottaiprabakar@yahoo.co.in

    1

    அப்பா, நான் ஆபீஸ் போய்ட்டு வர்றேன்."

    உஷா, டைம் இருக்கு. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு புறப்படறியா? இப்படி வந்து உட்கார், சொல்றேன்.

    என்னப்பா?

    நேத்து டாக்டர்கிட்டப் போயிருந்தேன்ம்மா. கம்ப்ளீட்டா செக்பண்ணிப் பார்த்தார். லேசா பி.பி. இருக்குன்னு அதைக் கண்ட்ரோல் பண்றதுக்கு மெடிசின் எழுதிக்கொடுத்தார். ஏற்கனவே ரெண்டு அட்டாக் வந்த உடம்புங்கறதால ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு அட்வைஸ்பண்றார்.

    அப்படித்தானேப்பா இருக்கீங்க? டயட்ல கரெக்ட்டா இருக்கீங்க. வீட்ல ஃபுல் ரெஸ்ட்லதான் இருக்கீங்க.

    மெயின் ரோட்டுக்குப் பக்கத்தில நமக்கு வீடு அமைஞ்சிருக்கிறதாலே இந்த டிராஃபிக் சத்தம் தாங்க முடியலை உஷா. சில லாரிக்காரன் அடிக்கிற ஹாரன் சத்தத்துக்கு உடம்பு தூக்கியேப்போடுது.

    எங்க ஆபீஸ்ல எனக்கு ஹவுசிங் லோன் இன்னும் சேங்ஷன் ஆகமாட்டேங்குதுப்பா. அது ஆகிட்டா முகப்பேருல இருக்கிற நம்ம லேண்ட்ல சின்னதா வீடு கட்டிக்கிட்டுப் போயிடலாம். அங்கே உங்களுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.

    வீடு கட்டறது இருக்கட்டும். நான் சொல்ல வந்தது அது இல்லை. நான் தெம்பாதான் இருக்கேன். நடை, உடையிலதான் இருக்கேன். ஆனா எப்போ இன்னொரு அட்டாக் வந்து ஈஸ்வரன் என்னைக்கொண்டு போவான்னு தெரியாதும்மா.

    ஏம்ப்பா இப்படி எல்லாம் சொல்றீங்க?

    இல்லையம்மா. இங்கே யாரும் சாஸ்வதம் இல்லைம்மா. எந்த நேரத்திலயும் எதையும் எதிர்பார்த்துதான் வாழ்க்கை நடத்தணும், தாயில்லாத பொண்ணு. உன்னை நான் வளர்த்தேன்னு சொல்றது பொய்யிம்மா. நீயா வளர்ந்தே. நீயா படிச்சே. பார்ட் டைம் வேலை பார்த்துக்கிட்டு உன் செலவுகளை எல்லாம் நீயாப் பார்த்துக்கிட்டே. இந்த ஃபைனான்ஸ் கம்பெனில நீ பார்க்கற இந்த உத்தியோகமும் நீயா தேடிக்கிட்டதுதான். நானா செய்ய வேண்டிய ஒரு பெரிய கடமையையாவது என்னை செய்ய விடும்மா. ரெண்டு, மூணு தடவை பேச்செடுத்தப்ப எல்லாம் இப்ப வேணாம், இப்ப வேணாம்னு தட்டிக் கழிச்சுட்டே. உனக்கு வயசு ஏறிக்கிட்டேப் போகுதேம்மா. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போய்ட்டா அப்பாவை யார் பார்த்துப்பாங்கன்னு நீ யோசிக்கிறே. அதுக்காக உன்னை வீட்டோட வெச்சிக்கிட்டு இருக்கிறது நல்லாவாம்மா இருக்கு? தை வந்தா உனக்கு இருபத்தி ரெண்டு வயசு நிறையுது உஷா.

    வேலைல சேர்ந்து சம்பாரிச்சு நிலம் வாங்கிருக்கேன். அதில் வீடும் கட்டிடறேன்ப்பா. ஒரு வருஷம் போகட்டும்.

    உன் மனசில உள்ள திட்டத்தைச் சொல்லிட்டே, அதுவரைக்கும் நான் என் உயிரைப் பிடிச்சி வெச்சிருக்கணுமே.

    அதெல்லாம் எதுவும் ஆகாது. நீங்க வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காம இருங்கப்பா.

    "இல்லைம்மா, மதுரையிலேர்ந்து என் சித்தப்பா பையன்

    Enjoying the preview?
    Page 1 of 1