Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannikka Mudiyatha Kutram
Mannikka Mudiyatha Kutram
Mannikka Mudiyatha Kutram
Ebook119 pages1 hour

Mannikka Mudiyatha Kutram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசியல்வாதியான இளமாறன் உதயா என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். சத்யா ஒரு பத்திரிகைக்காரன். ஒருநாள் இளமாறன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வருகிறது. இது கொலையா? தற்கொலையா? இவர்களில் யார் அந்த மன்னிக்க முடியாத குற்றத்தை செய்கிறார்கள் என்று வாசிக்கலாம் வாங்க...

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580100908106
Mannikka Mudiyatha Kutram

Read more from Pattukottai Prabakar

Related to Mannikka Mudiyatha Kutram

Related ebooks

Reviews for Mannikka Mudiyatha Kutram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannikka Mudiyatha Kutram - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மன்னிக்க முடியாத குற்றம்

    Mannikka Mudiyatha Kutram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    உதயா வாஷ்பேசின் முன்பாக வந்து நின்றாள். கண்ணாடியில் உதயாவைப் பார்த்தாள். கன்னங்களை உப்பல் பண்ணிப் பார்த்தாள். உள்வாங்கி உதடுகளைக் குவித்துப் பார்த்தாள். இடமும் வலமுமாக திரும்பிக்கொண்டு ஓரக்கண்ணால் பார்த்தாள்.

    நீ என்ன அவ்வளவு அழகா?

    ஏதோ ஒரு வசீகரம் இந்த முகத்தில் புதைந்திருக்கிறது. அது என்ன? அளவாக கத்தரிக்கப்பட்ட இந்தப் புருவங்களா? சற்றே நீளமான இந்த நாசியா? எப்போதும் பளபளக்கும் இந்த உதடுகளா? தெற்றுப் பல்லா? நெளியும் கூந்தலா?

    உதயா, நீ ரொம்ப அழகா இருக்கே.

    அந்த கம்பீரமான ஆண்குரல் அவள் காதருகில் ஒலித்தது இதழ்களில் புன்னகை விரைந்து வந்தமர்ந்தது.

    உதயா, காபி கலந்துட்டேன்.

    அம்மாவின் குரல் கேட்டதும், இதோ வந்துட்டேன் என்று ஒட்டும் பொட்டை எடுத்து கண்ணாடியில் ஒட்டினாள். சரிந்த துப்பட்டாவை தனியாக எடுத்து இடுப்பில் முடிச்சிட்டுக்கொண்டு அவசரமாக முகம் கழுவினாள்.

    பூத்துவாலையால் முகம் துடைத்தபடி சமையலறைக்கு வந்து காபி தம்ளரை எடுத்துக்கொண்டு, ராத்திரி சமையலுக்கு காய்கறி நறுக்கித் தரட்டுமா? என்றாள் அம்மாவிடம்.

    கழுவின பாத்திரங்களை அதனதன் இடத்தில் அடுக்கிக் கொண்டிருந்த அம்மா, என்ன திடீர்னு பொறுப்பு? என்றாள்.

    குளிர்சாதனப்பெட்டி திறந்து இரண்டு பிஸ்கெட்டுகளை எடுத்துக் கடித்து, ஒருவாய் காபி குடித்து, நான் இன்னும் அரை மணி நேரம் கழிச்சு புறப்பட்டாப் போதும்மா. அதுவரைக்கும் உனக்கு ஏதாவது உதவி செய்யலாமேன்னுதான்.

    புறப்படறியா? எங்க போறே?

    நான் சொல்லட்டுமா? என்றாள் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் கார்ட்டூன் எலியை கார்ட்டூன் பூனை துரத்துவதைப் பார்த்துக்கொண்டிருந்த உதயாவின் தங்கை பவித்ரா.

    உன்னைக் கேட்டாங்களா? என்று பாய்ந்தாள் உதயா.

    அவகிட்ட ஏன் சீறி விழறே? நான் கேக்கறேன். பதில் சொல்லு. எங்கப் போறே?

    வேலை விஷயமா ஒரு கம்பெனி மேனேஜரைப் பார்க்கணும்மா... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை! கம்பெனி உண்டா? என்றாள் பவித்ரா .

    வந்தேன்னா அறைஞ்சிடுவேன்! அம்மா, ஒரு மேனேஜரை அவர் வீட்ல போய்ப் பார்க்கணும். இன்னிக்குதான் ஓய்வா இருப்பாரு.

    வீட்டுக்குப் போய் எதுக்குடி பார்க்கணும்?

    அய்யோ! அம்மா! அவருக்குக் கல்யாணமாகி மூணு குழந்தைங்க உண்டு. அப்பாகிட்ட படிச்சவரும்மா. அப்பா இறந்து ரெண்டு வருஷமாச்சின்னு நான் சொன்னதும் அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சி. கண்டிப்பா எனக்கு உதவி செய்றேன்னு சொல்லியிருக்கார்.

    குடித்து முடித்த காபி தம்ளரை மேடையில் வைத்தாள் உதயா.

    நீயும் ஒரு வருஷமா வேலைக்கு முயற்சி பண்றே. எதுவும் கிடைக்கமாட்டேங்குதே. இவர் மூலமாவாவது கண்டிப்பா கிடைக்குமா? என்றான் கவலையோடு அம்மா.

    கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கும்மா. நான் குளிச்சுட்டு வந்துடட்டுமா?

    "கொஞ்சம் இரு உதயா. எனக்கு ஒரு விளக்கம் சொல்லிட்டுப் போ! என் தம்பி எக்ஸ்போர்ட் பிசினெஸ் பண்றான்னு உனக்குத் தெரியும்

    போன வாரம் வந்தப்போ நீ பி.காம். படிச்சுட்டு வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருக்கிறதைப் பத்தி சொன்னேன்."

    உடனே என் அருமை மாமா தன் ஆபீஸ்ல வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னாரா?

    எப்படிடி கரெக்ட்டா சொல்றே?

    மாமா குணத்தை நான் அந்த அளவுக்குப் புரிஞ்சி வைச்சிருக்கேன்ம்மா.

    நீ என்ன சொல்றே? அவனைப் போய்ப் பாரேன், முன்னேப் பின்னே தெரியாத ஒரு இடத்துக்கு வேலைக்குப் போறதுக்கு... மாமா ஆபிஸ்ல வேலை பார்த்தா உனக்கும் ஒரு பாதுகாப்பா இருக்குமே உதயா?

    போலாம். தப்பில்லை. உன் தம்பி உனக்கு மாப்பிள்ளையா மாறணும்னு உனக்கும் ஆசை இருந்தாச் சொல்லு. நான் மாமா ஆபீசுல சேர்ந்துடறேன்.

    கழுதை! என்ன பேச்சுடி இது? கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா அவனுக்கு. தெரியுமில்லை?

    அதை நீயும், நானும் ஞாபகம் வெச்சிருக்கோம். அவரு அடிக்கடி மறந்துடறாரு.

    என்னடி புதிராப் பேசறே?

    அம்மா, நானும் சொல்லக்கூடாதுன்னுதான் இத்தனை நாளா அடக்கி வைச்சிருந்தேன். உன் தம்பி உனக்கு முன்னால என்கிட்டயும், பவித்ராகிட்டயும் பேசற முறையும், நடந்துக்கற முறையும் வேற! நீ இல்லாதப்போ நடந்துக்கற முறை வேற!

    என்ன சொல்றே நீ! அவனுக்கு வயசு அம்பது.

    அதை அட்வாண்ட்டேஜா எடுத்துக்கறார். என்கிட்ட ஒருதடவை என்ன கேட்டார் தெரியுமா? நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா அத்தையை தள்ளி வைச்சிடறாராம்.

    அது சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பான்!

    அது விளையாட்டு இல்லைம்மா, விஷமம்! ஒரு ஆம்பளையோட பார்வையில இருக்கிறது பாசமா, வேஷமான்னு புரிஞ்சுக்கற வயசுக்கு நான் எப்பவோ வந்தாச்சு. இந்தப் பேச்சை விட்டுடு...

    மாமாவின் முகத்திரையைக் கிழித்த மாவீராங்கனை வாழ்க! என்று கை தட்டினாள் பவித்ரா கூடத்திலிருந்து.

    இவ ஒருத்தி எல்லாமே இவளுக்கு விளையாட்டுதான் என்றாள்.

    அம்மா சலிப்புடன்,

    உதயா குளித்து காட்டன் சூரிதார் உடுத்திக்கொண்டாள். துப்பட்டாவை ஒரு தோளில் மட்டும் துண்டு போல போட்டுக் கொண்டாள். அக்கறையாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.

    காதோர உதிரிக் கூந்தல் கற்றையை பென்சிலில் சுருட்டி விடுவித்து சுருள் செய்து, உதட்டுக்கு உறுத்தாத சிவப்புச் சாயம் பூசிக்கொண்டாள். அதே சிவப்பு நகப்பூச்செடுத்து நகங்களில் போட்டபோது

    "வேலை கேக்கப் போறதுக்கு இவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1