Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thozha, Thotru Po!
Thozha, Thotru Po!
Thozha, Thotru Po!
Ebook96 pages35 minutes

Thozha, Thotru Po!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வசந்தகேசவ் ஒரு வைர வியாபாரி. அவர் பரத்திடம் ஒரு உதவி கேட்கிறார். அந்த உதவி என்ன? அதனால் பரத் மேற்கொண்ட தடைகள் என்ன? இறுதியில் பரத் அந்த உதவியை எவ்வாறு செய்து முடித்தான்? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான பாணியில் படிப்போம்...

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580100908178
Thozha, Thotru Po!

Read more from Pattukottai Prabakar

Related to Thozha, Thotru Po!

Related ebooks

Reviews for Thozha, Thotru Po!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thozha, Thotru Po! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தோழா, தோற்றுப் போ!

    Thozha, Thotru Po!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    ராஜன் செத்துக் கிடந்தான். சுற்றிலும் ரத்தம்.

    என்று எடுத்த எடுப்பிலேயே அவ்வளவு சுலபமாக இந்த நாவல் துவங்கப் போவதில்லை. ஜனநாயகத்தை மதித்து ஒரு தேர்தல்!

    1. அவள் இருமினாள், லொக், லொக்.

    2. அவன் சொன்னான், ஐ லவ் யு!

    3. அவர் சொன்னார், மொத்த மதிப்பு இருபது லட்சம்.

    மேற்கண்ட மூன்று வாக்கியங்களில், உங்கள் கண்களில் குளம், குட்டை, ஏரி வாய்க்கால் எல்லாம் வரவேண்டுமானால் முதல் வாக்கியத்தைத் தேர்ந்தெடுங்கள். ஜிலுஜிலு என்று காதல் கதை விரும்புபவர்கள் இரண்டாம் வாக்கியத்திற்கு ஓட்டுப்போடுங்கள். ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் தேவைப்படுபவர்கள் மூன்றாம் வாக்கியத்தில் முத்திரை குத்துங்கள்.

    தேர்தல் முடிந்துவிட்டது.

    ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையம், செய்திகள் வாசிப்பது ‘இன்னார்’ மயிலவன் நாவல் தொகுதிக்கான இடைத் தேர்தலில் மூன்றாம் வாக்கியம் என்ற வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

    ஆகவே...

    1

    அவர் சொன்னார், மொத்த மதிப்பு இருபது லட்சம்.

    அவர் என்பது திரு. வசந்தகேசவ்.

    இதைச் சொன்னது இங்கே அல்ல; இரண்டாவது அத்தியாயத்தின் நடுவில். இங்கே...

    சூரியன் தீக்குச்சி கிழித்தான்.

    வானம் வணங்கி வெளிச்சம் பெற்றுக்கொண்டது. நியமப்படி, மொட்டுக்கள் மலர்ந்தன. மாடுகள் மடி நிறைய பால் சேர்த்து வைத்துக்கொண்டு கோனாருக்காக காத்திருந்தன. குப்பை மேடுகளில் கோழிகள் புதை பொருள் ஆராய்ச்சி நடத்தத் துவங்கின.

    பரத் புரண்டு படுத்தான்.

    அவனுடைய அகன்ற தோள்களையும், ‘ம’க்கு அடுத்த எழுத்துபோல விரிந்த மார்பையும், கொழுத்த கன்னங்களையும், பென்சில் முனைபோல கூரான மூக்கையும், பெரிய அலை, சின்ன அலை, இன்னும் சின்ன அலை எனப் புரளும் கேசத்தையும் வர்ணிக்கப் போவதில்லை,

    பரத் ஒரு கோர்ட்டுக்குப் போகாத லாயர் என்பதும், ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்ப்பவன் என்பதும் மட்டும் இப்போது. மிச்ச விவரங்களை அவனே மிஸ். ஷகிலா கேசவிடம் சொல்வான். ஷகிலா கேசவ் பின்னால் வருவாள்.

    பரத் கண் விழிக்கும், பல் விளக்கும், சோப் தேய்க்கும் விபரங்களை எல்லாம் விட்டுவிட்டோம் என்றால், இதோ பரத் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்கிறான். நேரம் 9-30.

    தீப்பிடித்துவிட்டதைப்போல மக்கள் ஒருவர் காலை ஒருவர் மிதித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். சுவர்களில் புது போஸ்ட்டர்களில் காசு வாங்கிக்கொண்ட கதாநாயகிகள் காண்பித்தார்கள்.

    விசுவாசமாய்த் தன் கம்பெனிக்கு வந்து எதிர்ப்பட்ட லேடி ஸ்டாஃபிடம் இந்த லிப்ஸ்டிக் எங்கே வாங்கினிங்க? என்று அக்கறையாய்க் கேட்டுவிட்டுத் தன் அறைக்கு வந்தான். மேஜையில் நான்கு தபால்கள் ‘காகித கனம்’ வைக்கப்பட்டிருந்தன, எடுத்தான்.

    ஒன்று விஜயவாடாவிலிருந்து நண்பன், ஒரு விசிட் வாடா வாடா என்றான். இரண்டு ‘இந்த லெட்டர் கண்ட மூன்று நாட்களுக்குள் பதில் இல்லை என்றால் மொட்டை பெட்டிஷன் எழுதிப் போடுவேன்’ என்றாள் சுசிலா, அத்தைப் பெண். மூன்று இன்ஷ்யூரன்ஸ் பிரிமிய நோட்டீஸ். நான்கு விபரம் அடுத்த பாராவில்.

    அது யார் அனுப்பிய கவர் என்பது வெளியில் விபரமில்லை. உடைத்து, ஊதி காகிதத்தை வெளியே இழுத்தான்.

    அது ஒரு நாடகத்திற்கான டிக்கெட்!

    அட! காம்ப்ளிமெண்ட்ரியா? கூட கால்வரி கடுதாசிகூட இல்லை. யார் அனுப்பி வைத்தது? டிக்கெட் பார்த்தான். அன்று மாலை ஏழு மணிக்குக் கலைவாணர் அரங்கில் நாடகம் சீட் எண்-14.

    ஆச்சரியமாய் இருந்தது. யாராவது நண்பர்கள் அனுப்பினார்கள் என்றால் கூடவே கடிதம் இருக்காதா? முதல் நாளே வாங்கி ஒழுங்காய் அட்ரஸ் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்திருக்கிறார்கள் யார்?

    இல்லை என்றால் இது ஒரு வகை அழைப்போ, நாடகத்திற்குப் போனால் அனுப்பியவர் வந்து சந்திப்பாரோ? இன்ட்ரஸ்டிங்காய் இருந்தது.

    நாடகத்திற்குப் போவது என்று தீர்மானித்து...

    நூறு ஸ்கூட்டர்களுக்குப் பக்கத்தில் நூற்று ஒன்றாய் நிறுத்தினான் பரத், கார், பஸ், பைக், சைக்கிள், நடராஜா சர்வீஸ்களில் நாடக ஆர்வலர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

    பரத் நேரம் பார்த்தான். 6-45. ஐந்து நிமிடத்திற்கு வெறுமனே நகம் கடித்துக்கொண்டு நின்றுவிட்டு, பின் உள்ளே செல்ல நினைத்து விரலை பல்லுக்குக்கொண்டு செல்கையில்...

    ஹேய் பரத் என்று வந்தவள்

    Enjoying the preview?
    Page 1 of 1