Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharath And Pattampoochi
Bharath And Pattampoochi
Bharath And Pattampoochi
Ebook96 pages50 minutes

Bharath And Pattampoochi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கொடுமைப் படுத்தப்படுகிற பெண்களுக்கும், சமூகத்துக்கும் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை அதிகாரி, சமூக குற்றங்களில் ஈடுபடுகின்றான். அவன் யார் என்று பரத், சுசிலா கண்டுபிடித்தார்களா? சமூக சேவை செய்து பட்டாம்பூச்சியாக பறக்க நினைக்கும் பெண்ணை இறகுகளை முறித்து கொடுமைப்படுத்தியவனுக்கு கடவுள் தந்த தண்டனை என்ன? வாசிப்போம் பரத் & பட்டாம்பூச்சி.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580100908071
Bharath And Pattampoochi

Read more from Pattukottai Prabakar

Related to Bharath And Pattampoochi

Related ebooks

Reviews for Bharath And Pattampoochi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharath And Pattampoochi - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரத் அண்ட் பட்டாம்பூச்சி

    Bharath And Pattampoochi

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    இந்தக் கதையின் முதல் வாக்கியத்திலேயே ஆஜராகிவிட்ட பரத் தனது பிரீஃப்கேசுடன் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தான்.

    தோளில் லெதர்பேகுடன், கழுத்தில் டால்கம் பவுடரின் வெள்ளைக் கோட்டுடன் நின்ற அவள், மடக்கிப் பிடித்த புத்தகத்தில் ஒரு பாரா படிப்பதும், பஸ் வரும் திசையில் பார்ப்பதுமாக இருந்தாள். ஒன்றரையடி இடைவெளி விட்டு அவன் பூக்கள் மண்டின சட்டையும், புகை கசியும் வாயும், ஜீன்ஸ் பின் பாக்கெட்டில் தேதி போடாமல் எழுதி தயாராய் வைத்திருக்கும் காதல் கடிதமுமாக அவளைப் பார்ப்பதுமாக இருந்தான்.

    துண்டு போட்டப் பெரியவர் ‘இந்த நாடு உருப்படாது’ என்கிற சாராம்சத் தகவலை விலாவரியாக கமா, கமாவாகப் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அருகில் நின்ற கண்ணாடிக்காரன் அவரின் கீழ் வேலை பார்ப்பதாலோ அல்லது கைமாற்றாக அவரிடம் ஆயிரம் ரூபாய் வாங்கியிருப்பதாலோ விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனம்போல அவர் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ஒரு பிச்சைக்காரன் அலுமினியப் பாத்திரத்தைக் குலுக்கி பாரபட்சமின்றி எல்லோரையும் தொட்டுக் கேட்க, பேச்சே வைத்துக் கொள்ளாமல் எல்லோரும் துரத்தினார்கள். லாட்டரிச் சிறுவனின் குரலுக்கு இரண்டு பேரிடம் மதிப்பு இருந்தது. ‘பத்து லட்சம் விழுமாடா?’ – ‘கண்டிப்பா விழும் சார்.’

    பரத் பதினைந்து நிமிடம் காத்திருப்பில் வெறுத்துப்போய் காலி ஆட்டோ தேடத் துவங்க... எல்லாம் எதிர் திசையில் ஓடின. இந்த திசையில் தூரத்தில் காலியாய் தெரிந்த ஆட்டோக்களில் கிட்டே வரும்போது ஆட்கள் இருந்தார்கள்.

    அந்த சாக்லெட் நிற மாருதி அவனருகில் வந்து நின்று ஹாரன் அடித்தது. திரும்பிப் பார்த்தான் பரத். டிரைவிங் சீட்டிலிருந்து புன்னகைத்தவளை அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.

    என்ன சார் இங்கே நிக்கறீங்க?

    பரத் அந்தக் கேள்வி தனக்குத்தானா என்று உறுதி செய்துகொள்ள, திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவளுக்கு வேறு யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், மீசை வைத்தவர்கள் எச்சில் விழுங்கினார்கள்.

    என்னையாக் கேட்டிங்க?

    என்ன மிஸ்டர் பரத், என்னை மறந்துட்டிங்களா? என்றாள் லிப்ஸ்டிக்கினவள். மினி டாப்ஸ் காற்றோட்டமாக இருந்தது. கத்திரிக்கப்பட்டத் தன் கூந்தலை ஒரு கையால் நெற்றியில் துவங்கி மேற்புறமாக கோதிவிட்டபடி (அதனால் விளையும் அசைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல்) அவள், எங்க போகணும்? கமான். நான் ட்ராப் பண்றேன் என்றாள்.

    குரலில் ஒரு தேன்கூடே தெரிந்தது.

    ஏதாவது முக்கியமான உயர் அதிகாரியின் மனைவியாக இருக்கப் போய், தான் ஞாபகமில்லாமல் அழைப்பைப் புறக்கணித்தால், அது அநாகரிகமாகப் போய்விடுமே என்பதாலும், மேலும் அவள் கவர்ச்சியாக இருந்ததாலும் பரத் முன் கதவைத் திறந்து அமர்ந்து பிரீஃப்கேசைத் தன் மடியில் வைத்துக் கொண்டான். கார் புறப்பட்டது.

    யோசிக்க ஆரம்பித்தான். யார் இவள்?

    பேங்க் ஆபீஸர்? இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டா? டாக்டர்? ஏதோ ஒரு ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்? புத்தகக் கண்காட்சியில் சந்தித்த கவிதாயினி? டாக்ஷோவில் பார்த்த மிஸஸ் ராம்குமார்? சன் டி.வி.க்காக என்னை இண்ட்டெர்வியூ செய்ய வந்தவள்?

    என்னாச்சு சார் உங்க கார்? என்றாள்.

    கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். இன்னும் டிஸ்சார்ஜ் பண்ணலை. நீங்க தப்பா நினைச்சுக்கிட்டாலும் சரி, உங்களை எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனா உங்க பேர் ஞாபகம் இல்லை என்றான் பரத்.

    மிருதுளா!

    மிருதுளா! என்று சொல்லிப் பார்த்தான். அப்படியும் மண்டைக்குள் மணியடிக்கவில்லை.

    எப்படி இருக்காங்க சுசிலா?

    தற்சமயம் கோபமா இருப்பா.

    ஏன்?

    நான் அரை மணி நேரம் லேட்டு.

    உங்க சொந்த ஆபீஸ்தானே?

    ஆனாலும் அவளுக்கு பங்ச்சுவாலிடி முக்கியம். என்னங்க இது லெஃப்ட்ல திருப்பறிங்க? என் ஆபீசுக்கு நேராப் போகணும்.

    பக்கத்திலதான் என் வீடு. ஒரு சின்ன வேலை இருக்கு. பேங்க் பாஸ்புக் எடுக்கணும். எடுத்துக்கிட்டுப் போயிடலாம்.

    ஏங்க மிஸ். மிருதுளா. நாம் முதன்முதலா எப்போ சந்திச்சோம்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என்று தூண்டில் போட்டான்.

    எப்படி சார் என்னால மறக்க முடியும்? ஏழு, பனிரெண்டு, தொண்ணூத்தி நாலு. என் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோஷமான நாள் அது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத நாள்!

    மிக சுத்தமாகக் குழம்பியது. தூண்டிலில் விடை சிக்கவில்லை. என்ன இது! இவள் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு என்னோடு பேசுகிறாளா? ஆனால் சுசிலாவைப் பற்றி விசாரிக்கிறாளே...

    பரத், நான் ஒண்ணு சொன்னா நீங்க நம்புவீங்களா?

    என்னங்க?

    "தினம் காலைல எந்திரிச்சதும் நான் உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1