Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Othigai
Kaadhal Othigai
Kaadhal Othigai
Ebook245 pages2 hours

Kaadhal Othigai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100900172
Kaadhal Othigai

Read more from Pattukottai Prabakar

Related to Kaadhal Othigai

Related ebooks

Reviews for Kaadhal Othigai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    A very good love come marriage story author has again proved true love always ends in marriage also every man and women has a weak side and emotions

Book preview

Kaadhal Othigai - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

காதல் ஒத்திகை

Kaadhal Othigai

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

கதை சுருக்கம்:

அசோக் - உஷா இருவரும் காதலிக்கிறார்கள். திடீரென ஒருநாள் அசோக்... நாம் சேர்ந்து வாழ முடியாது, பிரிந்துவிடலாம் என்று உஷாவுக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு, சென்னைக்கு மாற்றலாகி போய்விடுகிறான். கடிதத்தை பார்த்ததும் உஷா அதிர்ச்சியடைகிறாள். சென்னைக்கு சென்று அவனை சந்திக்க முயற்சி செய்கிறாள். அசோக் நண்பன் ஜனாவிடம் விவரங்களை சொல்லி, உதவும் படி சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறாள். உஷாவின் அப்பா... அவளுக்கு பதினைந்து நாட்களில் திருமணம் என்று கூறுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் உஷா தவிக்கிறாள். அசோக் உஷாவை பிரிய காரணம் என்ன? உஷாவுடைய திருமணம் நடந்ததா?

1

என்னுயிரே,

மாலைத்தென்றல், மழையின் சாரல், மயிலிறகின் வருடல் - இவை தருகிற சிலர்ப்பைக் காட்டிலும், நூறு மடங்கு அதிகமாக என்னைக் சிலிர்க்க வைப்பது உன் கொலுசுச் சத்தம்!

- உன்னவன்.

நாமக்கல்.

மேற்கு வானம் சிவப்பாய் கம்யூனிஸக் கவிதை எழுதிக் கொண்டிருந்தது. பறவைகள் கூடு திரும்பி, தங்கள் பயணக் கட்டுரையைக் குஞ்சுகளுக்கு வாசித்துக் கொண்டிருந்தன. டீஸல் கரைந்த காற்று வீடு வீடாய், மூக்கு மூக்காய் தட்டி விட்டு நகர்ந்தது.

சன்னதித் தெருவில் இருந்தது அந்த வங்கி. வேலை நேரம் முடிந்து, உள்ளே அனைவரும் வட்டமாக அமர்ந்து காகிதத் தட்டுக்களில் இனிப்பு, காரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சென்னைக்கு மாற்றலாகி விடைபெறும் அசோக்கிற்கு, காலையில் பதவி ஏற்றுக்கொண்ட ஆஃபீசர் மாலை அணிவித்த போது… அனிச்சையாகக் கைதட்டினார்கள்.

அசோக், ஸ்டூல் உதவியில்லாமல் சுவர் கடிகாரத்தின் பெண்டுலம் அசைத்து விட முடிகிற உயரத்தில் இருந்தான். வகிடெடுத்து வாரின தலை, சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டும். மேலுதட்டை ஜீரணம் செய்து விட்ட மீசை, நிகோடின் அறியாத சிவப்புக் கீழுதடு, மெல்லிய நீல நிற நெடுக்குக்கோடுகள் ஓடின வெள்ளை முழுக்கை சட்டையை… அடர் நீல பாண்ட்டில் இன் செய்திருந்தான். விரல்களில் நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டிருந்தன. போனா மாதம் தன் கிராமம் திருவோணம் சென்றிருந்த போது… இரண்டு தங்கைகளுக்கு வற்புறுத்தி வைத்துவிட்ட மருதாணி சிவப்புத் தொப்பிகள், இப்போது நிறம் மங்கி இருந்தன.

அசோக் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையைக் கழற்றி, டீப்பாய் மேல் வைத்தான். புதிய ஆபீஸர் தனது கோட்டில் சொகுசாக இளைப்பாறிய ஒற்றை ரோஜா இதழை சுண்டிவிட்டுவிட்டு, நண்பர்களே, நான் உங்கள் அத்தனை பேருக்கும் புதியவன். இன்று உங்களிடம் இருந்து விடைபெறும் மிஸ்டர் அசோக், சிறப்புற வாழவேண்டும். வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரோடு பணியாற்றிய உங்களில் சிலர், அவரைப பற்றிப் பேசுவது பொருத்தம்.

ஸ்டாஃப் அனைவரும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.

கேஷியர் சார். நீங்க பேசுங்க.

நமக்கு உதறும். சுடர்மணி, நீங்க பேசுங்க.

லட்சுமணன் சார் இருக்கிறப்ப நானா?

என்னை ஏனப்பா இழுக்கறே, ஜீவா நல்லாப் பேசுவாரே!

மாற்றலாகிக்போற மேனேஜர் சார், நாலு வருஷமா நம்மமோட ஒரு ஃபேமிலி ஃபிரண்டு மாதிரி தான் பழகினாரு. இவர்கிட்டே இருக்கிற ஸ்பெஷாலிட்டி என்னன்னா, சுலபத்திலே இவரைக் கோபப்படுத்திட முடியாது. எவ்வளவு வில்லங்கமான கஸ்ட்டமரா இருந்தாலும்... இவர் பொறுமையா சிரிச்சு, முகம் மாறாம டீல் பண்ற விதமே தனி. அது நமக்கெல்லாம் ஒரு பாடம். அதே மாதிரி... இந்த நாலு வருஷத்தில், இந்த பிராஞ்சோட டெபாசிட்டை பிரமிக்கிற அளவுக்கு உயர்த்தியிருக்கிறார். மேனேஜர் சார் நம்மையெல்லாம் விட்டுப் பிரியறது ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. இதுக்கு மேல் வேறு என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு.

அனைவரும் கைதட்டினார்கள்.

லேடீஸ்ல யாராச்சும் பேசுங்களேன், என்றார் ஆபீசர். ஆறு பெண்களையும் பார்த்து.

மணிமாலா எழுந்து கழுத்து மணியைக் கடித்துக்கொண்டு, சில விநாடிகள் யோசித்து விட்டு, நம்ம மேனேஜர் இந்த மாற்றலை அவராக் கேட்டு வாங்கிட்டுப் போறார். அதுக்கான காரணம் என்னன்னு எங்களுக்கெல்லாம் தெரியலை. சினிமா ஹீரோ மாதிரி இருக்கிற நம்ம மேனேஜர், நாமக்கல்ல இருக்கிற அத்தனை பெண்ணுங்களையும் ஒரு கலக்கு கலக்கிட்டார். மெட்ராஸ் போய்... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும். நமக்கெல்லாம் மறக்காம பத்திகை அனுப்பனும் என்றாள்.

பிறகு... ஸ்டஃப் அனைவரின் நினைவாக என்று, ஒரு சிறிய சூட்கேசை அசோக்கிற்குக் கொடுத்தார்கள்.

அசோக் எழுந்து நின்றான். கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு எதுவும் பேசவில்லை.

இந்த நான்கு வருடங்களாக... எனக்கு மிக நல்ல ஒத்துழைப்பைத் தந்த உங்கள் அத்தனை பேருக்கும், என் மனம் நிறைந்த நன்றியைச் சொல்கிறேன். இந்த பிராஞ்சில் எனக்கு எந்தவிதப் பிரச்சனையுமில்லை. பர்சனல் காரணங்களுக்காக தான் இந்த மாற்றலைக் கேட்டு வாங்கியிருக்கிறேன். உங்கள் அன்புக்கும், இந்த பரிசுக்கும் மீண்டும் நன்றி.

கை கூப்பினான் அசோக். கை தட்டிவிட்டு, ஒவ்வொருவராக அவன் கைபற்றி குலுக்கினார்கள். மாலையையும், சூட்கேசையும் எடுத்துக் கொண்டான் பியூன் ரங்கசாமி.

நான் எடுத்துக்கறேன், கொடுப்பா.

இல்லை சார். நான் வரேன். சாமான் எல்லாம் கட்டணும்னு சொன்னீங்க. சேலத்தில் உங்களை ரயில் ஏத்தி விட்டுட்டு, நான் திரும்பறேன்.

இருவரும் ஆட்டோ பிடித்துக்கொண்டு, சேலம் ரோட்டில்... அசோக் வாடகைக்கு எடுத்துக் தங்கியிருந்த மாடி போர்ஷனுக்கு வந்தார்கள்.

உடைகள் எல்லாம் மடித்து வைத்திருந்தான். சொந்த சமையலுக்குப் பயன்படுத்தின ஸ்டவ், சில பாத்திரங்கள், சின்ன சின்ன டப்பாக்களில் மளிகை சாமான்கள் எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்திருந்தான். மடக்கு நாற்காலி, பிளாஸ்டிக் குப்பைக் கூடை, சேவிங் செட், சோப்புப் பெட்டி, ஹேங்கர்ஸ், பெட்ஷீட், தலையணை என்று, எல்லாப் பொருள்களும் பேக்கிங்கிற்குத் தயாராய் இருந்தன. இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள் வாங்கி வைத்திருந்தான்.

ரங்காசாமி ஆணியில் மாலையை மாட்டிவிட்டு, உங்களுக்கு வேற வேலை எதுவும் இருந்தா பாருங்க சார். சுத்தமா நான் இதையெல்லாம் பேக் செஞ்சிடறேன் என்று தரையில் அமர்ந்து கொண்டு பெட்டியை எடுத்தான்.

முக்கியமா யார்கிட்டேயாவது சொல்லிக்கணும்னா, சொல்லிகிட்டு வந்துடுங்க சார்.

அசோக்கின் முகம் இறுகியது. கண்கள் லேசாய் பனித்தன. எச்சில் விழுங்கினான். அவசரமாக அந்த ஹாலைவிட்டு, முன் புற பால்கனிக்கு வந்தான். கைகளைக் கட்டிக்கொண்டு, காற்று அவன் தலையைக் கலைக்க அனுமதித்துக் கொண்டு நின்றான்.

நகரச் சந்தடிகளில் இருந்து விலகி வந்திருந்த அந்த வீட்டின் பால்கனியில் இருந்து பார்க்கையில், எதிரே சேலம் சாலை. நிமிடத்திற்கு இருபது வாகனங்கள் சர், சர் என்று கடந்தன. சாலைக்கு அந்தப் பக்கத்தில் தரிசு நிலங்களுக்கு மத்தியில்... ஆஸ்பெட்டாஸ் வேய்ந்த, வலையடித்த, பள்ளிக்கூட வகுப்பறைகள் போன்ற கோழிப் பண்ணைகள் வரிசையாக... பின்னணியில் சேர்வராய் மலைக்குன்றுகள் வானத்தின் மடியில் நீலம் கரைத்து அவசரமாக விசிறியடித்தது போல.

நான்கு வருடங்கள்! என் வாழ்க்கை சரித்திரத்தில் மறக்கக்கூடாத, முயன்றாலும் முடியாத மாபெரும் அத்தியாயத்தை அமைத்த நான்கு வருடங்கள்! ஆனால், அத்தியாயத்தின் கடைசி வாக்கியம் எழுதப்பட்டபோது... இங்க் தீர்ந்து போய்... கண்ணீர் ஊற்றி எழுதப்பட்டிருக்கிறது.

அசோக்கின் கண்கள் சிவந்து, அதில் துளிகள் முகாமிட்டன. உதடுகளை அழுத்தமாய்ச் சேர்த்து... தான் உடைந்துவிடக் கூடாதென்று பிடிவாதமாகக் கட்டுப் படுத்திக்கொண்டான்.

முக்கியமாக யாரிடமாவது சொல்லிக் கொள்ள வேண்டுமா என்று கேட்கிறான்.

இந்த ஊரில் உன் ஒருத்தியைத் தவிர, வேறு யார் எனக்கு முக்கியம் உஷா? ஆனால், இந்த விநாடி வரை... நான் மாற்றலாகிப் போவது உனக்குத் தெரியாது. உன்னிடம் சொல்லிக்கொள்ள எனக்கு தைரியம் இல்லை உஷா.

ஒரு புகழ் பெற்ற பாங்கின் பிராஞ்ச் ஆபீஸர் தான். ஆனால், அது உத்தியோக வேடம். உள்ளுக்குள் நான் அடிப்படையாய் மனிதன். உணர்ச்சிகளுக்குக் கட்டுப்படுகிற ஒரு சராசரி மனிதன். உன்னை நேரில் சந்தித்தால், நிச்சயமாக உடைந்துபோய் தேம்பித் தேம்பி அழுது விடுவேன் உஷா.

பதினைந்து நாட்களாக... தினம் இரவுகளில் என் கண்ணீரை உறிஞ்சி, உறிஞ்சி பஞ்சு நனைந்து, என் தலையணை கனத்துப் போய்விட்டது யாருக்குத் தெரியும்? ஆண்பிள்ளை அழுவது அசிங்கம் என்பது இலக்கிய வரியாகவே இருக்கட்டும். யதார்த்த வாழ்வில் அழுகிற ஆண்கள் நிறைய பேரை எனக்குத் தெரியும். பெண்கள் எவர் முன்னிலையிலும் அழத் தயார். ஆண்கள் எப்போதுமே ரகசியமாக மட்டும்.

உஷா... நம் இருவரின் விதியை அல்லது எனது விதியை எழுதிய பிரம்மன், வரிசையாக தவறுகள் செய்து விட்டான். முதல் தவறு – நான் நாமக்கல்லிற்கு மாற்றலாகி வந்தது. இரண்டாவது தவறு - நாம் சந்தித்தது. மூன்றாவது தவறு - பரஸ்பரம் இருவரைப் பற்றி ஒருவர் சிந்தித்தது. நான்காவது தவறு - சிந்தித்தைப் பகிர்ந்து கொண்டது. ஐந்தாவது தவறு - நம் அன்பிற்கு காதல் என்று பெயர் சூட்டியது. ஆறாவது தவறு...

சார், ஸ்டவ்வுல இருக்கிற மண்ணெண்ணெயை எடுத்துடட்டுமா? இல்லைன்னா பெட்டி பூரா கசிந்திடும் என்ற ரங்கசாமியின் குரலால் கலைந்து உள்ளே வந்தான் அசோக்.

அவனோடு சேர்ந்து பேக்கிங் வேலைகளில் ஈடுபட்டான். எல்லாம் முடிந்ததும், ரங்கசாமி, ஆறு லக்கேஜ் ஆய்டுச்சி. கார் எடுத்துக்கிட்டு போய்டலாம். என்னை வழியனுப்பிட்டு, அதே கார்ல நீ திரும்பிடலாம். டயம் ஆச்சி. நீ போய் வாடகை பேசி... ஒரு கார் எடுத்துட்டு வந்துட்டியின்னா சரியா இருக்கும்.

ரங்கசாமி போனதும் இறங்கி வந்து... கீழேயிருந்த வீட்டுக்காரரிடம் அந்த மாத வாடகையைக் கொடுத்து விட்டு, எழுதிக் கொடுத்த வாடகைப் பத்திரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு மேலே வந்தான்.

சூட்கேஸ் திறந்து காகிதம், பேனா எடுத்து... சூட்கேஸ் மேலேயே வைத்து எழுதத் துவங்கினான்.

‘என்னுயிரே உஷா, மன்னிக்கவும். இனிமேல் அப்படி உரிமையுடன் அழைக்க மனம் நெருடுகிறது. அன்புள்ள செல்வி உஷா அவர்களுக்கு...’

சரசரவென்று இரண்டு பக்கங்கள் எழுதி முடித்து மடக்கி, கவரில் போட்டு ஒட்டினான். பாண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

டாக்ஸியோடு ரங்கசாமி வந்தான்.

ரங்கசாமி இந்த காலண்டர்ஸ், மண்பானை இதெல்லாம் நீ நாளைக்கு வந்து உன் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்டு. இந்த நியூஸ் பேப்பர்ஸ் எல்லாம் எடைக்குப் போட்டு, பணம் நீ எடுத்துக்க என்ற அசோக்... அந்த அறையில் இன்னும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்று பார்த்தான்.

சுவரில் மைக்டைசனின் வர்ணப் புகைப்படம் ஒட்டியிருந்தது.

உஷா தனது இரட்டைப் பின்னல்கள் அசைய கலகலவென்று சிரித்து, என்ன அசோக் இது, எல்லாரும் பொம்பளை படமா ஒட்டுவாங்க, இல்லைன்னா பாப்மியூசிக் பாடறவங்க, இல்லைன்னா சினிமா நடிகர்கள்னு ஒட்டுவாங்க. நீங்க என்ன குத்துச்சண்டை வீரனை ஒட்டிவச்சிருக்கீங்க? என்றாள்.

மற்ற எல்லாரையும் விட உடல் உறுதியும், மன உறுதியும் ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு அதிகம் இருக்கணும் உஷா. குத்த வர்ற இந்த போஸ், எனக்கு சிம்பாலிக்கா வேறு ஒரு சேதி சொல்ற மாதிரி படுது.

என்ன அது?

வாழ்க்கைல என்ன பிரச்சனை எதிர்ல வந்தாலும்... ‘டுஷும்! டுஷும்’னு குத்தித் தள்ளிடணும்னு, ஒரு சேதி சொல்ற மாதிரி படுது.

எல்லாத்துக்கும் ஒரு கற்பனை சேர்த்துடறிங்கப்பா. இதே மாதிரி எனக்கு ஒரு படம் கிடைக்குமா அசோக்? என் ரூம்லயும் ஒட்டிக்கிறேன்.

வாங்கித்தர்றேன்

ஏனோ வாங்கித்தர முடியாமலேயே போயிற்று.

ரங்கசாமி, இந்த போஸ்ட்டரைக் கிழிக்காம எடுக்க முயுமான்னு பாரேன். அங்கங்கே ஸெல்லோடேப் தான் போட்டிருக்கேன்.

ரங்கசாமி மெனக்கெட்டு அந்த போஸ்ட்டரைப் பிய்த்துக் கொடுக்க... அதை எட்டாக மடக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டான் அசோக்.

சேலம் வந்து... ஜங்ஷனில் தன் எக்ஸ்பிரஸ் கம்பார்ட்மெண்ட் பார்த்து, சார்ட்டில் உறுதி செய்து கொண்டு, பொருட்களை உள்ளே வைத்துவிட்டு இறங்கி, ரயில் புறப்பட ஐந்து நிமிடம் இருந்தபோது...

அசோக் அந்த போஸ்ட்டரின் பின்புற வெள்ளைப் பகுதியல், பேனாவால் எழுதினான் ‘உஷா, பிரச்னைகளுடன் சண்டையிட்டதில், எனக்குத் தோல்விதான். உனக்காவது வெற்றி கிடைக்கட்டும்.’

ரங்கசாமி, எனக்கு ஒரு உதவி செய்யணும் நீ. காவேரி பவுல்ட்ரி தெரியுமே உனக்கு. அங்கே உஷான்னு...

தெரியும் சார். மாணிக்கம் சார் பொண்ணு...

அவங்ககிட்டே இந்த கவரை கொடுத்துடறீயா?

‘சரிங்க’ என்று தலையசைத்து திரும்பிய ரங்கசாமி அட! அதோ பாருங்க. அந்தப் பொண்ணே வந்துகிட்டிருக்குதே! என்றான்.

2

என்னுயிரே,

பெண்ணை வர்ணித்து கவிதை எழுதின, எழுதும் அத்தனை பேருக்கும்… ஒரு இனிய அறிவிப்பு விடுத்துள்ளேன். ‘உங்கள் கற்பனைக்காரியைக் காண ஆவலா? என்னை அணுகவும். என்னவளைக் காட்டுகிறேன்’ என்று.

- உன்னவன்.

ரங்கசாமி சொன்னதை நம்பாமல், அவசரமாகத் திரும்பிப் பார்த்தான் அசோக். கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் சங்கடம்… எல்லாம் சேர்ந்து கொண்டது அவனை.

இளம் மஞ்சள்

Enjoying the preview?
Page 1 of 1