Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhuthoor Kolai Case
Ezhuthoor Kolai Case
Ezhuthoor Kolai Case
Ebook81 pages1 hour

Ezhuthoor Kolai Case

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போலீஸ் அதிகாரியாக கொலைகள் எப்போதுமே ஆச்சரியம் தரக்கூடியது. கொலையாளிகள் சொல்லும் காரணங்கள் விந்தையாகவும், தர்க்க மனதுக்கு நம்பமுடியாத படிக்கும் இருக்கும். சில கொலைகள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து தேடினாலும் கண்டடைய முடியாத இடங்களில் போய் முட்டி நிற்கும். அப்படிப்பட்ட கொலையின் காரணத்தை கண்டறியும் போது வருகின்ற பரவசம் தான் போலீஸ் வாழ்க்கையின் மகுடம். அப்படிப்பட்ட மிகமிக குழப்பங்களும், அசாதாரண நிலைகளையும் கடந்து கண்டடைந்த, உண்மையாக தென் இந்தியாவில் நடந்த ஒரு கொலை சம்பவ கதைதான் இது...

இக்கதையில் மிக மிக தெளிவாக வாசகர்கள் உணர்ந்துக்கொள்ள எளிதாக போலீஸ் உளவியல் விசாரணை முறைமைகள் மற்றும் ஒரு கொலை நடந்த உடனே காவல்துறை தங்கள் பக்கம் செய்யவேண்டிய நடைமுறைகள் அவர்களது செய்கைகள் போன்றவற்றை நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வாசகரும் புரியும்படி எழுதப்பட்ட குறுநாவல்.

Languageதமிழ்
Release dateDec 27, 2022
ISBN6580159709333
Ezhuthoor Kolai Case

Read more from Rakesh Kanyakumari

Related to Ezhuthoor Kolai Case

Related ebooks

Related categories

Reviews for Ezhuthoor Kolai Case

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhuthoor Kolai Case - Rakesh Kanyakumari

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எழுத்தூர் கொலை கேஸ்

    Ezhuthoor Kolai Case

    Author:

    ராகேஷ் கன்யாகுமரி

    Rakesh Kanyakumari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rakesh-kanyakumari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி-I

    பகுதி-II

    பகுதி-III

    பகுதி-IV

    பகுதி-V

    பகுதி-VI

    பகுதி-I

    மழையின் சத்தத்தை தாண்டி ரோட்டில் ஓடும் நீரினை இருபுறமும் பெய்தபடியே வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. முன்கண்ணாடியில் விழும் நீர் துளிகளை உறுமியபடி துடைத்து தள்ளிக்கொண்டிருந்த துடைப்பானை நோக்கியபடி யோசித்துக்கொண்டிருந்த வர்கீசை, பின்னால் இருந்து கேட்ட ‘சார்...’ என்ற ஒலி சுயநினைவுக்கு இழுத்து வந்தது.

    ம்ம்...

    சார், கேஸ் பைல் நாம நினைச்சதை விட சிக்கலானது போல தான் தெரியுது. எஸ்.பி. ஆபீஸ் லிங்கம் சொன்னாரு.

    ம்ம்ம்...

    இதேப்போல் வேறு ரெண்டு, மூணு கேசும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில இருக்கு. நமக்கு எதை கொடுக்கப்போறாங்கன்னு தெரியல்ல. கொஞ்ச நாள் முன்னால கலெக்டர் ஆபீஸ் பின்னாடி ஒரு பொம்பளைய கொன்னு முகத்தை சிதைத்து போடப்பட்ட கேஸ் இதுவரைக்கும் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கு. இன்னொண்ணு இருதய அறுவை சிகிச்சை டாக்டர் நந்தகுமாரை கொன்ற கேஸ். வீட்டில் படுத்திருக்கும்போது அவரையும், காவலுக்கு நின்றிருந்த காவலாளியையும் கொன்றிருக்கிறார்கள். டாக்டர் மேல்மாடியிலும், கீழ்மாடியில் அவரது அம்மாவும். வீட்டில் கொலையாளி வந்ததற்கான எந்த தடமும் இல்லை. மிகப்பெரிய ஆச்சரியம், கொலைச்செய்யப்பட்ட டாக்டர் படுத்திருந்த அறை உள்ளே தாழிடப்பட்டிருந்தது தான். ஒருவேளை அந்த கேஸ் கிடைத்தாலும் ஓகே தான். இன்னும் ரெண்டு மூணு கேஸ் இருக்கு. ஆனா லிங்கம் அண்ணாச்சி சொன்ன கேஸ் நமக்கு கிடைக்காம இருந்தா கொஞ்சம் நல்லது. சார்...

    ம்ம்ம்...

    நீங்க சி.டி.டீ (C.D.T) ட்ரைனிங்-ல இந்தியாவில கோல்ட் மெடல் வாங்கிய ஆள் அப்படின்னு கேள்விப்பட்டேன். உண்மையா சார்?

    ம்ம்ம்...

    ஆனா, அண்ணாச்சி சொன்ன கேஸ் உண்மையிலேயே பெருசா பொதுமக்கள் எதிர்பார்க்கிற கேஸ். நேற்றே ஊர் எம்.எல்.ஏ. அறிக்கை வேற கொடுத்திருக்காரு. இந்த கேஸ் பிடிச்சிட்டு தான் மறுவேலை அப்படின்னு. அவங்களுக்கு வோட்டு கிடைக்க நாம கொஞ்ச நாள் இனி தண்ணி இல்லாம சாகணும்.

    ம்ம்ம்...

    வாகனம் மெதுவாக எஸ்.பி. ஆபீஸ் உள்ளே நுழைந்து நின்றது. வெளியில் இறங்கிய சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்.ஐ. வர்கீசை பார்த்தவுடனே முன்வாசலில் நின்ற அனைத்து காவலர்களும் கொஞ்சம் நிமிர்ந்தனர்.

    மழை இப்போது சாரலாக மாறியிருந்தது.

    மாதவன் நாயர் மெதுவாக இறங்கி கதவை சாத்துவதற்குள், வர்கீஸ் மாடிப்படியை கடந்திருந்தார். அவரது வேகத்தை பார்த்தவுடனே தெரிந்தது இனி நாலைந்து மாதம் தூக்கம் இல்லையென்பது. டிரைவரிடம், தனது வலது பெருவிரலால் முன்நெற்றியில் கோடு ஒன்றை வரைந்து’விதி' என காட்டியபடி பின்னால் வேகமாக இறங்கி ஓடினார்.

    அறிவாளி சார்-இன் அறையை திறந்து உள்ளே அமர்ந்திருந்தார் வர்கீஸ். இருவரும் முகமன்களை பரிமாறி முடித்திருந்தனர்.

    வர்கீஸ். நாயர், உங்களோடு இருக்கிறது பெரிய பிளஸ். இன்னும் கொஞ்ச வருசம் தான் அவருக்கு சர்வீஸ். ஆனா இந்த மாவட்டதில அவரு வேலை பார்க்காத ஸ்டேஷன் ஒண்ணு கூட கிடையாது என்றபடி சிரித்தார் அறிவாளி ஐ.பி.எஸ்.

    ப்ளாக் வார் போடாம இந்த கேஸ் டைரி க்ளோஸ் ஆகக்கூடாது என்பதில் அந்த ஊரும், எம்.எல்.ஏ வும் மும்முரமாக இருக்கிறார்கள். அதனாலத்தான் உங்களை கூட்டி வந்திருக்கேன். நீங்க அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால், அதிகபட்சம் மூணு மாதங்களில் ரிசல்ட் எதிர்பார்க்கிறேன்.

    ம்ம்ம்... நிச்சயமாக...

    நாயர், இதை வச்சுக்கோங்க என்றவாறே கேஸ் கட்டை அவரிடம் நீட்டிய வர்கீஸ் எஸ்.பி.யிடம் விடை பெற்றுக்கொண்டு நேராக கான்டீன் நோக்கி நடந்தார். பின்னால் நாயர். இரண்டு டீயை நாயர் சொல்லும்போதே கேஸ் பைலை பிரித்தார், வர்கீஸ். வெளியே மழை மீண்டும் தீவிரமானது.

    ***

    மாதவன்...

    சொல்லுங்க சார்...

    எழுத்தூர் எந்த பக்கம் இருக்கு?

    சார், ஆவட்டி ஜங்ஷன்-ல இருந்து கிழக்கு பக்கமாக கீழ் நோக்கி ஒரு ரெண்டு கிலோமீட்டர் சின்ன சிமிட்டி ரோடு போகும். அந்த ஏரியா பூராவும் எழுத்தூர் தான் சார். சின்ன கிராமம். ஊர்ல நடந்த முதல் கொலை கேஸ் இது. அந்த எல்கையில இருக்கிற நாரைக்கிணறு

    Enjoying the preview?
    Page 1 of 1