Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Please... Please... Bharath!
Please... Please... Bharath!
Please... Please... Bharath!
Ebook92 pages51 minutes

Please... Please... Bharath!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லாரன்ஸ் என்பவன் தனியார் கம்பெனியில் பணிபுரிபவன். இவனின் மனநிலை பாதிக்கப்பட காரணம் என்ன? லாரன்ஸ் மற்றும் கார்த்திகேயனுக்கும் உள்ள தொடர்பு என்ன? கார்த்திகேயன் ஏன் பிணமாக கண்டறியப்பட்டான்? இது விபத்தா? அல்லது கொலையா? இப்படி பல திருப்பங்களை உள்ளடக்கிய ப்ளீஸ்... பரத்தை வாசித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580100908087
Please... Please... Bharath!

Read more from Pattukottai Prabakar

Related to Please... Please... Bharath!

Related ebooks

Reviews for Please... Please... Bharath!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Please... Please... Bharath! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ப்ளீஸ்... ப்ளீஸ்... பரத்!

    Please... Please... Bharath!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    மகிழம்பூர். தஞ்சை மாவட்டத்தின் தெம்பான கிராமங்களில் கொஞ்சம் பெருமையும் கொண்டிருக்கும் கிராமம். ரயில்வே ஸ்டேஷன் இருப்பது ஒரு பெருமை. எந்தக் கோடையிலும் வற்றாத ஏரி இருப்பது ஒரு பெருமை. ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இரண்டு பெருமைகளும் அருகருகே இருக்கின்றன. சுற்றுப்பட்டு அறுபது கிராமங்களின் தாகத்திற்கு இந்த கடம்பா ஏரிதான் பதில் சொல்லிவருகிறது.

    ‘கடம்பா’ என்ற பெயர் காரணம் தொண்ணூறு வயது தாண்டிய முதுமக்களை விசாரித்தால் சொல்வார்கள். நமக்கு அது அவசியமில்லை.

    நாம் மயில்சாமியைப் பார்க்கலாம்.

    அந்த ஐந்து மணி விடிகாலையில் அரைகுறையாகத் துடைத்த அரிதார முகமாக வானம் கலங்கலாக நிறம் மாறிக்கொண்டிருந்தது.

    மரங்கள் இன்னும் பச்சை நிறத்திற்கு வராமல் கறுப்பாகத்தான் தெரிந்தன. சில் வண்டுகளின் சுருதி இன்னும் இருந்தது.

    மயில்சாமி ஏரியை நோக்கிச் செல்லும் செம்மண் சாலையில் தனது ஒற்றை மாட்டு வண்டியை ‘ஹே... ஹேய்’ என்று விரட்டிக் கொண்டிருக்கிறான். தலையில் முண்டாசு. காதில் ஒற்றை பீடி, புஜத்தில் கறுப்புக் கயிற்றில் தாயத்து. ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ என்று உற்சாகமாக வாய்விட்டுப் பாடியபடி வண்டியை ‘ஓ... ஓ...’ என்று ஏரிக்கரையின் ஓரத்தில் நிறுத்தினான்.

    குதித்து இறங்கினான்.

    ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு ஏரி இருந்தது.

    தண்ணீர் காற்றில் சிலுசிலுத்தது. ஒரு பக்கமாக நிறைய தாமரைப் பூக்களும், இலைகளும் மேற்பரப்பில் மண்டியிருந்தன.

    மயில்சாமி, ட்ரம்மில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதற்கு முன்பாக முதல் காரியமாக பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான்.

    ‘எதிரொலி கேட்டான். வானொலி படைத்தான்.

    எதனைக் கண்டான்? மதத்தினைப் படைத்தான்?’ என்று பாடியபடி பீடியின் வெப்ப சுகத்தை நுரையீரல்களுக்கு வழங்கினான்.

    தண்ணீர் அள்ளுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வாய் வெட்டின பிரிட்டானியா உயர டின்னை எடுத்துக்கொண்டு ஏரியில் இறங்கினான்.

    தெளிவான நீரை ஒரு டின் அள்ளிக்கொண்டு வண்டிக்கு வந்தான். பெயிண்ட் அடித்து மயில்சாமி தண்ணீர் வண்டி என்று எழுதப்பட்ட ஒரு காலத்து கிரீஸ் ட்ரம் படுக்க வைக்கப்பட்டு அதன் வயிற்றில் திறப்புச் சதுரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் குப்பை வடிகட்ட வாயில் துணி போட்டிருந்தான். அதன் மேல் மொண்டுவந்த தண்ணீரை ஊற்றிவிட்டு இரண்டாவது நடையாக ஏரிக்குச் சென்றான்.

    ஐந்தாறு முறை அவன் ஊற்றி டிரம்மை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, சூழ்நிலையில் வெளிச்சம் அதிகரித்துக்கொண்டிருந்தது.

    அருகாமை ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரியும் மதுசூதனன் தன் லூனா மொபட்டில் ஏரியைக் கடந்த போது, குட்மார்னிங் சார் என்றான் கத்தலாக.

    ஸ்டேஷன் மாஸ்டர் அந்த ஊருக்கு ஒரு கலெக்டரைப் போல, சோளம், காரட், கிழங்கு, கரும்பு, மாம்பழம் எல்லாம் இலவசமாக வீட்டுக்கு வரும். மதுசூதனன் கையை மட்டும் அசைத்து விட்டுப் போய்விட்டார்.

    ஸ்டேஷன் வாசலில் தன் வண்டியை நிறுத்தி அவர் சில்ஹவுட்டாக நடந்து தன் அறைக்குள் நுழையும் வரை பார்த்துக்கொண்டிருந்த மயில்சாமி தன் வேலையைத் தொடர நீர்நிலைக்குச் சென்று குனிந்த போது பதினைந்தடி தள்ளி அவன் கவனம் திரும்பியது.

    தாமரை இலைகள் சூழ்ந்திருக்க... அதற்கு நடுவில் நீட்டிக் கொண்டிருப்பது என்ன? மரக்கட்டையா? மரக்கட்டை போலத் தெரியவில்லையே...

    மயில்சாமி கண்களை ஒருதரம் தேய்த்து விட்டுக்கொண்டு குறை வெளிச்சத்தில் ஊடுருவிப் பார்த்தான்.

    மரக்கட்டைக்கு விரல் இருக்குமா என்ன?

    அய்யோ!... அது... அது ஒரு மனித உடம்பா?

    மயில்சாமிக்கு முதுகுதண்டில் சிலிர்த்தது.

    ஓட்டமாக ஸ்டேஷனுக்கு வந்து மூச்சிரைத்தான்.

    தன் சிகரெட்டை அப்போதுதான் பற்ற வைத்த மதுசூதனன், என்னய்யா இப்படி ஓடி வர்றே? என்றார்.

    சார்... ஏரியில, ஏரியில... பொணம் சார்!

    பொணமா? என்னய்யா சொல்றே நீ?

    ஆமாம் சார். வந்து பாருங்களேன்.

    மதுசூதனன் சிகரெட்டை வீச மனமில்லாமல் இரண்டு இழுப்பு அவசரமாக இழுத்துக்கொண்டு, வா, போய் பார்க்கலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1