Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nerungathey Neruppu
Nerungathey Neruppu
Nerungathey Neruppu
Ebook142 pages1 hour

Nerungathey Neruppu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580100905641
Nerungathey Neruppu

Read more from Pattukottai Prabakar

Related to Nerungathey Neruppu

Related ebooks

Related categories

Reviews for Nerungathey Neruppu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nerungathey Neruppu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நெருங்காதே நெருப்பு

    Nerungathey Neruppu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனை சமீபித்துக் கொண்டிருந்ததை, சக பயணிகள் பரபரப்பாக தங்கள் பெட்டிகளை எடுத்துக் கொள்கிற - குனிந்து தேடி செருப்புகளை அணிந்து கொள்கிற - சப்தங்களில் உணர முடிந்தது.

    போர்வையை விலக்கி விட்டு எழுந்து கொண்டேன். பின்னல் சப்பையாக நசுங்கிப் போய், காய்ந்து போன மல்லிகைப் பூக்கள் என் பர்த் பலகையில் நிறைய உதிர்ந்திருந்தன. எழுந்து டாய்லெட் அறைக்கு வந்து நெகிழ்ந்திருந்த புடைவையை சரியாகக் கட்டிக்கொண்டு வெளியே கண்ணாடி பார்த்து கையாலேயே கலைந்திருந்த தலையைச் சரி செய்தேன். ஹேர்பின் எடுத்து சரியாகக் குத்திக் கொண்டேன்.

    அருகில் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நின்ற இளைஞன் ஊதின சிகரெட் புகை நேராய் என் முகத்தில் பட்டுக் கரைந்ததில் இருமினேன்.

    பழைய ஆர்த்தியாய் இருந்தால் இந்நேரம் ஒரு பெரிய பிரச்னை இங்கே உருவாகியிருக்கும்.

    மிஸ்டர்! ரயில்ல சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு தெரியாது?

    நிச்சயம் முறைத்திருப்பான். ஒரு பெண் கேள்வி கேட்டால் எல்லா ஆணுக்கும் புதுத் திமிர் சேர்ந்து கொள்ளும். ஒரு பெண் புன்னகைத்தால் எல்லா ஆணுக்கும் புதுத் தயக்கம் சேர்ந்து கொள்ளும். விதி விலக்கே கிடையாது.

    உங்க வேலையைப் பாருங்க என்றிருப்பான்.

    படித்தவனாய் இருந்தால், மைண்ட் யுவர் பிசினெஸ்.

    காட்டானாய் இருந்தால், அப்படித்தான் பிடிப்பேன். இப்ப என்ன செய்யணுங்கறே?

    சிகரெட் பிடிச்சி காத்தை அசுத்தமாக்கறதுக்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, நல்ல காத்தை சுவாசிக்க விரும்புறதுக்கு எனக்கு அவ்வளவு உரிமை இருக்கு என்று என் வாதம் தொடங்கியிருக்கும்.

    சகல முகங்களும் வேடிக்கை பார்க்கக் குவிந்திருக்கும். ஒரு காட்சி இங்கே உருவாகியிருக்கும் நிச்சயமாக - நான் மட்டும் பழைய ஆர்த்தியாக இருந்திருந்தால்.

    நான் என் இடத்திற்கு வந்து மடக்கின போர்வையை பெட்டி திறந்து வைத்த போது, உள்ளே மேலாக இருந்த புத்தகங்களின் தலைப்புகளை அவசரமாகப் படித்து விட எதிர் பெரியவர் முயன்றதை ஓரக் கண்ணால் பார்க்க முடிந்தது.

    ராத்திரி சென்னையில் ரயில் ஏறி கொஞ்ச நேரத்தில் ஒரு மாத்திரையை விழுங்க எழுந்தவர் ரயிலின் ஆட்டத்தில் தவற விட்டு விட்டார். குறிப்பிட்ட அந்த மாத்திரை உருண்டு அடியில் இருட்டில் எங்கோ ஒளிந்து கொண்டு விட, தன் கனத்த உடம்பு காரணமாக குனிய இயலாத பரிதாபத்தில், 'உதவ மாட்டாயா?' என்பது போல என்னைப் பார்க்க நான் தான் குனிந்து தேடியெடுத்துத் தந்தேன்.

    ரொம்ப தேங்ஸ்ம்மா... பிரஷருக்குப் போட்டுகறது. வேலை பார்க்கறியா? என்று சகஜமாக என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

    அவருக்கு நான் சொல்லுகிற பதிலுக்காக அவரை விட அவருக்கருகில் இருந்த கண்ணாடி இளைஞன் அதிகமாகக் காத்திருப்பதாகப் பட்டது எனக்கு. கையில் வைத்திருந்த வார இதழின் அவன் மடக்கின இந்தப் பக்கத்தில் அரை மணி நேரமாக அதே பாண்ட்ஸ் விளம்பரம். ஒரு பக்கம் படிக்க அரை மணி நேரமா?

    எதிர் வரிசையில் நானும், எனக்கருகில் திருமணமான அந்த இளம் பெண்ணும், அவள் கணவனும். கண்ணாடி கொஞ்ச நேரம் என்னை, கொஞ்ச நேரம் அந்தத் திருமதியை என்று மாற்றி மாற்றி ரகசியமாகப் பார்த்துக் கொள்வதற்கு புத்தகம் ஒரு கவசம்.

    நாகரிகம் உணராதது அவன் தப்பென்றால், சொல்லித் தராதது சமூகத்தின் தப்பு. பெண் ஒரு பிரமிப்பு என்று மாயையைத் தோற்றுவித்தது சமூகமே. இயல்பாய் அவளைப் பார்க்க, அணுகவிடாமல் தள்ளி வைத்து கோடு போட்டது என்றோ ஓர் அபத்தமான தலைமுறை. அந்தத் தொடக்கம்தான் காலரா.

    வீட்டுக்கு ஆண் வந்தால் பெண் சமையற்கட்டுக்கு ஓடுவது என்பது பண்பாட்டின் முதல் பாடம் என்று கற்பித்த முதல் வாத்தியாருக்கு மூளைக் கோளாறு இருந்திருக்க வேண்டும். விலக, விலகத்தான் இங்கே ஆர்வம் அதிகம் என்கிற அடிப்படை சமாச்சாரம் புரியாதவன்.

    பெரியவரின் கேள்விக்கு பதில் சொல்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. காரணம் - பதிலில் குழப்பம் இருக்கிறது. 'வேலை பார்க்கறியா?' என்ற கேள்வி நேற்று கேட்டிருந்தால், என் பதில் ஆமாம் என்பது. இதே கேள்வியை நாளைக் கேட்டாலும், என் பதில் இதுவே ஆனால் இன்றைக்கு இரண்டுங் கெட்டான் நிலை.

    பார்த்த வேலையை விட்டு விட்டு, புதிய வேலை நம்பிக்கையில் இருக்கும் இந்தத் தினத்தில் நான் ஒர் அன் எம்ப்ளாய்ட். ஒரு புதியவரிடம் உண்மை பேசுவதாக இவ்வளவும் சொல்ல முடியாது. சொன்னால் கொக்கி கொக்கியாகக் கேள்விகள் வரும்.

    வேலையை விட்டுட்டியா, ஏன்?

    திருச்சில என்ன வேலை?

    எங்க தங்கப் போறே?

    அம்மா, அப்பாவை எல்லாம் மெட்ராஸ்ல விட்டுட்டு, அங்கே இருந்த நல்ல வேலையை விட்டுட்டு எதுக்காக இங்கே?

    ரயிலை விட்டு இறங்கின நான்காவது நிமிடத்தில் மறந்து போய் விடப்போகிற ஒரு மனிதரிடம் இவ்வளவுக்கும் பதில் சொல்லி என் வாழ்க்கை சரித்திரத்தையே சமர்ப்பிக்க முடியாது. யாரும் மாட்டார்கள்.

    அதென்னவோ பஸ்சை விட ரயிலில் மக்களுக்கு ஒரு சகஜ நிலை வந்து விடுகிறது. சக பயணிகளை ஆர்வமாக கவனிக்கத் தோன்றுகிறது. வலியப் பேச விருப்பம் எழுகிறது.

    பொழுது போக்க சிலருக்கு சிந்தனை, சிலருக்கு புத்தகம், சிலருக்கு அரட்டை. பெரியவரின் பொழுது போக்கிற்கு நான் தீனியாக விரும்பாமல், ம் என்று முனகிவிட்டு எனது புத்தகத்தில் ஆழ்ந்து அவரை அப்படி முகத்தில் அடித்தது போலக் கத்தரிக்க வேண்டாம் என்று தான் தூங்கி எழுந்து இப்போது அவரைப் பார்க்கையில் தோன்றியது. ஒரு 'ஸாரி' சொல்லலாமா என்று கூடத் தோன்றியது.

    ஏன் ஸாரி சொல்கிறேன் என்று புரியாது. ராங்கிக்காரி என்று மனதில் எனக்குப் பட்டம் கொடுத்திருப்பார். அந்த எண்ணம் கலையும். அது கலைந்தால் என்ன கலையா விட்டால் என்ன, சரி போ!

    இப்படித்தான் என்னையறியாமல் நான் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறேனா? என்னுள் உள்ள நான் வேறு. என்னை மற்றவர்களுக்குப் பதிய வைக்கிற நான் வேறு. வலிய அணியும் வேடமில்லை இது. இப்படியே இயல்பாகிப் போனது. இந்த இயல்பில் தான் என் வாழ்க்கை இரையாகிப் போனது.

    ஜங்ஷனில் ரயில் நின்றது.

    இறங்கினதும் மிக லேசான எதிர்பார்ப்புடன் பவானியைத் தேடியலைந்தன என் கண்கள். அவள் வர மாட்டாள் என்று தெரியும், ஏனென்றால் அவளைத் தெரியும். இருந்தாலும்...

    டெலிவிஷன் பெட்டிகளில் இறங்கின எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். இதே சிரித்த முகமும், இதமான வார்த்தைகளும் விசாரணை கவுண்ட்டர்களில் இருப்பதில்லை. எங்கே அவசியமோ அங்கே அலட்சியம். எங்கே அலட்சியமாய் பல பேர் அந்த டெலிவிஷன்களைப் பார்க்காமல் புறக்கணிக்கிறார்களோ அங்கே மகா பவ்யம். முக்கிய கவலையாய் இருக்கும் போது தொந்தரவாய் வந்து சேருகிறவர்களை மனதிற்குள் 'இப்ப ஏன் வந்து தொலைச்சான் இவன்' என்று சலித்துக் கொண்டே சிரித்து, 'வாய்யா, வாய்யா... சௌக்கியமா?' என்று அழைக்கிற வேஷ விருந்தோம்பல் தான் இதுவும்.

    தோளில் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1