Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sithainthavan Varugai
Sithainthavan Varugai
Sithainthavan Varugai
Ebook80 pages1 hour

Sithainthavan Varugai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஊட்டிக்கு தன் காதலனுடன் செல்லும் அமலா. அவர்களுக்கு சென்ற இடத்தில் இரண்டு விதமான இழப்புகள் ஏற்படுகிறது. அந்த இழப்பினால் அவள் வாழ்வில் நிகழ்ந்த துன்பங்களையும், அந்த துன்பங்களில் இருந்து அவள் மீண்டாளா? என்பதையும் அவளின் இந்த நிலமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாளா? என்பதையும் காண்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து சாரலில்...

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580100906980
Sithainthavan Varugai

Read more from Pattukottai Prabakar

Related to Sithainthavan Varugai

Related ebooks

Related categories

Reviews for Sithainthavan Varugai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sithainthavan Varugai - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    சிதைந்தவன் வருகை

    Sithainthavan Varugai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    இயற்கைத் தாய் பாலுக்குப் பதிலாக குளிரை ஊட்டி, ஊட்டி வளர்த்த ஊட்டி. மாலை ஐந்து மணிக்கெல்லாம் சூரியனைத் தொலைத்து விட்டு இருட்டில் மாட்டிக் கொண்டிருந்தது. துப்பட்டி உதறின தூசுப்புகையாய், ஆனால் நெடி ஏற்படுத்தாத பனி சமத்துவத்துடன் உலவிக் கொண்டிருந்தது.

    ஏரியின் ஓரமாக வளைந்து செல்லும் பாதையில் ரஞ்சித்குமாரும், பத்ரிநாத்தும் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள். படகுகள் இல்லாத ஏரியில் அங்கங்கே வெளிச்சப் பிரதிபலிப்பு மட்டுமே சின்ன அலைகளில் அசைந்து கொண்டிருந்ததில் ஒருவித சோகம் இருந்தது.

    கங்காதரன் ஃபைல் முழுக்க படிச்சியா ரஞ்சித்?

    ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்குமார், பத்ரிநாத்தின் கேள்வியில் கலைந்து, கவனிக்கலை, ஸாரி, என்ன கேட்டே? என்றான்.

    போச்சுடா, பொண்டாட்டி ஞாபகமா?

    சேச்சே

    நியாயம் ரஞ்சித். ஹனிமூனுக்குன்னு வந்திங்க. வந்த இடத்தில ஆவி அது, இதுன்னு கலாட்டா ஆகி நிம்மதி போச்சு. கொண்டு போய் கோயமுத்தூர்ல அவங்கம்மா வீட்ல விட்டுட்டு கங்காதரன் கொலையை துப்பறியறேன் பேர்வழின்னு நீ பாட்டுக்கு மறுபடி வந்துட்டே. ஏதோ ஒரு வேகம். அதுக்காக நினைப்பை அடைச்சு வைக்க முடியுமா? அது கோயமுத்தூர்ல தான் அலைஞ்சிட்டிருக்கும். தீப்பெட்டி கொடு

    வாங்கி மூன்றாவது குச்சியில் தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் பத்ரிநாத்.

    அதெல்லாம் இல்லை பத்ரி. கங்காதரன் கேஸ் பத்திதான் நினைச்சிட்டு இருந்தேன்

    ஃபைல் முழுக்க படிச்சிட்டியா?

    படிச்சிட்டேன். எஃப்.ஐ.ஆர்.ல ஆரம்பிச்சி நீதிபதியோட தீர்ப்பு வரைக்கும் ஒரு காகிதம் விடாம படிச்சிட்டேன்

    ஏதாவது நமக்கு சாதகமான பாய்ண்ட் கிடைச்சுதா?

    ம்கூம். இந்த கேசை விசாரிச்ச இன்ஸ்பெக்டர் மணிராம் ஒரு சரியான கில்லாடியா இருக்கனும். சந்தேகப்படறதுக்குக்கூட ஒரு சான்ஸ் வைக்கலை. ரொம்ப சுத்தமா கேஸ் போட்டுருக்கார். வாட்ச்மேன் பெரியசாமி, கங்காதரனை அந்த வீட்ல தங்க அனுமதிச்சான். கங்காதரன் தூங்கினான். அவன் ஒரு செயின் போட்டிருந்தான். அதுக்கு ஆசைப்பட்டு, அதைத் திருடப் பார்த்தான் பெரியசாமி. முழிச்சுக்கிட்ட கங்காதரன் போராடினான். பக்கத்தில் இருந்த கழியை எடுத்து மண்டைல போட்டான் ஒரு போடு. கங்தாதரன் அவுட். அவனை வீட்டுத் தோட்டத்தில் புதைச்சான். கழியை பக்கத்தில இருந்த குப்பையில் வீசினான். இடத்தை சுத்தம் பண்ணான். இதான் கேஸ். இவ்வளவையும் ஒத்துக்கிட்டு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறான் பெரியசாமி. விசாரணையின் போது கோர்ட்லயும் சொல்லியிருக்கான். அவன் வீட்லேர்ந்து செயினை கைப்பற்றியிருக்காங்க. அந்த செயினை கங்காதரனோட அப்பா தன் மகனோடதுதான்னு சொல்லி உறுதி செஞ்சிட்டார். இதைவிட ஒரு எளிமையான, சிக்கல் இல்லாத கொலை கேஸ் இருக்க முடியாது. பத்ரி.

    "நமக்கு உன் மனைவி மேலே வந்த கங்காதரனோட ஆவி சொன்னதாலதான் சந்தேகம் வருது. இல்லைன்னா இந்த கேஸ்ல சந்தேகப்பட எதுவுமே இல்லை. யாரும் சந்தேகப்படவும் இல்லையே

    பத்ரி, எந்த ரூட்ல போய் முடிஞ்சுபோன இந்த கேசுக்கு மறுபடி உயிர் கொடுக்கப் போறோம்? அதுக்கு என்னென்ன ஆதாரங்கள் நமக்கு தேவைப்படுது? இந்தக் கேள்விகளுக்குப் போறதுக்கு முன்னாடி அடிப்படையான சில விஷயங்களை உறுதி செய்துக்கலாம்.

    என்ன, சொல்லு!

    "பிரேமலதா மேல ஆவி வந்ததை நாம நம்பலாம், சட்டமோ, கோர்ட்டோ நம்பாது, கங்காதரனோட ஆவி சொன்னது நமக்கு ஒரு லீட் பாய்ண்ட. அவ்வளவுதான். வேற எந்த வகையிலயும் பிரயோஜனமில்லை. கங்காதரனோட ஆவி சொன்னது

    Enjoying the preview?
    Page 1 of 1