Kadaisi Punnagai
5/5
()
About this ebook
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் அறுபது வயது கடந்த மூதாட்டியை தன் பாட்டி என்றதோடு மட்டுமல்லாமல் 'உங்க ரீடர்' என்றும் அறிமுகப்படுத்திய போது ஆச்சரியமாய் இருந்தது.
அதைவிட ஆச்சரியம் அவர்கள் கீழ்கண்டவாறு சொன்னது.
“உங்க கதைகளில் பரத்-சுசிலா வர்ற கதைகள் அதிகமா பிடிக்கும். ஒரு எல்லையைத் தாண்டாம கவர்ச்சியா எழுதறிங்க."
பரத் - சுசிலாவுக்கு அறுபது வயது தாண்டிய ரசிகர்கள் இருப்பார்கள் என்று நான் அதுவரை நினைத்ததே இல்லை.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
Read more from Pattukottai Prabakar
September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kadaisi Punnagai
Related ebooks
Anjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Abaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5Jackpot Raathiri Rating: 5 out of 5 stars5/5Kanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsAngey! Ingey! Engey? Rating: 5 out of 5 stars5/5Uraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsKekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kutravali Illai Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsIrappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Puthiya Thisaigal Rating: 5 out of 5 stars5/5Oru Aircondition Kutram Rating: 5 out of 5 stars5/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Thisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsSavi1, Savi2, Savithri Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Droham Rating: 5 out of 5 stars5/5Thavira Uyirum Vendum Rating: 5 out of 5 stars5/5Ragasiyam Ramyamanathu Rating: 5 out of 5 stars5/5Sithainthavan Varugai Rating: 5 out of 5 stars5/5Nila Satchi Rating: 0 out of 5 stars0 ratingsKutram Kutrame! Rating: 5 out of 5 stars5/5Vilaga Vilaga Vibareetham Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kadaisi Punnagai
2 ratings0 reviews
Book preview
Kadaisi Punnagai - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
கடைசி புன்னகை
Kadaisi Punnagai
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
கடைசி புன்னகை
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் அறுபது வயது கடந்த மூதாட்டியை தன் பாட்டி என்றதோடு மட்டுமல்லாமல் 'உங்க ரீடர்' என்றும் அறிமுகப்படுத்திய போது ஆச்சரியமாய் இருந்தது.
அதைவிட ஆச்சரியம் அவர்கள் கீழ்கண்டவாறு சொன்னது:
உங்க கதைகளில் பரத்-சுசிலா வர்ற கதைகள் அதிகமா பிடிக்கும். ஒரு எல்லையைத் தாண்டாம கவர்ச்சியா எழுதறிங்க.
பரத் - சுசிலாவுக்கு அறுபது வயது தாண்டிய ரசிகர்கள் இருப்பார்கள் என்று நான் அதுவரை நினைத்ததே இல்லை.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
*****
1
ஜெகன் வீட்டின் பின்புறத்திலிருந்து ஈர முகத்தோடு வந்து கொடியில் துண்டு தேடினான். கிடைக்கவில்லை.
பொறுமையிழந்து, பத்மா, துண்டு வேணும்
என்றுக் கத்தினான்.
சமையலறையில் இருந்து வந்த பத்மா தாவணி உடுத்தியிருந்தாள். இரண்டு பின்னல்கள் போட்டிருந்தாள். வட்ட முகம். கும்மென்று உப்பின கன்னங்கள். சிறிய உதடுகள்.
சரியா தேடிப் பார்க்காமல் ஏன் கத்தறேண்ணா?
என்று கொடியில் கிடந்த துணிகளை விலக்கி, உள்ளே மறைந்திருந்த துண்டை எடுத்துக் கொடுத்து, காதுல சோப்பு இருக்கு பாரு
என்றாள்.
ஜெகன் உத்தேசமாய் துடைக்க, அங்கே இல்லை, குனி துடைச்சி விடறேன்
என்று துண்டால் சோப்புத் தீற்றலைத் துடைத்தாள்.
சீக்கிரமா ஒரு பிரமாதமான காபி கொண்டா பார்க்கலாம். இரண்டு நிமிடத்தில் வரணும்
என்றான் ஜெகன்.
வெளில ஊர் சுத்தக் கிளம்பப் போறியா? மத்தியானம் தானே ஒரு வார டூர் முடிச்சுட்டு வந்தே. இன்னிக்கு ஒரு நாள் வீட்ல இரேன்.
நான் முக்கியமாப் போகணும், பத்மா.
எனக்குத் தெரியும்
என்று கண்ணடித்தாள் பத்மா, நீ யாரைப் பார்க்கப் போறேன்னு எனக்குத் தெரியும். லலிதாவைத்தானே?
அவசரமாக அவள் வாயைப் பொத்தின ஜெகன் ஒரு முறை கூடத்தை எட்டிப் பார்த்துக் கொண்டு, அறிவு இருக்கா உனக்கு? இப்படி கத்தறியே... அம்மா காதில விழுந்தால் என்னாகிறது? நல்லவேளையா அம்மா சுவாரசியமா டெலிவிஷன் பார்த்துக்கிட்டிருக்காங்க. சரியான வாலு! உன்கிட்டே சொன்னது தப்பாப் போச்சு
என்றான்.
நீ எங்கே சொன்னே சகோதரா, நான் தானே துப்பறியும் வேலை செஞ்சி உன் டைரிக்குள்ளே வாடின ரோஜாவைப் பார்த்து, உன்னை புலன் விசாரணை செஞ்சி மடக்கினேன்? வேறவழி இல்லாமல் சொன்னே.
பிரதம மந்திரிகிட்டே சொல்லி உன் சாகசத்துக்கு பதக்கம் கொடுக்கச் சொல்லலாமா? காபி கேட்டா, நின்னு கதையடிக்கிறே!
ஜெகன் தனது அறைக்குள் வந்து கண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டான், பவுடர் ஒற்றிக் கொண்டான். உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். ஒரு துளி எண்ணெய் விரலில் எடுத்து புருவங்களிலும், மீசையிலும் சீராகத் தடவிக் கொண்டான்.
மர அலமாரியைத் திறந்து வைத்து எந்த சட்டை அணியலாம் என்று யோசித்தான். இள மஞ்சள் கிரேப் சட்டையை எடுத்தான். அதை அணியும் தினங்களில் எல்லாம் 'இந்த சட்டை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குது ஜெகன்' என்று லலிதா சொல்லாமல் இருந்ததில்லை.
ஜெகன் பாண்ட் அணிந்து, பெல்ட் மாட்டினபோது, பத்மா காபி எடுத்து வந்து நீட்டினாள். தம்பளரைத் தொட்டுப் பார்த்து, சூடு... இன்னும் கொஞ்சம் ஆத்திக் கொடேன் பிளீஸ்...
என்றான்.
கர்சீப் எடுத்து அதில் ஒரு துளி செண்ட் விட்டுக் கொண்டு கழுத்தில் ஒற்றிக் கொண்டான். பத்மா ஆற்றிக் கொடுத்த காபியைப் பருகத் தொடங்கிய போது...
கூடத்தில் டெலிபோன் ஒலிப்பது கேட்டது.
அம்மா, எடுத்து யாருன்னு கேளுங்க. என் நண்பர்கள் யாராவது இருந்தால் நான் வெளில போயிட்டேன்னு சொல்லுங்க
என்று குரல் கொடுத்தான் ஜெகன்.
கூடத்தில் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா சாந்தா எழுந்து ஓசையைக் குறைத்து வைத்து விட்டு தொலைபேசியை எடுத்தாள்.
அலோ, யாருங்க?
நான் ஒளியுகம் பத்திரிகையிலேர்ந்து உதவி ஆசிரியர் சண்முகம் பேசறேன்மா ஜெகன் இருக்காரா?
இருங்க சார், பார்க்கிறேன்.
சாந்தா ரிசீவரின் பேசும் பகுதியைப் பொத்திக் கொண்டுத் திரும்ப, ஜெகனே அருகில் வந்து, யாரு?
என்று மெதுவான குரலில் கேட்டான்.
உன்னோட பத்திரிகை ஆபீஸ்லேர்ந்து சண்முகம் பேசறார். என்ன சொல்லட்டும்?
போச்சுடா!
சலித்துக் கொண்டே வாங்கி, அலோ, நான் ஜெகன் பேசறேன் சார். வணக்கம்
என்றான்.
வணக்கம். வட ஆற்காடு மாவட்ட சுற்றுப் பயணம் எப்படி இருந்திச்சி?
நல்லா இருந்திச்சி. ராஜசேகர் சொல்லியிருப்பாரே.
சொன்னார். அவர் சொன்னதாலதான் நீங்க ஊர் திரும்பிட்டது தெரிஞ்சி போன் செஞ்சேன். எடுத்த புகைப்படங்கள் எல்லாம் எப்ப கிடைக்கும் ஜெகன்?
என்ன சார் இது, கொஞ்சம் இரக்கம் வையுங்க. மத்தியானம் தான் வந்தேன். இன்னும் பெட்டி கூட பிரிக்கலை இரண்டு நாளில் பிரிண்ட் போட்டு கொடுத்துடறேன்.
இன்னும் ஒரு நாள் வேணும்னாலும் சேர்த்து எடுத்துக்கங்க. இந்த செய்தி அடுத்த வார புத்தகத்தில் தான் வரப்போகுது.
யப்பாடி, நிம்மதி!
ஆனால், நான் போன் செஞ்சது அதுக்காக இல்லை.
என்ன, சொல்லுங்க.
இன்னிக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு போலீஸ் கமிஷனர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சி அழைப்பு அனுப்பிருக்கார். மணி, துரை இரண்டு பேரும் வீட்டுக்குப் போயாச்சு. அவங்களுக்கு போன் இல்லை. பிடிக்க முடியாது. நீங்க போயிட்டு இரண்டு படம் தட்டிக்கிட்டு வந்துடறீங்களா?
போன் இருக்கிறதால நான் மாட்டினேனா? சார், எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கே. வேற யாரையாச்சும் ஏற்பாடு செய்ய முடியாதா?
வேற யாரை ஏற்பாடு செய்றது ஜெகன்? நம்ம பத்திரிகைக்கு இருக்கிறது மூணே போட்டோகிராபர்கள் தான். இந்த பத்திரிகை சந்திப்பு அவசரமா நடத்தப் படுது. போன்லதான் அழைப்பு வந்திச்சி. அப்போ அவங்க இரண்டு பேரும் போயாச்சு. எடிட்டர் தான் உங்களுக்கு போன் செய்யச் சொன்னார். நீங்க போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்துட்டாப் போதும். செய்தி சேகரிக்க ரிப்போர்ட்டர் திலக் போறார். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் செய்துடுங்க.
சரி சார்
என்றான் ஜெகன் உற்சாகமில்லாமல். தன் அறைக்குத் திரும்பி சும்மா இருந்த தலையணையை முஷ்டியால குத்தினான். ச்சே! மனுஷனோட உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்கறதே இல்லை! அவங்கவங்க வேலைதான் முக்கியம்!
என்றான் வாய்விட்டு.
லலிதாவை அதே ஏழு மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாக மதியம் வந்ததுமே போன் செய்து சொல்லியாயிற்று. இப்போது மணி என்ன?
கடிகாரத்தைப் பார்த்தான். 6-10. அடடா! அவள் புறப்பட்டுவிடப் போகிறாள்! போன் செய்து நாளை சந்திக்கலாம் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் அநாவசியத்திற்கு வெறுப்போடு கடற்கரையில் எனக்காகக் காத்துக் கொண்டு நிற்பாள். ஏமாற்றத்துடன் திரும்பிப் போவாள். அந்தக் கோபத்தை சரிப்படுத்த பத்து நாட்களாகும்.
உடனே போன் செய்ய வேண்டும். அம்மா அருகில் உட்கார்ந்திருப்பதால் பேச முடியாது. என்ன செய்யலாம்?
ஜாடை காட்டி சமையலறையில் இருந்த பத்மாவை அழைத்தான். விபரத்தைச் சொன்னான். ஒரு சின்ன திட்டத்தையும் சொன்னான்.
செய்றேன். செய்தால், ஞாயிற்றுக்கிழமை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறியா?
வரம் வாங்கிறதுக்கு இதான் உனக்கு நேரமா? போ பத்மா!
பத்மா செல்ல, சற்று நேரத்தில் டமால் என்று சமையலறையில் ஒரு பாத்திரம் கீழே விழும் சத்தமும், தொடர்ந்து அம்மா
என்கிற பத்மாவின் நடிப்பு அலறலும் கேட்டது.
அங்கே என்னடி சத்தம்? எதையாவது கால்ல போட்டுக்கிட்டியா?
கேட்டவாறே எழுந்து அம்மா சென்றதும், ஜெகன் பாய்ந்து சென்று தொலைபேசியை எடுத்தான். அவசரமாகச் சுழற்றினான்.
அலோ கிரிதர் பேசறேன்.
கிரிதர், நான் ஜெகன் பேசறேன். உங்க சிஸ்டர் லலிதாவோடப் பேசணுமே.
ஒரு நிமிடம்.
அரை நிமிடத்தில், என்ன ஜெகன், இன்னும் கொஞ்ச நேரத்தில் சந்திச்சுக்கப் போறோம். அதுக்குள்ளே எதுக்கு போன்?
என்றாள் லலிதா.
வந்து... லலிதா, அதில் ஒரு சிக்கல்.
என்னாச்சு?
பத்திரிகை ஆபீஸ்லேர்ந்து அவசரமா போன் வந்திச்சி. நான் ஏழு மணிக்கு போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போகணும்மா. அங்கே போட்டோஸ் எடுக்கணும்.
ஜெகன், நாம் சந்திச்சி பத்து நாளாச்சி, நினைவிருக்குதில்லே?
எனக்கு மட்டும் ஆசையா உன்னை சந்திக்கிறதை தவிர்க்கணுமின்னு.
ச்சே! நான் உடுத்தி தயாரா புறப்படற தோதில இருந்தேன்.
நான்கூட அப்படித்தான் இருந்தேன். திடீர்னு போன் வந்துடுச்சி.
ஏதாச்சும் செஞ்சி சமாளிச்சுட்டு வரக்கூடாதா ஜெகன்? உங்களை உடனே பார்க்கணும் மாதிரி இருக்கு.
ரொம்ப சுதந்திரமா பேசறியே, பக்கத்தில கிரிதர் இல்லையா?
போனை என்கிட்டே கொடுத்துட்டு தம்மடிக்க வாசலுக்குப் போயாச்சு. அவர் ஒரு ஜெண்டில்மேன். உங்களை மாதிரி இல்லை. சந்திப்போம்னு சொல்லி ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டு, அப்புறம் வேலை இருக்குன்னு போன் செஞ்சி வருத்தப்படறது...
பார்த்தியா, குத்திக் காமிக்கிறே! இப்படி செய்யலாமா லலிதா.
எப்படி?
"பைக் எடுத்துக்கிட்டு இப்ப நேரா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும்