Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uraintha Ragasiyam...
Uraintha Ragasiyam...
Uraintha Ragasiyam...
Ebook113 pages1 hour

Uraintha Ragasiyam...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903683
Uraintha Ragasiyam...

Read more from Pattukottai Prabakar

Related to Uraintha Ragasiyam...

Related ebooks

Related categories

Reviews for Uraintha Ragasiyam...

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uraintha Ragasiyam... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    உறைந்த ரகசியம்...

    Uraintha Ragasiyam…

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    கொசுக்களுக்கும், ஒண்டுக் குடித்தனங்களுக்கும் பிரசித்தி பெற்ற மாம்பலம்.

    காலை மணி - 6.

    போன வருடம் திடீரென்று தோன்றி ஆறே மாதங்களில் பிரபலமாகி, ஆஸ்பெட்டாஸ், உண்டியல், சுற்றுச் சுவர் கும்பாபிஷேகம் என்று வளர்ந்த ஒரு கோயிலில் ஊசிமுனை கரகரத்து மாரியம்மா, எங்கள் மாரியம்மா என்று எல்.ஆர். ஈஸ்வரி பக்தி பரப்பிக் கொண்டிருக்க... டீக்கடையில் 'தண்ணியத் திறந்து விடுங்க, இந்தப் பச்சைப் பயிர் வாடிப் போகுது' என்று வேறொன்றைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

    அந்த வெல்லஸ்லி கால, காரை பெயர்ந்த வீட்டுக்குள் ஆறு குடித்தனங்கள், மையமாய் அடி பம்பில் அசர, அசர குதித்து சொட்டுச் சொட்டாய் தண்ணீர் பிடிக்க இருபது குடங்கள், பக்கெட்டுகள் காத்திருந்தன. பின்புறம் பொதுக் கிணற்றில் ஆறு சகடைகள், மூன்றே பாத்ரூம், மூன்றே லெட்ரினுக்கு ஒரு டஜன் பேர் பல் விளக்கிக் கொண்டு, பேப்பர் படித்துக் கொண்டு காத்திருந்தார்கள். சுப்ரபாதமும், கருவாட்டு வாசனையும், 'எழுந்திரியேண்டா தடி முண்டம்'மும், சாம்பிராணிப் புகையும், 'காபி ரெடியா?'வும், சீகக்காய் நெடியும் கலந்து கட்டி வீசிக் கொண்டிருந்தன.

    இடது புறம் இருந்த அந்த போர்ஷனில் அறைக்குள் குளித்துவிட்டு வந்த லதா ஜன்னலைச் சாத்திவிட்டு, ஈரப் புடவை களைந்து, கொடியில் இருந்து காட்டன் புடவை எடுத்துக் கட்டிக் கொண்டே, தரையில் சுருங்கிக் கொண்டு உறங்கின நித்யாவின் தாவணியைச் சரி செய்தாள்.

    புடவை கட்டிக் கொண்டதும், ஜன்னல் திறந்து வைத்து விட்டு, சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் தலை சீவி, மர அலமாரியில் ஒட்ட வைத்திருந்த பொட்டுக்களில் ஒன்றை வைத்துக் கொண்டு கைப்பை எடுத்துக் கொண்டாள்.

    ஹாலுக்கு வந்தாள்.

    மனோகர் தரையில் ஜமுக்காளம் விரித்துப் போட்டு தன் சட்டையை சூடுநீர் கொண்ட பித்தளைச் செம்பால் அயர்ன் செய்து கொண்டிருக்க, வாசலில் அவன் சைக்களை படு சிரத்தையாக அப்பா துடைத்துக் கொண்டிருந்தார்.

    என்ன மனோ, கடையில் கொடுத்தா அழகா அயர்ன் பண்ணித் தர மாட்டான்?

    இங்கே என்ன வேலை வெட்டி முறிக்கிறேனா? அம்பது பைசாவும் மிச்சம்க்கா.

    ஏன் சீக்கிரம் எழுந்துட்டே மனோ?

    இன்னிக்கு ஒரு இண்ட்டெர்வியூ இருக்கு, கிடைக்கப் போறதில்லை, ஆனாலும் இண்ட்டெர்வியூ அட்டெண்ட் பண்ணிடறது பழக்கமாய்டுச்சி.

    என்ன கம்பெனி?

    லெதர் எக்ஸ்போர்ட்டிங் கம்பெனி.

    இந்த வேலை உனக்குக் கிடைக்கும்டா நிச்சயம்.

    கிடைக்கலைன்னா எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நம்ம தெரு பிள்ளையாருக்குத்தான் நஷ்டம்.

    எப்படிடா?

    மூணு தேங்காய் உடைக்கிறதா வேண்டியிருக்கேனே.

    சிரித்துவிட்டு சமையலறைக்கு வந்தாள்.

    புறப்பட்டியா லதா? என்றாள் பிரேமா.

    ஆமாம்க்கா. இட்லி இன்னும் எடுக்கலையா?

    இதோ... இதோ ஆய்டுச்சிம்மா. ஸ்டவ்வின் திரியை மேலும் ஏற்றிவிட்டு, மாளிகை சாமான் கொஞ்சம் வாங்கணும் லதா.

    எவ்வளவு வேணும்? இருபத்தி அஞ்சி ரூபா போதுமாக்கா? கைப்பையைத் திறந்து பணம் எடுத்தாள்.

    சரி. அரிசி நாளைக்கு வாங்கிக்கலாம்.

    இந்தா. அம்பது ரூபா இருக்கு. இன்னிக்கே வாங்கிடு, லெட்டர் வந்திச்சாமே.

    ஆமாம் என்றாள் பிரேமா அவளுக்கேக் கேட்காமல்.

    மனோகர் சொன்னான். என்கிட்டே சொல்ல வேணாம்ணு சொன்னியாமே?

    எதுக்கு அனாவசியமா உனக்கு மனக் கஷ்டம்னுதான்...

    உன் புருஷன் இன்னைக்குத்தான் புதுசா ஒரு மனக் கஷ்டத்தை எனக்குத் தரப்போறார் பாரு. சொல்லு, என்ன எழுதிருக்கார்?

    ஊர்ல திருவிழா வருதாம். அதுக்குள்ளே வரப்பாருன்னு...

    ஏன், நீ போய்தான் காப்பு கட்டுவாங்களாமா அப்புறம்?

    திருவிழாவுக்குள்ளே வரலைன்னா அப்புறம்... பிரேமா வாக்கியம் முடிக்காமல் விம்மினாள்.

    உன்னைப் பார்த்து பரிதாபப் படறதா, கோபப் படறதான்னே புரிலைக்கா, எதுக்கு இப்ப அழுகை? 'திருவிழாவுக்குள்ளே வரலைன்னா அப்புறம் இங்கே வர்றதையே மறந்துடு!' அதானே எழுதிருக்கார்? கத்தியைக் காட்டி கொள்ளையடிக்கிற கூட்டத்தைவிட தாலியைக் காட்டி கொள்ளையடிக்கிற கூட்டம்தான் அதிகமா இருக்கு நாட்ல.

    லதா, தகுதிக்கு மீறி வாக்கு கொடுத்தது அப்பாவோட தப்பு சொன்னதைத்தான் செய்யச் சொல்றாங்க. கொள்ளை, அது, இதுன்னு பேசினா எனக்கு வருத்தமா இருக்காதா?

    ஸாரிக்கா, என்ன இருந்தாலும் இப்போ நீ இந்த வீட்ல இருக்கிற அந்த வீட்டு மருமகள், அப்பாவோட பொண்ணு இல்லை, அத்தானோட பொண்டாட்டி. ஸாரி, இனிமே அத்தானைப் பத்தி நான் எதாச்சும் பேசினா என்னடி செறுக்கின்னு கேளு.

    லதா நீராகாரத்தை மட்டும் குடித்து விட்டு, இதோ இட்லி எடுத்தாச்சிடி, சாப்பிட்டுட்டுப் போ என்ற அக்காவின் குரலை காதில் வாங்காமல் வாசலுக்கு வந்தாள். செருப்பணிந்தாள்.

    அப்பா, நான் போய்ட்டு வர்றேன்.

    பக்கத்துப் போர்ஷன்காரரின் பேப்பரை எட்டிப் பார்த்துப் படித்துக் கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து, போய்ட்டு வாம்மா, சாயங்காலம் சீக்கிரம் வந்துடு, என்னை கண் டாக்டர் கிட்டே அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னே?

    வந்துடறேன்ப்பா.

    லதா சென்றதும் பேப்பர்காரர், என்னய்யா வேணு, ஆறே காலுக்கே பாப்பா ஆபிஸ் புறப்பட்டுடுதே. எத்தனை மணிக்கு ஆபிஸ்? என்றார்.

    "அது பத்து மணிக்குதான். இப்ப வெறும் கிளார்க்கா தான் இருக்கா, எழுநூத்திச் சொச்சம்தான் கிடைக்குது. டைப் ரைட்டிங்கும், ஷார்ட்ஹேண்டும் கத்துக்கிட்டா அதே ஆஃ பிஸ்ல ஸ்டெனோவா ப்ரமோஷன் கிடைக்குமாம், ஆயிரத்துக்கு மேல் சம்பளம். காலைல ஏழு மணிலேர்ந்து எட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1