Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavalai Neram Kaalai 10 Mani
Kavalai Neram Kaalai 10 Mani
Kavalai Neram Kaalai 10 Mani
Ebook97 pages51 minutes

Kavalai Neram Kaalai 10 Mani

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மிக நேர்மையான அரசியல்வாதி வஜ்ரவேலு. இவர் பிரபலமான சில தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் ஊழல்களை கண்டறிந்து அதனை தடுக்க முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் இவருடன் பக்கபலமாக ஒரு பெண் அந்த நிறுவனத்தின் மோசடி தகவல்களை கொடுக்கிறாள். யார் அந்த பெண்? எதிரிகள் அவளை கண்டறிந்தனரா? இறுதியில் இவர்கள் நிலை என்ன ஆனது? யாருக்கு கவலை நேரம் காலை 10 மணி? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580100906985
Kavalai Neram Kaalai 10 Mani

Read more from Pattukottai Prabakar

Related to Kavalai Neram Kaalai 10 Mani

Related ebooks

Related categories

Reviews for Kavalai Neram Kaalai 10 Mani

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavalai Neram Kaalai 10 Mani - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    கவலை நேரம் காலை 10 மணி

    Kavalai Neram Kaalai 10 Mani

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    தமிழ்நாட்டில் இருந்து கோடி கோடியாக போதைப் பொருள்கள் கடத்தல்!

    தமிழக எம்.பி. பார்லிமெண்ட்டில் குற்றச்சாட்டு!!!

    - என்கிற தலைப்புச் செய்திகளுடன் அந்த தமிழ் பேப்பர் அன்றைக்கு அமோக விற்பனையாகியது.

    உள் வரிகளில்...

    நேற்றைய தினம் திரு. வஜ்ரவேலு எம்.பி. பார்லி மெண்ட்டில், கேள்வி நேரத்தில் பேசியதாவது -

    தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி லைசென்சுகளில் பலவித தில்லுமுல்லுகள் செய்து கொண்டிருப்பதோடு, சாமர்த்தியமான முறையில் போதைப் பொருள்களை வெளி நாட்டுக்குக் கடத்தி வருவது மறைமுகமாக அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தின் அதிபர் ஒரு மத்திய அமைச்சருக்கு மிக நெருக்கமான நண்பர். அந்தச் சலுகையில், இரண்டொரு முறை மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் எல்லாம் அமைச்சர் தலையிட்டு தன் நண்பரைக் காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் சமூக விரோதச் செயல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டே வருகிறது. அரசாங்கம் இதுகுறித்து உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவைத் தலைவர் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படாமல், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், இப்படிப் பொதுவாக எம்.பி. வஜ்ர வேலு புகார் சொல்வது முறையாகாது. சபையில் ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி நேரத்தை வீணடிப்பதைக் கண்டிக்கிறேன். எனினும் தொடர்பான துறைகளில் அவர் குற்றச்சாட்டு குறித்து ஆராய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    சபை நேரம் முடிவடைந்ததும் எம்.பி. வஜ்ரவேலுவை நிரூபர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டது:

    நீங்கள் சொன்ன குற்றச்சாட்டில் ஆதாரம் உண்டா?

    உண்டு.

    பின் ஏன் சமர்ப்பிக்கவில்லை?

    என் வசம் உள்ள ஆதாரங்களை முழுமையானவை அல்ல. முழுமையான ஆதாரம் கைக்கு வந்ததும் சமர்ப்பிப்பேன்.

    யார் அந்த மத்திய அமைச்சர்?

    இப்போது தெரிவிப்பதற்கில்லை.

    யார் அந்தத் தொழில் அதிபர்?

    ஊழல்கள் விரைவில் அம்பலமாகும். அப்போது நீங்களே செய்தித்தாள்களில் இருந்து யார் என்று தெரிந்து கொள்வீர்கள்.

    முழு ஆதாரங்களும் இல்லாமல், ஏன் குற்றம் சாட்டினீர்கள்?

    அரசாங்கம் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்க்கத்தான்.

    மேற்கண்டவாறு நிரூபர்களின் கேள்விகளுக்கு எம்.பி. பதில் சொன்னார். விரைவில் இந்த விவகாரம் பூகம்பமாய் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை பார்லிமெண்ட் கூட்டத் தொடரில், தமிழக எம்.பி. ஒருவர் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிடுவார் என மற்ற இதழ்களுக்கு முன்பே நமது இதழ், யூகம் வெளியிட்டிருந்ததை நினைவு படுத்துகிறோம்.

    2

    டெல்லி. மாலை 6.30. குளிர் காற்று உலா புறப்பட்டிருந்தது.

    அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில், தனது அறையில், பாரதியார் கவிதைகள் படித்துக் கொண்டிருந்தார் வஜ்ரவேலு.

    வஜ்ரவேலு லுங்கி கட்டியிருந்தார். கால்களில் சாக்ஸ் மட்டும் அணிந்து இருந்தார். மேலே சட்டை அணிந்து அதற்கு மேல் ஸ்வெட்டர் அணிந்திருந்தார். மேஜைக்கு மட்டும் விளக்கு போட்டுக் கொண்டு, படித்துக் கொண்டிருந்தார்.

    "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

    வெந்து தணிந்தது காடு; - தழல்

    வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?"

    புத்தகத்தை மூடி வைத்தார். என் கையிலும் ஒரு அக்கினிக் குஞ்சு வைத்திருக்கிறேன் - சில காகிதங்களாக. அரசாங்கத்தின் போக்கு என்ன என்பதை அறிந்து கொண்டு செயல்படப் போகிறேன். வெந்து தணியப் போகிறார்கள் சிலர்.

    ஒரு மணி நேரத்திற்கு முன்னால்தான் வஜ்ரவேலு பிரதமருடன் நேரடியாக போனில் பேசினார்.

    நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு, உங்களை உங்கள் அலுவலகத்தில் சந்திக்க, எனக்கு நேரம் வேண்டும்.

    "என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1