Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yudha Bhoomi
Yudha Bhoomi
Yudha Bhoomi
Ebook97 pages47 minutes

Yudha Bhoomi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல திரைப்பட இயக்குநர் நவசிற்பிக்கு கொலைமிரட்டல் வருகிறது. போலீஸ் அவரின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேளையில் இறந்த பெண்ணின் உடலை ஒரு காரில் போலீஸ் கண்டெடுக்கின்றனர் யார் அந்த பெண்? நடந்த கொலையை விசாரிக்க களத்தில் இறங்குகின்றனர் விஷ்ணுவும்,கோபால்நாத்தும்.

இறுதியில் என்ன ஆனது? வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580100407810
Yudha Bhoomi

Read more from Rajesh Kumar

Related to Yudha Bhoomi

Related ebooks

Related categories

Reviews for Yudha Bhoomi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yudha Bhoomi - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    யுத்த பூமி

    Yudha Bhoomi

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    விஷ்ணு சந்தோஷத்தில் திணறினான்.

    அவனுக்கு வலதுபக்கமும், இடதுபக்கமும் ரோஜா நிறத்தோடு இரண்டு கல்லூரி மாணவிகள்.

    விஷ்ணு... ஐ... லவ்... யூ... ஒருத்தி அவன் கன்னத்தில் தன் அழகான மூக்கை வைத்து பெப்பர்மிண்ட் வாசனையோடு தேய்த்துக்கொண்டே சிணுங்க - இன்னொருத்தி அவனுடைய மார்புச் சட்டைக்குள் தன் வெண்டை விரல்களை நுழைத்து தடவியபடியே ஐ... லவ்... யூ... விஷ்ணு... என்றாள்.

    விஷ்ணு இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தான்.

    ‘எவளைக் காதலிக்கலாம்...?’

    இரண்டு பேருமே பிரம்மனின் ஸ்பெஷல் தயாரிப்புகள் போன்று தெரிந்தார்கள்.

    ஹி... ஹி... ரெண்டு பேருமே ரொம்ப அழகாயிருக்கீங்க... எனக்கு யாரை செலக்ட் பண்றதுன்னே தெரியலை... நான் குழம்பிப் போயிருக்கேன்...

    அப்படீன்னா ஒரு காரியம் பண்ணுங்க விஷ்ணு...!

    என்ன...?

    எங்க ரெண்டு பேரையுமே லவ் பண்ணுங்களேன்...

    என்னது... ரெண்டு பேரையும் லவ் பண்றதா...? நான் ஏகபத்தினி விரதன். உங்க ரெண்டு பேர்ல ஒருத்தியைத்தான் காதலிக்க முடியும்.

    அப்படீன்னா ஒரு போட்டி வெச்சு எங்க ரெண்டுபேர்ல ஒருத்தியை செலக்ட் பண்ணுங்க...

    போட்டியா...?

    ம்...

    என்ன போட்டி வைக்கிறது...? விஷ்ணு தன் பின் மண்டையைத் தட்டிக்கொண்டு யோசிக்க, ஒருத்தி சொன்னாள்:

    நான் சொல்லட்டுமா...?

    சொல்லு...

    நாங்க ரெண்டுபேரும் நீ... ள... மா... ஆளுக்கொரு முத்தம் தர்றோம். யார் தர்ற முத்தம் உங்களுக்குப் புடிச்சிருக்கோ... அவங்களை நீங்க செலக்ட் பண்ணிக் காதலிக்கலாம்.

    ஆஹா... திவ்யமோ திவ்யம்... ஒருத்திக்கு இடது கன்னத்தையும் இன்னொருத்திக்கு வலது கன்னத்தையும் காட்டியபடி கண்களை மூடிக் கொண்டான் விஷ்ணு.

    ட்ரிங்க்க்... ட்ரிங்க்க்...

    டெலிபோனின் அலறல் சத்தம் - போர்வைக்குள் இருந்த விஷ்ணுவை உசுப்ப - கனவில் வந்த கல்லூரிப் பெண்களிடம் முத்தத்தை வாங்கிக் கொள்ளாமலே - போர்வையை விலக்கியபடி எழுந்து உட்கார்ந்தான், விஷ்ணு.

    டெலிபோனை எரிச்சலாய் பார்த்தான்.

    'என் கனவைக் கலைத்த கரும் பிசாசே...!' வாய்விட்டு திட்டிக் கொண்டே எழுந்து போய் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான், விஷ்ணு. டைம்பீஸில் ஆறுமணி.

    ஹலோ...

    யாரு... விஷ்ணுவா...? மறுமுனையில் கோகுல்நாத்தின் குரல்.

    குட்மார்னிங் அங்கிள்...

    என்ன விஷ்ணு... தூங்கிட்டிருந்தியா...?

    இல்ல அங்கிள்... அஞ்சரை மணிக்கே எந்திரிச்சு பாடியை பில்ட்-அப் பண்றதுக்காக... லேசா எக்சர்சைஸ் பண்ணிட்டிருந்தேன்...

    ஏண்டா... காலங்கார்த்தால பொய் பேசறே...?

    பொய்யா...? அதுவும் என் வாயிலிருந்தா...? அபச்சாரம்... அபச்சாரம்...

    உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா உத்தம புத்திரா...! சரி சரி... பல்லைத் தேய்ச்சு... ஒரு காபியை விழுங்கிட்டு உடனே புறப்பட்டு வா...

    எங்கே... அங்கிள்...?

    சாந்தோம் பீச்சுக்கு...

    சாந்தோம் பீச்சுக்கா...? எதுக்கு அங்கிள்...?

    வா... சொல்றேன்... சொல்லிவிட்டு கோகுல்நாத் ரிஸீவரை வைத்துவிட விஷ்ணுவின் கண்களில் மிச்சம் இருந்த தூக்கக்கலக்கமும் சட்டென்று காணாமல் போயிற்று. கனவில் பார்த்த கல்லூரி மாணவிகளை மனசிலிருந்து உதறிவிட்டு வேகவேகமாய்க் குளியலறைக்குள் நுழைந்தான்.

    பத்தே நிமிஷம்!

    வெளியே வந்தான். ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் நின்று பேண்ட்டையும், சர்ட்டையும் மாட்டிக் கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்து - தலை சீவி ஹீரோ ஹோண்டா சாவியைப் பொறுக்கிக் கொண்டு வாசலில் நின்றிருந்த பைக்குக்கு வந்தான். வீட்டைப் பூட்டிக் கொண்டதும் பைக்கில் பரவினான்; எண்பதில் பறந்தான்.

    காலைச் சூரியன் தன் பீட்ரூட் நிற வெளிச்சத்தால் சென்னையை அலம்பிக் கொண்டிருந்தான். காற்றில் லேசாய்

    Enjoying the preview?
    Page 1 of 1