Uyirth Thirudargal
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsOnly Vivek! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Andha October 14 Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5
Related to Uyirth Thirudargal
Related ebooks
Kaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsThoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Rani Rating: 5 out of 5 stars5/5Vilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsSei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Sarpa Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Vengai Veliye Varuthu Rating: 5 out of 5 stars5/5Uraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5En Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Raathiri Neram Rating: 0 out of 5 stars0 ratingsVilaga Vilaga Vibareetham Rating: 5 out of 5 stars5/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsKekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Paravai Rating: 5 out of 5 stars5/5Imaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Puthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsSaiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Ange... Inge... Enge...? Rating: 0 out of 5 stars0 ratingsOru Melliya Sivappu Kodu Rating: 0 out of 5 stars0 ratingsFrom Zero To Hero Rating: 5 out of 5 stars5/5Thurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsSavi1, Savi2, Savithri Rating: 0 out of 5 stars0 ratingsThavira Uyirum Vendum Rating: 5 out of 5 stars5/5Kadaisi Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Thottam Rating: 0 out of 5 stars0 ratingsUnmayai Thirudu Rating: 5 out of 5 stars5/5Athikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Kadaisi kattalai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uyirth Thirudargal
0 ratings0 reviews
Book preview
Uyirth Thirudargal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
உயிர்த் திருடர்கள்
Uyir Thirudargal
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
என்னுரை
அன்புக்கினிய வாசக உள்ளங்களே!
வணக்கம். நலம்தானே…!
நீங்கள் வாசிக்கப்போகிற இந்த ‘உயிர்த் திருடர்கள்’ நாவல் ‘பாக்யா’ வார இதழில் 25 வாரங்களாக வெளிவந்த தொடர்கதை. அரசியலையும்
அரசியலில் நிகழும் அவலங்களையும் மையமாக வைத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதைக்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்பு கணைகள் வரத்தான் செய்தது. ஃபரம் அட்ரஸ் இல்லாத பல கடிதங்கள் என் மேஜைக்கு வந்து என்னை மிரட்டிவிட்டு பின் குப்பைக் கூடைக்குப் போயின. அரசியலில் நல்ல தலைவர்களும் இருக்கிறார்கள். மோசமான தலைவர்களும் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் கெட்டவர்கள் என்று பெயர் எடுக்கக் காரணம் அவர்களின் சுயநலம்தான். எந்த ஒரு அரசியல்வாதி சுயநலத்தை தள்ளி வைத்துவிட்டு பொதுநலவாதியாக மாறுகிறானோ அந்த அரசியல்வாதி மக்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். மற்றவர்கள் மக்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த ஒரு வரி உண்மையை வைத்து எழுதப்பட்டதுதான் இந்த ‘உயிர்த்திருடர்கள்’ கதை.
இந்தக் கதை பாக்யா வார இதழில் வெளிவந்து கொண்டிருந்தபோது அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திரு. பாக்யராஜ் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமோ…?
‘ராஜேஷ்குமார்…! அரசியலின் மேல் உங்களுக்கு உள்ள கோபம்
கதையில் நன்றாகவே தெரிகிறது. காரம் சற்று தூக்கல். காரத்தைக் குறைத்துக் கொண்டால் பரவாயில்லை.’ திரு.பாக்யராஜ் இப்படி எழுதியதற்கு நான் உடனே பதில் கடிதம் எழுதினேன்.
‘பாக்யராஜ் ஸார்…! இந்த ‘உயிர்த்திருடர்கள்’ ஒரு அசைவ கதை. அசைவத்துக்கு கொஞ்சம் அதிகப்படியான காரம் இருந்தால்தான் சுவையாக இருக்கும். எனவே இதை காரசாரமாக எழுத அனுமதி கொடுங்கள்…!’
உடனே அனுமதியும் கிடைத்தது.
புத்தகப் பதிப்பகத்துறையில் ஒரு சக்கரவர்த்தியாய் விளங்கிக் கொண்டு இருக்கும் பூம்புகார் பதிப்பகம் என்னுடைய நாவலான ‘உயிர்த்திருடர்களை’ அழகிய புத்தகமாக்கி உங்களுடைய கரங்களுக்கு கொடுத்துள்ளார்கள். அதற்காக பதிப்பக நிறுவனர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்.
1
கல்யாண அழைப்பிதழ்களை அள்ளி கைப்பையில் திணித்துக் கொண்ட பாரதி அறையினின்றும் வெளியே வந்த விநாடி-சமையற்கட்டிலிருந்து ஜானகி வெளிப்பட்டாள். இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டாள் எங்கேடி புறப்பட்டுட்டே?
ஏம்மா… உனக்கு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன். போகும்போது இந்த மாதிரி கேட்காதேன்னு…
கேக்காமே எப்படி இருக்க முடியும்? அடுத்த வாரம் இந்நேரம் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிற பொண்ணு நீ…! இஷ்டத்துக்கு வெளியே சுத்தற உன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?
ஒண்ணும் நினைக்க மாட்டாங்க…
வேஷ்டியின் நுனியில் மூக்குக்கண்ணாடிக்கு பாலீஷ் ஏற்றிக் கொண்டே பூஜையறையினின்றும் வெளிப்பட்ட குமரவேல் நேர்த்தியால் கட்டிய பல் செட்டின் உபகாரத்தால் சிரித்தார். கல்யாணப் பொண்ணுன்னா வெளியே போகக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா ஜானகி…? பாரதி அவ ஃப்ரண்ட்ஸ்களுக்கெல்லாம் மேரேஜ் இன்விடேஷன் தர வேண்டாமா?
ஜானகி பொரிந்தாள்.
அவதான் எல்லார்க்கும் கொடுத்து முடிச்சாச்சே?
பாரதி குறுக்கிட்டாள். இல்லேம்மா… இன்னும் சில பேர்க்கு கொடுக்க வேண்டியிருக்கு. நான் இன்னிக்கு முக்கியமா வெளியே போறதுக்கு என்ன காரணம் தெரியுமா?
என்னடி…?
லதிகா இன்னிக்கு மெட்ராஸ் வர்றா…
யாரு…? அந்த பத்திரிக்கைக்காரியா?
ஜானகி அலட்சியமாய் சொல்லவும் பாரதிக்கு எரிச்சல் பீறிட்டது.
என்னம்மா அவ்வளவு அலட்சியமா பத்திரிகைக் காரின்னு சொல்றே…? தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொரு அரசியல்வாதியும் ராத்திரியில தூங்கிட்டிருக்கும் போது கூட வேர்த்து வழியறாங்கன்னா அதுக்கு காரணமே லதிகாதான். கடந்த ஆறுமாசக் காலத்தில் ரெண்டு அமைச்சர்களோட ஊழல் புகார்களை நிரூபிச்சு… வீட்டுக்கு அனுப்பின வீராங்கனை அவ பிரஸ் மீட்டிங்குக்கு லதிகா வர்றான்னு தெரிஞ்சாலே எல்லா மினிஸ்டர்க்கும் அடிவயித்துல ஒரு திகில் இருக்கும். தமிழ் அகராதியில ‘லதிகா’ங்கிற வார்த்தையை சேர்த்து, அதுக்கு நேரா பெண் வேங்கைன்னு போடப் போறாங்களாம்…
அவளைப் பார்க்கவா போறே இருப்போ?
ஆமாம்மா.
அவ எங்கே தங்கியிருக்கா?
ஹோட்டல் பிளாக் ரோஸ்.
கிண்டியில் புதுசா கட்டியிருக்கிற அந்த ஹோட்டலுக்கா?
ஆமா.
காபரே டான்ஸெல்லாம் நடக்கிற அந்த மாதிரியான ஹோட்டலுக்கெல்லாம் நீ ஏண்டி போறே? அந்த லதிகாவை நம்ம வீட்டுக்கே வரவழைச்சு உன் மேரேஜ் இன்விடேஷனை கொடேன்…
அப்பா குமரவேல் குறுக்கிட்டார். "அம்மா பாரதி உங்கம்மாவுக்கு யார் யார்கிட்டே எப்படி நடந்துக்கணும்ங்கிற விவஸ்தையே கிடையாது. இவமட்டுமில்லை இவ பரம்பரையே அப்படித்தான். இவளோட அப்பா, ரோட்ல பார்த்துதான் என்னை தலை தீபாவளிக்கே கூப்பிட்டார். பிளாட்பாரக்
கடையில்தான் வேஷ்டியும் மேல் துண்டும் வாங்கிக் கொடுத்தார். நாலு முக்கு சேர்ற இடத்துல-கைவண்டியில் வெச்சு விக்கிற கடலெண்ணை ஜிலேபியைத்தான் என் இலையில வெச்சாரு."
பாரதி சிரித்தாள்.
அப்பா! அம்மாவை உசுப்பாதீங்க. ஏற்கெனவே மூடு கெட்டுப்போய் காளி அவதாரம் எடுக்கலாமா… காட்டேரி அவதாரம் எடுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்காங்க…! நான் கிளம்பட்டுமா?
பாரதி நழுவ முயன்றாள்.
நில்லடி
ஜானகி அவளை நிறுத்தினாள்.
என்னம்மா?
இப்ப மணி எவ்வளவு?
காலை மணி எட்டு…
கிண்டியில இருக்கிற அந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்?
என்னோட மொபட்ல போனா இருபது நிமிஷம்…
சரி போக இருபது நிமிஷம் வர இருபது நிமிஷம் அந்த லதிகா கிட்ட பேச இருபது நிமிஷம். உனக்கு ஒரு மணி நேரம் தான் பர்மிஷன். சரியா ஒன்பது மணிக்கெல்லாம் நீ வீட்ல இருக்கணும். இதுக்க சம்மதம்னா நீ வெளியே போலாம். இல்லேன்னா இங்கேயே இருந்துது.
பாரதி ஏதோ பேச வாயெடுக்கும் முன் ஹால் சுவரோரமாய் டீயாயின் மேல-ருந்த டெலிபோன் ‘விருட் விருட்’ டென்று துடித்தது.
குமரவேல் போய் ரிஸீவரை எடுத்தார்.
ஹலோ…
அங்கிள்! நான் லதிகா பேசறேன். பாரதி இருக்காளா?
மறு
முனையில் ஒரு பெண் குரல் ஆர்வமாய் கேட்டது.
குமரவேல் சிரித்தார். உன்னைப் பத்திதாம்மா பேசிட்டிருக்கோம். நீ பெங்களுர்லயிருந்து எப்போம்மா வந்தே…?
தருமமிக சென்னை விடிஞ்சுட்டிருக்கும் போதே வந்துட்டேன்.
ரொம்ப சந்தோஷம், எல்லா பேப்பர்லேயும் உன்னோட பேர் கொடிகட்டி பறக்குது. உன்னை மாதிரியான ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் ஸ்டேட்டுக்க ஒருத்தர் இருந்தா போதும். இந்தியா அஞ்சே வருஷத்துல அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் கடன் கொடுக்கிற அளவுக்க உயர்ந்துடும்.
பாரதி இருக்காளா அங்கிள்?
ஓ! நான் போரடிக்கிறேனோ…? ஸாரி…
சொன்ன குமரவேல் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்த பாரதியிடம் ரிஸீவரை நீட்டினார். அவள் வாங்கி அகலமாக புன்னகையோடு நான் பறப்பட்டுட்டேன் லதிகா
என்றாள்.
லதிகா மறு முனையில் மெல்ல சிரித்தாள்.
புறப்பட வேண்டாம்னு சொல்லத்தான் போன் பண்ணினேன்.
என்னடி இது… திடீர் பல்டி?
நான் என்ன பண்ணட்டும்? சாய்ந்தரம் ஆறு மணிக்க பேட்டி தர்றதா சொல்லியிருந்த ஹெல்த் மினிஸ்டர் நேசராஜ், இப்பவே டயத்தை ஒதுக்கி பேட்டி தர்றார் சாய்ந்தரம் அவர்க்க ஏதோ ப்ரோக்ராம் இருக்காம்…
"சரி, நீ பேட்டியை முடிச்சுகிட்டு எத்தனை மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பி வருவே…?
"பேட்டி எப்படியும் ரெண்டு மணி நேரம் போகும். அதுக்கப்புறம் சில மெட்ராஸ் வி.ஐ.பி.ஸை சந்திக்கணும். எப்படியும் ரூமுக்கு திரும்ப ஆறு
மணியாயிடும்…"
அடிப்பாவி…
நான் பாவிதான். இந்தப் பாவியைச் சந்திக்க சரியா ஆறரை மணிக்கு வா குளிச்சிட்டு காத்திருக்கேன்.
ஆறு மணிக்கு முன்னாடி உன்னால வர முடியாதா?
கஷ்டம்… எல்லாம் வி.ஐ.பி.ஸையும் இன்னிக்கே பார்த்து பேசியாகணும். இல்லேன்னா என்னோட எடிட்டர் சுடுதண்ணியில விழுந்துட்ட எலியாட்டம் கத்துவார்.
சரி… நான் ஆறு மணிக்கு வர்றேன்.
வா…! கல்யாண ஏக்கத்துல உன்னோட இடை என்ன சுற்றளவுக்கு குறைஞ்சிருக்குன்னு நான் அளந்து பார்க்கணும்…
சீச்ய்ய்ய்…
என்றாள் பாரதி.
அசோக் அவென்யூ. கடைசி பங்களா.
பங்களாவின் மாடியறைக்கு ஏ.ஸி.யின் ஜில்லிப்பில் அந்த நான்கு பேரும் நாற்காலிகளில் தளர்வாய் உட்கார்ந்திருந்தார்கள். கைகளில் இருந்த கண்ணாடி தம்ளர்களில் ராயல் சல்யூட் விஸ்கி ஐஸ் க்யூபுகளோடு அலை மோதிக் கொண்டிருந்தது. நான்கு பேர்களின் முகங்களிலும் தீவிரமான சிந்தனை உறைந்து போயிருக்க யோசித்து யோசித்து விஸ்கியை விழுங்கினார்கள்.
ஜீவா…
ம்…
இதோட நாலு லார்ஜ் உள்ளே தள்ளிட்டே? இன்னமுமா யோசனை பண்றே…?
சம்மர் கிராப் தலையோடும், காட்டெருமை உடம்போடும் தெரிந்த அந்த ஜீவா கோணலாய் சிரித்தான். புலியை வேட்டையாடறது ரொம்பவும் ஈஸி ஹாஜா… மானை வேட்டையாடறதுதான் ரொம்பவும் கஷ்டம்.
நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அந்த லதிகா மெட்ராஸை விட்டு பெங்களுர் போகும்போது பிணமாத்தான் போகணும். அய்யாவோட ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் இது…
ஜீவா ஒரே மூச்சில் விஸ்கியை விழுங்கிவிட்டு காலி டம்ளரை ‘டொக்’கென்று டீபாயின்மேல் வைத்தான்.
அய்யாவுக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன தகராறு?
எத்தினியோ தகராறு… அதைப்பத்தியெல்லாம் உனக்கு எதுவும் தெரிய வேண்டாம். அய்யா சொன்னபடி செஞ்சிட்டு பணத்தை வாங்கிட்டுப் போயிட்டே இரு…
அந்த லதிகாவோட உயிர்க்கு என்ன ரேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கீங்க?
நீ எவ்வளவு எதிர்பாக்கிறே?
அஞ்சு லட்சம்.
அய்யா நிர்ணயம் பண்ணின ரேட் ரெண்டு லட்சம்…
ரொம்ப இடைவெளி. நான் வர்றேன்…
எழு முயன்ற ஜீவாவின் தோள்பட்டையின் மேல் கையை வைத்து உட்காரச் செய்தான் ஹாஜா.
சரி, மூணு லட்சம்…
நோ பார்கெய்ன்… அஞ்சு லட்சம்னா பேசுவோம்.
ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. நான் அய்யாவை போன்ல காண்டாக்ட் பண்ணிட்டு வந்துடறேன்.
தாராளமா பண்ணிட்டு வா…
ஹாஜா எழுந்து பக்கத்து அறைக்குப் போனதும், ஜீவா தனக்கு இரண்டு பக்கமும் கிலோ கணக்கில் உடம்பை வளர்த்திருந்த இரண்டு பேர்களையும் மாறி மாறி பார்த்தான் மெல்லிய குரலில் கேட்டான்.
என்ன ஐசக்… துரை! நான் சொன்ன ரேட் சரிதானா?
கச்சிதம்
ஐசக் சிரிக்க, துரை கேட்டான்.
அந்தப் பொண்ணு மேல அய்யாவுக்கு என்ன கோபம்?
நான் கேள்விப்பட்ட விவகாரத்தை சொல்லட்டுமா?
சொல்லு.
அந்த லதிகா பொண்ணு நம்ம அய்யாவுக்கு வேண்டிய இரண்டு மந்திரிகளை ஊழல் புகார்களை நிரூபணம் பண்ணி, வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாளாம். கோர்ட்ல கேஸ் போட்டு அந்த மினிஸ்டர்களுக்கு தண்டனையும் வாங்கித்தரப் போறாளாம்… கேஸ் கோர்ட்டுக்குப் போறதுக்கு முந்தி அவளை பரலோகத்துக்கு அனுப்பிடணும்கிறது அய்யாவோட எண்ணம்.
விவகாரம் பெரிசுதான்.
பத்து லட்சம் கேட்டிருக்கலாம் ஜீவா.
வேண்டாம் அதிகப்படியா ஆசைப்பட்டா. வர்ற காகம் கையை விட்டுப் போயிடும்.
ஹாஜா பக்கத்து அறையினின்றும் வெளிப்பட்டான். உதட்டில் ஒட்டியிருந்த சின்ன புன்னகையோடு சொன்னான்.
"உன்னோட ரேட்டுக்கு அய்யா