Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thapu Thapai Oru Kolai
Thapu Thapai Oru Kolai
Thapu Thapai Oru Kolai
Ebook246 pages2 hours

Thapu Thapai Oru Kolai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400309
Thapu Thapai Oru Kolai

Read more from Rajesh Kumar

Related to Thapu Thapai Oru Kolai

Related ebooks

Reviews for Thapu Thapai Oru Kolai

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thapu Thapai Oru Kolai - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தப்புத் தப்பாய் ஒரு கொலை

    Thappu Thappai Oru Kolai

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    ரோஸ் மில்க் நிறத்தில் ஏராளமாய்ப் பூத்திருந்த போகன் வில்லா மரங்கள் அடர்ந்த அந்த நிழலான ரோட்டை வெட்டிக் கொண்டு, வலது கைப் பக்கமாய்த் திரும்பிய அந்த சாக்லேட் நிற கண்டசா கார் ஓட்டல் சோழா ஷெரேடனக்குள், ஒரு வெல்வெட் குவியல் மாதிரிக் குலுங்கி நுழைந்து மௌனமாகியது.

    காரின் நாலாபக்கக் கதவுகளையும், நான்கு ஜாதிப் பெண்கள் ஓடிவந்து திறக்க, ஜெயச்சந்திரன் கீழ் இறங்கினான்.

    சுத்தமாய் ஆறடி உயரம், வெள்ளை நிற சூட்டில் பெயிண்ட் அடித்த மாதிரி பிரகாசமாய்த் தெரிந்தான். கண்ணாடிக் கதவருகே காத்திருந்த சிவப்பு உடை பேரர் பவ்யமாகக் கதவைத் திறந்துவிட உள்ளே போனான்.வரவேற்பு ஹாலின் மறுபக்கம் கண்ணாடிச் சுவர் வழியாக, கோபால்ட்ட நீல நிறத்தில் நீச்சல் குளமும், கோதுமை நிறத்தில் மார்புக் கச்சைகளோடு ஆங்கிலோ - இந்தியப் பெண்களும் தெரிந்தார்கள். ரிசப்ஷன் கௌண்டர் அருகே ஏராளமானவர்கள் காத்திருந்தார்கள்.

    ஜெயச்சந்திரன் முதல் மாடி ஏறி,‘மெர்க்காரா’ அறைக்குள் நுழைந்தான். ஏ.ஸி. அவன் உடம்பைச் செல்லமாய்த் தடவியது. பேரர் பிளாஸ்டிக் மெனு அட்டையை நீட்ட, அதில் கண்ணைப் பதித்து விட்டு மெல்லிய குரலில் சொன்னான்:

    டொமேட்டா க்ரீம்-வித் பாரட்ஸ்டிக்ஸ்…

    எஸ் ஸார்.– அவன் நகர்ந்தான்.

    ஜெயச்சந்திரன் பார்வை அந்த மெர்க்காரா ஹால் முழுதும் ஓடியது. பீரைச் சப்பிக் கொண்டிருந்த ஒரு ஹிப்பி இளைஞன்: ஐஸ்க்ரீமை நுனி நாக்கால் ருசி பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞி: அந்நியக் கலப்பில்லாத இரண்டு தமிழ் நாட்டுத் தம்பதிகள்: புதிதாய்த் தாடி வளர்க்க ஆரம்பித்திருந்த ஒரு டீன் ஏஜ் யுவன்…

    ‘ஸார்…"

    பேரர் பீங்கான் கோப்பையில் ஆவி பறக்கும் டொமேட்டா க்ரீமோடு நின்றிருந்ன். கையிலிருந்த தட்டைப் பரப்பி விட்டுக் கோப்பையைக் கீழே வைக்க முயன்றான்.

    அதே விநாடி - கை நழுவ - சூடாடன டெமேட்டா க்ரீம் மேஜையில் பட்டு, ஜெயச்சந்திரனின் வெள்ளை நிற சூட்மெல்’ப்ளாச்’ என்று சிதறியது. வெள்ளை நிற சூட் பூராவும் ஸ்பிரே செய்த மாதிரி டொமேட்டா க்ரீம்.

    'ஸாரி ஸார்!"-பேரர் முகம் வியர்த்து நடுங்க, ஜெயச்சந்திரன் விருட்டென்று கோபப் புலியாய் எழுந்தான்.

    யூ… பாஸ்டர்ட்!

    பேரரின் கன்னத்தை நோக்கிக் கையை வீசினான்.

    ரப்…

    அண்ணா…!

    ஜெயச்சந்திரன் புரண்டு படுத்தான்.

    அண்ணா…

    ஜெயச்சந்திரனின் முகத்தில் குளிர்ந்த நீர் திவயைளாய்த் தெறித்தது.

    சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

    கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டான். எதிரே மேகலா -அவனுடைய தங்கை மாவு ஆட்டிய கையோடும், சாயம் போன சேலையிலும் நின்றிருந்தாள்.ஷ"என்னண்ணா, களவு ஏதாச்சும் கண்டியா? தலையணையைப் போட்டு இந்தக் குத்துக் குத்தறே..ம்…எழுந்திரு.. தெருக்கோடியில் உங்க பாஸ் புரோபசர் திரிவேதி வந்து கார்ல காத்திட்டிருக்காராம். உன்னை வரச் சொன்னாராம்.. எதிர் வீட்டுப் பையன் சேது இப்பத்தான் வந்து செல்லிட்டுப்போறான்.’

    மேகலா சொல்லிக் கொண்டே நகர்ந்துவிட, ஜெயச்சந்திரன் பதட்டமாய் எழுந்தான். அழுக்கான பாயையும், கிழிசல் போர்வையயையும் முறையாய் மடித்து வைத்து வழ்ட்டு, கட்டியிருந்த லுங்கியோடு எழுந்து வாசல் பக்கம் போனான்.சந்று முன் கண்ட அந்த இனிப்பான கனவு உடம்பின் சகல பாகங்களிலும் உறைந்து போயிருந்தது.கண்டசா கார், ஓட்டல் சோழா. நான்கு ஜாதிப் பெண்கள். வெள்ளை நிற சூட், மெர்க்காரா ஹால், டொமேட்டா க்ரீம் - இதெல்லாம் ஜெயச்சந்திரனுக்குக் கனவில் மட்டும் சாத்தியமே! இது மட்டுமில்லை: எத்தனையோ இரவுகளில் வரும் கனவுகளில் தனக்குப் பிடித்தமான நடிகையோடு முதலிரவுகளைக் கொண்டாடியிருந்கிறான். அவர்களுக்குக் குழந்தைகளைக் கொடுத்திருக்கிறான்.

    டேய்.. ஜெயச்சந்திரா!

    அம்மாக்காரி பாகீரதி ஒரு ஆஸ்துமா இருமலோடு, அழுக்கான சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

    "என்னம்மா…?’

    உங்க முதலாளி உன்னைப் பார்க்க வந்திருக்காராமே.. இத்தினி காலையிலே எதுக்காகடா வந்திருக்கார்? ஒரு நாளும் இல்லாமே, அதிசயமா..

    தெரியல்லேம்மா, போயப் பார்த்தாத்தான் தெரியும்.

    வர்றவர் நம்ம வீட்டுக்கே வரலாமேடா…? தெருக்கோடியிலியே என் நிக்கணும்?

    ஜெயச்சந்திரன் எரிச்சலாய் அம்மாவை ஏறிட்டான்.

    "இந்த தரித்திரம் பிடிச்ச வீட்டுக்கு வந்தா உட்கார ஒரு நாற்காலிகூட கிடையாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும். அவர் வர ஆசைப்பட்டாலும், அவரோட கார் இந்தக் குறுக்குச் சந்துல வர முடியுமா?’

    சர்ட்டை மாட்டிக் கொண்டு வாசற்படி இறங்கினான் ஜெயச்சந்திரன் தெருக்கோடியில் புரொபசர் திரிவேதியின் அம்பாசிடர் கார், சூரிய வெளிச்சத்தில் பளபளக்கும் முன் மண்டையோடு நின்றிருந்தது. திரிவேதி எதற்காக வந்திருப்பார்…? அவரிடம் வேலைக்குச் சேர்ந்து இந்த மூன்று வருஷ காலத்தில் அவர் அவனுடைய வீட்டைத் தேடி வருவது இதுதான் முதல் தடவை.

    ஜெயச்சந்திரன் காரை நோக்கி வேகமாய் நடந்தான், அவனைப் பற்றி அடுத்த பாரா..

    ஜெயச்சந்திரன் ஒரு நிஜமான இந்தியன். ஓர் இந்தியனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமா, அந்த எல்லாத் தகுதிகளும் அவனிடம் இருந்தன. படித்துவிட்டு இரண்டு வருஷ காலம் எம்ப்ளாய்மெண்டட் எக்சேஞ்சில், ஒழுங்காய் ரினியூவல் செய்தான். ‘சாப்பாடு தயார்’ என்று ஓட்டலில் போர்டு மாட்டுகிற மாதிரி,‘கல்யாணத்தை முடிக்க முடியாமல் சிரமப்பட்டான். வேலை கிடைக்காத சோர்வில் சில நாள் தாடி வளர்த்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமா என்று யோசித்தான்.நம்பிக்கையில்லாமல் கடவுளைக் கும்பிட்டான். தங்கை மேகலாவைப் பெண் பார்க்க வந்தவர்கள் பத்தாயிரம் ரூபாய் வரதட்சிணையும், பத்து பவுன் நகையும் கேட்டபோது, சினிமாவில் வருகிற கதாநாயகன் மாதிரி அழுதான்.

    காரை நெருங்கினான், ஜெயச்சந்திரன்.

    குட் மார்னிங் ஸார்!

    கட் மார்னிங்… வாடா பையா! காரின் கதவைத் திறந்தார்.

    புரொபசர் திரிவேதியின் வழக்கமான அழைப்பு அது. புரொபசர் திரிவேதி தன் அறுபது வயதைப் போன வருஷம் முடித்திருந்தார்.தன்னுடைய ஐம்பதாவது வயதில் மனைவியைக் கிருஷ்ணாம்பேட்டையில் தகனம் செய்தவர். ஒண்டிக் கட்டை புராதனப் பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் நிறைய இருந்தது.

    என்ன ஸார்… இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க? ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே பங்களாவுக்கு வந்திருப்பேனே ஸார்!

    பையா… மொதல்ல கார்ல ஏறி உட்கார்!

    ஜெயச்சந்திரன் ஏறி உட்கார்ந்தான்.

    இப்பத்தான் தூங்கி எழுந்திரிச்சியா? சரி… இப்ப விளம்பரத்தைப் பார்!– திரிவேதி கையில் வைத்திருந்த ‘ஹிண்டு’ பேப்பரை நான்காய் மடித்து – அதன் வலது பக்க மூலையைக் காட்டினார்.

    ஜெயச்சந்திரன் பார்வையை அதில் போட்டான்.

    FOR SALE

    Sixteen Century mogul handy ornamental article.

    Contact Anantha Narayanan,

    16, Rose Villa,

    Besant Nagar, Madras

    ஜெயச்சந்திரன் திரிவேதியை ஏறிட்டான். ஏதோ ஒரு முகலாய நகை சேலுக்கு வந்திருக்கு ஸார்…

    ஏதோன்னு அவ்வளவு அலட்சியமா சொல்லாதே, பையா… மொகல் நகை ரொம்பவும் புராதனம். அந்த சென்சுரி நகை நம்ம பங்களா ஆர்ட் காலரியில் இல்லை. இந்த நகையை எப்படியாவது வாங்கணும்.. இன்னிக்கு நீ இந்த அட்ரஸ_க்குப் போறே!

    நீங்க வரலையா ஸார்?

    நான் இன்னிக்குக் காலையில் கோயமுத்தூர் போறேன். அக்ரிகல்ச்சுரல் காலேஜ்ல ஒரு செமினார் அட்டெண்ட் பண்ணிட்டு நாளைக்குச் சாயங்காலம் ப்ளைட்ல திரும்பிடுவேன். நான் வர்றதுக்குள்ளே நீ இந்த அட்ரஸ_க்குப் போய் நகையைப் பார்த்து விலை நிலவரமெல்லாம் கேட்டு வை… நான் வந்ததும் மறுபடியும் ஒரு தடவை அந்த அட்ரஸீக்குப் போகலாம்.

    சரி சார்!

    இந்த அட்ரசுக்குப் போறப்போ காமிராவையும் எடுத்துட்டுப் போ.. நாலைஞ்சு ஸ்நாப் எடுத்துக்கோ.. பார்ட்டி நாணயமானவனா இல்லையான்னு அக்கம் பக்கம் கேட்டு முடிவு பண்ணிச்சு…

    சரி ஸார்!

    செலவுக்குப் பணம் வெச்சிருக்கியா?

    இல்லே ஸார்..

    திரிவேதி தன்டைய புராதன கால பர்ஸைப் பிரித்தார். ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினார்.

    போதுமா?

    போதும், ஸார்.

    பார்ட்டிகிட்ட இதமா பேசு…

    தெரியும், ஸார்!

    திரிவேதி காரின் இக்னீஷியனை உசுப்ப, ஜெயச்சந்திரன் இறங்கிக் கொண்டான்.

    வரட்டுமா பையா?

    சரி ஸார்!

    கார் நகர்ந்தது.

    ***

    காலை பத்து மணி.

    பெசண்ட் நகர் டெர்மினஸில் இறங்கிக் கொண்டான் ஜெயச்சந்திரன். இருப்பதில் சுமாராய்த் தெரிந்த சட்டையையும் பேண்ட்டையும் மாட்டி, மழுங்கிப் போன பிளேடால் ஏழாவது தடவை அதிஜாக்கிரதையாய் ஷேவ் செய்து, மேகலா ஒளித்து வைத்திருந்த டால்கம் பௌடரைக் கொஞ்சம் போல் திருடி முகத்தில் பூசிப் பளபளப்பை ஏற்றிக் கொண்டு, பஸ்ஸில் நொதநொதவென்று நசுங்கி, நாற்பது நிமிஷம் பிரயாணித்து, உடம்பு பூராவும் ஏறிக் கொண்ட நூறு கிலோ சோர்வோடு இறங்கிக் கொண்டான்.

    தூரத்தில் சமுத்திரம் நீலநிறப் பென்சிலால் கோடிழுத்த மாதிரி தெரிந்தது.

    பகுதி பூராவும் ஜனங்கள் சொற்பமாய் நடந்தார்கள்.

    அருகே யிருந்த பெட்டிக் கடைக்குப் போனான் ஜெயச் சந்திரன். பெட்டிக்கடை வைத்திருந்தவர் சமீபத்தில் பி.ஏ.வை முடித்தவர் போல் தெரியவே, ஒரு ‘ஸார்’ போட்டுக் கேட்டான்.

    ஏன் ஸார்… இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு?

    பெட்டிக் கடைக்காரப் பட்டதாரி வாங்கிப் பார்த்தார்.

    ரோஸ் வில்லாவா?

    ஆமா…

    அது கொஞ்சம் எக்ஸ்டென்ஷன் ஏரியா ஸார்… அதோ… அந்தச் சமுத்திரக் கோடியிலயிருக்கு… புதுப் பணக்காரங்க நாலைஞ்சு பேர் அந்த ஏரியால வீடு கட்டியிருக்காங்க. போய் விசாரிச்சீங்கன்னா தெரியும் ஸார்! பெட்டிக் கடைக்காரர் சொல்ல-ஒரு தேங்க்ஸை உதிர்த்து விட்டு நடந்தான் ஜெயச் சந்திரன்.

    மணல் பரப்பில் கால்கள் புதையப் புதைய, ஒரு பத்து நிமிஷ நடை. உடம்பு முழுவதும் வியர்வை ஜலஜலவென்று ஊறிச் சட்டையை நனைத்தது.

    அடக்குவார் இல்லாமல் சமுத்திர அலைகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருக்க-சவுக்கு மரத் தோப்புக்கு மத்தியில் அந்த பங்களா தெரிந்தது.

    ஒண்டியான பங்களா.

    கொஞ்சம் தொலைவில் சில பங்களாக்கள் சிதறிக் கிடந்தன.

    ஜெயச்சந்திரன் பங்களா நோக்கிப் போனான்.

    மரத்தாலான காம்பௌண்ட் கேட் பொறுப்பில்லாமல் திறந்து கிடக்க, தயக்கமாக ஒரு நிமிஷம் நின்று விட்டு, உள்ளே நுழைந்தான். சவுக்கு மரங்கள் வரிசையாய் நின்றிருக்க- அதன் நிழலிலேயே நடந்து பங்களாவின் முகப்பை நெருங்கினான். அடர்த்தியான பச்சை பெயிண்ட் அடித்த கதவு தாழிடப் பட்டிருக்க-அதன் நெற்றியில் கறுப்பு போர்ஷன் பின்னணியில் வெள்ளை நிற பிளாஸ்டிக் எழுத்துகள் மின்னின.

    16, rose villa

    கதவின் இடதுபக்க மேற் புறத்தில் ரத்தத்தால் பொட்டு வைத்த மாதிரி அந்த காலிங்பெல் தெரிய-வாசற்படி ஏறி அதை அழுத்தினான் ஜெயச்சந்திரன்.

    பங்களாவின் உள்ளே மெலிதாய் வீறிட்டது காலிங் பெல்.

    கதவு திறக்கப்படக் காத்திருந்தான் ஜெயச்சந்திரன்.

    சுத்தமாய் ஒன்றரை நிமிஷம் கழிந்த பிறகு-கதவு ‘டொக்’ என்ற சத்தத்தோடு திறந்தது.

    அந்தப் பெண் நின்றிருந்தாள்.

    வயது 17, 18, 19 - இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் போலிருந்தது. உடம்பு முழுவதும் துளிர் வெற்றிலை மாதிரி வாளிப்பு. குடும்பப் பாங்கான முகத்தில் மஞ்சளின் தீற்றல் கொஞ்சம் அதிகப்படியாகவே தெரிந்தது. வரைந்த மாதிரியான கண்களில் கணிசமாய்க் காந்தம் இருந்தது. உதடுகள் இயல்பான சிவப்பில் ஆரஞ்சுச் சுளைகளாய்த் தெரிந்தன.

    உங்களுக்கு யார் வேணம்? என்று அவள் கேட்டபோது, பிளந்த உதடுகளுக்குள்ளே ஒரு முத்துச் சரத்தை ஒளித்து வைத்திருந்தாள். ஐ மீன் பல் வரிசை, கழுத்து வழக்கம் போலவே சங்கு மாதிரி தெரிந்தது. அளவான மார்புகளிலும், தேவையான அகல இடுப்பிலும், கண்களை நிறைந்தாள். விலை அதிகமில்லாத சேலையை நேர்த்தியாய்ச் சுற்றி-சேலையின் நிறத்துக்குப் பொருத்தமில்லாமல் பிளவுஸை மாட்டியிருந்தாள்.

    ஜெயச்சந்திரன் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு கேட்டான்.

    மிஸ்டர் அனந்தநாராயணன் இருக்காரா?

    நீங்க யாரு? அந்தப் பெண் எதிர்க் கேள்வி கேட்டான்.

    "எம் பேர் ஜெயச்சந்திரன். புரொபசர் திரிவேதிகிட்ட அசிஸ்டண்டா இருக்கறேன்… ஹிண்டு பேப்பர்ல மிஸ்டர் அனந்தநாராயணன் ஒரு விளம்பரம் குடுத்திருக்கார்… அது சம்பந்தமாய்ப் பார்த்துட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1