Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadunishi Thendral
Nadunishi Thendral
Nadunishi Thendral
Ebook91 pages46 minutes

Nadunishi Thendral

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 11, 2020
ISBN6580100404885
Nadunishi Thendral

Read more from Rajesh Kumar

Related to Nadunishi Thendral

Related ebooks

Related categories

Reviews for Nadunishi Thendral

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadunishi Thendral - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நடுநிசித் தென்றல்

    Nadunishi Thendral

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    தார் ட்ரம்மை கொட்டின மாதிரி இருட்டில் அவள் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தாள்.

    இதற்கு மேல் ஓட முடியாது எனக் கால்கள் கெஞ்சிக் கொண்டு பின்னின.

    பூட்டிக் கிடந்த பால் பூத் ஓரமாய் இருட்டுக்குள் சட்டென்று பதுங்கிக் கொண்டாள். முன்னை விட அதிகமாய் மூச்சிறைத்தது. இருதயத்தின் ட்ரம் ஓசை அவள் காதுகளுக்கே கேட்டது. ஓட்டம் நின்றதால் குப்பென்று புறப்பட்ட வியர்வை உடைகளைச் சொட்டச் சொட்ட நனைய வைத்தது.

    தப்...

    தப்...

    தப்…

    அங்கே நிலவிய சில விநாடி அமைதியைக் குலைத்துக். கொண்டு காலடியோசைகள் கேட்டன.

    எதிரெதிர் திசைகளிலிருந்து ஆட்கள் சிலர் ஓடி வந்தார்கள். வெறி மின்னும் கண்களோடு பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள்.

    தலைவா... இந்தப் பக்கம் தான் அவ ஓடி வந்தா.

    நாங்க பார்க்கலையே...

    துரத்திட்டு வந்த எங்களுக்கும் டிமிக்கி கொடுத்துட்டா. எதிர்ப்பக்கமா வந்த நீங்களும் பார்க்கலை... அப்படின்னா அவ இங்கே எங்கேயோ தான் பதுங்கி இருக்கணும்.

    ஆட்கள் அந்த இடத்தை தீவிரமாய் அலசத் துவங்கினார்கள்.

    அவளுக்குள் கலவர செல்கள் ஏராளமாய் உற்பத்தி ஆகின.

    படபடக்கும் இருதயத்தோடு பதுங்கி இருந்தவளின் தலைமுடியை திடீரென்று கொத்தாகப் பற்றியது ஒரு எஃகுக் கரம்.

    தலைவா... அவ இங்கே இருக்கா.

    ***

    விறுவிறுப்பான க்ரைம் நாவலில் மூழ்கிப் போயிருந்த அர்ஜுனை அம்மா ஞானாம்பாளின் குரல் கலைத்தது.

    டேய் அர்ஜுன் நேரமாச்சுடா. சீக்கிரம் வா.

    இரும்மா, இன்னும் ஒரே ஒரு பக்கம்.

    அவள் கெஞ்சினாள்.

    எ… என்ன ஒண்ணும் பண்ணாதீங்க... விட்டுடுங்க… ப்ளீஸ்.

    அவர்கள் எல்லோருமே கோணலாய்ச் சிரித்தார்கள்.

    உன்னை விடறதா? விட்டுடறோம். எங்க தேவையை எல்லாம் தீர்த்துக்கிட்ட பிறகு விட்டுட்றோம்.

    தலைவா என்று அவர்களால் விளிக்கப்பட்டவன் நெருங்கி வந்து அவளுடைய புஜத்தை தனது முரட்டுக் கரங்களால் பற்றினான்,

    அடேய் அர்ஜுன்... நீ இப்ப வரப் போறியா… இல்லையா?

    ஞானாம்பாள் போட்ட சத்தத்தில் புத்தகத்தை பட்டென்று மூடி வைத்தான் அர்ஜுன்.

    டைனிங் ஹாலுக்கு வந்தான்.

    இட்லி. ஆறிட்டிருக்கு. உனக்கு எடுத்து வெச்சிட்டு நான் ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா?

    மேகத்தின் நிறத்தில் வெள்ளைப் புடவை உடுத்தியிருந்த ஞானாம்பாளின் அகலமான நெற்றி பாலைவனம் மாதிரி வெறுமையாய் கிடந்தது. செக்கண்டரி க்ரேட் ஸ்கூல் டீச்சர்.

    நான் எடுத்துச் சாப்பிட்டுக்க மாட்டேனாம்மா?

    புஸ்தகத்தில் மூழ்கிப் போயிட்டீன்னா நீ உலகத்தையே மறந்துடுவே. அப்புறம் பசி தூக்கம் வேலை எல்லாமே உனக்கு மறந்து போயிடும். காலங்கார்த்தாலே கதைப் புஸ்தகத்தை எடுத்து வெச்சு உட்காராதேன்னு உனக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.

    டிபன் தட்டில் சட்டினியை ஊற்றினாள்.

    அவன் விள்ளல்களை வாயில் போட ஆரம்பித்த பிறகு தான் அவள் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

    சரி... நான் ஸ்கூலுக்குக் கிளம்பட்டுமா?

    கிளம்பும்மா

    புஸ்தகத்தைப் படிச்சிட்டு மசமசன்னு உட்கார்ந்துட்டிருக்காதே. சீக்கிரமா குளிச்சுட்டு ஒர்க் ஷாப்புக்குக் கிளம்பு. நாராயணமூர்த்தி ஸார் நேத்துக்கு என்கிட்ட புலம்பிட்டுப் போறார்.

    என்ன புலம்பினார்?

    சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்டதால் உனக்கு நான் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டேனாம். அப்பாவோட கண்டிப்பு இல்லாம நீ விட்டேத்தியா வளர்ந்துட்டியாம். ஒரு கையில ஸ்பானரும், ஒரு கையில கதை புஸ்தகத்தையும் வெச்சிக்கிட்டு வேலை பார்த்தா சுத்தப்படுமான்னு கேக்கறார்.

    இங்கே பாரும்மா நான் ரிப்பேர் பார்த்த வண்டி ஒழுங்கா ஓடலைன்னாத்தான் என்னைக் குறை சொல்லணும்

    அவரோட காரை உன் ஓர்க் ஷாப்பில் விட்டு ஒரு வாரம் ஆச்சாம். நீ இன்னும் வேலை முடிச்சுக் கொடுக்கலைன்னு புலம்பினார்.

    சீக்கிரமா செஞ்சு தர்றவன்கிட்டே போக வேண்டியது தானே?

    அதெப்படி... நீதான் திறமையா வேலை பார்த்துத் தர்றியாம்.

    "அதான்.... அதான்.... வண்டி ஒழுங்கா ரிப்பேர் பார்க்கணும்னா

    Enjoying the preview?
    Page 1 of 1