Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paainthu Vaa Vivek
Paainthu Vaa Vivek
Paainthu Vaa Vivek
Ebook151 pages58 minutes

Paainthu Vaa Vivek

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Paainthu Vaa Vivek

Read more from Rajeshkumar

Related to Paainthu Vaa Vivek

Related ebooks

Related categories

Reviews for Paainthu Vaa Vivek

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paainthu Vaa Vivek - Rajeshkumar

    17

    1

    விவேக்கும் ரூபலாவும் அந்த மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டரில் ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்துவிட்டு தியேட்டர்க்குப் பின்புறம் இருந்த கார் பார்க்கிங்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

    நேரம் ராத்திரி 9.45.

    தலைக்கு மேலே வானம் லேசாய் தூறிக் கொண்டிருக்க காற்றில் ஏ.ஸியின் குளிர்.

    ரூபி!

    ம்

    இனிமே தமிழ் சினிமாவையே மறந்துடணும் போலிருக்கு, எப்படி இந்த சினிமாக்காரங்களாலே ஒரே மாதிரி படம் எடுக்க முடியுது...? முகத்தை சவரம் பண்ணாத ஹீரோ, முதுகுக்குப் பின்னாடி ஒரு அரிவாள், ஒரே ஒரு குத்துல எட்டு திசைக்கும் பறந்து போய் விழற வில்லன்கள், நடிக்கத் தெரியாத - தொப்புள் மட்டும் காட்டத் தெரிந்த ஒரு ஹீரோயின், நம்மை சிரிக்க வைக்கக் கஷ்டப்படற காமெடியன், புரியாத தமிழ்பாட்டு! நூற்றி ஐம்பது ரூபாய் தண்டம். இந்தப் பணத்தை ஏதாவது ஒரு ஆர்பனேஜ் விடுதிக்கு எம்.ஒ. பண்ணியிருக்கலாம்.

    ரூபலா சிரித்தாள். சினிமா ஈஸ் சினிமா. தியேட்டர்க்குள்ளே போகும் போதே மூளையைக் கழட்டி கையில வெச்சுகிட்டுதான் படம் பார்க்கணும். லாஜிக் பார்த்தோம்ன்னா தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பைத்தியம் பிடிச்சுடும். இப்ப நாம பார்த்த படத்துல ஹீரோ அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்வானே... உங்களுக்கு ஞாபகம் வருதா?

    ம்... வருது...!

    அது என்ன டயலாக்ன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

    நான் பேசினா எல்லார்க்கும் புரியற மாதிரி இருக்கும். ஆனா யோசிச்சு பார்த்தா ஒண்ணுமே புரியாது...!

    அட... கரெக்டாய் சொல்லிட்டீங்களே?

    எல்லாரும் இப்படி மனப்பாடம் பண்ணி வெச்சுக்கணும்ன்னுதானே அந்த ஹீரோ படத்துல அவ்வளவு தடவை சொல்றான்.

    அந்த ஹீரோ சொல்றமாதிரிதான் படமும் இருக்கு. படத்தைப் பார்க்கும் போது கதை புரியற மாதிரி இருக்கு. படம் முடிஞ்சு வெளியே வரும் போது ஒண்ணுமே புரியலை.

    சரி... சரி... இந்த பாடாவதி படத்தை மறந்துட்டு வேற ஏதாவது விஷயம் பேசுவோம். சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போலாம்?

    மழையில் நனைந்து சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த காரை நெருங்கிய போது விவேக்கின் செல்போன் ஒலித்தது. கார்க்குள் ஏறி உட்கார்ந்து கொண்டே அழைப்பது யார் என்று பார்த்தான். டிஸ்ப்ளேயில் விஷ்ணுவின் பெயர்.

    விஷ்ணு.

    குட் ஈவினிங் பாஸ்

    ரூபலா ஏறி உட்கார்ந்ததும் காரை மெல்ல நகர்த்தினான் விவேக்.

    சொல்லுடா...!

    இப்போ எங்கே இருக்கீங்க பாஸ்... வீட்லயா? வெளியேவா...?

    வெளியே...

    எங்கே... ஷாப்பிங்கா...?

    ஷாப்பிங் பண்ணத்தான் கிளம்பினோம். மல்ட்டி காம்ப்ளக்ஸுக்கு வந்த போது ஒரு படம் பார்க்கலாம்ன்னு போய் மாட்டிகிட்டு இப்பத்தான் வெளியே வந்தோம்; உன்கிட்டே மாட்டிகிட்டோம்.

    இன்னும் டின்னர் சாப்பிடலையே?

    இனிமேத்தான்!

    தேங்க் காட்...!

    ஏண்டா கடவுளுக்கு நன்றி சொல்றே?

    பாஸ்! இன்னிக்கு நீங்களும் ரூபலா மேடமும் என்னோடுதான் டின்னர் சாப்பிடப் போறீங்க...

    இன்னிக்கு என்னடா விஷேசம்...?

    பாஸ்...! இன்னிக்கு ஒரு புனித நாள்... அன்பும் அஹிம்சையும் அவதரித்த நாள். வீரமும் விவேகமும் விளைந்த நாள்.

    டேய் இன்னிக்கு மே பத்தாம் தேதி. அக்டோபர் 2-ம் தேதிதானே காந்தி பிறந்தார்... மே பத்து யாரோட ஃபர்த்டே...

    பாஸ்...! காந்தி பிறந்தது அக்டோபர் ரெண்டு. இந்த விஷ்ணு பிறந்தது மே பத்து.

    ஓ...! இன்னிக்கு உன்னோட பிறந்த நாளா? என்னடா... இவ்வளவு லேட்டா சொல்றே...?

    என்ன பண்றது பாஸ்...! சாயந்தரம் ஏழு மணிக்கு மேல்தான் எனக்கே இன்னிக்கு என்னோட பிறந்தநாள்ன்னு ஞாபகத்துக்கு வந்தது. உடனே உங்க செல்போனை காண்டாக்ட் பண்ணினேன். நீங்க சினிமா தியேட்டர்ல இருந்ததால செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தீங்க போலிருக்கு...! பாஸ்... நீங்க மேடத்தைக் கூட்டிகிட்டு ஹோட்டல் மான்செஸ்டர்க்கு வந்துடுங்க. இன்னிக்கு ஒண்ணா உட்கார்ந்து டின்னர் சாப்பிடுவோம்.

    டேய் விஷ்ணு...! இப்பவே மணி பத்தாகப் போகுது... உன்னோட பர்த்டே பார்ட்டியை நாளைக்கு வெச்சுகிட்டா என்ன...?

    இல்ல பாஸ்...! நான் இங்கே டேபிள் ரிசர்வ் பண்ணிட்டேன். வந்துடுங்க...! அயாம் வெயிட்டிங். லேட் பண்ணிடாதீங்க. விஷ்ணு செல்போனை அணைத்துவிட விவேக் ரூபலாவைப் பார்த்தான்.

    விஷ்ணுவுக்கு இன்னிக்கு ‘பர்த்டே’யாம். அவன்கூட உட்கார்ந்து டின்னர் சாப்பிடணுமாம்...

    எந்த ஹோட்டல்?

    மான்செஸ்டர்

    அது எங்கே இருக்கு...?

    ரேஸ் கோர்ஸ் ரோட்ல - கலெக்டர் பங்களாவுக்குப் பக்கத்துல.

    போயிட வேண்டியதுதான்...! விஷ்ணுவுக்கு நம்மைத் தவிர வேறு யாரு இருக்காங்க... போன வருஷம் அன்னபூர்ணா பீப்பிள்ஸ் பார்க்கில் பார்ட்டி கொடுத்தான். இந்த வருஷம் மான்செஸ்டர்ல... அடுத்த வருஷம் ரெஸிடென்ஸியில் கொடுத்தாலும் கொடுப்பான். ரூபலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார் தியேட்டரை விட்டு வெளியே வந்தது.

    கோவை அந்த முன்னிரவு நேரத்திலும் சிரமமான போக்குவரத்தில் இருந்தது. செக்கண்ட் ஷோ சினிமா பார்க்க - தூறும் மழையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் எடுக்க - ஒரு நீண்ட வரிசை காத்திருந்தது. வருங்கால முதலமைச்சர்கள் ஆகும் ஆசையில் இன்றைய ஹீரோக்கள் ராட்சஸ கட் அவுட்களில் கழுத்தில் காகிதப்பூ மாலைகளோடு நின்றிருந்தார்கள்.

    விவேக் போக்குவரத்தில் கலந்து நஞ்சப்பா சாலையின் அகலத்தில் பயணித்து அவிநாசி சாலையின் சிக்னல்களில் நின்று நின்று ரேஸ்கோர்ஸ் ரோட்டுக்குள் நுழைந்து மான்செஸ்டர் ஹோட்டலுக்குள் பிரவேசித்தபோது நேரம் சரியாய் பத்து.

    ஹோட்டல் போர்டிகோ படிகளிலேயே விஷ்ணு காத்திருந்தான். கறுப்பு பேண்ட் ஒயிட் பனியன்சர்ட். பனியன் வாசகம் ‘ I LOVE ALL’ என்று சொன்னது.

    வாங்க பாஸ்... வாங்க மேடம்...!

    விவேக் காரைவிட்டு இறங்கிக் கொண்டே அவனுடைய தலையில் மெல்லத் தட்டினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1