Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Welldone Vivek
Welldone Vivek
Welldone Vivek
Ebook168 pages1 hour

Welldone Vivek

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Welldone Vivek

Read more from Rajeshkumar

Related to Welldone Vivek

Related ebooks

Related categories

Reviews for Welldone Vivek

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Welldone Vivek - Rajeshkumar

    16

    1

    அந்த ஞாயிற்றுக்கிழமை மழையோடு விடிந்து கொண்டிருந்தது.

    விவேக் ஜாக்கிங் சூட்டை மாட்டிக் கொண்டு சமையலறையைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

    ரூபி...

    ரூபலா சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். விவேக் ஜாக்கிங் சூட்டில் நிற்பதைப் பார்த்ததும் முகத்தில் கோபத்தை ஒட்ட வைத்துக் கொண்டு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி வெளியே வந்தாள்.

    ஸார் ஜாக்கிங் கிளம்பிட்டீங்க போலிருக்கு?

    ஆமா...

    வெளியே மழை பெய்யுது... ஸார்...

    அது மழையல்ல. தூறல்... நான் கார்ல பீச்சுக்கு போய்ச் சேர்றதுக்குள்ளே இந்த தூறலும் நின்னுடும். இந்த தூறலுக்கெல்லாம் பயந்தா முடியுமா..?

    நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். மழையில நனைஞ்சு ஏதாவது உடம்புக்கு வந்துட்டா அப்புறம் கஷ்டப்படப் போறது நீங்கதான்.. ஸார்..

    பாட்டி மாதிரி அட்வைஸ் பண்ணிட்டிருக்காதே...! டீ ரெடியா இல்லையா...? இப்பவே மணி அஞ்சேமுக்கால், இந்நேரம் கார்ல நான் கிளம்பியிருக்கணும். லேட்.. லேட்.. மகா லேட்..

    ரூபலா நாடக பாணியில் இரண்டு கைகளையும் குவித்தாள்.

    என் பிராணநாதரே..! ஒரு இரண்டு மணித்துளிகள் பொறுத்துக் கொள்ளுங்கள். பால் கொதிநிலைக்கு வந்ததும் உடனே தேநீர் தயாரித்துத் தருகிறேன். நீங்கள்...

    ரூபலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் அழைப்பு மணி ‘டிடிங்’ என்று கூப்பிட்டது. விவேக்கைப் பார்த்தாள் ரூபலா.

    இந்த நேரத்துக்கு யார்ன்னு தெரியலையே?

    யாராயிருக்கும்னு நினைக்கிறே...?

    எப்படித் தெரியும்.. போய்க் கதவைத் திறந்தால் தானே வந்திருக்கிறது யார்ன்னு தெரியும்?

    வந்திருக்கிறது யார்ன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்.

    எப்படி...?

    அவங்க காலிங்பெல்லை அடிச்ச விதத்தைவெச்சுத்தான்..

    மறுபடியும் காலிங்பெல் ‘டிடிங்’ என்றது. எனக்குத் தெரிஞ்சு போச்சு... என்றாள் ரூபலா.

    யாரு... சொல்லு பார்க்கலாம்...

    கோகுல்நாத் அங்கிள்.....

    கிடையாது.

    அங்கிள் இல்லேன்னா வேற யாராயிருக்க முடியும்? வேலைக்காரி ஏழு மணிக்கு முன்னாடி எந்த ஜென்மத்திலேயும் வரமாட்டா...

    சரி.. நான் சொல்லட்டுமா...?

    சொல்லுங்க...

    வந்திருக்கிறது விஷ்ணு. போய்க் கதவைத் திற...

    ரூபலா ஆச்சரியப்பட்டுக் கொண்டே போய்க் கதவைத் திறந்தாள்.

    வெளியே -

    விஷ்ணு நின்றிருந்தான். வலது கையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அன்றைய நாளிதழ்.

    வி... விஷ்ணு... என்ன இவ்வளவு காலங்கார்த்தால வந்திருக்கே..? நீ காலிங்பெல்லை அடிச்ச விதத்தை வெச்சே உன்னோட பாஸ், வந்திருக்கிறது நீதான்னு கண்டுபிடிச்சுட்டார்...

    விஷ்ணு புன்னகைக்க முயன்று முடியாமல் இறுகிய முகத்தோடு உள்ளே வந்தான். விவேக் அவன் முகத்தைப் படித்துவிட்டு ரூபலாவிடம் திரும்பினான்.

    ரூபி! இவன் குட்மார்னிங் சொல்லாமே வர்றதைப் பார்த்தா பேப்பர்ல ஏதோ ஹாட் ந்யூஸ் இருக்கும் போலத் தெரியுது என்றான்.

    ஸார்... பேப்பர்ல வந்திருக்கிறது ஹாட் நியூஸ் கிடையாது. பேடு நியூஸ் அண்ட் சேடு ந்யூஸ். நீங்க இன்னும் பேப்பரையே பார்க்கலைன்னு நினைக்கிறேன்.

    பேப்பர் போடற பையன் ஆறரை மணிக்குத்தானே வருவான். என்ன ந்யூஸ் காட்டு...

    விஷ்ணு அந்த நாளிதழைப் பிரித்து எட்டாவது பக்கத்தின் வலது பக்க கார்னரைக் காட்டினான். விவேக் பார்வையை அங்கே கொண்டு போக, கண்களுக்கு அந்தக் கறுப்புக் கட்டம் கட்டிய செய்தி கிடைத்தது.

    இயற்கை எய்தினார்.

    இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற முன்னாள் ஏர்மார்ஷல் மித்ராராய் நேற்று இரவு பதினோரு மணி அளவில் அகால மரணம் அடைந்து இறைவன் திருவடி சேர்ந்தார்கள் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இப்படிக்கு,

    குடும்பத்தார்.

    விவேக் திடுக்கிட்ட பார்வையோடு நிமிர்ந்தான்.

    மைகுட்னஸ்... ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட இவரை ஒரு ஃபங்க்ஷன்ல பார்த்து ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். ‘மெட்ராஸ் க்ளைமேட் ஒத்துக்கலை. சீக்கிரமாகவே ஊட்டியில் இருக்கிற மகன் வீட்டுக்குப் போய் செட்டில் ஆயிடணும்’னு சொன்னார். வெரி நைஸ் பர்ஸன். மரணம் எப்படின்னு போன் பண்ணிக் கேட்டியா விஷ்ணு...?

    என்னோட அப்பாவுக்கும் உங்களுக்கும் மித்ராராய் நல்ல பழக்கமுள்ளவர்ங்கிற காரணத்தாலே உடனடியா அவர் வீட்டுக்கு போன் பண்ணினேன். ஒரே என்கேஜ்ட் டோன். போன்கால்ஸ் நிறைய வந்துட்டிருக்கும். ஸோ... ட்ரை பண்றதுல பிரயோஜனம் இல்லைன்னு நினைச்சு விஷயத்தை உங்ககிட்டே கன்வே பண்ணிட்டு போலாம்ன்னு வந்தேன் ஸார்...

    இங்கிருந்து போன் பண்ணிப் பாரு...

    விஷ்ணு டெலிபோனை நோக்கிப் போக, விவேக் பக்கத்தில் இருந்த நாற்காலிக்கு தளர்ந்து போய் உட்கார்ந்தான். ரூபலா அவனை நெருங்கினாள்.

    என்னங்க... நீங்களும் விஷ்ணுவும் உடனே கிளம்பி மித்ராராய் வீட்டுக்குப் போறதுதான் பெட்டர். போன் பண்ணி பேசிட்டிருக்க நேரமில்லை.

    மித்ராராய் சாதாரண நபர் கிடையாது. இரண்டு வருஷத்துக்கு முந்திவரை ராணுவத்தின் விமானப் படையில் சீஃப் ஏர்மார்ஷலாக இருந்தவர். ராணுவ விதிகள்படி அவரோட பாடி இப்போ வீட்ல இருக்கா.. இல்ல ராணுவபாரக்ஸ் ஏதாவது ஒண்ணுக்கு கொண்டு போயிருக்காங்களான்னு தெரிஞ்சுகிட்டு நாம போறது பெட்டர். சொன்ன விவேக் பெருமூச்சொன்றை விட்டுவிட்டுத் தொடர்ந்தான்.

    மித்ராராய் எப்பேர்ப்பட்ட மனிதர்...! பாகிஸ்தானுக்கும் நமக்கும் போர் மூண்டபோது நாட்டு விமானங்களை வெச்சுக்கிட்டு சாகசம் பண்ணினவர். பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப்படைத் தளபதிகளுக்கு மித்ராராய் பேரைக் கேட்டாலே வயித்தைக் கலக்கும்...

    ரூபலா கேட்டாள்.

    அவர்க்கு இப்போ என்ன வயசு இருக்கும்?

    அறுபத்தி நாலு.. சொன்ன விவேக் ஆனா... பார்க்கிறதுக்கு யங் அண்ட் எனர்ஜிடிக்கா இருப்பார். அவர்க்கு மரணம் இவ்வளவு சீக்கிரத்துல வரும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை.. என்றான்.

    விஷ்ணு திரும்பி வந்தான். ஸார்...! லைன் கிடைக்கலை. தொடர்ந்து என்கேஜ்ட் டோன். அங்கே கால்ஸ் தொடர்ந்து வந்துட்டிருக்குன்னு நினைக்கிறேன்.

    சரி.. கிளம்பு... நாம நேர்லயே போய் ஹோமேஜ் பண்ணிட்டு வந்துடலாம்.

    விவேக் பக்கத்து அறைக்குப் போய் தன் ஜாக்கிங் சூட்டிலிருந்து வேறு ட்ரஸ்ஸுக்கு மாறி வெளியே வந்தான்.

    விஷ்ணு...! கிளம்பு...

    ரூபலா குரல் கொடுத்தாள்.

    என்னங்க.... டீ கேட்டீங்க...

    வேண்டாம் ரூபி... மனசு கனத்துப் போய் கிடக்கு...

    விவேக் விஷ்ணுவோடு வெளியே வந்து போர்டிகோ இருட்டில் கரைந்து நின்றிருந்த மாருதிக்குள் ஏற, விஷ்ணு பின் தொடர்ந்து வந்து ஏறி உட்கார்ந்தான்.

    கார் கிளம்பியது. ரோட்டுக்கு வந்து வேகம் பிடித்தது.

    விஷ்ணு...!

    ஸார்...

    மித்ராராய் அகால மரணமடைந்தார்ன்னுதானே பேப்பர்ல போட்டிருந்தது...?

    "ஆமா

    Enjoying the preview?
    Page 1 of 1