En Iniya Innaley
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to En Iniya Innaley
Related ebooks
Thee Nila Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5Oru Maranathin Maranam Rating: 5 out of 5 stars5/5Enakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsArththamulla Arattai Rating: 0 out of 5 stars0 ratingsTajmahal Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsInimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsMugam Illathavan! and Nizhal Por! Rating: 0 out of 5 stars0 ratingsJannalkal Thirakkinrana Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodi Roobai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsNetru Naragam Indru Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsNenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratingsYetho... Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsHaritha Oru AchariyaKuri! Rating: 0 out of 5 stars0 ratingsFirst Flight to Paris Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Thenkoodum Sila Karkalum Rating: 4 out of 5 stars4/5Miss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5Mul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Thoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Neera Theevu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for En Iniya Innaley
0 ratings0 reviews
Book preview
En Iniya Innaley - Rajeshkumar
23
1
அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு செய்திருந்த செமினாரில் நூற்றுக்கணக்கான வழுக்கைத் தலைகள் வீடியோ வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்க, மேடையின் மையத்தில் நின்று தனக்கு முன்பாய் நீட்டிக்கொண்டிருந்த சிறிய எலக்ட்ரானிக் மைக்கில் சயன்டிஸ்ட் கௌரி சங்கர் தெளிவான ஆங்கிலத்தில் நிதானமாய் பேசிக்கொண்டிருந்தார். நேரம் மாலை 6.45.
கடந்த 55 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும் சர்வதேசத் தரத்துக்கு நாம் உயரவில்லை என்பதே உண்மை. நாம் இந்தத் துறையில் பின்தங்கியிருப்பதாக WHO எனப்படும் உலக சுகாதாரக் கழகமும் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவ மேதைகள் அரும்பாடுபட்டு கண்டுபிடித்த 14 புதியவகை மருந்துகளை சர்வதேச மருத்துவ கவுன்ஸில் நிராகரித்துவிட்டதாக பத்திரிகைகள் கட்டம் போட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஏன் இந்த அவல நிலைமை, இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வருடத்துக்கு ரூ. 5000 கோடிகளை இந்தியா தன் மருத்துவ ஆய்வுகளுக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சர்வதேச மருத்துவ ஆய்வு இதழ்களில் இந்திய மருத்துவ ஆய்வுகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்காதது ஏன்? என நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 1998-ல் அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் 338 பரிசோதனை நடத்தி முடித்தது. 2001 வரை 133 பரிசோதனை முடிவுகளின்படி அறிக்கை வெளியிடப்படவில்லை... என்று இந்திய கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் 2001 ஆகஸ்ட் அறிக்கையில் சாடியுள்ளார். இந்திய மருத்துவ விஞ்ஞானம் பலவகைகளிலும் பின்தங்கி இருப்பதற்குக் காரணங்கள் என்னென்ன என்பதை பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி வல்லுநர்கள் பாயிண்ட் பாயிண்ட்டாக சொல்லியுள்ளனர்"
கௌரிசங்கர் பேச்சை நிறுத்திவிட்டு மேஜையின் மேலிருந்த மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் நீரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். கைகளில் வைத்து இருந்த கம்ப்யூட்டர் தாள்கள் மெல்லப் புரட்டப்பட்டன.
ஏப்ரல் 14-ம் தேதி உலக ஆராய்ச்சிக்கூட பிராணிகள் தினமாக கொண்டாடப்பட்டது. ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைக்காக உபயோகப்படுத்தப்படும் பிராணிகள் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவைகளை வைத்து சோதனைகளை வெற்றிகரமாய் செய்யமுடியும். அந்த சோதனைகளின் அடிப்படையில் மருந்துகளை தயாரிக்க முடியும். ஆனால், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைக்காக உபயோகப்படுத்தப்படும் பிராணிகள் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. பொதுவாக தெருக்களில் அலைந்து திரியும் பிராணிகளைப் பிடித்து வந்து சோதனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். இதனால் பரிசோதனைகளின் முடிவில் நமக்கு நல்ல ரிப்போர்ட் கிடைப்பது இல்லை. அந்த ரிப்போர்ட்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் மருந்துகள் சர்வதேச தரத்துக்கு ஈடு கொடுக்கும்படியாக இல்லை. மருத்துவத்துறையில் இந்தியா பின்னோக்கி போய்க்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
கௌரி சங்கர் கம்ப்யூட்டர் தாளை புரட்டுவதற்காக சில விநாடிகள் இடைவெளி விட்டபோது முன்வரிசையில் இருந்த ஒரு வழுக்கைத்தலை எழுந்தது.
இந்தியா இந்த மருத்துவத் துறையில் வெற்றிபெற்று சர்வதேச அளவுக்கு உயர உங்களிடம் ஏதாவது வழி முறைகள் உள்ளதா?
கௌரி சங்கர் அந்த நபரைப் பார்த்து புன்னகைத்தார். உள்ளது! அந்த வழிமுறைகளைத்தான் இப்போது படிக்கப் போகிறேன். இவைகளை செயல்படுத்த கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகும். செலவைப் பற்றி அரசாங்கம் பயப்பட்டால், நாம் சர்வதேச அளவுக்கு உயர முடியாது. நாம் இந்த மருத்துவத்துறையில் இன்னமும் எல்.கே.ஜி. அளவிலேயே இருக்கிறோம். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் ரேபிஸ் எனப்படும் வெறிநாய் கடிக்கான தடுப்பு மருந்தை ஆட்டு மூளையிலிருந்து எடுக்கும் பழக்கத்தை இந்தியா மற்றும் துனிஷியா ஆகிய 2 நாடுகள் மட்டுமே இந்த 2003லும் கடைபிடித்து வருகின்றன. ஆட்டு மூளையிலிருந்து தடுப்பு மருந்தை தயாரிக்கும் முறைக்கு தடைவிதித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற நாடுகள் எல்லாம் திசு வளர்ப்பியல் முறையில் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து சர்வதேச மருந்துமார்க்கெட்டில் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. உலக சுகாதார நிறுவனம் திசு வளர்ப்பியல் முறையில் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும்படி இந்தியாவை அறிவுறுத்தியுள்ளது. இப்போதுதான் இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் ஆண்டுக்கு 35,000 லிட்டர் நியூரல் திசுவைப் பெறுவதற்காக ஒன்பது பயலாஜிக்கல் ப்ரொடக்ஷன் சென்டர்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் பிராணிகளை சித்ரவதை செய்யாமல் திசு வளர்ப்பு முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சர்வதேச தரத்துக்கு சமமாக நம்மால் மருந்துகளைத் தயாரிக்க முடியும்.
அரங்கில் மெலிதாய் கைத்தட்டல் எழுந்தது. அது அடங்கும் வரை காத்திருந்து கௌரி சங்கர் பேச்சைத் தொடர நினைத்தபோது -
தலை லேசாய் சுற்றுவது போன்ற உணர்வு. கண்களுக்குள் ஒரு கொத்து இருட்டு பாய்ந்தது.
‘எனக்கு என்னாயிற்று...?’
கௌரிசங்கர் யோசித்து அந்த அவஸ்தையிலிருந்து மீள்வதற்குள் முகம் குப்பென்று வியர்த்தது. மார்பு அடைத்துக்கொண்டு சுவாசிக்கத் திணறினார். மினரல் வாட்டர் பாட்டிலை எடுக்க முயன்றார். கைகள் நடுங்கின.
மேடையின் ஓரத்தில் நின்றிருந்த செமினார் அமைப்பாளர்கள் ஓடிவந்தார்கள்.
ஸார்... வாட் ஹேப்பண்ட்?
தெ... தெரி... தெரியலை... திடீர்ன்னு நெஞ்சை அடைக்குது.
அவர்கள் பதட்டமாகி ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொண்டார்கள். ஸீம்ஸ்... டு... பி... ஹார்ட் அட்டாக்...
மே... பி...
என்ன செய்யலாம்...?
ஆம்புலன்ஸை அழைக்கலாம்...
வேண்டாம்...! அதற்கு அவகாசம் இல்லை. பக்கத்து தெருவில்தான் ‘கெட் வெல்’ ஹாஸ்பிடல். காரிலேயே கொண்டு போய்விடலாம்.
அவர்கள் பதட்டமாய் பேசிக்கொண்டிருக்கும்போதே கௌரிசங்கர் இரண்டு கைகளாலும் மார்பைப் பிடித்துக்கொண்டு அப்படியே மடங்கி உட்கார்ந்தார். செமினார்